
எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?
Exile- அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை
இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்ற வெறுப்பு சாருவிற்கு. சாரு நிவேதிதா இதை பலமுறை புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி விட்டார். போன ஆண்டை விட இந்த முறை காமராஜர் அரங்கில் கூடிய கூட்டம் அதிகம். ஆனா சாருவிற்கு வந்தவர்களை விட வராதவர்களைப் பற்றியே அக்கறை. இதுவே கேரளமாக இருந்தால் அவ்வளவு பேர் வந்திருப்பாங்க. இங்க சினிமாக்காரன் பின்னாடி தான் போவீங்க என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். எ...
















