Shadow

கட்டுரை

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

கட்டுரை, புத்தகம்
Exile- அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு என்ற வெறுப்பு சாருவிற்கு. சாரு நிவேதிதா இதை பலமுறை புத்தக வெளியீட்டு விழாவில் சொல்லி விட்டார். போன ஆண்டை விட இந்த முறை காமராஜர் அரங்கில் கூடிய கூட்டம் அதிகம். ஆனா சாருவிற்கு வந்தவர்களை விட வராதவர்களைப் பற்றியே அக்கறை. இதுவே கேரளமாக இருந்தால் அவ்வளவு பேர் வந்திருப்பாங்க. இங்க சினிமாக்காரன் பின்னாடி தான் போவீங்க என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். எ...
ஆனா.. எம திருடனுங்க!!

ஆனா.. எம திருடனுங்க!!

கட்டுரை, சமூகம்
இது தான்டா போலீஸ்!!ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி 'லிஃப்ட்' கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற  அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் 'போலீஸ் உங்கள் நண்பன்'னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.எல்லா டாக்குமென்ட்சும் சரியா இர...
ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

ஒரு விஞ்ஞானியின் சீற்றம்

கட்டுரை, சமூகம்
உலக விஞ்ஞானிகள், மாவட்ட ஆட்சியர், பத்திரிக்கை ஆசிரியர்கள் என ஒருவரையும் விட்டு வைக்கவில்லை. சகட்டு மேனிக்கு அனைவரையும் டா, டோய் என தான் உரிமையாக அழைப்பார். உப்பைக் கடலில் இருந்து எடுத்தால் தான் உலகத்தைக் காப்பாற்ற முடியும்; விழித்துக் கொள்ளுங்கள் என களப்பணியில் இருப்பவர். அவர் இந்த உலகிற்கு ஏதோ சொல்ல வர்றார் என தமிழ்ப் பேசும் நல்லுலகம் பயன்படுத்தும் கூகிள் பஸ்சின் மூலை முடுக்கெல்லாம் ஒரே பரபரப்பு. சமீபமாக வந்த ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் ஆழிப் பேரலைகள் தாக்குதலின் பொழுது தான் அவரது பேச்சைத் தீவிரமாக கவனிக்கத் தொடங்கினர் என நினைக்கிறேன். ஈரோடு விஞ்ஞானி, வால்பையனின் அண்ணன் என அறியப்பட்டவரின் அவசரம்டா என்ற வலைத்தளத்தில் உள்ள இந்தக் காணொளி மிகவும் பிரசித்தம் (பார்க்காதவர்கள்.. பார்த்து விடவும்). சும்மாதான்டா, கல்கிடா, அவசரம்டா, அவசரம்டா1, அவசரம்டா2, அவசரம்டா3, டாப் சேர் (Top Chair), கூகிள...
குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

கட்டுரை, மற்றவை
  என்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும...
காந்தி என்கிற நெருப்பு

காந்தி என்கிற நெருப்பு

கட்டுரை, சமூகம்
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும். காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்.பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப் பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு வழியில்லை.இதை உலகம் இப்போது சற்று மறந்து போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின் புத்திதெளியும் அன்று அண்ணலின் அருமைத் தெரியும். அதற்காக தொடர் முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல் செய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனங்கள் மாறாதா என்ன?அதற்கு இத்தகைய நினைவுச்சின்னங்கள் நிச்சயம் உதவும்.இந்த...
“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

கட்டுரை, மற்றவை
ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன். ஒரு வியாழனன்று...
எழுந்து நட லட்சியப் பாதையில்..

எழுந்து நட லட்சியப் பாதையில்..

கட்டுரை, மற்றவை
  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். வயோதிகர்களின் எலும்பையும் உதிர செய்யும் கஷ்ட காலம்.  ஆனால் இளைஞர்களுக்கு உடல் சக்தி அதிகம் விரையமாகாத திருவிழா காலம் எனலாம்.  அதனால் தான் பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என சொன்னான்.  சில மனிதர்கள் இருக்கிறார்கள் எந்த காலம் வந்தாலும் முகத்தில் சோக சாம்பலையே பூசிக் கொண்டு சதா சர்வ காலமும் உற்சாகமின்றியே திரிவார்கள் உடலில் ஊக்க சக்தி கும்மாளம் போடும் வாலிப பருவத்தில் கேட்டால் நான் நினைத்தது நடக்கவில்லை கேட்டது கிடைக்கவில்லை.  நாம் நடக்கும் பாதையில் ஒவ்வொரு அடியிலும் இரும்பாலான ஆணிகளிளே குத்துகிறது என்பார்கள்.  அறிவும் அனுபவமும் ஒருங்கே கை கோர்க்கும் நடு வயது பருவத்திலோ என்னை புரிந்து கொள்ளும் மனைவியில்லை என் பேச்சை கேட்...
கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கட்டுரை, மற்றவை
இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது.   அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்.முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும் அவஸ்தை குறையும்.அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்.மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூ...
உடலைக் கிழித்து உணர்வைக் காட்டும் ஓவியங்கள்

உடலைக் கிழித்து உணர்வைக் காட்டும் ஓவியங்கள்

கட்டுரை, மற்றவை
    நமது முன்னோர்கள் கலைகளில் மிக சிறந்ததாக ஓவியங்களை கொண்டாடினார்கள்.  ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி சொல்ல வேண்டிய விஷயத்தை தூரிகை எடுத்த ஓவியன் ஒரே ஒரு படக்காட்சியில் சொல்லிவிட முடியும் என்பதினால் தான் அது கலைகளின் சிறந்ததாக போற்றப்படுகிறது.  மனிதனின் சரித்திரத்தோடு ஆதி முதல் பின்னி பிணைந்து இருப்பது ஓவியம் தான்.  தனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்பிய மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்தது எழுத்துக்களை அல்ல ஓவியங்களைத் தான்.     ஆதி மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் பச்சிலை சாறு செம்மண் கொழுப்பு ஆகியவைகளை கொண்டு மிருகங்களின் உருவங்களையும் வேட்டையாடும் விதத்தையும் மிக அழகாக தீட்டியுள்ளான்.  குகைகளில் மட்டுமல்ல மலைச்சரிவுகளிலும் அவன் தீட்டியுள்ள பல்வேறு ஒவியங்களை இன்றும் காணலாம்.  அத்தகைய ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள சிங்கன்ப...
நாம் இந்துவோ முஸ்லிமோ அல்லர்! இந்தியர்கள்!!

நாம் இந்துவோ முஸ்லிமோ அல்லர்! இந்தியர்கள்!!

அரசியல், கட்டுரை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர்  24தேதி தீர்ப்பு வரப்போகிறது தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.காஷ்மீர் விவகாரத்தில் சொதசொதப்பாக நடந்து கொள்வது போல் இந்த விஷயத்திலும் மத்திய அரக நடந்துக் கொண்டால் இந்திய மக்கள் தேவையற்ற இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.எனவே புத்திசாலித்தனமாக நிலமையை முன்கூட்டியே உணர்ந்து தக்கப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அரசின் வேலை தும்பை விட்டுவாலைப்பிடித்தால் அதிகப்படியான இழப்பை நாடுஎதிர்கொள்ள நேரிடும் அதை நாடு தாங்காது.கலவரத்தில் ஈடுபடுவது இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அவர்களை பேதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் இதில் ஓட்டு அரசியல் யார் பார்த்தாலும் அவர்கள் நிச்சயம் பாரதத்திருநாட்டின் பகைவர்கள் என்றே கருதப்படுவார்கள்.தனிமனி...
இணங்கி இருக்கும் கலை

இணங்கி இருக்கும் கலை

கட்டுரை, மற்றவை
    அன்பு என்பது அடுத்தவருடன் இணங்கி இருக்கும் கலை. தியானம் என்பது நீ உன்னுடன் இணங்கி இருத்தல். அவை ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். தன்னுடன் எப்படி இருப்பது என்று தெரியாத ஒருவரால் மற்றவருடன் உண்மையாக தொடர்பு கொள்ள முடியாது. அவரது உறவுகள் அருவெறுக்கதக்கதாக, அசிங்கமானதாக, விபத்து போல, இருக்கும். ஒரு நிமிடம் எல்லாமும் நன்றாக இருக்கும், மற்றொரு நிமிடம் எல்லாமும் தவறாகி விடும். அது எப்போதும் மேலும் கீழுமாக சென்று வரும். அதற்கு ஆழமிருக்காது. அது மிகவும் கூச்சலிடும். அது உன்னை ஆக்ரமித்திருக்கும். ஆனால் அதில் எந்த லயமும் இருக்காது, அது உன்னை இயற்கையின் உயரங்களுக்கோ, இருப்பின் ஆழங்களுக்கோ எடுத்துச் செல்லாது.   மற்றொரு வகையிலும் இது அப்படித்தான். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத ஒருவருக்கு தன்னுடன் தொடர்பு கொள்வதும் மிகவும் கடினமானதாக இருக்கும். ஏனெனில் தொடர்பு கொள்ளும...
யார் தாதா?

யார் தாதா?

அரசியல், கட்டுரை
(செவி வழி கதை)மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன?ஏதோ இப்ராஹிம்னு வருமே!!ஆங்... தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க.உடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, "உன் பேரனும், கொள்ளுப் பேரனும் இந்தரோட்டுல இந்த கார்ல போயிட்டிருக்காங்க. நீ உன் பணத்த எல்லாம் புதைச்சுவச்சிருக்கிற இடத்துல என் ஆளு 'பெட்ரோலோடும் 'லைட்டரோடும் நிக்கிறான்"என்று சொல்லியிருக்கான்.கலைஞர் வாயே திறக்கல. உடனே மதுரைக்கு போன் பண்ணார். நைட்டோட நைட்டா புதுரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க. நான் கேட்கிறேன்.. இவங்களுக்கு ஏன் இந்தவேலை? நிழல் உலகத்துல இருக்கிற அவன் ஏதாச்ச...
இது தான்டா போலீஸ்!!

இது தான்டா போலீஸ்!!

கட்டுரை, சமூகம்
1973, சிதம்பரம்..சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, "நீங்க போகலாம் சார்" என்று பம்முகிறார்."இவன் என் பையன்" என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, "இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க" என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். "சரிங்க சார்."1989, கடலூர்..வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்."எங்கடா போற?" "சகாயம் சார் ட்யூஷனுக்கு." "துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?" "இல்ல சார்." "ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?" என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்பை உதிர்ந்த...
பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

பொன்மொழியில் புதைந்துள்ள உண்மைகள்

கட்டுரை, மற்றவை
பெண் புத்தி பின் புத்தி இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் பெண் தவறாக/பிற்போக்காக/மடமையாக/ சிந்திப்பாள் என புரிந்து கொண்டுள்ளனர்.இதற்கு சரியான பொருள் பெண் எப்பொழுதும் எதிர்காலம்/பின்னால் வரக்கூடிய/முன் எச்சரிக்கையாக/ யோசிப்பவள் என்பதுதான் அர்த்தம்.ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாக வளரும் இதற்கு பெரும்பாலனோர் கொண்டுள்ள பொருள் வேறு ஒருத்தருடைய குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானாக வளரும் என புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய மனைவி என்பவள் வேறுஒருத்தனுடைய குழந்தை ஆகையால் தன் மனைவியை நன்றாக(கர்ப்ப காலம்/ எப்பொழுதுமே) ஊட்டி வளர்த்தால் அவள் அவனுடைய குழந்தையாய் நன்றாக கவனித்துக் கொள்வாள். எப்படியோ யாருடைய குழந்தையாக இருந்தாலும் சரி ஊட்டி வளருங்கள் அது யாராக இருந்தாலும். போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை..  வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை  போலீஸையும் வாத்தியார...
BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

BJP – ஜஸ்வந்த் சிங் நீக்கமும் அதன் பின்பக்கமும்

அரசியல், கட்டுரை
சிம்லாவில் நடைபெற்றுவரும் ''சைதன் பைதக்'' எனும் செயற்குழு அவசர அவசரமாக 30 வருடங்களாக BJP யில் உழைத்த '' ஜஸ்வந்த் சிங் '' நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஜஸ்வந்த் சிங் உடனே தான் அனுமனாக BJP யில் இருந்ததாகவும் தற்பொழுது ராவணனாக  என்னை மாற்றி உள்ளனர் என்றும் சொல்கிறார்.அவருக்கு விளக்கமளிக்கவும் வாய்ப்பு தரப்படவில்லை. TV மீடியாக்கள் தொடர் செய்தியாக இதை ஒளிபரப்பி வருகின்றன. ஜஸ்வந்த் சிங் செய்த பிழை தான் என்ன? ஒரு புத்தகம் எழுதினர் என்பது தான் குற்றச்சாட்டு. பாகிஸ்தான் தேசத்தை, பாகிஸ்தான் தனிநாடு தோன்றுவதற்கு காரணமான ஜின்னா புகழதக்கவரா? அதுவும்  BJP எனும் இந்துமத கொள்கையுடைய கட்சியை சார்ந்தவர் புகழ்வதா? இது எப்படி நிகழ்ந்தது ஜஸ்வந்த் சிங் மட்டும் ஏதோ வாய்தவறி (கைதவறி) புகழ்ந்துவிட்டார் என்று சொல்லமுடியாது. 2005 -ம் ஆண்டு L.K. அத்வானி பாகிஸ்தான் சென்ற போது ஜின்னாவை புகழ்ந்தார் உடனடியாக அ...