
காக்கர்லா
காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை அலுவலகம். சரி புக் பாயின்ட் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் எங்கேயாவது நகர்ந்து போயிருக்கும் என இருபுறமும் தேடினேன். ஆனால் புக் பாயின்ட் கண்ணில் தட்டுப்படவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் நடமாட்டத்தை அங்குக் காண இயலவில்லை. ஏன் புத்தக வெளியீட்டு விழாவை ஞாயிறு அன்று வைக்கிறார்கள்?? அன்றாவது யாரேனும் வரக் கூடும் என்பதாலா!...















