32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

புத்தகம்

58 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 4
செய்திகள் வரிசை (பக்கம் 4)
சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன் புத்தகம்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. […]

24/01/2015 Dinesh R
பூக்குழி – பெருமாள் முருகன் கட்டுரை

பூக்குழி – பெருமாள் முருகன்

பூக்குழி என்பது பூக்களைக் கொண்ட குழி அல்ல. நெருப்புக் கங்குகளால் நிரப்பி, சாம்பல் பூக்காமல் கவனமாக விசிறப்பட்டு கனன்று கொண்டிருக்கும் குழி. மங்கல வழக்காய் பயன்படுத்தும் போதிலும் ஒருவிதமான அச்ச உணர்ச்சியை விதைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் சமகாலத்துக்கு சில பத்தாண்டுகள் முன் நடக்கும் காலமும் களமும்; நம் சமூகத்தில் இருக்கும் இறுக்கமான சாதிய மனோபாவத்தையும், அது யாரிடம், எங்கு, எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கலப்புமணம் புரிந்து கொண்ட இருவரின் வாழ்வனுபவமாக விவரிக்கிறது. காலமும் களமும் மாறியிருப்பினும் […]

19/01/2015 Dinesh R
வியாசன் பறந்த வானில் கட்டுரை

வியாசன் பறந்த வானில்

தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். “வெண்முரசு” என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் […]

11/11/2014 Dinesh R
‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம் கட்டுரை

‘துலக்கம்’ – தெளிவிற்கான தொடக்கம்

ஆட்டிசம் பற்றிய புரிதலைப் பரவலாக்கும் முயற்சியில், ‘ஆட்டிசம் – சில புரிதல்கள்’ என்ற புத்தகத்தை 2013 இல் எழுதினார் பாலபாரதி. ஆனால் இத்தகைய துறை சார்ந்த புத்தகங்கள் எவரையும் சுலபமாகக் கவர்ந்து விடுவதில்லை. ‘ஆட்டிசம் பத்தித் தெரிஞ்சுக்கிட்டு, நாங்க என்ன பண்ணப் போறோம்?’ என்ற மெத்தனம் காரணமாக இருக்கலாம். அவர்களுக்கு பாலபாரதி சொல்லும் இரண்டு விஷயங்கள் என்னவென்றால், உங்கள் சுற்றுவட்டத்தில் இருக்கும் குழந்தைகளை அடையாளம் காணவும், அக்குழந்தைகளுக்கு முன்கூட்டிய பயிற்சிகளைத் தொடங்குவதற்கும் நீங்கள் உதவக்கூடும். அதற்கு ஆட்டிசம் […]

02/07/2014 Dinesh R
தமிழில் மோடி! புத்தகம்

தமிழில் மோடி!

குஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான திரு.நரேந்திர மோடியின் இளமைப்பருவம் முதல் அவரது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பல்துறை வளர்ச்சிகள் வரை விவரிக்கும் “நரேந்திர மோடி – நேர்மையும் நிர்வாகத் திறமையும்” என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மெளலி எழுதியிருக்கிறார். ஏராளமான அரிய புகைப்படங்களும், நேரடித் தகவல்களும் கொண்ட புத்தகத்தை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திரு.நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அந்தப் புத்தகத்தை வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. பொன் […]

11/02/2014 Dinesh R
கர்ணனின் கவசம் கட்டுரை

கர்ணனின் கவசம்

இந்திரன் கர்ணனிடம் தானமாக வாங்கிய அந்தக் கவசம், அதற்குப் பிறகு என்னவாயிற்று என்பதுதான் நாவலின் கரு. மிக அட்டகாசமாக ஜெர்மனியிலிருந்து நாவல் தொடங்குகிறது. கவசம் ஏன் ஜெர்மனியர்களுக்கு தேவைப்படுகிறது என்ற காரணத்துடன் சூடு பிடிக்கிறது நாவல். ஆனால் இந்த ஆரம்பச் சூடு அதன்பின் அடியோடு போய், பக்கத்திற்குப் பக்கம் பிரமிப்பெனப் பயணிக்கிறது நாவல். நாவலின் போக்கு பிடிபட கொஞ்சமாவது ‘பொன்னியின் செல்வன்’ கதைமாந்தர்களும், மகாபாரத கதாபாத்திரங்களும் தெரிந்திருந்தால் நல்லது. அப்படியில்லைனாலும் பாதகமில்லை. ‘நான் இன்னார். இன்னாரின்மீது இன்னக் […]

08/02/2014 Dinesh R
டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும் கட்டுரை

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என […]

27/01/2014 Dinesh R
பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே! கட்டுரை

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு.  அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.   நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் […]

29/10/2013 admin
என் காதலியின் தந்தை கட்டுரை

என் காதலியின் தந்தை

மு.கு.: பல நேரங்களில் பல மனிதர்கள் || பாரதி மணி பாபா படத்தில் தான் முதன்முதலில் அவரைப் பார்த்தேன். நல்லவராக இன்றி வேறு எவராகவும் இருக்க வாய்ப்பே இல்லாத மனிதராகத்தான் அவர் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவர் உருவம். என்னைப் போல் தான் எமி ஜாக்சனுக்கும் அவரைப் பற்றி அபிப்ராயம். பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரைப் பற்றி சுகாவின் ‘மாங்குலை இல்லாத கல்யாணம்‘ என்ற கட்டுரையில் படிக்க நேர்ந்தது. அந்தக் கட்டுரையில் அவர் […]

14/04/2013 admin
காக்கர்லா கட்டுரை

காக்கர்லா

காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை […]

29/11/2012 Dinesh R
இஸ்ரேலின் அப்பாடக்கர்கள் கட்டுரை

இஸ்ரேலின் அப்பாடக்கர்கள்

என் அப்பா M.A. வரலாறு  படித்தவர், அதனால் தானோ என்னவோ எனக்கும் வரலாற்றின் மேல் ஒரு தனி ஆர்வம் உண்டு.. ஒரு முறை ஹைதிராபாத்திலிருந்து சென்னை வந்து, அங்கிருந்து விழுப்புரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு சென்றிருந்தேன்.. எப்பொழுதும் பேருந்து நிலையம் வந்து அழைத்துசெல்லும் என் தந்தை அன்று ஏனோ ஷேர் ஆட்டோ பிடித்து நீயே வந்துடு என்று கூறிவிட்டார்.. ஞாயிறன்று  என் தந்தைக்கு, அப்படி என்ன வேலை இருக்கப்போகுது  என்று எண்ணிக்கொண்டே வீட்டை  அடைந்த எனக்கு கோபம்.. […]

18/10/2012 admin
டுர்ர்ர்ரீ கட்டுரை

டுர்ர்ர்ரீ

படிக்கிறோமோ இல்லையோ.. புக் ஷாப்பிற்கு போனா சும்மாவாச்சும் ஒரு புக் வாங்கணும்னு தோணும். அன்னிக்கும் அப்படித் தான். கையில காசும் அதிகமா இல்ல. குட்டிப் போட்ட பூனையாட்டும் சுத்திட்டிருந்த தினேஷின் தோளைப் பிடிச்சிழுத்து, “நல்ல புக் ஒன்னு சொல்லுடா?” என என் பட்ஜெட்டையும் சொன்னேன்.  அவன் யோசிக்காம, “வாடிவாசல்” என்றான். “வாடி வாசலா?” “செம புக். சூப்பரா இருக்கும். ஜல்லிக்கட்டு பத்தி புக்.” “உன்கிட்ட இருக்கா?” “இல்ல. மிஸ் பண்ணாம வாங்கிடு. ரொம்ப நல்லா இருக்கும்னு எல்லாம் […]

18/09/2012 admin
எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!? கட்டுரை

எக்ஸைல் – சாருவின் மானசீக குரு யார்!?

Exile– அஞ்ஞாத வாசம், புகலிட வாழ்வு, அரசியல் தஞ்ச வாழ்க்கை இந்த மூன்று அர்த்தத்தில் எது எக்ஸைலுக்கு நெருக்கமாகப் பொருந்துகிறது என டின்னுக்கு சந்தேகம். புத்தக வெளியீட்டு விழாவின் பொழுது அருகில் அமர்ந்திருக்கும் ம.ரா.விடம் டின் கேட்டான். ஊரை விட்டு ஒதுங்கி வாழுறது என சொல்லி இருந்தார் ம.ரா. டின்னுக்கு குழப்பம் வந்து விட்டது. ஏன் பாவம் சாரு ஊரை விட்டு ஒதுங்கி வாழணும் என்று டின்னுக்கு புரியவில்லை. தமிழ்நாட்டில் எழுத்தாளனின் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு […]

08/12/2011 admin