Shadow

கதை

கடிவாள மனசு

கடிவாள மனசு

கதை, படைப்புகள்
"பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு ...அதுக்கு ஐநூறு ரூவா வேணும்" .... மிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு.... "ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க...நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்", என்றான் வேலுச்சாமி... அவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து கஞ்சியாவது ஊத்தணும் என்பதுதான் .... " எப்பா நான் நானூறு மார்க்கு எடுத்திருக்கேன். வாத்தியார், மேல படிச்சா கண்டிப்பா டாக்டர் ஆயிருவேனாரு அதான்" .... "அப்ப அந்த வாத்தியார்ட்டயே போயி கேளு ராசா ..வந்துட்டான் ..எனக்கு இருக்ற வெளத்துக்கு கட்ட வெலக்கமாரு பிஞ்சு போகும் பாத்துக்க...நான் இன்னிக்கு என்ன செய்ய ...நாளைக்க...
சட்டாம்பிள்ளை

சட்டாம்பிள்ளை

கதை, படைப்புகள்
"ச்சே.. எத்தன தடவ சொன்னாலும் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை."வெள்ளைச் சட்டையை நீலமாக்கி விடுவதால் உடன் படிக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேருகிறது.'கான்வென்ட்ல படிக்கிற தொர வர்றான் பாருங்கடா.'அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை கான்வென்ட்ல படிக்கிற பசங்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள். குண்டு அடிப்பது, வயலில் நண்டு பிடிப்பது, ஆலமர விழுதுகளில் தலைக்கீழாக தொங்குவது, பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் மாந்தோப்பில் திருட்டு மாங்காய்களை பறிப்பது போன்ற வேலைகளில் கான்வென்ட் மாணவர்களுக்கு நிபுனுத்துவம் போதாது. அப்படிப்பட்டவர்களுடன் தன்னை ஒப்பிடுவது ஞானசம்பந்தனுக்கு எரிச்சலாக இருந்தது.. இதற்காகவே மாந்தோப்பில் இருந்து மற்றவர்களை விட  நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பான். எப்படி குட்டிக் கரனம் அடித்தாலும் 'கா...
வெள்ளை மனசு

வெள்ளை மனசு

கதை, படைப்புகள்
மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த விக்னேஷ், தான் கொண்டுவந்த இரு சக்கர வாகனத்தை கூட மறந்து, நடந்தே வீட்டை சென்றடைந்தான் .. வழியில் யாரையும் நிமிர்ந்து பார்க்கவுமில்லை,பேசவுமில்லை.. வீட்டினுள் நுழைந்தவன் நேராக சென்று ஹாலில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான்.. ஏதோ யோசித்துக்கொண்டிருந்தவன் ஒரு முடிவுக்கு வந்தான். அம்மாவின் அருகில் சென்றான், "எனக்கு கேன்சர் இருக்குன்னு டாக்டர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து சொன்னாரு. அதுவும் இப்போ குணப்படுதுற நிலையில இல்லை. முத்திபோயிடுசாம்.. இன்னும் அதிகபட்சம் 3 மாசம் " என்றான்... இதை கேட்டதுதான், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார் அவன் தாய் .. உடனே பதறிபோனவன், தண்ணீர் தெளித்து தாயை தெளிய வைத்தான்.. எழுந்தவர் அழ தொடங்கிவிட்டார், "உன்ன நல்லா தான டா வளத்தேன். ஏன் டா ஆண்டவன் இப்படி சோதிக்குறான்".. அலுவலுகத்தில் இருந்த தந்தையை அழைத்து, அவருக்கும் தகவல் அளித்தா...
இது வேற மாதிரி

இது வேற மாதிரி

கதை, படைப்புகள்
எல்லோர் கண்களும் அவர்கள் மேலயே இருந்தது. ஒன்றாய் வந்திருந்தார்கள். பின்னால் அமர்ந்திருந்த நானும் அவர்கள் வந்ததில் இருந்து கவனித்துக் கொண்டு தான் இருக்கிறேன். ஒருவரை ஒருவர் ஒட்டி உரசாமல் காற்று நுழையும் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தார்கள். அந்த பெண் தலையில் துப்பட்டா சுற்றப்பட வில்லை. இடைவெளியில் மட்டும் இரண்டு வார்த்தைகள் மற்றும் ஒரு புன்னகையினை பகிர்ந்துக் கொண்டார்கள். நாங்கள் பார்த்துக் கொண்டிருந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாதி கூட புரிந்து விடும் போலிருந்தது. இவர்கள் கதை தான் புரியவில்லை. திரையரங்கு கலாச்சாரம் தெரியாத அப்பாவி கிளிகள் போல.இவர்கள் எப்பவும் இப்படி தான். எனது கல்லூரி கடைசி ஆண்டின் பொழுது இவர்கள் பள்ளியின் பால் வாசம் மாறாமல் கல்லூரியில் கால் எடுத்து வைத்திருந்தார்கள். ஆனால் வந்த சில நாட்களிலியே இவர்கள் ஐந்து வருட காதல் கல்லூரி முழுவதிற்கும் தெரிந்த ஒரு விஷயமாக...
என்ன மரியாதை! என்ன மரியாதை?

என்ன மரியாதை! என்ன மரியாதை?

கதை, படைப்புகள்
இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே.. உண்மையாக என்னுடன் படித்த, நண்பன் பாபுவை புண்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை.. உலக நாயகனே இவரோட அழகை பார்த்து வாயை பொலந்து நிற்பார்.இவரு எதிர்ல நடந்து வந்தா அரவிந்த் சுவாமி கூட எங்கையாவது போய் மறைஞ்சி நின்னுபார்.இப்படி இன்னும் நெறைய சொல்லிட்டே போகலாம்,அப்படி ஒரு அழகு நம்ம பாபுக்கு.. பாபுவுடன் இருக்கும் நண்பர்களும், அவனைவிட அறிவில் குறைந்து விளங்குவதால்,அவன் தான் உலக மகா புத்திசாலி என்ற ஒரு எண்ணம் உடல் முழுவதும் பரவி இருந்தது.மற்றவர்கள் கருத்தை கேட்டு ஏற்பதில் எப்பொழுதும் உடன்பாடு இல்லை அவனுக்கு.ஆகா மொத்தம் பாபு ஒரு காவிய படைப்பு.இவ்வாறாக தன்னை தானே எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அலுவலக வேலை காரணமாக பாபுவை ஆந்திர மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள், உடன் அவன் நண்பர்களுள் ஒருவனும் சென்றான். தெலுங்கான பிரச்சன...
ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

ஒத்துக்குறேன் நீ திறமைசாலி தான்

கதை, படைப்புகள்
இந்திய நாட்டில், இருசக்கர வாகனம் தயாரிக்கும் ஒரு மிகப்பெரிய  நிறுவனத்தின் முதலாளி திரு.ராஜசேகர்.   வழக்கம் போல் தனது இல்லத்திலிருந்து அலுவலகத்திற்கு தனது காரில் சென்றுகொண்டிருந்தவர்,வழியில் தனது நிறுவனத்தை சேர்ந்த ஒரு இருசக்கர வாகனத்தின் விளம்பர பலகையை பார்த்தார்.   பார்த்ததும்,அவர் முகத்தில்  மகிழ்ச்சி பரவியது. மக்களை கவரும் வண்ணம் அந்த விளம்பர பலகை அமைந்ததே அதற்கான காரணம்.   இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அலுவலகம் செல்லும்பொழுது,அந்த இடத்தில் அதே வாகனத்திற்கு வேறு ஒரு வித்யாசமான விளம்பர பலகையை கண்டார்.   அது அவர் முன்பு கண்டதைவிட மிகவும் பிரமாதமாக அமைந்திருந்தது. அவர் முகத்தில் வழக்கத்தை மீறிய ஒரு சந்தோசம்.   மீண்டும் 3 நாட்கள் கழித்து அவ்வழியில் சென்றபொழுது அதே வாகனத்திற்கான வேறு ஒரு விளம்பர பலகையை கண்டார்.   அதை கண்டவர், ஒரே வாரத்த...
காவ்ய நட்பு

காவ்ய நட்பு

கதை, படைப்புகள்
குப்பன் சுப்பனெல்லாம் தங்களை உயிர் நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தத் துரித யுகத்தில் பெற்றவர்களையே மறந்து விடுகின்றனர். ஆனால் சில விதி மீறல்கள் எங்கும் அனைத்து காலத்திலும் இருக்க தான் செய்யும். அப்படி ஒரு அதிசயம் தான் காவிய வித்தகர்களான காந்தப்பன்னும், சாந்தப்பன்னும். அவர்களது முதல் சந்திப்பு காற்றில் ஜவ்வுத்தாள் பை பறப்பது போல ஒரு சாதாரன சந்திப்பு தான். ஆனால் மெல்ல அது வரலாறாய் மாறி வருகிறது. அவர்களின் முழு வரலாறை திரட்ட முடியாத அபாக்கியசாலியாக இருக்கின்றேன். இக்காவியத்தின் நாயகர்கள் விளை மண்ணில் இருந்து பிடுங்கிய மரவல்லி கிழங்கு போல் இன்னும் தரணி தனில் வலம் வருவதால், இக்காவியத்தின் ஆரம்ப அத்தியாயங்களை மட்டுமே அளிக்க முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு வளர வளர காவியமும் வளரும் என நம்புவோமாக!காந்தா சாந்தா. இது தான் அவர்களின் சுருக்கம். உலகம் வெப...
சன்யாசம் கூறாமல் கொள்

சன்யாசம் கூறாமல் கொள்

கதை, படைப்புகள்
"உங்களுக்கும் க்ளைன்ட்டுக்கும் நடுவில் மாட்டிக்கிட்டு இப்படி உயிர விடுறதுக்கு.. பேசாம சாமியாரா போயிடலாம்."கோபத்திலும் சற்று நிதானமாக உதிர்ந்த வார்த்தைகள். ஒரே நாளில் வெவ்வேறு தருணங்களில் மூன்று முறை சாமியார் ஆவதைப் பற்றி ராம்சரண் கூறி விட்டார். அதன் பிறகு அலுவலகத்தில் ஒரு வித மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்தனர். அவர் கடந்தவுடன் அவரைப் பற்றி குசுகுசுவெனப் பேசிக் கொண்டனர். எப்பொழுதையும் விட இவருக்கு கீழ் இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தது போலிருந்தது.நாற்பதுகளை கடந்தும் நல்ல திடகத்திரமான உருவம். எப்பொழுதும் ஒரு புன்னகையை வலுக்கட்டாயமாக முகத்திலே வைத்துக் கொண்டு, கலகலப்பாக வலம் வருவார். ஐந்துமுறை பணி நிமித்தமாக வெளிநாடுகள் எல்லாம் சென்று வந்திருந்தார். அவர் சாமியாராகப் போவதாகக் கூறியதும்..  அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.அவரிடம் யாரும் அதைப் பற்றி நேரிலும் கேட்கவில்லை...