32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கதை

68 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன பக்கம் 4 / 5
செய்திகள் வரிசை (பக்கம் 4)
புதிர் கோணங்கள் கதை

புதிர் கோணங்கள்

ஊரே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்க, லிண்டா மட்டும் உறக்கம் வராமல் எதிர் வீட்டு மாடியைப் பார்த்தவாறு புகைத்துக் கொண்டிருந்தாள். சிறு வயதிலேயே தந்தையை இழந்த லிண்டா, தன் தாயையும் மூன்று வருடங்களுக்கு முன் இழந்திருந்தாள். யாருமற்ற மாளிகையில், சரியாக கண் தெரியாத வயதில் மூத்த வேலைக்காரியுடன் தனிக் காட்டு இளவரசியாக வாழ லிண்டா பழகிக் கொண்டாள். பிரபு குடும்பங்களுக்கு நிகரான பணக்கார குடும்பத்தின் ஒரே வாரிசவள். போதா குறைக்கு கெளரவம் மிக்க அரசாங்க வேலையில் வேறு வீற்றிருந்தாள். […]

30/03/2010 Dinesh R
நல்ல கடவுள்!! கதை

நல்ல கடவுள்!!

“தாத்தா.. கால் வலிக்குது. எப்ப தாத்தா பஸ் வரும்?” “இதோ வந்துடும். போயிடலாம்” “போங்க தாத்தா. இதையே தான் ரொம்ப நேரமா சொல்றீங்க.” “சரி, நீ கடவுள்கிட்ட வேண்டிக்கோ. அவர் உடனே பஸ் அனுப்பி வைப்பார்” என்று நேரத்தைப் பார்த்துக் கொண்டே சிறுவனை சமாதானப்படுத்தினார். கண்களை மூடிய சிறுவன் தனக்கு தெரிந்த மழலை மொழி எல்லாம் பிரயோகித்து கடவுளை வேண்டிக் கொண்டிருக்கும் பொழுதே பேருந்தின் ஒலிப்பான் ஒலி கேட்டது. கண்களைத் தெரிந்த சிறுவன், “தாத்தா.. தாத்தா பஸ் […]

30/03/2010 Dinesh R
சிக்கன் பிரியாணி… கதை

சிக்கன் பிரியாணி…

 முதலாளியின் பிறந்தநாளைமுன்னிட்டு அன்று அலுவலகத்தில் அணைவருக்கும்  சிக்கன் பிரியாணியும் வெஜிடபுள் பிரியாணியும் அளிக்கபட்டது.   அந்த அழுவலகத்தில் வேலைசெயும் மூன்று சக்கர கூட்ஸ் வண்டியின் ஓட்டுனர் ஒருவர், “சரியான உணவில்லாமல் வீட்டில் தவிக்கும் மனைவியை எண்ணி,அந்த  பிரியாணியை உண்ணவும் முடியாமல்  தவிர்க்கவும் முடியாமல் வேதனையில் திண்டாடினார்”. மறுபக்கம் அதே அலுவலகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் பெண், “வீட்டில் குழந்தைகளுக்கு மதிய உணவிற்காக ஒன்றுமே செய்துதரமுடியாமல் அவர்கள் பசியில் தவிக்க, தான் மட்டும் அந்த பிரியாணியை  உன்ன மனமில்லாமல் […]

17/03/2010 Dinesh R
நேர்முகத் தேர்வு கதை

நேர்முகத் தேர்வு

மேடம்….உங்களுக்கு லெட்டர் வந்துருக்கு…என்று சொல்லி  போஸ்ட்மேன் சசியிடம் லெட்டரை கொடுத்தார்… சசி : அம்மா… லெட்டர், நேதாஜி மேல் நிலை பள்ளியிலிருந்து வந்துருக்கு… மா…           நான் டீச்சர் வேளைக்கு அப்பளை  பண்ணதுக்கு பதில் அணுப்பி இருங்காங்க….           டீச்சர் வேளைக்கு நேர்முக தேர்வுக்கு வரும் புதன்கிழமை வரசொல்லிருகாங்க…. அம்மா :  சசி, என்னனு போட்டுருக்கு அந்த லெட்டர்ல… சசி : நேர்முக தேர்வுல பல ரவுண்ட்ஸ்  இருக்கும் போல இருக்கு, மா….          எனக்கு முதல் […]

17/03/2010 Dinesh R
இப்போ பேசுங்க பாக்கலாம் கதை

இப்போ பேசுங்க பாக்கலாம்

“அத்தே என் பிரண்டு ப்ரியாவோட பொண்ணு  கல்யாணத்துக்கு நாளைக்கு போனும் .அவர்க்கு ஆபீஸ்ல வேலை இருக்காம் ..வரமுடியாதாம் …கூட வரீங்களா ? “நாளைக்கு பக்கத்து வீட்ல பால் காச்றாங்க சுகந்தி  .ரெண்டு தடவ வந்து அந்தம்மா சொல்லீட்டு போனாங்க ..போகலைனா நல்லா இருக்காது …நீயும் சுரேஷும் போயிட்டு வாங்க ..அவனுக்கு நாளைக்கு காலேஜ் லீவ் தான “ “சரிங்கத்த “ “டேய் சுரேஷ் நாளைக்கு என்னோட ஒரு கல்யாணத்துக்கு நீ வரணும் ..நாளைக்கு காலேஜ் லீவ் தான ..ஏதாது ஸ்பெஷல் கிளாஸ் இருக்கா ?” […]

14/03/2010 Dinesh R
கனவே கலையாதே கதை

கனவே கலையாதே

தொலைபேசி அழைப்பில் “டேய் எங்க இருக்க ? மணி 11 ஆகுது எப்போ வீட்டுக்கு வருவ ? “ என்றார் அர்ஜுனின் தாய். ” ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு  அரை மணி நேரத்துல கெளம்பிடுவேன்”.  என்றான் அர்ஜுன். “சீக்கிரம் சீக்கிரம் வந்து சேரு .. ராத்திரி நேரம் பஸ்சு கூட இருக்காது, ஆட்டோ புடிச்சி வா” என்றார் அவர்.   சரியாக அரைமணிநேரம் கழித்து ஆபீசில் இருந்து புறபட்டான் ஆட்டோவில். நல்ல சோர்வுடன் காணபட்டான். […]

10/03/2010 Dinesh R
காதலும் காயமும் கதை

காதலும் காயமும்

சரி ராம். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்று கூறிவிட்டு  அவன் வீட்டை விட்டு புறப்பட்டால் ப்ரீத்தி. அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம். டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா. உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம். புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது? ராம் – இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??. புஷ்பா – அவளும் உன்ன […]

05/03/2010 Dinesh R
அக்கறை சீமையிலே – 2 கதை

அக்கறை சீமையிலே – 2

இடம் : பி பி சி  அலுவலகம், லண்டன். நேரம்: 3pm  நாளைக்குலாகூர்ல  இருக்கும்  இந்தியன் எம்பசிய டாலிபன்ஸ் தாக்க போறதா  ஒரு ரகசியதகவல்  வந்திருக்கு.அங்க  நம்ம  டீம்  போய்  கவர்  பண்ணினா  நல்லா இருக்கும் என்றார் Mr.வில்லியம்ஸ். சார்  Mr. ஹுசைன்  தான் பாகிஸ்தான்ல கவர் பண்ற நம்ம  ரிபோர்ட்டர்.ஆனா அவர் இப்போ 1 வீக்  லீவ் ல இருக்காரு. சரி ஆண்டர்சன்,வேற யார அனுப்பலாம் லாகூர்கு ? Mr.இக்பால்,சீனியர் ரிபோர்ட்டர். கடந்த 6 வருஷமா  நம்மகிட்ட  […]

03/03/2010 Dinesh R
முற்பகல் செய்யின் கதை

முற்பகல் செய்யின்

முற்பகல் : “வணக்கம் சார் “. கேட்டும் கேட்காதது போல் ஆவணங்களை ஆவலுடன் படிப்பது போல் பாவலா செய்து கொண்டிருந்தான் ராமசாமி …. “வணக்கம் சார் ” என்று இம்முறை உரத்த குரலில் முயற்சி செய்தான் குமார் … “வணகொம் வணக்கொம் …என்ன ஆச்சு நான் சொன்னது “ “அது வந்துங்க….. இப்போ கொஞ்சம் பணம் மொட;வேல ஆனதும் எப்பிடியாவது பொரட்டி தாரேங்க…” “அப்பிடியா …..இப்போ கொஞ்சம் வேல இருக்கு .மத்தியானமா வா பாக்கலாம் ….” “ஐயா […]

26/02/2010 Dinesh R
ஏட்டுச் சுரைக்காய் எண்ணங்கள் கதை

ஏட்டுச் சுரைக்காய் எண்ணங்கள்

தாம்பரம் ரயில் நிலையம்.சென்னையில் உள்ள மிக முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்று …வெளியூர் செல்பவர்கள்,சென்னையில் மற்ற பகுதிகளில் வேலைப் பார்ப்பவர்கள் ,படிப்பவர்கள் ,வியாபாரிகள் ,பிச்சைக்காரர்கள் என எப்போதும் கூட்டமாகவே காட்சியளிக்கும் ரயில் நிலையம் .தனிமையின் பொருள் உணரா நிலையம் அது…. அனிதா தினமும் தாம்பரத்தில் இருந்து அவள் வேலை பார்க்கும் தலைமைச் செயலகத்திற்கு மின்சார ரயிலில் செல்லும் பயணி…கூட்ட நெரிசலில் அவதிப்படுவதை தவிர்க்க அதிகாலை ஏழரை மணி ரயிலை பிடித்துவிடுவாள்…வசிப்பது மகளிர் விடுதி என்பதால் ஏழரை மணி […]

19/02/2010 Dinesh R
திருமூலர் நதியா என்நண்பன் கதை

திருமூலர் நதியா என்நண்பன்

தலை முடி நரைக்கிறதே என கவலைப்படாதவர் எவரேனும் உள்ளனரா? என்நண்பனுக்கும் அதே கவலை தான். அதுவும் சாதாரண கவலை இல்லை. மிகப் பெரும்கவலை. திருமணம் வேறு அவனுக்கு ஆகவில்லை. இப்ப புரியும் என்று நினைக்கிறேன்அவனது கவலையின் அளவு. “பிறந்தா ஒரு நாள் சாக தான் போறோம். அந்த மாதிரி தலையும் நரைக்க தான்போகுது. தலை நரைச்சுடுச்சு என்று எனக்கு எந்த கவலையும் இல்ல. எங்க அம்மாவநினைச்சா தான் கவலையா இருக்கு. ஏன்னா எங்க அம்மாவுக்கு அவங்க அம்மான்னாஉசுரு. […]

18/02/2010 Dinesh R
இப்படிக்கு விரக்தி கதை

இப்படிக்கு விரக்தி

இந்த உலகத்தில் யாருக்குமே என்னை பிடிக்கவில்லை. ஆனால் காதலின் மிகுதி காரணமாக நான் அனைவரையும் தழுவிக் கொள்கிறேன். இப்படி தான் திருவிழாவில் குச்சி ‘ஐஸ்’ வேண்டும் என அடம்பிடித்த ஏழு வயது தம்பியின் தலையை தட்டி அழைத்து சென்றான் பத்தாம் வகுப்பு படிக்கும் சிலம்பரசன். அந்த ஏழு வயது சிறுவன் தான் எத்தனை அழகு!! உடனே அவனது வதனத்தில் போய் குடியேறி விட்டேன். தம்பியின் மீது அதிக அக்கறை சிலம்பரசனுக்கு இல்லை எனினும் எனக்கு சிலம்பரசன் மீது […]

13/02/2010 Dinesh R
மனித மனம் கதை

மனித மனம்

நான்கு ரவுடிகள் தீபாவை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர் ….எதேச்சையாக அந்த தெரு பக்கம் வந்த சுரேந்தர் பார்த்த மாத்திரத்திலேயே துரத்தப்படுவது தன்னுடன் வேலை பார்க்கும் தீபாதான் என்பதை தெளிந்து அந்த ரவுடி கும்பலை விரட்டிப்பிடித்து அடித்து துவைக்கையில் கேட்டது அலாரம் டைம் பீஸின் மணியொலி …கலைந்தது கனவு…. அலாரத்தை ஆப் செய்ய முயன்றபோதுதான் கௌரி முனங்கினாள் ,”ஏங்க அலாரம் அடிக்கல போன் அடிக்குது ..ஏந்தான் இப்டி இருக்கீங்களோ “என்று அந்த உறக்கத்திலேயும் தெளிவாக கடிந்து விட்டு மீண்டும் உறங்கிவிட்டாள் […]

09/02/2010 Dinesh R
சூழ்நிலைக் கைதிகள் கதை

சூழ்நிலைக் கைதிகள்

பொழுது சாய்ந்திருந்தது…அர்ச்சனாவிற்கு சுஜா ஞாபகமாகவே இருந்தது…பள்ளி விட்டு கிட்டத்தட்ட அரை மணிநேரம் ஆகி விட்டது….வீட்டில் தனியாக என்ன செய்கிறாளோ என்று யோசனையாகவே இருந்தது…பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டாள் அர்ச்சனா .. “சுஜா குட்டி என்ன பண்றீங்க “ “வீடியோ கேம் ஆடுறேன் மம்மி “ “ஹோம் வொர்க் பண்ணீங்களா?” “பண்ணிட்டேன் மம்மி.பசிக்குது.பிஸ்கட் தீந்துடுச்சு “ “அம்மா பேக்ல கேக் இருக்கு …சாப்பிடுங்க ..அதுக்குள்ள மம்மி டிபன் ரெடி பண்ணிடுறேன் என்ன ?” “ஓகே மம்மி “ […]

05/02/2010 Dinesh R
இசை கதை

இசை

நானும் அவளும் எப்பொழுதுமே ஒன்றாகத்தான் விளையாடுவோம் எங்களுக்குள் ஆண் பெண் பேதமெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவளும் உள்ளாடைகளுடன் பலதடவை எங்கள் ஊர் மோட்டர் பாம்பு தண்ணீர் இறைக்க, ஒரே தொட்டியில் குளிப்போம். யார் அதிக நேரம் நீரில் மூச்சடக்கி மூழ்கி இருக்கிறார்கள் என பந்தயம் அவ்வப்பொழுது நடேந்தேரும். அதில் பலமுறை ஜெயிப்பது நான்தான் ஆனால் உண்மையில் ஜெயிப்பது அவள்தான். நான் நீரில் மூழ்கியுடன் உடனே வெளியே தலையை நீட்டி கொஞ்சநேரம் கழித்து நான் மீண்டும் […]

29/01/2010 Dinesh R