Shadow

தொடர்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன. அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார். இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...
மாயலோகத்தில்

மாயலோகத்தில்

சினிமா, தொடர்
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் 'மேனகா'. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி'. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங...
பழைய பயோஸ்கோப்

பழைய பயோஸ்கோப்

சினிமா, தொடர்
'பயாஸ்கோப்' என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். 'ராண்டார்கை', ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன...
சதுராச்சலம்: ஓர் அனுபவம்

சதுராச்சலம்: ஓர் அனுபவம்

ஆன்‌மிகம், தொடர்
காணாத அருவினுக்கும்       உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு       நிகழ்குறியாஞ் சிவலிங்கம் லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த பிரகாரத்தில் லிங்கங்களைப் பார்த்துக் கொண்டு நடப்பது ஓர் அமானுஷ்ய உணர்வைத் தரும். அதுவும் நாம் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நிற்கும்போது அதைத் துல்லியமாக உணரலாம். அச்சமயம் பார்த்து வெளவால்கள் உரசிக் கொண்டு பறந்தால் சொல்லவே வேணாம். லிங்கங்களின் அச்சுறுத்தும் கம்பீரமும், சலனமற்ற அழகும் மனதை ஏதோ செய்துவிடும். இப்பட...
ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 02

தொடர்
ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் - 01விரும்பிய ஒரு பொருளைப் புதிதாக கடையில் இருந்து வாங்கும் போது இயல்பாகவே நமக்கு ஒரு மன நிறைவும், மகிழ்ச்சியும் இருக்கும். அதிலும் தங்கநகை என்றால் கேட்கவே வேண்டாம். இது உலகம் முழுமைக்கும் பொருந்தும். இந்தத் தங்கத்தின் மீது மனிதன் வைத்திருக்கும் அபரிமிதமான அபிமானத்தினால் மனித சமூகம் காலம் காலமாய் பல சம்பவங்களையும், சரித்திரங்களையும் கடந்து வந்திருக்கிறது. இன்றும் கூட ஒரு தனி நபர் அல்லது ஒரு நாட்டின் செல்வம்/செல்வாக்கு அவர்கள் கைவசம் இருக்கும். தங்கத்தின் அளவை வைத்தே கணக்கிடப் படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் தங்கம் சுரங்கங்களில் தாது மணலாய் வெட்டி எடுக்கப் படுகிறது. ஒரு டன் தாது மணலை அரைத்துச் சலித்தால் எட்டிலிருந்து பத்து கிராம் தங்கம் கிடைக்கும். உலக அளவில் தென்னாப்பிரிக்காவில் தான் அதிக அளவில் தங்கம் வெட்டி எடுக்கப் படுகிறது.  ...
ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01

ஒரு பொற்கொல்லனின் வாக்குமூலம் – 01

தொடர்
தெருவில் திரும்பிய பக்கமெல்லாம் ஆளை அசரடிக்கும் வகையில் விளம்பர பதாகைகள், போஸ்டர்கள். டிவியை திறந்தால் அதில் பிரபல நடிகர்கள் ஆளுக்கு ஒருவராய் நின்று கொண்டு வளைந்து நெளிந்து குழைந்து பேசி நடித்து ஆடிப் பாடி நம் கவனத்தை ஈர்க்கிறார்கள். செய்தித் தாளை புரட்டினால் பக்கம் பக்கமாய் விளம்பரங்கள். தள்ளுபடி, அள்ளுபடி என நீட்டி முழக்கி நம்மை ஒரு வழியாக்கி விடுகின்றன. இத்தனை ஆர்ப்பாட்டங்களும் நம் போன்ற சாமானியர்கள் வாங்கப் போகும் ஒருபவுன்,  அரைப் பவுன் நகைக்குத்தான் என்றால் நம்பித்தான் ஆக வேண்டும்.ஒரு காலத்தில் பழமையான நிறுவனம், கைராசியான நிறுவனம், தரமான நிறுவனம், பாரம்பரியமான நிறுவனம் என்றெல்லாம் தங்களைப் பற்றி விளம்பரம் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று எப்படியெல்லாம் விளம்பரம் செய்கிறார்கள் என்பதை நான் சொல்லித்தான் யாரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. உள்ளூர் வியாபாரிகளை விடுங்கள். ஆனானப்பட்ட...
பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 26நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை.சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு அமைதி உண்டாகிறது. இந்திரியங்களை வெல்லாத வரை, மனதை அடக்கி ஆள இயலாதவரை, துன்பங்கள் குறைவதில்லை.நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் உடலின் கோணத்திலிருந்தேயொழிய, அழிவற்ற ஆத்மாவின் நோக்கில் அல்ல. ஆகையினால் தான் உட...
சிரார்த்த கிரியைகள்

சிரார்த்த கிரியைகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 25இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள்.இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். இறந்தவர் புதிய பிறப்பொன்றை எடுத்துவிட்ட பின்னரும் அவருடைய மனோசரீரத்தில் சிரார்த்தக் கிரியைகளால் நல்விளைவுகள் ஏற்படுகின்றன. மனிதனின் மனதில் இருந்து எழும் சிந்தனை அலைகள் மிகவும் சக்தி வாய...
ஆவிகளின் தொடர்பு

ஆவிகளின் தொடர்பு

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 24ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன.மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள்.“மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் வயமிழந்த நிலையை அடைந்து விடுகிறார். ஆவியானது அவருடைய உடலின் சக்தியையும் மனோசக்தியையும் தனதாக்கிக் கொண்டு அவர் மூலமாக பேசுகின்றது. சில சமயங்களில் அவருடைய உடலிலிருந்து “எக்டோபிளசம்” (ectoplasm) என்ற ஊனம் ப...
தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 23டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன.கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் மூலப்பொருட்களை இயக்குவதற்கென்றே ஆவி உருக்கள் இயற்கையின் திட்டத்தில் அமைந்துள்ளன.ஆரணங்குகள் (Fairies), கந்தர்வர்கள், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம், அனல்தெய்வம் ஆகியவைகளைப் பற்ற...
தற்கொலையும், அதன் விளைவுகளும்

தற்கொலையும், அதன் விளைவுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 22கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட அவஸ்தைகளையும் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி அவை மறுபடியும் மறுபடியும் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.தனது குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுத்துக் க...
சடுதி மரணம்

சடுதி மரணம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 21சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல நமது வாழ்விலும் நமது அறிவுக்குப் புலனாகாத காரணங்களின் வினைப்பயனாக விபரீதங்களும் விபத்துக்களும் நடைபெறுகின்றன.சடுதி மரணம் அடைந்தவர் இவ்வுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவராகவோ, ஆன்மீக முன்...
ஆத்மா

ஆத்மா

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 20ஆத்மா என்று எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்தால் மனிதனின் எண்ணங்கள் எதில் இருந்து பிறக்கின்றது என்பதை கண்டு பிடிக்கமுடியவில்லை.பருப்பொருளிலும் விசையிலும் (Matter and Force) இருந்து மனிதனின் பிரக்ஞை பிறப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை. விசையில் இருந்து விசை பிறக்கிறது. மூளை அணுக்கூறுகளின் அசைவிலிருந்து புலஉணர்வோ அறிவோ பிறப்பதில்லை. அவை விஞ்ஞானத்தைக் கடந்த ஒருசக்தியில் இருந்து பிறக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. மூளை மனிதனின் புலன் உணர்வுகளுக்குத் துணை போகும் ஒரு கருவியேயொழிய அது அவனுடைய உணர்வுகளுக்குக் காரணியான உறுப்பு அல்ல.சடப்பொருளுக்கும் உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கும் உள்ள வித்தியாசம், உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற அறிவு இருப்பதே. சூரியன் இருப்பதை சூரியப் பிரகாசம் வெளிப்படுத்துவதுபோல...
மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 19மனிதர்களில் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக வருந்துபவர்களோ அல்லது ஆணாகப்பிறந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதோ சிலர் துயர்தரும் சம்பவங்களின் போது “பெண்ணாக ஏன் பிறந்தோம்” என்று நினைத்தாலும், பெண்ணாகப் பிறந்ததற்காக தன்னையே நொந்து கொள்பவர்கள் வெகுசிலரே. பெண்ணாகப் பிறந்ததால் பல நன்மைகளும் உண்டு. ஆணாகப் பிறந்தவர்களுக்குப் பலகஷ்டங்களும் இருக்கவே செய்கின்றன. இயற்கையின் விசித்திரம் என்னவென்றால் ஆண் தனது ஆண்மையை நேசிப்பது போலவே பெண்ணும் தனது பெண்மையை நேசிக்கும்இயல்புணர்ச்சிகள் மனிதர்களிடம் இருக்கின்றன.மனிதக் கருவுயிரின் (Embryo) மரபுவழித் தனிச்சிறப்புப் பண்புகள் தாய் தந்தையரின் சரிசமனான இனக்கீற்றுக்களில் (chromosomes) இருந்தே உருவாகின்றன. ஆனால் பிறக்கும் உயிரின் “பால்” எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்று விஞ்ஞானம் விளக்குக...