
வணக்கம் நண்பர்களே,

என்னதான் புதுப்புது காய்கறிகள் வந்தாலும், நம்ம நாட்டு காய்கறிகளுக்கு இருக்கும் மவுசும், அதனுடைய சுவையும் என்றைக்கும் மறக்காதுங்க. அதுவும், நம்ம பீர்க்கங்காய் பொரியல், செம்ம சுவையா இருக்குமே! கூடவே நம்ம நோய் எதிர்ப்த்பு திறனை அதிகரிக்குது; ரத்தத்தில் இருக்கும் சக்கரை அளவைக் குறைக்குது; அதனால சக்கரை நோயாளிங்க சாப்பிடலாம். கொலஸ்ட்ரால் கம்மியா இருக்குது. விட்டமின்- சி, நார்சத்து, இப்படி பலது இருக்குதுங்க. இவ்ளோ அருமையான காய்கறிய ஏன் விட்டு வைக்கனும்!?
தேவையான பொருட்கள்:

- பீர்கங்காய் – 1 (பெரியது)
- பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) – 1
- வரமிளகாய் -3
- சாம்பார் தூள் -1 கரண்டி
- மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
- தேங்காய் – 1 மூடி (துறுவியது)
- கறிவேப்பிலை – கைப்பிடி
- உப்பு – தேவைக்கு
- எண்ணெய் – 1 கரண்டி
செய்முறை:
Step 1:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டுப் பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், மிளகாய், மஞ்சள்தூள், கறிவேப்பிலை போட்டு வதக்குங்க.
Step 2:

வதங்கியதும், வெட்டி வச்சிருக்கும் பீர்க்கங்காயை போட்டு, ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு போட்டு வதக்குங்க.
Step 3:

தண்ணீர் அதிகமா ஊத்தாம, சும்மா 1/2 கப் மட்டும் விட்டு வதக்குங்க. நல்லா வதங்கியதும், துருவிய தேங்காயைப் போட்டு, ஒரு 5 செகன்ட் பிரட்டி விட்டு, அடுப்பில் இருந்து எடுத்திருங்க.

அவ்வளவுதான். சுவையான மிகவும் சத்தான பீர்க்கங்காய் பொரியல் தயார். தயிர்சாதத்துக்கு அருமையான காம்பினேஷன். சாப்பிட்டுப் பார்த்திட்டுச் சொல்லுங்க.
– வசந்தி ராஜசேகரன்

