
R.S. இன்ஃபோடெயின்மென்ட்-டின் 16 ஆவது தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் “மண்டாடி” ஆகும். சூரி ஹீரோவாக நடிக்க, மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமான படமாக உருவாகிறது. ஆழமான கதையுடன் கூடிய இந்த விளையாட்டு ஆக்ஷன் டிராமா திரைப்படம் உருவாகி வருகிறது. மண்டாடி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏப்ரல் 19ஆம் தேதி ஊடகங்களின் முன்னிலையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது.
செல்ஃபி என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டைப் பெற்ற இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, இப்படத்தையும் எழுதி இயக்குகிறார். கடந்த படத்தை விடப் பெரிய களம் மற்றும் ஆழமான உணர்வுகளை மையமாகக் கொண்டு இந்தப் படத்தில் களம் இறங்கி இருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக சூரி நடிக்கவுள்ளார். கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் தனது நடிப்புத் திறனை நிரூபித்து வரும் அவர், இப்படத்தினால் மேலும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வார். இப்படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் சுஹாஸ் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். இதனால் படம் தென்னிந்தியாவில் பரந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கதாநாயகியாக மஹிமா நம்பியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யராஜ், ரவீந்திரா விஜய், அசுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் தங்களது திறமையான நடிப்பின் மூலம் இந்தக் கதைக்குப் பலமளிக்க போகின்றனர்.
இப்படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, “எனது கனவைப் புரிந்து கொண்டு, என் கதையைக் கேட்பதற்கு, இந்த வாய்ப்பை அளித்த எல்ரெட் சார் மற்றும் வெற்றிமாறன் சார்க்கு நான் மனமார்ந்த நன்றி தெரிவிக்கிறேன். சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாகக் கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்தக் கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது. சூரி சாரின் விஷன் மற்றும் அவர் கதை தேர்ந்தெடுக்கும் விதம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ‘மண்டாடி’ திரைப்படம் அவருடைய நடிப்பு வாழ்க்கையில் ஒரு முக்கியமான படியாக அமையும். மேலும் இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கு வெறும் நடிப்பு மட்டும் போதாது. கூடவே ஒரு நடிகரின் உடல் மற்றும் மன வலிமையும் அதிகம் தேவைப்பட்டது. அதை சூரி சார் போன்றவர்களால் மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். வெற்றிமாறன் சார், படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூசராக இருப்பது எனக்கு ஒரு ஊக்கமும் வழிகாட்டுதலுமாக இருக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையும், எஸ்.ஆர்.கதிர் அவர்களின் ஒளிப்பதிவும் சேர்ந்து, உண்மையான உணர்வுகளைத் தரும் விளையாட்டு ஆக்ஷன் படமாக மண்டாடி உருவாகிக் கொண்டு வருகிறது” என்றார்.
இப்படத்தின் லுக் டெஸ்ட் முடிந்த கையோடு முன் தயாரிப்புப் பணிகளுக்காகப் படக்குழு ராம்நாடு சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் குழுமி இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் உறவுகளின் பின்னணியுடன் விளையாட்டு உலகத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான பயணமாக இப்படம் விளங்கும்.
மண்டாடி என்றால் என்ன?
காற்றையும், அலையையும், கடல் நீரோட்டத்தையும் நன்கு கணித்து, மீன்களின் வரத்தையும் அவற்றின் திசைவழிப் போக்கையும் பற்றிய நல்ல அறிவையும் அனுபவத்தையும் பெற்ற ஒருவர், மீன்பிடிக்கச் செல்லும்போது படகை வழிநடத்தக்கூடிய தலைமை நிலையில் இருப்பார். அவரையே இராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் மண்டாடி என்று அழைக்கின்றனர்.
மீன்பிடிக்கப் போகும் போது படகையும் உடன் வரும் மீனவர்களையும் வழிநடத்துவதைப் போல, பாய்மரப் படகுப் போட்டியின் போதும் வழிநடத்தக் கூடியவர் மண்டாடி.
தொழில்நுட்பக் குழு:-
இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு – எஸ்.ஆர். கதிர் ISC
கலை – டி.ஆர்.கே. கிரண்
படத்தொகுப்பு – பிரதீப் ஈ. ராகவ்
சண்டை – பீட்டர் ஹெய்ன்
ஒலி வடிவமைப்பு – பிரதாப்
VFX – ஆர். ஹரிஹரசுதன்
இணை தயாரிப்பு – வி. மணிகண்டன்
உடை வடிவமைப்பு – தினேஷ் மனோகரன்
நடன அமைப்பாளர் – ஆசர்
கூடுதல் எழுத்து – ஆர். மோகனவசந்தன், திரள் சங்கர்
ஒப்பனை – என். சக்திவேல்
உடை – நாகு
DI – கிளெமெண்ட்
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ் – கபிலன்
ஸ்டில்ஸ் – ஜி. ஆனந்த் குமார்
விளம்பர வடிவமைப்பு – எஸ்தடிக்ஸ் குஞ்சம்மா
தயாரிப்பு நிர்வாகி – எஸ்.பி. சொக்கலிங்கம்
நிர்வாக தயாரிப்பாளர் – ஜி. மாகேஷ்
மக்கள் தொடர்பு – ரேகா