“சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு..” – பார்வதி நாயர்
அன்பான ரசிகர்களே, நண்பர்களே, அன்புமிக்க பொதுமக்களே!
கடந்த வாரத்தில் என்னைப் பற்றிய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கட்டுரைகளும் காணொளிகளும் வெளியாகின. இது தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு குறித்தும், இப்பிரச்சனையைப் பற்றி தெளிவுபடுத்துவதற்கும், பொய்யுரையைப் புரிய வைப்பதற்கும் இந்தச் செய்திக்குறிப்பை வெளியிடுகிறேன்.
எனது உடைமைகள் திருடப்பட்டதால், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் சிலர் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் 20.10.2022 அன்று புகார் அளித்து, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தேன். நான் சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றி வருகிறேன். மேலும் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டு எனக்கான தீர்வுகளைப் பெறுவதற்காக சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறேன்.
சுபாஷ் சந்திர போஸை நான் தாக்கியதாகவும், துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறுவது நியாயமற்றது. அவர் ஒரு பகுதி நேர உதவியாளராகவும், வார இறுதி நாட்களில்...