
வால்டர் – ஷிரின் காஞ்வாலா
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நாயகி ஷிரின் காஞ்வாலா. தற்போது சிபிராஜ்க்கு ஜோடியாக ‘வால்டர்’ படத்தில் நடித்துள்ளார்.
படத்தைப் பற்றிப் பேசிய ஷிரின், “திகில் மற்றும் திருப்பங்கள் நிறைந்ததாக திரைக்கதை இருந்தது. மேலும் படத்தின் கதையில் வரும் சம்பவங்கள் உண்மையில் நடந்தது என்பது அதிர்ச்சி தருவதாக இருந்தது. எதிர்பாராதவிதமாக நான் சமூக நோக்குடன் கூடிய அழுத்தமான படங்களில் தொடர்ந்து பணிபுரிகிறேன். அது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. படத்தின் மையம் மிக அழுத்தமான விடயத்தைப் பதற்றம் தரும் வகையில் கூறுவதாக இருந்தாலும், இயக்குநர் U.அன்பு படத்தில் ரொமான்ஸும் சரியான அளவில் வருவது போல திரைக்கதை அமைத்துள்ளார். சாதாரணமாக இந்த வகை திரைப்படங்களில் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் இருக்காது. ஆனால் இப்படத்தில் இயக்குநர் எனக்கு மிகச்சிறந்த கதாபாத்திரம் தந்துள்ளார்.
சிபிராஜ் ஒரு...