வணக்கம்,
மழை பெய்யுது,,,, குளிரும் சேர்ந்திருச்சே.. நல்லா காரசாரமா, நாட்டுகோழி குழம்பு சாப்பிட்டா எப்படி இருக்கும்????
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி – 1 கிலோ
தக்காளி – 1 (நறுக்கியது)
பூண்டு – 1 கட்டி (தட்டி வைக்கவும்) + 2 பூண்டு
கறிவேப்பிலை – கைப்பிடி
சின்ன வெங்காயம் – 1 கப் + 1 கப்
கறி மசாலா தூள் – 2 கரண்டி
நல்லெண்ணெய் – 2 கரண்டி + 2 ஸ்பூன்
மிளகாய் – 2
செய்முறை:
Step 1:
பாத்திரத்தில், 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 2 பூண்டு போட்டு வதக்கவும். 1 கப் சின்ன வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். ஆறிய பிறகு, மிக்சியில் வதக்கிய வெங்காயம், கறிமசாலா தூல் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்
Step 2:
பாத்திரத்தில், 2 கரண்டி நல்லெண்னெய் விட்டு, தட்டி வைத்த பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, 1 கப் வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி, மிளகாய் போட்டு ஒரு 2நிமிடம் வதக்கவும்.
Step 3:
சுத்தம் செய்து வைத்த, கோழி கறியை போட்டு, 1 ஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 1நிமிடம் வதக்கவும்.
Step 4:
அரைத்து வைத்த மசாலாவை கொட்டி கிளரவும். தேவையான அளவு, தன்ணீர் விட்டு, மூடி போட்டு வேக விடவும்.
Step 5:
நாட்டு கோழி என்பதால், கூடுதல் நேரம் பிடிக்கும். குக்கரில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கவும்.
சுவையான கோழி குழம்பு…
- வசந்தி ராஜசேகரன்