Shadow

Author: admin

முகமூடி விமர்சனம்

முகமூடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிஷ்கின் தானொரு தமிழ்ப் பட இயக்குனர் தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்து விட்டார். மந்திரிக்கப்பட்டது போல நேர்க்கோட்டில் ஒவ்வொருவராக விறைப்பாக சென்று நாயகனிடம் உதை வாங்காமல், கும்பலாக ஓடிச் சென்று நாயகனிடம் உதைப்படுகின்றனர். தன் காதலுக்காக முகமூடி அணியும் நாயகன் மேல் கொலை பழி விழுகிறது. காவல்துறையினரிடம் தப்பிக்க முகமூடியைக் கழட்டாமல் இருக்கிறான். இது தெரியாமல் புரியாமல், வர்றவர் போறவரெல்லாம், "நீ செத்தாலும், முகமூடி சாவக்கூடாது" என நாயகனை ஊரைக் காப்பாற்ற வந்த சூப்பர் ஹீரோ(!?) என்று முடிவு கட்டி ஏற்றி விடுகிறார்கள்.நாயகன் யாரையாவது துரத்த ஆரம்பித்தார் என்றால் ரசிகர்கள் சோர்வடையும் வரை நிறுத்த மாட்டேங்கிறார். இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்த படத்தை சட்டென முடிப்பதா என்று இழுத்து முடிக்கின்றனர். கடைசியாக வந்தாலும் காவல்துறையினர் ஜீப்பில் வருகின்றனர். ஆனால் சூப்பர் ஹீரோ ஓடி ஓடியே.. முகமூடியை பா...
சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எட்டப்பன், காந்தி, ஹிட்லர் என சிலரின் பெயர்கள் கால ஓட்டத்தில் அவர்களின் குணங்களாகவே அடையாளம் பெற்று விடுகின்றன. அப்படி ஒரு பெயர் தான் சகுனி. தனக்கு சாதகமாக பகடைகளை உருட்டி அரசியல் லாபம் பெறுபவர்களை குறிக்கும் சொல்லாக சகுனியைப் பாவிக்கலாம்.இரயில்வே மேம்பால திட்டத்தில் அடிபடும் தனது பாரம்பரிய வீட்டை மீட்பதற்காக சென்னை வருகிறான் கமலகண்ணன். தன் வீட்டை மீட்டானா இல்லை என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கமலகண்ணனாக கார்த்திக். வாயை சற்று கோணலாய் திறந்தபடி படம் முழுவதும் வருகிறார். எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்காததை தொடர்ந்து சகுனித்தனம்(!?) செய்ய தொடங்குகிறார். தொடர்ந்து ஐந்து படங்கள் ஓடி விட்ட நம்பிக்கை காரணமோ என்னமோ உப்பு சப்பில்லாத கதையில் அலட்டலில்லாத நடிப்புடன் களம் இறங்கிவிட்டார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சொல்லி வருவது போல, சகுனி என்ற மகாபாரத பாத்திரம் குறித்து ஒன்றுமே...
தடையறத் தாக்க விமர்சனம்

தடையறத் தாக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா? அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார்.ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று ப...
வழக்கு எண்:18/9 விமர்சனம்

வழக்கு எண்:18/9 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்.இதிகாசங்கள் எழுதப்பட்ட காலம் முதல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தபடும் கருத்து. 'கறை நல்லது தான்' என்று ஸர்ஃப் எக்ஸல் விளம்பரத்தில் சொல்வது போல், "தர்மம் வெல்வது நல்லது தான்"  என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தர்மத்தைக் காக்க அக்காலம் தொட்டே 'வன்முறை' தான் ஒரே தீர்வாக முன்மொழியப்படுவது மிகவும் பரிதாபத்தற்குரிய விடயம். வழக்கு எண்: 18/9 படமும் அதற்கொரு விதிவிலக்கில்லை.சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் தமிழ்த் திரைப்படங்கள் மிக அரிது. அவ்வகையில் வழக்கு எண்: 18/9 மிக முக்கியமான படமாகிறது. விளைநிலங்கள் மனைகளாக மாறுவது, குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் என படம் நிறைய விடயங்களைத் தொட்டு செல்கின்றன. ஆனால் 'ஏழைகளுக்கு மறுக்கப்படும் நீதி' மற்றும் 'சுய சாதி அபிமானம்' என்ற இரண்டைப் பற்றியும் இ...
ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்

ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கல்.. ஒரு கண்ணாடி..உடையாமல் மோதி கொண்டால் காதல்என்று இயக்குனர் இராஜேஷின் முதல் படத்தில் வரும் ஒரு பாடல் வரியின்தொடக்கம் தான் படத்தின் கரு மற்றும் தலைப்பு. ஆனால் அதை முதல் படத்தில்சாத்தியப்படுத்தியது போல் இப்படத்திலும் அவருக்கு சாத்தியப்படுத்த முடியாமல் போய்விட்டது.படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. கதை இருந்தால் தானே கதைக்குநாயகன் என யாராவது இருக்க முடியும்? இந்த இரண்டு குறையையும் சந்தானத்தைவைத்து லாவகமாக மறைத்துள்ளார் ராஜேஷ். முந்தையப் படங்கள் அளித்தநம்பிக்கையாகவோ, படிப்பினையாகவோ இருக்கும். மற்ற பாத்திரங்களின்வசனத்திற்கு எதிர் வசனம் பேசி மட்டுமே ஒப்பேத்தாமல், சந்தானம் முழுப்படத்தையும் முதுகில் சுமப்பவராக உள்ளார். 'சந்தானம் இருக்க பயமேன்?' எனஇயக்குனர் ராஜேஷின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணமாக, படத்தின் நாயகனானஉதயநிதி ஸ்டாலினும் நிறைவாய் புன்னகைத்து தலையை மட்டும் வேண...
கழுகு விமர்சனம்

கழுகு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சையில் தேறாதது, கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாதது, காதலித்தவர்கள்மனம் செய்து கொள்ள பெற்றவர்கள் சம்மதிக்காதது என  தற்கொலைப் புரிந்துக்கொள்பவர்களுக்கு ஏதேதோ காரணங்கள். தேனி மாவட்டத்தில் அப்படி நிகழும் தற்கொலைகளை நம்பி பிழைக்கின்றனர் சேராவும் அவனது சகாக்களும். தற்கொலைப்புரிந்தவர்களின் பிணங்கள் 3000 அடி ஆழம் போல் விழுந்துக் கிடக்காமல் 300அடிக்குள்ளாகவே கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.'பிணம் தூக்குபவர்கள்' என்று மலிவாக அவர்களை மற்றவர்கள்அடையாளப்படுத்துகின்றனர்.கவிதாவின் தங்கை தனது காதலருடன்தற்கொலைப் புரிந்துக் கொள்கிறாள். சேரா குழுவினர் மூன்று நாட்கள் தேடி,கவிதாவின் தங்கை உடலினை மட்டும் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றனர். தனதுமகனின் உடல் கிடைக்கவில்லை என கோபப்படுபவர்கள் கவிதாவின் தங்கை உடலைமீண்டும் மலையில் இருந்து கீழே வீச முனைகின்றனர். சேரா அவர்களை தடுத்துவ...
அம்புலி விமர்சனம்

அம்புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்புலி - நிலா என பொருள்படும். இரவில் மட்டுமே தோன்றி உயிர்களை வேட்டையாடும் மிருகம் போன்ற மனிதனைக் குறிக்கும் காரணப் பெயராக தலைப்பை வைத்துள்ளனர். ஸ்டிரியோ-ஸ்கோபிக் முறையில் எடுக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ்ப் படம் என்பது அம்புலியைப் பற்றிய விசேடமான செய்தி. தேர்வாழி கிராமத்தில் நடந்த விநோதமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையின் கருவை அமைத்திருப்பதாக தெரிகிறது. ஒருவழியாக தனது காதலை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பூங்காவனத்திடம் சொல்லி விடுகிறான் அமுதன். அவன் காதலைத் தெரிவித்த நாள் முதல் கல்லூரி இரண்டு மாதங்களுக்கு விடுமுறை என்பதால், பணக்கார வீட்டுப் பையனான அமுதன் காதலியைச் சந்திக்க கல்லூரி விடுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். அதற்கு அமுதன் அவனுடைய நண்பன் பார்வேந்தனின் உதவியை நாடுகிறான். கல்லூரி காவலாளி (வாட்ச்-மேன்) ஆன வேந்தனின் தந்தை வேதகிரி்யும் அமுதன் தங்குவதற்கு சம்மதிக்கிறார். அன்றிரவே...
அரவான் விமர்சனம்

அரவான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவான் - குருஷேத்திரப் போர் தொடங்கும் முன் பண்டவர்கள் 'அரவான்' என்பவரை பலி கொடுப்பர். ஆக பலி கொடுக்கப்படும் நபரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.  இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளது 'காவல் கோட்டம்' நாவலிற்கு சாகித்ய அகாடெமி விருதுப் பெற்ற சு.வெங்கடேசன். அந்த நாவலின் சிறு அத்தியாயத்தை படமாக எடுத்துள்ளனர் சில மாற்றங்களுடன். 18ஆம் நூற்றாண்டில் நடப்பதாக படம் தொடங்குகிறது. அங்காடித் தெரு இயக்கிய வசந்தபாலன் சரித்திரக் கால படம் ஒன்றினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளார்.தனது ஊர்ப் பெயரைச் சொல்லி துப்பு வாங்கி, தனியாளாக களவாடி வரும் வரிப்புலியைத் தேடிச் செல்கிறார் கள்ளர் தலைவர் ஆன கொம்பூதி. வரிப்புலியின் திறமையால் கவரப்பட்டு அவனையும் ஊர்ப் பெரியவர்களின் பேச்சை மீறி தன்னோடு களவில் இணைத்துக் கொள்கிறார் கள்ளர் தலைவர். தன்னைப் பற்றிய செய்திகளை ரகசியமாகவே வைத்திருக்கும் ...
காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி - இளமை துள்ளும் குதூகலமான படம். 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தனது குறும்படத்தை அப்படியே விரிவாக்கி திரைப்படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார். அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறுப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மையால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. சொதப்பும் முக பாவம் சித்தார்த்திற்கு இயல்பாகவே வருகிறது. படம் முழுவதும் அவர் முகம், 'ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேள்வியை சுமந்தவாறே உள்ளது. சித்தார்த்தைத் தவிர்த்து வேறு எவரேனும் இப்பாத்திரத்திற்குப் பொருந்தி இருப்பார்களா என்பது ஐயம் தான். அதை சித்தார்த்தும் நன்றாக உணர்ந்ததால் தான் படத்தின...
முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முப்பொழுதும் உன் கற்பனைகள் - படத்தின் கதை சுருக்கம் தலைப்பினுள்ளேயே அடங்கி விடுகிறது.திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிறக்கும் ராம் என்பவன் தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவனது அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறான். சென்னையில் வேலைக் கிடைத்து, மென்பொருள் போட்டிக்காக பெங்களூரு செல்கிறான். அங்கே சாருவை சந்திக்கிறான். தாயின் இறப்பில் மனமுடையும் ராமை தேற்றுகிறாள் சாரு. மெல்ல சாருவின் மீது காதல் வயப்படுகிறான் ராம். சாருவை இருவர் கடத்தி விடுவதாக நினைக்கிறான். அவர்களிடம் இருந்து சாரு தப்பித்து வந்து விட்டதாக கற்பனை செய்து அவளை அவர்கள் கண்ணில் படாமல் காப்பாற்றி வருவதாக நினைத்து வருகிறான். கற்பனையிலேயே தன்னுடன் வாழுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் திரிபுக்காட்சியில்(Delusion) இருந்து ராமை மீட்டாளா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ராம் ஆக அதர்வா நடித்துள்ளார். புன்னகைக்கிறார்; ஷவருக்கு அடியில் இருக்...
தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமிது. 'டூயட் மூவிஸ்' எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மை தானெனப்படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றிப் பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணி புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல (!?) தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்குச் சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக...
ஜொள்ளன்

ஜொள்ளன்

கதை, படைப்புகள்
மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை.'இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல' என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார்.திண்ணையை ஒட்டிய சாளரம் வழியாக உள்ளே பார்த்தார். அவர் மனைவி சாளரத்திற்கு முதுகைக் காட்டியது போல் கட்டில் மேல் ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்தார்."தூங்கிட்டியா?""இல்ல. ஏன்?""உள்ள புழுங்கல? திண்ணைக்கு வாயேன். பேசிட்டிருப்போம்.""இப்ப அது மட்டுந்தான் குறைச்சல். உங்க கூட சேர்ந்து திண்ணைய தேய்க்க ஆள் யாரும் இன்னிக்கு...
மெரினா விமர்சனம்

மெரினா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெரினா - மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அந்தக் கடற்கரையில் சுண்டல், சங்கு இத்யாதிகள் விற்கும் சிறுவர்கள், யாசகம் பெறும் ஒரு பெரியவர், குதிரையை சவாரிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு ஆள், தன் மகளை ஆட விட்டு பாடல் பாடிப் பிழைப்பவர், தபால்காரர், பொழுதுபோக்க வரும் சில காதல் இணைகள் குறித்த படமாக 'மெரினா' உள்ளது.தந்தை, தாய் இறந்ததும் அம்பிகாபதியை அவனது சிற்றப்பா 'டாஸ்மாக்'கில் வேலையில் சேர்த்து விடுகிறார். அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் அம்பிகாபதி என்னும் சிறுவன் பட்டுக்கோட்டையில் இருந்து அமரர் ஊர்தி வாகனத்தில் சென்னை வந்து இறங்குகிறான். சென்னையில் பிழைப்பது எளிது என ஒருநாள் ஊர்ச் சுற்றி பார்த்துத் தெரிந்துக் கொள்கிறான். முதலில் தண்ணீர்ப் பொட்டலம் விற்கிறான். அதற்கு தடை விதிக்கப்பட்டதும் சுண்டல் விற்க தொடங்குகிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவனான அம்பிகாபதி சம்பாதித்து 'டு...
நண்பன் விமர்சனம்

நண்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நண்பன் - எந்திரன் என்னும் மிகப் பெரிய முதலீட்டுப் படத்திற்குப் பிறகு.. அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை அப்படியே சிந்தாமல், சிதறாமல் எடுத்து தமிழ்ப்பட பார்வையாளர்களுக்கு அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.  இளைய தளபதி விஜய்யுடன் ஷங்கர் இணையும் முதல் படம் இது. ஷங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.கொசக்சி பசபுகழ் என்பவர் பஞ்சவன் பாரிவேந்தன் என்பவருக்கு பதிலாக 'ஐ.இ.சி.' என்னும் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிக்கிறார். குருட்டாம்போக்காக மனனம் செய்து பரீட்சையில் வாந்தி எடுப்பதை விட விருப்பம் சார்ந்த துறையைக் காதலுடன் அணுகுவதே சிறந்தது என எண்ணம் உடையவர் கொசக்சி பசபுகழ். அவரது நண்பர்களான சேவற்கொடி செந்திலின் பயத்தைப் போக்கவும், வெங்கட் ராமகிருஷ்ணனின் விருப்பம் சார்ந்த துறையையும் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறார். கொசக்சி பசபுகழ்...
வேட்டை விமர்சனம்

வேட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேட்டை - இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது.குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. "அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது" என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் "ரன்" படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்...