Shadow

ஆன்‌மிகம்

கர்ணன் கொடையாளியா ?

கர்ணன் கொடையாளியா ?

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை. சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம் ...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisamp...
கர்ணன் துரியோதனன் நட்பு

கர்ணன் துரியோதனன் நட்பு

ஆன்‌மிகம்
(Image Courtesy: news.indiatimes.com) முதல் பகுதி: "அடிமைக்கு ஏன் மேலாடை?" - கர்ணன் எத்தனை வகையான பாரதங்கள்? ஜைமினி பாரதம் கன்னட பாரத கதாமஞ்சரி பீல் மஹாபாரதம் இந்தோனேஷிய மஹாபாரதம் ஜைன பாரதம் வில்லிபாரதம் என இன்னும் பலவகையில் பரவி இருக்கின்றன. இவை அந்தந்தப் பிராந்திய சூழலுக்கேற்றாற்போல எழுதியவர்களால் கற்பனைக்குட்படுத்தப் பட்டு எழுதப் பட்டிருக்கின்றன. இப்படியானவற்றில் கர்ணனை அதிசூரனாக, வள்ளலாக எல்லாம் காட்டிய பெருமை தென்னிந்திய வகை பாரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிறந்தான் கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 111 பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்த சமயத்தில், அவர் பணிவிடையில் மகிழ்ந்து ஒரு வரம் தருகிறார். அந்த வரத்தின் படி அவள் எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தைச் சொல்கிறாளோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு மகவு உண்டாகும். அவளும் விளையாட்டாக சூரியனை...
“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

ஆன்‌மிகம்
(Image Courtesy: https://detechter.com/) கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம். பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால் குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள் சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே! அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு. என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம். கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் வந்து கையேந்தி நிற்கும் போது, இந்தக் குரலில், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைக் கேட்டு கண்ணில் நீர் வழியாதோர் குறைவாகவே இருக்க முடியும். படம் முழுக்க வசனங்கள் அப்படி விளையாடும். “வளர்த்த தந்தையே, வளர்த்த தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் வந்தேன்...
ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (The...
நவீன உலகத்தின் நன்னெறி

நவீன உலகத்தின் நன்னெறி

ஆன்‌மிகம், சமூகம்
ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த பிட்சுவான திரு. சாம்தாங் ரின்போச்சேவும் ஆவர்.“சீன அரசாங்கம் தவத்திரு தலாய் லாமாவைத் திபெத்தில் இருந்து வெளியேறச் சொன்ன பொழுது, இந்தியா சார்பாக வரவேற்றதில் நானுமொருவன். அவருடன் வந்திருந்த குழுவில், தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய சாம்தாங் ரின்போச்சேவும் ஒருவர். தலாய் லாமா கேட்டுக்...
வியப்பூட்டும் ஆலயங்கள்

வியப்பூட்டும் ஆலயங்கள்

ஆன்‌மிகம்
விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூரில் தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில், சிவனுக்கு முன்புறமாக உள்ள நந்திக்கு இடப்பக்கக் காது இல்லாதிருப்பதால் "செவி அறுந்த நந்தி தேவர்'' என்று பெயர். மௌண்ட் அபுவில் (குஜராத்) அச்சல் கட் என்ற இடத்திலுள்ள அஞ்சலேஷ்வர் என்ற கோயிலில் லிங்கத்துக்குப் பதில் ஈஸ்வரனின் வலதுகால் கட்டை விரல் காணப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் உள்ள நந்தி 4320 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தினால் ஆனது. கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரு நல்லூர் திருத்தலம். அத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர். உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அஜ்மீர் தர்ஹாவில் உலக அதிசயமா...
தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

ஆன்‌மிகம்
வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,பசியினால் இளைத்தே வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்.. என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம். இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருகே ...
ஓங்காரம்…!

ஓங்காரம்…!

ஆன்‌மிகம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம் ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே - திருமந்திரம் ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே "ஹரி ஓம்" என்று அதை மாற்றினர். அ , உ , ம் என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி. தமிழைப் பொறுத்தவரை "ஓ" வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான...
சதுராச்சலம்: ஓர் அனுபவம்

சதுராச்சலம்: ஓர் அனுபவம்

ஆன்‌மிகம், தொடர்
காணாத அருவினுக்கும்       உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு       நிகழ்குறியாஞ் சிவலிங்கம் லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த பிரகாரத்தில் லிங்கங்களைப் பார்த்துக் கொண்டு நடப்பது ஓர் அமானுஷ்ய உணர்வைத் தரும். அதுவும் நாம் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நிற்கும்போது அதைத் துல்லியமாக உணரலாம். அச்சமயம் பார்த்து வெளவால்கள் உரசிக் கொண்டு பறந்தால் சொல்லவே வேணாம். லிங்கங்களின் அச்சுறுத்தும் கம்பீரமும், சலனமற்ற அழகும் மனதை ஏதோ செய்துவிடும். இப்பட...
ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube] அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்      ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம் ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்      ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்உன் இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது; இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்      வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது; இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:      பாணிற்மதுர: பாதௌ மதுரௌ ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியத...
ஹரிவராசனம் – தமிழில்

ஹரிவராசனம் – தமிழில்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=A7UuHVr_Q9Y&w=450&h=285[/youtube] எத்தனையோ திரைப்படப் பாடல்கள் மிகப் பிரபலம் பெற்றிருந்தாலும், இவை பல பக்தி பாடல்களுக்கு இணையாக வருமா என்பது கேள்வியே.. இவற்றில் என்னை கவர்ந்தது கே.ஜே.யேசுதாஸ் பாடிய "ஹரிவராசனம்" பாடலே. இதனை இயற்றியவர் ஸ்ரீ கம்பக்குடி குளத்தூர் ஸ்ரீனிவாச அய்யர். இப்பாடல் 8 செய்யுள்களில் 32 வரிகளையும் 108 சொற்களையும் 352 எழுத்துக்களையும் கொண்டுதாக இயற்றப்பட்டுள்ளது. புகழ் பெற்ற பல பாடகர்களால் பல ஒலித்தொகுப்புகளில் பாடி வெளியிடப்பட்டுள்ளது இந்தப் பாடல். என்றாலும் கே. ஜே. யேசுதாஸ் பாடிய பாடலே இன்றும் சபரிமலையில் நடைசாத்தும் பொழுது தாலாட்டுப் பாட்டாக ஒலிபரப்பப்படுகிறது. கே. ஜே. யேசுதாஸ் பாடிய இந்தப்பாடல் தெளிவான உச்சரிப்பும் கணீர் என்ற குரலும் அளவான இசையும் நம்மை மயங்கவைக்கிறது என்பது நிச்சயம். நான் ரசித்த இந்தப்  பாட்டுக்...
காரைக்கால் அம்மையின் தரிசனம்

காரைக்கால் அம்மையின் தரிசனம்

ஆன்‌மிகம்
கொங்கைதிரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண்வெண்பற் குழிவ யிற்றுப் பங்கிசிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர்நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கியலறி யுலறு காட்டில் தாழ்சடைஎட்டுத் திசையும் வீசி அங்கங்குளிர்ந்தன லாடும் எங்கள்அப்பனிடந்திரு ஆலங் காடே.---காரைக்கால் அம்மையார் முலைகள் வற்றிசரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்ததலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும்திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம்குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.காரைக்கால் அம்மையாரின் பாடல்களே இது. இவர் வாழ்ந்தவரலாற்றையும் பின்னணியையும் தெரிந்து கொண்டால் இப்பாடல்களுக்கு இன்னும் உச்சம்கூடும். காரைக்காலில் செழிப்பான வணிகரின் ஒரே மகள் புனிதவதி. மிக செல்லமா...
யார்.. யோகி..!!

யார்.. யோகி..!!

ஆன்‌மிகம்
சமீப நாட்களில் யோகிகள் என்ற பெயரில் வந்து இம்சிப்பவர்களின் எண்ணிக்கை கொசுத் தொல்லையை விடவும் மோசமானதாகிவிட்டது. மேலே பார்த்தேன் யோகியாய்ட்டேன். மொட்டை மாடில நின்னு கீழே பார்த்தேன், உணர்ந்தேன் உடனே யோகி ஆய்ட்டேன்ன்னு ஆளாளுக்கு ஒரு கதையை சொல்லிக் கொண்டு யோகியாகி விடுகிறார்கள். யோகத்தின் அடிப்படை கூட தெரியாத இந்த அசடர்களையும் நம்பிக் கொண்டு அவர்களுக்கு வால்பிடிக்க ஒரு கூட்டம் இருப்பதினால்தான் இவர்கள் வெள்ளையும் சொள்ளையுமாய் குடுமியும், குங்குமமும் வைத்துக் கொண்டு இரண்டு நாளில் ஞானம் தருவதாய் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார்கள்.யோகம் என்பது எட்டாம் கிளாஸ் பாஸ். பத்தாங்கிளாஸ் பெயில் மேட்டர் இல்லை. வாழ்வியல் அனுபவம். ஒவ்வொரு நிலையாக உணர்ந்து தெளிந்து கடந்து போகிற நிலை. இப்படிக் கடந்து போகிற எவனும் தன்னைச் சுற்றிய ஒளி வட்டத்துக்கோ, காசு பார்க்கும் கார்ப்பரேட் தனத்துக்கோ விலை போவதில்லை. அப்படி வ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், 'நோக்கு வர்மம்' என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிட...