Shadow

சினிமா

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

சினிமா, திரைத் துளி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திரப் பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின. "அங்கே சிரிப்பவர்கள்...
என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை. விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பே...
திருநாள் விமர்சனம்

திருநாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் 'நீயா? நானா?' கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி "என்கவுன்ட்டர்" மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா வ...
நமது விமர்சனம்

நமது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி. அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடித்...
ஜேசன் பார்ன் விமர்சனம்

ஜேசன் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன். தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமுகத...
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்...
கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செல்...
ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

ஹாலிவுட்டின் காமெடி பேய்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
பேய்ப் படப் பின்னணியில், நகைச்சுவை ததும்ப ஒன்றன் பின் ஒன்றாகத் திரைப்படங்களை அள்ளி வழங்குவதில் வள்ளலாகி விட்டது தமிழ்ப் பட உலகம் மட்டும் தானா? நாங்களும் அதற்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பது போல், ஹாலிவுட்டும் தற்போது புறப்பட்டு விட்டது. கோஸ்ட்பஸ்டர்ஸ் படத் தொடரில் மூன்றாவது படமான இதை இயக்கியுள்ளவர் பால் ஃபீக். கேட்டி டிப்போல்டுடன் இணைந்து இதன் திரைக்கதையையும் உருவாக்கி உள்ளார் பால் ஃபீக். மெல்லிசா மெக் கார்த்தி, க்றிஸ்டன் வீக், கேட் மெக்கினோன், லெஸ்லீ ஜோன்ஸ் ஆகியோர், நியூ யார்க் நகரில் பேய் ஒட்டுவதை ஒரு தொழிலாகத் தொடங்குகிறார்கள்! பேய் ஆராய்ச்சியாளர் அபீ யேட்ஸும், அறிவியல் ஆராய்ச்சியாளரான எரின் கில்பெர்ட்டும் பேய்களும் ஆவிகளும் இருப்பதாக உறுதியாக நம்புகிறார்கள்! ஜில்லியன் ஹோல்ட்ஸ்மேன் என்கிற ஒரு பொறியாளர், அவர்கள் இருவருடன் இணைகிறார். நான்காவது நபராக அவர்களுடன் சேர்ந்து கொள்...
ரெமோ – படக்குழுவினர்

ரெமோ – படக்குழுவினர்

சினிமா, திரைத் துளி
நடிகர்கள்:>> சிவகார்த்திகேயன் >> கீர்த்தி சுரேஷ் >> சரண்யா பொன்வண்ணன் >> 'நான் கடவுள்' ராஜேந்திரன் >> யோகிபாபு >> நரேன் >> கல்யாணி நடராஜன் >> அன்சன் பால் >> பேபி ரக் ஷா >> பிரதாப் போத்தன் >> கே.எஸ்.ரவிக்குமார் >> மெளலி >> மயில்சாமி >> சுவாமிநாதன்பணிக்குழு:>> தயாரிப்பு நிறுவனம் - 24 ஏஎம் ஸ்டுடியோஸ் >> தயாரிப்பு - ஆர்.டி.ராஜா >> இயக்கம் - பாக்கியராஜ் கண்ணன் >> ஒளிப்பதிவு - பி.சி.ஸ்ரீராம் >> இசை - அனிருத் >> சவுண்ட் டிசைனர் - ரசூல் பூக்குட்டி >> படத்தொகுப்பு - ரூபன் >> கலை - T.முத்துராஜ் >> நடனம் - ராஜு சுந்தரம், பிருந்தா >> சண்டை - அனல் அரசு >> போஸ்டர் டிசைன் - டூனி ஜான் >> உடை வடிவமைப்பு - அனு பார்த்தச...
யுவன் இசையில் ‘பலூன்’

யுவன் இசையில் ‘பலூன்’

சினிமா, திரைத் துளி
காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளராக R.சரவணன், கலை இயக்குநராக சக்தி வெங்கடராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குநராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். "முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களைக் கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம். 'மெலோடி' என்றாலே அது யுவன்ஷங்கர் ராஜா தான். எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் எங்கள் பலூன் திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்று நம்பிக்கையுடன் கூற...
அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

அச்சுறுத்த வருகிறது ‘லைட்ஸ் அவுட்’

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இருள் என ஒன்றும் இல்லை; ஒளி இல்லாத ஒரு சூழலே இருள் எனப்படும் என சுவாமி விவேகானந்தர் சொன்னார். இருளிற்கும் இரவிற்கும் னெருக்கமான தொடர்பு உண்டு. பொதுவாக ஒளிமயமான விஷயங்கள் தெய்வீகமாக கருதப்படுவது போல், இருளுடன் திகிலும் இணைந்து பேசப்படும். அத்தகைய இருளில் சிக்கித் திகிலிறும் ரெபெக்கா படும்பாடுதான் ‘லைட்ஸ் அவுட்’ திரைப்படம். டேவிட் F.சாண்ட்பெர்க் இயக்கிய குறும்படமான ‘லைட்ஸவுட்’ பரவலான வரவேற்பைப் பெற்றது. ஆவிகளைப் பற்றி ஆராய்கிற திகில் படமது. அக்குறும்படத்தை முழு நீள திரைப்படமாக எடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்து விட்டார் டேவிட். எரிக் ஹீஸெரர் கதை அமைத்து லாரன்ஸ் க்ரேவுடன் சேர்ந்து தயாரித்துள்ளார். இவர்களுடன் தி கான்சூரிங் 1, தி கான் ஜூரிங் 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் இயக்குநரான ஜேம்ஸ் வானும் இன்னொரு தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். ஐந்து மில்லியன் அமெரிக்க டாலர் செலவில்...
கபாலி விமர்சனம்

கபாலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வழக்கமான ரஜினி படம் போல் தொடங்கினாலும், சிறையில் இருந்து வரும் ரஜினி தன் வீட்டுக்குப் போனதும் படம் வேறு பரிமாணத்தைப் பெறுகிறது. முற்றிலும் புது அனுபவத்தைத் தருகிறது. வீட்டின் ஒவ்வொரு மூலையும், அவருக்குத் தன் மனைவியின் ஞாபகத்தை மீட்டெழச் செய்கிறது. அதைத் தாங்கொண்ணாத ரஜினி, தன் பலஹீனத்தை மறைத்தவாறு, டேபிளில் தாளம் போட்டுக் கொண்டே அமீரிடம் தனியாக இருக்கப் பிரியப்படுவதாகச் சொல்கிறார். விடலைத்தனத்துக்கு ஒத்த காதலையே காவியம் போல் வியந்தோதி தமிழ் சினிமா மகிழ்ச்சி அடைந்து கொள்ளும் (ரஜினியின் ‘சிவாஜி’ படம் ஓர் எடுத்துக்காட்டு!) அதுவும் கல்யாணத்துக்கு முன்பான கவர்ச்சியோடு தன்னைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையைக் கொண்டது. ஆனால், நரை கண்ட கபாலிக்கு எப்பொழுதும் தன் மனைவியின் ஞாபகம்தான். ‘தன் மனைவி உயிரோடு இருக்கிறாளா இல்லையா?’ என்பதே தெரியாமல், கபாலியாக ரஜினி காட்டும் சங்கடமும் வேதனையும் மிக அற்புதம். ரஜி...
இரவின் கனவாக – துருவங்கள் 16!

இரவின் கனவாக – துருவங்கள் 16!

சினிமா, திரைத் துளி
‘துருவங்கள் பதினாறு’ எனும் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். 21 வயது இளைஞரான இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர். சினிமா ஆர்வத்தில் படிப்பை பாதியில் நிறுத்தியவர். குறும்படங்கள் எடுத்து சினிமா பக்கம் வந்திருப்பவர். ஏற்கெனவே 'விழியின் சுவடுகள்', 'நிறங்கள் மூன்று', 'ஊமைக்குரல்', 'பிரதி' என 4 குறும்படங்கள் இயக்கிப் பரவலான வரவேற்பையும் பாராட்டையும் பெற்றபின் சினிமா மீது நம்பிக்கை வைத்துத் திரைக்களத்துக்கு வந்து விட்டார். ஆபாச காமெடி இல்லை; ஆவேச பஞ்ச் வசனங்கள் இல்லை ; பாடல்கள் இல்லை; கதாநாயகி இல்லை; காதல் இல்லை; இப்படி வழக்கமான எதுவும் இல்லை. பரபரப்பான கதை உண்டு விறுவிறுப்பான காட்சிகள் மட்டுமே உண்டு. 'துருவங்கள் பதினாறு' படத்தில் பல புதுமுகங்கள் பங்கு வகிக்கிறார்கள். பிரதான வேடமேற்றிருப்பவர் நடிகர் ரகுமான். கிளை வேர்களாக பலரும் இருக்க ஆணிவேராக ரகுமான் பாத்திரம் இருக்கிறது. இது ஒரு க்ரைம் ...
சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

சத்யராஜின் ‘கிட்னாப் – திரில்லர்’

சினிமா, திரைத் துளி
எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை ரசிக்கும்படி திரையில் கொண்டு வருவது சத்யராஜின் பாணி. அதுவே அவரை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமாக இருந்தால்? படத்தை அவரே, நாதாம்பாள் பிலிம் பாக்டரி சார்பாகத் தயாரித்து நடிப்பார். "இயக்குநர் கார்த்திக் என்னிடம் வந்து கதையைச் சொன்ன அடுத்த நொடியே, இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். அந்த அளவிற்கு இந்தப் படத்தின் கதையானது என்னைக் கவர்ந்துவிட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் புதுமுகமாக இருந்தாலும், அவரின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் இந்தப் படத்திற்குப் பக்கபலமாகச் செயல்பட்டு வருகிறது. ஒரு ரேடியோ ஸ்டேஷன் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கூர்ந்து ஆராய்ந்து, அதை அப்படியே திரையில் பிரதிபலிக்கும் யுக்தியை கார்த்திக் கையாண்டு வருகிறார். ஒரு ரேடியோ ஸ்டேஷனின் தலைமை அதிகாரியாக நான் இந்தப் படத்தில் நடித்து வருகிறேன். தொகுப்பாளர்கள...