Shadow

சினிமா

பலூனில் நுழைந்த ஜனனி

பலூனில் நுழைந்த ஜனனி

சினிமா, திரைத் துளி
பலூன் படத்தில் நடிகை ஜனனியையும் மற்றொரு கதாநாயகியாக அறிவித்துள்ளதுள்ளனர். பலூன் திரைப்படத்திற்காக சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "அனைவரையும் ஈர்க்கக் கூடிய கண்கள் தான் ஜனனியின் பலமே! எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் அதை தன்னுடைய கண்கள் மூலம் மிக அழகாக வெளிப்படுத்தக்கூடிய ஜனனி எங்களின் பலூன் படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பங்களிப்பு எங்களின் படத்திற்குக் கூடுதல் மதிப்பைத் தரும் எனப் பெரிதும் நம்புகிறோம். வணீக ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெறத் தேவையான எல்லாச் சிறப்பம்சங்களையும் எங்களின் பலூன் திரைப்படத்தில் உள்ளடக்க முயற்சி செய்து வருகிறோம." என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குநர் சினிஷ்....
எய்தவன் – போஸ்டர்

எய்தவன் – போஸ்டர்

Movie Posters, கேலரி, சினிமா, திரைத் துளி
'பல்கலைக்கழகத்தின் தவறுகளுக்கு மாணவர்கள் பலிகடாவதா?' என்ற பதாகை காணப்படும் எய்தவன் படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கபாலி இயக்குநர் ரஞ்சித்தும், மதயானைக் கூட்டம் இயக்குநர் விக்ரம் சுகுமாறனும் இணைந்து வெளியிட்டார்கள்.
தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

தயாரிப்பாளராகும் இசையமைப்பாளர்

சினிமா, திரைத் துளி
இசையமைப்பாளர்கள் ஜிவி பிரகாஷ்குமார், விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து ரௌத்திரம், களம் போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் பிரகாஷ் நிக்கி தயாரிப்பாளராகிறார். ஸ்வதீப் சினிமா நிறுவனத்துடன் இணைந்து இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தைத் தயாரிக்கிறார் பிரகாஷ் நிக்கி. புதுமுகங்கள் நடிக்கவிருக்கும் இத்திரைப்படத்தைப் புதுமுக இயக்குநர் விஜய்ஸ்ரீ ஜி இயக்குகிறார். ராஜா DFT ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். பிரகாஷ்நிக்கி இசையமைக்கிறார். நிர்வாக தயாரிப்பு - நமஸ்காரம் சரவணன். நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படும். அடுத்த மாதம் சென்னை உட்பட புறநகர் பகுதியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது....
வாகா விமர்சனம்

வாகா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாகிஸ்தான் பெண்ணான காணமைக் காதலிக்கிறான் இந்திய இராணுவ வீரனான வாசு. அவர்கள் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஹரிதாஸ் படத்தின் இயக்குநர் ஜி.என்.ஆர்.குமரவேலனின் அடுத்த படமிது. ஹரிதாஸ் ஈட்டிய புகழை மறக்காமல், எதிலும் கவனம் செல்லாத நாயகனுக்கு ஆட்டிசம் இருந்தது என ஒரு முடிச்சுப் போட்டுள்ளார். இலவசமாக மது கிடைக்குமென இராணுவத்தில் சேர்ந்து விடுகிறான் நாயகன். இந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையையும் அலட்சியத்தையும் படம் நெடுகே வெளிப்படுத்தியுள்ளார் விக்ரம் பிரபு. நாயகியைப் பார்த்ததும் லட்சியக் காதலனாகி விடுகிறார். நாயகியாக ரன்யா ராவ். கதாபாத்திரத்தின் பெயர் காணம் என்றாலும், நாயகன் காஜல் எனப் பெயரை மாற்றிக் கொள்கிறான். ஏன் காஜல் என்ற பெயரை நாயகிக்குச் சூட்டுகிறான்? காணம் என்ற பெயருக்கு என்னக் குறைச்சலென்றும் தெரியவில்லை. இத்தகைய குழப்பமும், தெளிவின்மையும் திரைக்கதை நெடுகேயும் உள்ளது. கண்டதும் காத...
ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

ஒரு நல்லபாட்டு முடிந்தது – வைரமுத்து

சினிமா, திரைத் துளி
இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவு கொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் பெறவேண்டிய மூன்றாவது விருதைக் காலம் களவாடிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாகத் தமிழ்த் திரையுலகில் அதிகம் எழுதியவர்; அழகாகவும் எழுதியவர். “மழைமட்டுமா அழகு; வெயில் கூடத்தான் அழகு” என்று சொன்னவர், “வாழ்வு மட்டுமா அழகு; மரணம் கூடத்தான் அழகு” என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போய்விட்டார். தமிழ்க் கவிஞர் உலகம் வாழையடி வாழையாய்ச் செழிக்க வேண்டும் என்று பேராசை கொண்டவன் நான். இன்று இளங்கன்று ஒன்று தன் வேர்மண்ணோடு வீழ்ந்துவிட்டதே என்று விம்மி நிற்கிறேன். ஒரு நல்ல பாட்டு முடிந்துவிட்டதே என்று வேதனைப்படுகிறேன். ‘உன் சொந்த ஊர் எது தம்பி?’ என்று...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள...
டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆரின் ரிக்‌ஷாக்காரன்

சினிமா, திரைத் துளி
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர்.எம்.வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே 'ரிக்‌ஷாக்காரன்' திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது. மேலும் இந்தப் படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திரப் பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாபத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின. "அங்கே சிரிப்பவர்கள்...
என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

என்னமா கதவுடுறானுங்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ஆவி கம் கேம் (Cam)’ எனும் நிகழ்ச்சி நடத்துபவர் விஷால். ஆவிகளை அறிந்து, அதன் தேவைகளைப் புரிந்து, அதனிடம் பேசி அவைகளை அமைதிப்படுத்தி மறு உலகிற்கு அனுப்பி வைக்கிறார். கோட்டைமேடு எனும் ஊரில் இரத்தக் காட்டேரி உலாவுவதாகத் தெரிய வர, அங்கே கேமிரா மேனுடன் செல்கிறார் விஷால். அங்கே நடக்கும் நம்ப முடியாத அமானுஷ்யச் சம்பவங்கள்தான் படத்தின் கதை. விஷாலாக அர்வி நடித்துள்ளார். பேயின் இருப்பைக் கண்டறிய ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார் அர்வி. உணர்ச்சிகளை அதிகம் வெளிக்காட்டாத உறைந்த முகம் அவருக்கு. இருட்டான இடங்களில் கருவியோடு அலைந்து, 'எனிபடி இஸ் தேர்?' எனக் கேட்டு, ஆவிகள் எழுப்பும் சத்தத்தை ரெக்கார்ட் செய்து, அவற்றைக் கேட்டு, உணர்ந்து அவைகளின் உள்ளக்கிடக்கையை அறிந்து கொண்டு அவைகளுக்கு உதவுகிறார் விஷால். ஆவிகள் எழுப்பும் ஒலிகள் வழக்கமான தமிழ்ப்பட பேயின் சத்தங்களாக இல்லாமல், கான்ஜூரிங் போன்ற ஹாலிவுட் படப் பே...
திருநாள் விமர்சனம்

திருநாள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாருமற்ற அடியாளான பிளேடிற்கு சாக்கு மண்டி முதலாளி மகள் வித்யா மீது காதல் மலர்கிறது. அக்காதல் வெளியில் தெரிய வர, அனைவருக்கும் குழப்பமும் சங்கடமும் மேலிடுகிறது. அவர்கள் காதல் என்னானது என்பதுதான் படத்தின் கதை. தாதாவாக சரத் லோகிதஸ்வா மிரட்டியுள்ளார். ஆஜானுபாகுவான தோற்றமும், கூரிய பார்வையும் கொண்ட அவர் தோன்றும் முதல் ஃப்ரேமில் இருந்தே மனிதன் அசத்துகிறார். அவருடன் ஃப்ரேமில் யார் தோன்றினாலும் பொலிவிழந்து போகின்றனர். இவர் சரீரத்தால் மிரட்டினால், கரடு முரடான சாரீரத்தாலும் பெரிய விழிகளாலும் அச்சுறுத்துகிறார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். இவர் முன் மீசையை முறுக்கிக் கொண்டு வண்டியில் உட்காரும் 'நீயா? நானா?' கோபிநாத், ஃப்ரேமில் நானில்லை என்பது போல் பொலிவிழுந்து காணப்படுகிறார். திறமையான காவல்துறை அதிகாரி எனக் காட்ட திரைத்துறைக்குத் தெரிந்த ஒரே வழி "என்கவுன்ட்டர்" மட்டும் தான் போலும். கோபிநாதிற்குப் பொருந்தா வ...
நமது விமர்சனம்

நமது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘நாம் அனைவரும்’ எனப் பொருள்படும் “மனமன்த்தா” என்ற தெலுங்கு படத்தை ‘நமது’ என தமிழில் மொழிமாற்றம் செய்துள்ளனர். அபிராம்க்கு ஐரா மீது காதல்; சிறுமி மஹிதாவிற்கு சாலையில் வாழும் குட்டி பையன் வீர் மீது பாசம்; காயத்திரிக்கு தன் குடும்பத்தின் மீது அலாதி அன்பு; சாய்ராம்க்கு குடும்பச் சூழலைச் சமாளிக்க மேனேஜராக பிரமோஷன் வேண்டும். இந்த நான்கு கதைகளின் திரட்டுதான் ‘நமது’ படமாக நீள்கிறது. வெவ்வேறு சூழலை எதிர்கொள்ளும் நான்கு நபர்கள்; நான்கு கதைகள்; அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏற்படும் நான்கு சங்கடங்கள் என நல்லதொரு ஃபீல் குட் மூவிக்கு உத்திரவாதம் அளித்துள்ளார் இயக்குநர் சந்திரசேகர் ஏலட்டி. அபிராமாக விஸ்வாந்த் நடித்துள்ளார். காதலில் விழும் நன்றாகப் படிக்கும் மாணவன் பாத்திரத்துக்குப் பொருந்துகிறார். ஆனாலும், அவரது முகத்தில் தெரியும் அந்நியத்தன்மை காரணமாக மனதில் பதிய மறுக்கிறார். ஐராவாக அனிஷா நடித்...
ஜேசன் பார்ன் விமர்சனம்

ஜேசன் பார்ன் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
குண்டடிப்பட்டு தன் நினைவுகளை இழந்து அல்லலுற்ற ஜேசன் பார்ன், மக்களின் அபிமானத்தைப் பெற்ற ஒரு கதாபாத்திரம். தன் கடந்த காலத்தை மறந்து தன்னைத் தானே தேடி வந்த ஜேசன் பார்ன், அனைத்து நினைவுகளும் மீண்ட நிலையில், தன் பழைய வாழ்க்கையில் இருந்து துண்டித்துக் கொண்டு தலைமறைவாக வாழ்கிறான். ஜேசனின் கடந்த காலம் பற்றியும், அவனது தந்தையைப் பற்றியும் ஒரு முக்கியமான தகவல், அவனை ஒரு தலையாகக் காதலித்த நிக்கி பார்சன்ஸ்க்குக் கிடைக்கிறது. கண் கொத்திப் பாம்பாகத் தொடரும் சி.ஐ.ஏ.வின் தலையீட்டை மீறி, தன் உயிர் போகும் முன் ஜேசனிடம் அந்தத் தகவலைக் கொடுத்து விடுகிறாள். தன் வாழ்வில் நடந்த ஏதோ ஒரு மர்மத்தை, மீண்டும் தேடிச் செல்கிறான் ஜேசன் பார்ன். தொடக்கம் முதலே படம் பயங்கர விறுவிறுப்பாகப் போகிறது. பேரி அக்ராய்டின் ஒளிப்பதிவை தனது கச்சிதமான படத்தொகுப்பின் மூலமாக க்றிஸ்டோஃபர் ரெளஸ், ஹாலிவுட்டின் வழக்கமானதொரு நாயகன் அறிமுகத...
தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழ்ச்செல்வனுக்கு காவ்யா மீது கண்டதும் காதல் எழுகிறது. அவளை தினம் பார்ப்பதற்காக கொரியர் கம்பெனியில் வேலை செய்கிறான். சமூகச் செயற்பாட்டாளர் சத்யமூர்த்திக்குக் கொரியர் கொடுக்கப் போகும் பொழுது ஒரு பிரச்சனை எழுகிறது. அதென்ன கொரியர்? யாரால் பிரச்சனை? அதில் சிக்கிக் கொள்ளும் தமிழ்ச்செல்வன் எப்படி மீள்கிறான் என்பதுடன் படம் நிறைவுறுகிறது. தமிழ்ப் படங்களில் சமூகச் செயற்பாட்டாளராக அதிகம் முறை நடித்தது யாரென ஏதேனும் ஆய்வு மேற்கொண்டால், கண்டிப்பாக நாசர் என்றே முடிவு வருமெனத் தோன்றுகிறது. மிகச் சமீபத்தில் வெளியான அர்த்தநாரி, கபாலி முதல் ஏகப்பட்ட படங்களைச் சான்றாக அடுக்கிக் கொண்டே போகலாம். சுந்தர்.சி நடித்த ‘ஆயுதம் செய்வோம்’ மற்றொரு நல்ல உதாரணம். நாசரை இந்தப் புனித பிம்பத்தில் இருந்து மீட்டு, ‘அவ்வை சண்முகி’ படத்தில் வரும் பாஷா பாய் போல் குணசித்திர வேடங்களிலும் மீண்டும் அவரைத் தமிழ்த் திரையுலகம் நடிக்...
கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சந்திரமுகி, காஞ்சனா, மாயா, டிமான்ட்டி காலனி என தமிழ்த் திரையுலகம் டிசைன் டிசைனாகப் பேய்களை மார்க்கெட்டில் இறக்கிவிட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில், ஹாலிவுட்டில் இருந்து சமீபத்தில் கால் பதித்திருக்கும் பேய்க் கதைதான் இந்த கோஸ்ட் பஸ்டர்ஸ். இது இந்த (GHOST BUSTERS) வரிசையில் மூன்றாவது படம் என்றபோதும் மற்ற படங்களைப் பற்றிய முன்கதைச் சுருக்கங்கள் இல்லாமலே நமக்குப் புரிகிறது. கொலம்பியா யுனிவர்சிட்டியில் பேராசிரியராகப் பணிபுரியும் எரினைச் சந்திக்க ஒருவர் வருகிறார். அவர் கையில் எரினும் அபியும் சேர்ந்து எழுதிய புத்தகத்தின் நகல் இருக்கிறது. இந்தப் புத்தகத்தை காட்டி தன் வீட்டில் பேய் இருப்பதாகவும், அதை விரட்ட எரின் உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். தான் அந்தப் புத்தகத்தை எழுதவே இல்லை என்று மறுக்கும் எரின் ஒரு கட்டத்தில் உண்மையை ஒப்புக் கொள்கிறார். ஏன் மறுத்தார் என்ற ஃபிளாஷ் பேக்கிற்கு எல்லாம் செல்...