Shadow

சினிமா

நீயும் பொம்மை நானும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

சினிமா, திரைத் துளி
போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டுமல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்குண்டு. வாழும்போது வைக்காதடா சேத்து - ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து! மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்திருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிஃபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு இருப்பதே கானா பாடல்களின் தனிச் சிறப்பு. அந்த கானா எனப்படும் உலகில் அரசர்களாகத் திகழும் கானா பாலாவும் மரண கானா விஜியும் முதல் முறையாக இணைந்து, விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' திரைப்படத்தில் காதல் பற்றிப் பாடல் எழுதிப் பாடி நடித்துள்ளனர். சுகுமாரின் இசையில் உருவாகியுள்ள இவர...
ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

சினிமா, திரைத் துளி
கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கித் தந்த இயக்குநர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்து விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று தன் பட நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் corporation நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த ஜே .சதீஷ் குமாருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்கு அடுத்துக் கொடுக்கவிருக்கும் படைப்பு 'தரமணி'. தரமான வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான திரைக்கதை, தெளிவான படப்பிடிப்பு என்று தனக்கென்று தனிப் பாணியைக் கையாளும் ராம் இந்தப் படத்திலும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். தரமணியின் ஆத்மா- The soul of Taramani என்று துவங்கும் ஒரு சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் ராம், ஜ...
கோவக்காரப் பறவைகள்

கோவக்காரப் பறவைகள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சோனி பிக்சர்ஸின், ‘The Angry Birds Movie’ ஆங்கிலத்திலும் தமிழிலும் (தமிழ்த் தலைப்பும் அதுவே) மே 27 ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னோடியாக, 3 D அனிமேஷன் கார்டூன் படமான இதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தத்தம் உடை அலங்காரங்களோடு, சமீபத்தில், சென்னை நகரில் உள்ள முக்கிய மால்கள் (Malls) மற்றும் பன்னடக்கு அரங்குகளில் உலா சென்று வலம் வந்தார்கள்! கோடை கால விடுமுறை தொடங்கும் நேரமாகையால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படை சூழ வந்து, தங்களுக்கு மிகவும் பிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் கதாபாத்திரங்களுடன் கொஞ்சி விளையாடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வதென பல விதமான செயல்பாட்டில் எடுபட்டார்கள்! Red, Chuck & Bomb ஆகிய மூன்று பறவை கதாபாத்திரங்களே படத்தில் பிரதான வேடத்தில் தோன்றுகின்றன. அமைதியாக ஒரே குடும்பமாக இப்பறவை இனம் ஒரு தீவில் வாழ்ந்து வர, எதிர்பாராத விதமாக ஒரு பன்றிக் கூட்டம்...
மயில்சாமி பேயின் கலாட்டா.!

மயில்சாமி பேயின் கலாட்டா.!

சினிமா, திரைத் துளி
‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. ‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன். படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தைச் சரியாகக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்குத் தோல்விதான் கிடைக்கிறது. ‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாளிய...
களம் விமர்சனம்

களம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாஜிக்கல் த்ரில்லர் என எதிர்பார்ப்பைத் தூண்டியது இப்படத்தின் டீசரும் ட்ரெயிலரும். ஒரு பாழடைந்த வீட்டை வாங்கிப் புணரமைத்து உபயோக்கின்றனர். அவ்வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அமானுஷ்யத்தின் பின்னாலுள்ள லாஜிக் என்னவென்பதே படத்தின் கதை. ஜீவாவின் சி.ஜி. படத்திற்குப் பலம். செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில், படத்தில் வரும் வீடு பல பரிமாணங்களைப் பெறுகிறது. படத்தின் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது வீடு. படத்தின் களமான இவ்வீடே நாயகனுமாகும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதையுண்டு’ என்று படத்தின் டீசரில் வரும் வரி படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. முகேஷின் ஒளிப்பதிவும், பிரபாகரின் படத்தொகுப்பும் அதற்கொரு முக்கிய காரணம். அந்த வீட்டின் கதையாக வரும் உப கதையும் அற்புதமாகவே இருந்தது. குறிப்பாக, அனிமேஷனில் அதைப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். கணினி வரையியல் (CG) செய்துள்ள ஜீவாவின் உழைப்...
மனிதன் விமர்சனம்

மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம். பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக ...
சர்வதேச நாய்க் கடத்தல்

சர்வதேச நாய்க் கடத்தல்

சினிமா, திரைத் துளி
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தைத் தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஷ்.R.V-க்கு இது முதற்படம். இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய்க் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடிப் படம்”என்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”. இப்படத்தின் மூலம், பேய் சீஸனைப் போல் நாய் சீஸனைத் துவங்கி வைத்துவிடுவார் போல் தெரிகிறது. படத்தைப் பற்றி இயக்குநர் சதீஷ் கூறுகையில், “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவைச் சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொ...
என்னுள் ஆயிரம் விமர்சனம்

என்னுள் ஆயிரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அனைவரின் மனதிலும் ஆயிரமுண்டு. சந்தர்ப்பங்களைத் தவறவிடக் கூடாதென, எதையுமே தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள நினைக்கும் அஷோக்கிற்குள்ளும் ஆயிரமுள்ளது. அதிலொன்று கை நழுவிப் போய்விடுமோ என்ற பதற்றத்தில் இசைக்கேடான செயலொன்றைப் புரிந்து விடுகிறான். அதனால் அவனுள்ளிருந்த ஆயிரமும் எப்படி ஒன்றில்லாமல் போகிறது என்பதே படத்தின் கதை. அஷோக் எனும் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கார் டெல்லி கணேஷின் மகன் மஹா. தன் மகனுக்காக, இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் டெல்லி கணேஷ். இப்படியொரு கதையை, முதற்படமாக நடிக்கத் தேர்ந்தெடுக்கவே ஒரு துணிவு வேண்டும். குறிப்பாக படத்தின் முதல் பாதி கதை. 5 ஸ்டார் ஹோட்டலின் பாரில் வேலை செய்பவராக மஹா. நாயகனாக மனதில் பதிய மறுத்தாலும், நாம் அன்றாடம் பார்க்கும் ஒரு நபராக அவரைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. குடித்து விட்டு அஷோக் மழைக்கு ஒதுங்குமிடத்தில் ஆர்த்தியும் ஒதுங்குகிறார்; ஆர...
தி ஜங்கிள் புக் விமர்சனம்

தி ஜங்கிள் புக் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொன்னூறுகளில், சரியாகச் சொல்லணும் எனில் 1993 ஆம் ஆண்டு ஞாயிற்றுக்கிழமைகள் மதியம் 12:30 மணிக்கு தூர்தர்ஷன் பார்த்த பாக்கியவான்கள் மனதில் இருந்து அகலாப் பாத்திரங்கள் மோக்லி, பகீரா, அகெலா, பாலு, ஷேர் கான் போன்றோர்கள். அப்பாத்திரங்களை பெரிய திரையில் உலாவ விட்டு, பாக்கியவான்களை 20 வருடங்களுக்கு முன் அழைத்துச் சென்று அதி பாக்கியவான்கள் ஆக்கியுள்ளது டிஸ்னி. ஓநாய்களால் வளர்க்கப்படும் மனிதக் குட்டி மோக்லியைக் கொல்லத் துடிக்கிறது ஒற்றைக் கண் புலியான ஷேர் கான். மோக்லி எவ்வாறு ஷேர் கானிடமிருந்து தப்புகிறான் என்பதே படத்தின் கதை. படம் தரும் விஷூவல் அனுபவத்தை, ‘ஜங்கிள் சஃபாரி’ என்றே சொல்ல வேண்டும். காட்டுக்குள் பிரவேசித்து விட்ட பரவச உணர்வைத் துல்லியமாகத் தருகிறது படம். முதலையின் பற்களை குருவிகள் அமர்ந்து சுத்தம் செய்வது, உறுமும் ஷேர் கானின் திடுக் க்ளோஸ்-அப், நம்மை உரசுவது போல் மிதந்து வரும் கட்டை, மர...
வெற்றிவேல் விமர்சனம்

வெற்றிவேல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன், பிரம்மன் என நண்பர்களுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த ஒரு மனிதர், வெற்றிவேலாக மாறி, தன் தம்பியின் காதலுக்காக எந்த எல்லைக்குப் போகிறார் என்பதே படத்தின் கதை. நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் இளவரசுவும், நாட்டுச்சாலை பிரசிடெண்ட்டாக நடித்திருக்கும் பிரபுவும் தான் கதையின் நாயகர்கள். ஆனால், படத்திற்கு உயிரூட்டியுள்ளதோ விஜி சந்திரசேகர் மட்டும்தான். ‘நாங்க இருக்கும் வரை காதல் சாகாது’ என நாடோடிகள் குழு விஜய் வசந்த், பரணி ஆகியோருடன் சமுத்திரக்கனியும் இறங்கி அதகளப்படுத்துகிறார். படத்தின் பலம் அதன் துணை நடிகர்கள் என்றே சொல்லவேண்டும். சசிகுமாரின் தம்பியாக ஆனந்த் நாக் நடித்துள்ளார். நாயகனின் அறிமுகத்தை விட இவரது அறிமுகம் நன்றாக இருப்பதோடு, கதையோடும் பொருந்தியும் வருகிறது. சசிகுமாரின் நடனம் ப்பாஆஆ..! மலையாளி ஜனனியாக மியா ஜார்ஜ். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, நிகிலா விமலுக்கு வழிவிட்டு ...
‘செல்லாது.. செல்லாது..’ – கே.எஸ்.ரவிக்குமார்

‘செல்லாது.. செல்லாது..’ – கே.எஸ்.ரவிக்குமார்

சினிமா, திரைத் துளி
சிவகார்த்திகேயன்- கீர்த்தி சுரேஷ் இணையாக நடிக்க, 24 ஏஎம் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் 'ரெமோ' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். ஒருநாள் அன்றைய நாளுக்கான அவரது சம்பளத்தைக் கொடுத்து விட்டு தயாரிப்பு நிறுவனத்தினர் அலுவலகம் திரும்பியுள்ளனர். சற்று நேரத்தில் ரவிக்குமாரிடம் இருந்து ஓர் அழைப்பு, 'இன்னைக்கு நான் மொத்தமா ஒரு மணி நேரம் கூட நடிக்கல. அதுக்கு எதுக்கு முழு நாள் சம்பளம்?’ என்று கேட்டார். ‘அது என்னவோ அரை நாள் வேலைதான் சார். ஆனா நீங்க ஒரு மணி நேரத்துல முடிச்சுட்டீங்க’ என்று தயாரிப்பு தரப்பில் கூற, ‘அதெல்லாம் முடியாது. தயாரிப்பாளர்கள் கஷ்டம் எனக்குத் தெரியும். தயவு செஞ்சு இந்தப் பணத்தை வாங்கிகோங்க’ என்று சற்றே கண்டிப்பான தொனியில் கூறியுள்ளார். வேறு வழியின்றி தயாரிப்பு நிர்வாகமும் பாதியை வாங்கிக் கொண்டனர். “இப்ப...
தெறி விமர்சனம்

தெறி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘சிதறி விசையுடன் விழுதல்’ என தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். விஜய்குமார் நேர்மையான நல்ல காவல்துறை அதிகாரி. அவர் நீதியை நிலை நாட்ட கொடூரமாக ஒரு கொலை செய்து விடுகிறார். நல்லவனே கொலை செய்யும் போது, கெட்டவன் சும்மா இருப்பானா? ஒரு கொலைக்குப் பதிலாக நான்கு கொலைகள் என இலக்கு நிர்ணயித்து பழி வாங்குகிறார் வானமாமலை. நாயகன் கதியென்ன? வானமாமலை வதம் நடந்து தர்மம் வென்றதா? எதார்த்தத்தில் நிகழ்வது போல் அதர்மம் வென்றதா? முதலிய கேள்விகள் தான் படத்தின் கதை. படத்தின் ஆச்சரியமும் அழகுமாக நிவி எனும் பாத்திரத்தில் நடித்துள்ள நைனிகாதான். நைனிகா என்றால் அழகிய கண்களுடையவர் எனப் பொருளாம். சில ஃப்ரேம்களில் மீனாவை ஞாபகப்படுத்துகிறது அவரது முகம். நைனிகா ஆளும் ஃப்ளாஷ்-பேக்கிற்கு முன்னான ஆரம்ப காட்சிகள் சாரலில் நனைந்தது போல் இருக்கிறது. பின் தொடங்கும் வழக்கமான கதை சொல்லலில் இருந்து அயர்ச்சி ஏற்படுகிறது. இடைவேளைக்குப் பி...
அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

அர்த்தநாரி – நாயகன் ராம்குமார்

சினிமா, திரைத் துளி
தல அஜித்தின் தீவர ரசிகரான ராம்குமார், "நான் தல அஜித்தின் உண்மையான விசுவாசி; வெறி பிடித்த ரசிகன் என்று சொல்லிக் கொண்டே போகலாம். எந்தவித பின்பலமுமின்றி தமிழ் சினிமாவில் காலூன்றி நின்ற அவரைத்தான் என்னுடைய முன்மாதிரியாக பார்க்கிறேன்!" என்று நெஞ்சம் மகிழ்கிறார். ராம்குமார் தனது 'அர்த்தநாரி' திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடி எடுத்து வைக்கிறார். சராசரி சென்னை இளைஞர்களைப் போல இன்ஜினியரிங் முடித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தவர் ராம்குமார். எனினும், நடிப்பின் மேல் இவர் கொண்ட காதல், இவரை சில விளம்பரப் படங்களில் நடிக்க வைத்தது. "நான் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும், அந்த வேலையில் நான் முழு மனத்திருப்தி அடையவில்லை. எனக்குள் இருந்த அந்த ஒரே தேடல் நடிப்பை நோக்கிப் பயணித்ததுதான். அப்போது தான் சில விளம்பரப் படங்களில் நடிக்கத் தொடங்கினேன். அப்படி நான் நடித்து, திரையரங்கங்களில் திரையிட...