Shadow

சினிமா

அகிலன்

அகிலன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியொன்றும் அப்போது வசதியாக இருக்கவில்லை. மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரத...
சேதுபதி விமர்சனம்

சேதுபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'போலிஸ் வேலை தான் கெத்து. யாரையும் அடிக்கலாம்' என்பான் நானும் ரெளடிதான் பாண்டி. அதே போலொரு ஆள் தான் சேதுபதியும். பொதுப்புத்தியில் உறைந்து விட்ட நியாய தர்மங்கள் மட்டுமே சரியென்று நம்பி, அதைப் பிடிவாதமாகக் கடைபிடிக்கும் நல்ல (!?) போலிஸ். அது எத்தகைய தர்மம் என்றால்? எய்தவனுக்கு நீதிமன்றம், எய்யப்படும் அடியாட்களுக்கு எவ்விதக் கேள்வியுமின்றி என்கவுண்ட்டர் என்பதே அது. அப்படியான தர்மத்தை வழுவாத நேர்மையான போலிஸ் சேதுபதி. பாதிக்கப்பட்டோரைக் கண்டால் மனம் இரங்கும் ஈரமனசுக்காரர். இப்படிப்பட்டவரை உரண்டைக்கு இழுத்து படாதபாடுபடுகிறார் Dr.வாத்தியார். வாத்தியாராக எழுத்தாளர் வேல ராமமூர்த்தி நடித்துள்ளார். தமிழ் சினிமா பலமுறை கண்டுவிட்ட மிகக் கொடுமையான வில்லன். கதாபாத்திரத்திற்கேற்ற தோரணையான நடிகரெனினும், அசுவாரசியமற்ற கதாபாத்திர வடிவமைப்பால் பொலிவிழுந்து போகிறார். ஒரு போலிஸ்காரரை எரித்துக் கொன்றுவிட்டு, த...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...
ஸ்பாட்லைட் விமர்சனம்

ஸ்பாட்லைட் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
வலுவான அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பல வருடங்களாக கார்டினல் லா மூடி மறைத்த பாதிரியார்களின் தகாச் செயல்களை, நான்கு பேர் கொண்ட புலனாய்வுப் பத்திரிக்கைக் குழு எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது என்பதுதான் படத்தின் கதை. ‘பாஸ்டன் க்ளோப்’ நாளிதழுக்கு புதிய ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் மார்ட்டின் பேரோன். பத்தி (column) செய்தியாக வந்த ஒன்றை, புலனாய்வு செய்யும்படி ஸ்பாட்லைட் ஆசிரியர் வால்டர் ராபின்சனிடம் கேட்டுக் கொள்கிறார் பேரோன். சிறார்களுக்கு பாலியல் தொந்தரவுகளைத் தொடர்ந்து அளித்து வந்த பாதிரியார் ஜான் கீகனின் செயற்பாடுகள் பற்றி கார்டினல் லா எனும் தலைமை பிஷப்-க்குத் தெரிந்தும், அதைத் தடுக்க அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் அந்தப் பத்தி முன்வைக்கும் குற்றச்சாட்டு. அந்தக் குற்றச்சாட்டை முன் வைத்த வக்கீல் கரபேடியனைப் பேட்டிக்காக அணுகுகின்றனர். வக்கீல் மிட்செல் கரபேடியன் மிகவும் ...
எகிப்தின் கடவுள்கள்.!

எகிப்தின் கடவுள்கள்.!

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சலிக்கச் சலிக்க கிரேக்கக் கடவுள்களின் சண்டைகளை ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்பொழுது எகிப்தியக் கடவுள்களின் சண்டையை ஜோரான விஷூவல் எஃப்ட்ஸுடன் காணத் தயாராகுங்கள். ஹாலிவுட்டின் லயன்ஸ்கேட்டுடன் இணைந்து வியகாம் 18 (Viacom 18) மோஷன் பிக்சர்ஸ், ‘காட்ஸ் ஆஃப் எகிப்த் (Gods of Egypt)’ படம், இம்மாதம் 26 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தியாவில் வெளியிடவுள்ளது. 300 படத்தில் ஸ்பார்ட்டாவின் மன்னன் லியோநிடாஸாக நடித்த ஜெரார்ட் பட்லர், இருள் கடவுள் ‘செத்’தாக நடிக்கிறார். அவருக்கு எதிராகப் போர் புரியும் காற்றுக் கடவுள் ஹோரஸாக நிக்கோலாய் கோஸ்டர் வால்டாவ் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து பெரிய பெரிய விநோத மிருகங்களும், இடையில் சிக்கித் தவிக்கும் மனித இனத்தை அச்சுறுத்த வருகின்றன....
அரு.ராமநாதன்

அரு.ராமநாதன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. ‘காதல்' புனிதமானது, பவித்திரமானது என்றெல்லாம் திரைப்படங்களில் வசனம் பேசுவார்கள் அறிவோம். எடுக்கப்படும் படங்களில் 99 விழுக்காடும் காதலை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்படும். இது ஒரு நியதிபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. 'காதல்' இல்லாமல் உலகில் வேறு எதுவுமே கிடையாது என்றும் நிலை நிறுத்தியாகிவிட்டது. எனவே 'காதல்' வாழ்க. 'காதல்' என்கிற வார்த்தையை ஒரு கெட்ட வார்த்தையைப்போல் கருதிய காலமும் ஒன்று உண்டு. காதல் வயப்படுவார்கள், ஆனால் காதல் என்கிற வார்த்தையைப் பிரயோகித்தால் அவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். இக்கால கட்டத்தில் மிகவும் துணிச்சலுடன் 'காதல்' என்கிற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமானால், ஆரம்பித்தவருக்கு எந்த அளவு துணிவு இருந்திருக்கவேண்டும்? அப்படித் துணிந்தவர்தான் அரு.ராமநாதன். சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் எனும் ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் 1924 ஆம் ஆண்ட...
கண்ணகி (1942)

கண்ணகி (1942)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்)ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம். ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித...
காதலைக் கொண்டாடும் தோழா

காதலைக் கொண்டாடும் தோழா

சினிமா, திரைத் துளி
இரண்டு ஆண்களுக்கிடையே நிலவும் ஆத்மார்த்தமான நெருக்கத்தையும் நேசத்தையும் சித்தரிக்கும் படம் தோழா. மாற்றுத்திறனாளியாக நடிக்கும் நாகர்ஜுனாவின் பன்முக திறமையை இப்படம் வெளிபடுத்தும். இது அவரது வாழ்நாளில் நடிக்கும் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாகக் கண்டிப்பாக அமையும். படத்தில், அவரது உற்றத் தோழனாக கார்த்தி வாழ்ந்துள்ளார். கதாநாயாகியாக தமன்னா நடிக்கிறார். படப்பிடிப்பு முடிந்து, இப்படம் இந்த ஆண்டு மார்ச்சில் படம் வெளிவர உள்ளது. வாழ்வைக் கொண்டாடும் இப்படம், இரண்டு நண்பர்களுக்கிடையேயான உணர்ச்சிகரமான பயணத்தைச் சொல்கிறது. பிரகாஷ் ராஜ், விவேக், மறைந்து விட்ட குணசித்திர நடிகை கல்பனா போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரான்ஸ், பல்கேரியா, ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும், இந்தியாவிலும் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். இதுவரை திரையில் கண்டிராத புதிய இடங்களில் எல்லாம் ஒளிப்பதிவு செய்துள்ளார் P.S.வினோத். படத்திற...