சினிமா

தி. ஜானகிராமன்
மாயலோகத்தில்..
நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும்.
தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல.
ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தோன்றுகிறது. தனது பதினைந்தாவது வயதிலேயே கதைகள் எழுதியிருக்கிறார்.
தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921இல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய பல அருமையான தகவல்கள் விரவிக் கிடப்பதைக் காண, ...

“இது ஸ்பெஷல் சவாரி” – சனம் ஷெட்டி
தென்னிந்திய அழகிப் போட்டி 2016 இல் இரண்டாம் இடத்துக்கு வந்த நடிகை சனம் ஷெட்டி, தான் நடித்திருக்கும் சவாரி படம் மிக நன்றாக வந்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார்.
படம் பற்றி உற்சாகத்தோடு பேசும்போது, "சவாரி படம் எனக்கு மிக ஸ்பெஷலான படம். இது முழுக்க முழுக்க ஒரு ஹாலிவுட் பாணி படம் என்று நான் சொல்வேன். மிக வித்தியாசமான ஸ்டைலில் உருவாகும் இந்தப் படம் ரசிகர்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
இயக்குநர் குகனும் ஒளிப்பதிவாளர் செழியனும் சிறப்பாகப் பணியாற்றி, குறைந்த காலகட்டத்தில் மினிமம் பட்ஜெட்டில் மிக சிறப்பான ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்
படத்தில் ஹீரோ பெனிட்டோவின் காதலியாக நான் நடித்துள்ளேன். கதைப்படி கல்யாணத்தை நோக்கி முன்னேறும் அந்தக் காதலில், திருமணத் தினத்தன்று கதை வேறு கோணத்தில் விரியும். பல எதிர்பாராத சுவாரசியமான திருப்பங்கள் நிகழும்.
எங்களது ...

மங்கம்மா சபதம் (1943)
(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம்.
ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திர...

காட்ஸ் ஆஃப் எகிப்த் விமர்சனம்
மனிதர்களும், கடவுள்களும் ஒன்றாய் வாழ்ந்த காலமது. கடவுளே மன்னனாக இருந்து மக்களை ஆட்சி செய்கிறார்கள். ஒசிரிஸ் எனும் எகிப்தின் மன்னன், காற்றுக் கடவுளான தன் மகன் ஹோரஸுக்கு முடிசூட்ட, விழா ஏற்பாடு செய்கிறார். அங்கே வரும் ஹோரஸின் சிற்றப்பாவான பாலைவனங்களுக்குப் பொறுப்பேற்கும் இருள் கடவுள் செத், தன் அண்ணனான ஒசிரஸைக் கொல்வதோடு ஹோரஸின் இரண்டு கண்களையும் பிடுங்கிக் கொள்கிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
இப்படத்தில் தோன்றும் கடவுள்களின் சராசரி உயரம் 9 அடி. ஆவேசமாகிச் சண்டையிடும் தருணங்களில் 12 அடிக்கு விஸ்வரூபமெடுப்பார்கள். கடவுள்கள் தான் எனினும் அவர்களுக்கும் மரணம் உண்டு. இருள் கடவுள் செத் எதிர்பார்ப்பதோ மரணமின்மையையோடு தீர்க்க ஆயுசாக நைல் நதி பாயும் எகிப்தை ஆள்வது. அவரது தந்தையான சூரிய கடவுள் “ரா”-வோ, தனக்குப் பிறகு பூமியை விழுங்க நினைக்கும் அபோஃபிஸ் எனும் ராட்சஷ ஜந்துவுடன் தினமும் போ...

பிச்சைக்காரன் – நிச்சய வெற்றி.!
“இந்தப் படம் ஹிட்டாகும் என்பதில் எள்ளளவும் எனக்கோ, விஜய் ஆண்டனிக்கோ சந்தேகமில்லை. முதல் நாள் முதல் இந்த நொடி வரை அதில் ரொம்ப தெளிவா இருக்கேன். ஆனால், விநியோகஸ்தர்கள் படம் பார்க்கும் பொழுது மட்டும், ‘என்ன சொல்வாங்களோ?’ எனக் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. அவங்க ஸ்க்ரீனிங் முடிந்ததும், கே.ஆர்.ஃப்லிம்ஸ் சரவணன் முகத்தைப் பார்த்தேன். சிரிச்சுட்டு இருந்தார். டென்ஷன் போய் மீண்டும் நம்பிக்கை வந்துடுச்சு” என்றார் பிச்சைக்காரன் படத்தின் இயக்குநர் சசி.
“இந்தப் படத்துக்காக பல இடங்களில் நிஜமாகவே பிச்சை எடுத்தேன். என்னை பிச்சைக்காரர்கள் மத்தியில் உட்கார வைத்து விட்டு தூரத்தில் கேமராவில் இருந்து படம் பிடித்தார்கள். சில சமயம் நிஜ பிச்சைக்காரர்களை ஒன்று கூட்டி அவர்களுக்கு பணம் கொடுத்து நடிக்க வைத்தோம். அப்போது அவர்களின் கதைகளை எல்லாம் கேட்டேன். ரொம்ப கொடுமையாக இருந்தது.
மகனும் மருமகளும் துரத்தி விட்டதால் பிச்ச...

நையப்புடை விமர்சனம்
வேலுச்சாமி எனும் 70 வயது ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் சைலண்ட் சூப்பர் ஹீரோயிசம்தான் படம்.
படம் பாரதியின் 'புதிய ஆத்திசூடி' வரிகளோடு தொடங்குகிறது. தலைப்பும், கதையும்கூட அதிலிருந்தே தான் எடுக்கப்பட்டுள்ளது.
'தேசத்தைக் காத்தல் செய்'தவரான வேலுச்சாமி, 'தீயோர்க்கு அஞ்சாமல்', 'கொடுமையை எதிர்த்து நிற்கிறார்'. இளைய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் 'நேர்ப்படப் பேசு' நிகழ்ச்சியில் பங்கேற்று, 'வெடிப்புறப் பேசு'கிறார். மேலும், அச்சத்தினைத் தவிர்த்து, ஆண்மை தவறாமலும் சாவதற்கு அஞ்சாமலும், ரெளத்திரத்தினைப் பழகி, பாதகம் செய்வோர்களை "நையப்புடை" க்கிறார் வேலுச்சாமி.
நாயகன் வேலுச்சாமியாக நடித்ததோடு மட்டுமல்லாமல், கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். படத்தில், "நான் பல கேப்டன்களையும், தளபதிகளையும் உருவாக்கிருக்கேன்" எனச் சொல்லி சிறு இடைவேளைக்குப் பின், "மிலிட்டரில" என்கிறார். அஞ்சான்...

சவாரி – படக்குழுவினர்
நடிகர்கள்:>> பெனிட்டோ ஃப்ராங்களின்
>> சனம் ஷெட்டி
>> கார்த்திக் யோகி
>> மதிவாணன்
>> T.M.கார்த்திக்
>> அருண் அலெக்சாண்டர்
>> பாண்டியன்
>> முனிஷ்காந்த்
>> கவிதாலயா கிருஷ்ணா
>> ‘லொள்ளு சபா’ ஈஸ்டர்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு நிறுவனம் – எண்டர்டெயின்மென்ட் பிரதர்ஸ்
>> இயக்கம் – குகன் சென்னியப்பன்
>> ஒளிப்பதிவு – செழியன்
>> படத்தொகுப்பு – T.E.கிஷோர்
>> இசை – விஷால் சந்திரசேகர்
>> கலை – சதிஷ் குமார்
>> பாடல் – சாருகேஷ் சேகர்
>> சண்டை – மிரட்டல் செல்வா
>> மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா...

கடத்தப்படும் பஸ் 657.!
பிரயாணிகளை ஏற்றிச் செல்கின்ற பேருந்தை ஓட்டும் ட்ரைவர் பணயக்கைதியாக வைக்கப்பட்டு, பேருந்தைக் கடத்தினால் என்ன நடக்கும் என்பதை ஸ்பீட் (Speed) மற்றும் ஸ்பீட் – 2 (Speed - 2) படங்களில் கண்டுள்ளோம். அதே போல், ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக ஒரு பேருந்தைக் கடத்த நேரிட்டால், என்ன மாதிரியான விளைவுகள் உருவாகும் என்பதுதான் பஸ் 657 படத்தின் சாரம்.
மிகச் சிறந்த கிளாஸிக் மற்றும் ஆக்ஷன் படங்களில் நடித்துள்ள ராபர்ட் டி நீரோ, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி டார்னமென்ட் (The Tournament) என்கிற ஒரு மகத்தான ஆக்ஷன் படத்தை அளித்த ஸ்காட் மான், இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்டீஃபன் சைரஸ் செஃபர் மற்றும் மேக்ஸ் ஆடம்ஸ், இதற்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
மனைவியை இழந்த சூழலில், தனது ஒரே மகளை வளர்த்திட அரும்பாடு படுகிறார் லூக் வான். நோய்வாய்பட்டுவிட்ட தனது மகளின் சிகிச்சைக்காக அதிக பணம் தேவைப்படுகிறது லூக்கிற்...








