சினிமா

கோ 2 – படக்குழுவினர்
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா
>> பிரகாஷ் ராஜ்
>> நிக்கி கல்ராணிபணிக்குழு:>> தயாரிப்பு – RS இன்ஃபோடெயின்மென்ட்
>> இயக்கம் – ஷரத்
>> ஒளிப்பதிவு – ஷங்கர்
>> இசை – லியோன் ஜேம்ஸ்
>> படத்தொகுப்பு – ரூபன்
>> கலை – செந்தில் ராகவன்
>> வசனம் – பாக்கியம் ஷங்கர்

சிம்ஹா இன் கோ-2
“எங்கள் நிறுவனத்தினுடைய ‘கோ’படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற ஓர் எண்ணம் ஓடிக் கொண்டே இருந்தது. விஷ்ணுவர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குநராய் பணி புரிந்துள்ள சரத் அவர்களின் கதையைக் கேட்க நேர்ந்தது. கதையைக் கேட்டு முடிக்கும் முன்னரே, இப்படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். ஒரு படத்தின் ‘Sequel’ என்றால் அதே குழு, மற்றும் நடிகர்கள் நடிக்க வேண்டும் என்றல்லாமல் அந்தக் கதை அந்தத் தலைப்புக்கு ஏற்றவாறு உள்ளது என்று யோசித்தோம். அதன் விளைவே ‘கோ-2’ விரைவில் தயாராகவுள்ளது.
அந்தக் கதாப்பாத்திரத்தின் வலிமைக்கு தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா கனக் கச்சிதமாய்ப் பொருந்தியுள்ளார். இவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி. மேலும், பிரகாஷ் ராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்பு கண்டிப்பாய் அனைவரது எதிர்பார்ப்பிற்கும் வித்தாய் அமையும் என்று நம்புகிறோம். ‘க...

ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி
மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை தெரிந்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிசையும் தெரிந்தவர் எனப் பாராட்டிய வைரமுத்து, “ஓ காதல் கண்மணி படத்தில் நான் ஐந்து பாடல்களை எழுதியுள்ளேன். ‘மென்ட்டல் மனதில்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எழுதியுள்ளனர். அன்று நான் வெளியூர் சென்றுவிட்டேன். அதனால் இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டனர். இந்தப் பாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் மணிரத்னம். ‘நான் இனி வெளியூர்க்குப் போகக் கூடாது’ எனச் சொன்னேன்” என்றார்.
மேலும், “மணிரத்னம் 24 படங்கள்தான் இயக்கியுள்ளார். எண்ணிக்கை அளவில் அது குறைவும். ஆனால் தர அளவில் அது அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் எனும் சடங்கு நிலவுமா என்பது சந்தேகமே! மணிரத்னம் இப்படத்தில் அதைப் பற்றித்தான் விவாதித்துள்ளார். இப்படத்தின் கதை மணிரத்னத்தின் பரிசோதனை முயற்சி” என்றார் வைரமுத்து.
“சில கனவுகளில் வாழ்ந்துடலாம் போல் தோணும். அப்...

வர்ஷனின் புறம்போக்கு இசை
“படத்தின் தலைப்பே அனைவரின் கவனத்தை ஈர்த்து அனைவரது எதிர்பார்ப்பையும் தூண்டியுது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடேற்றும் வகையில் இசையமைப்பது எனக்குப் பெரும் சவாலாக அமைந்தது. எனினும் ஒரு புதுமுகத்திற்கு.. தேசிய விருது பெற்ற இயக்குனரின் திரைப்படத்திற்கோ, UTV போன்ற பெரிய நிறுவனத்தின் படத்திலோ வாய்ப்புக் கிடைப்பது அபூர்வம். ஜனநாதன் சார் இப்படம் முழுவதும் என்னை வழி நடத்தி என்னை இசையமைப்பாளராக உருவாக்கியுள்ளார்.
லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்து பின் இந்தியப் பாரம்பரிய இசையை சென்னை இசைக் கல்லூரியில் பயின்றேன். என்னுடைய சில பாடல்கள் ஜனநாதன் சார் அவர்களுக்குப் பிடித்திருந்தது. அதனால் எனக்கு ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தில் வாய்ப்பளித்தார். இப்படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும், ஜனநாதன் சாரின் திரைக்கதைக்கு உறுதுணையாய் இருக்கும் வண்ணம் அமைய வேண்டும் என்று நினைவ...

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க – படக்குழுவினர்
நடிகர்கள்:>> இந்திரஜித்
>> தேவிகா மாதவன்
>> சிங்கமுத்து
>> சுவாமிநாதன்
>> சிவசங்கர் மாஸ்டர்பணிக்குழு:>> தயாரிப்பு - ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ்
>> தயாரிப்பாளர் - மாதவன் மோகன்
>> இயக்கம் - L மாதவன்
>> இசை - AK ரிஷால் சாய்
>> ஒளிப்பதிவு - DS வாசன்
>> படத்தொகுப்பு - சுரேஷ் அர்ஸ்
>> கலை - ராகவா குமார்...

4 பேர் 4 விதம் 4 பேச்சு
“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க திரைப்படம். ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறுகிறது இப்படம்.
படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மாதவன், “DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நபர்கள் எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா தான் படத்தைப் பற்றிச் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார் நகைச்சுவையுடன். இப்படத்தை, ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரித்துள்ளது....

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 7 விமர்சனம்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் தொடர் தொடங்கி 15 வருடங்கள் ஆகிறது. இந்தத் தொடரின் ஆறு படங்களில் ஒன்றில் மட்டும் நடித்திராத முக்கிய கதாநாயகனான பால் வாக்கர், ஏழாவது பாகத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விதமாக 2013இல் விபத்தில் இறந்துவிட்டார். இந்தத் தொடர் வரிசை படங்களுக்கு அது பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அதில் இருந்து படக்குழு எப்படி மீண்டது என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. அது மட்டுமில்லாமல், இந்தத் தொடரின் நான்கு படங்களை இயக்கிய ஜஸ்டின் லின்னுக்கு பதிலாக ஹாரர் பட இயக்குநரான ஜேம்ஸ் வான் இப்படத்தை இயக்கியுள்ளது மேலும் எதிர்பார்ப்பைக் கூடுதலாக்கியது. இந்தப் படத்தின் இன்னொரு சிறப்பம்சம், தாய்லாந்தைச் சேர்ந்த ஏஷியன் ஹீரோவான டோனி ஜா முதல்முறையாக இப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார்.
ஜேஸன் ஸ்டாத்தம்தான் படத்தின் வில்லன் என்ற ஆவ...

மீண்டும் லஹரி மியுசிக்
பாபி சிம்ஹா, மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாகத் தயாராகி வருகிறது. புகழ்பெற்ற ஆடியோ நிறுவனமான லஹரி மியுசிக் மசாலா படத்தின் இசை உரிமையை வாங்கியுள்ளது. அறிமுக இயக்குநர் லக்ஷ்மன் இயக்கும் இப்படத்திற்கு புதுமுக இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யா இசையமைக்கிறார்.
“ஆல் இன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘மசாலா படம்’ ஆடியோ உரிமையைப் பெற்றதில் எங்கள் நிறுவனம் பெருமகிழ்ச்சியடைகிறது. இளம் இசையமைப்பாளர் கார்த்திக் ஆச்சார்யாவின் இசை நன்றாக வந்துள்ளது. படத்தின் ட்ரைலர், டீசர் ஆகியவை பார்த்தேன். இந்த இளம் கூட்டணியின் தயாரிப்பு மிகவும் திருப்தி அளிக்கிறது.
லஹரி மியுசிக் தமிழ், தெலுங்கு, கன்னடா ஆகிய மொழிகளில் லஹரி மியுசிக் ஆடியோ உரிமைகளைப் பெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘மசாலா படம்’ மூலம் தமிழ் இசையுலகில் மீண்டும் வருவது பெரும் மகிழ்ச்சி அளிக்க...

தயாரிப்பாளராகும் இயக்குநர் சிம்ரன்
தேர்ந்த நடிப்பாலும் திறமையாலும் சினிமா ரசிகர்கள் அனைவரது மனதிலும் கோலோச்சி நின்றவர் நடிகை சிம்ரன். தற்பொழுது சினிமா தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார் சிம்ரன்.
‘சிம்ரன் அண்ட் சன்ஸ்’ என்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் ‘Logo’-வை வெளியிட்டு பேசிய சிம்ரன் கூறியதாவது, “எனது சினிமா ஆர்வம் என் வாழ்வில் பெரும் முக்கிய இடத்தைக் கொண்டது. என் கணவர் தீபக் உடன் இணைந்து ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடங்க அதுவே காரணமாய் இருக்கிறது.
நான் நடிகையாக இருந்த அனுபவமும், எனது சின்னத்திரை நிகழ்ச்சிககளைத் தயாரித்த அனுபவமும் இந்தத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கும் எண்ணத்திற்கு உறுதுணையாய் இருந்தது. எனது இந்த முயற்சிக்கு பெரிதும் உதவியாக இருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் மற்றும் நல்லுள்ளங்களுக்கும் எனது நன்றிகள்.
எனது ரசிகர்கள் எனக்களித்த ஆதரவிற்கும் நன்மதிப்பிற்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். சின...

நண்பேன்டா விமர்சனம்
ஓகே.. ஓகே.. அளித்த நம்பிக்கையில், சந்தானத்தை இணைத்துக் கொண்டு 'நண்பேன்டா" வரை வந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
ஒரே நாளில் தனக்குப் பிடித்த பெண்ணை மூன்று முறை பார்த்து விட்டால், சத்யாவின் வாழ்க்கை ஓஹோவென்று ஏற்றம் காணுமென அவனது ஜாதகத்தில் இருப்பதாக சத்யாவின் அம்மா சொல்கிறார். பின் என்ன? அதேதான்.!
இயக்குநர் ராஜேஷ் போட்டுக் கொடுத்த கோடில் இருந்து வழுவாதவராய் சத்யா எனும் பாத்திரத்தில் உதயநிதி நாயகனாக நடித்துள்ளார். முந்தைய படத்தை விட, நயன்தாரா உடனான காட்சிகளில் தயக்கம் துறந்து நெருக்கமாக நடித்துள்ளார் உதயநிதி. ஆனாலும் சந்தானம் போதும், புதிதாக கதையில் எந்த ரிஸ்க்கும் எடுக்க வேண்டாமென்ற அவரது நம்பிக்கை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சிவக்கொழுந்துவாக மிக வித்தியாசமான பாத்திரத்தில் சந்தானம். இந்தப் படத்தில் உதயநிதியின் காதலுக்கு இவர் யோசனையும் சொல்லவில்லை; உதவியும் செய்யவில்லை. ‘சூப்பர் ஃபிகர்’ ரம்யாவா...

காற்றும் ஒளியும் நிலவொளியும் சிகரங்களும்..
இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்கும் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ திரைப்படம் நிறைவுறும் தருவாயை எட்டியுள்ளது. UTV மோஷன் பிக்சர்ஸ் சித்தார்த் ராய் கபூர் தயாரிப்பில் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் முன்னர் ‘புறம்போக்கு’ என அழைக்கப்பட்டு வந்தது. தனது முதல் படமான ‘இயற்கை’ மூலம் தேசிய அங்கீகாரத்தை இயன்றதோடு, தனது அடுத்த படங்களான ‘ஈ’ மற்றும் ‘பேராண்மை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் நம் ரசனைகளை ஆக்கிரமிக்க உள்ளார்.
ஒளிப்பதிவாளர் NK ஏகாம்பரம் கண்கவர் ஒளிப்பதிவில், செல்வ குமார் அவர்களின் வியத்தகு கலை இயக்கத்தில், கணேஷ் குமார் படத்தொகுப்பில், கேட்போரை மயக்கும் வண்ணமுள்ள அறிமுக இசையமைப்பாளர் வர்ஷனின் இசையமைப்பில், மிராக்கல் மைக்கல் அவர...

கோடையைக் குதூகலமாக்க வரும் வைகைப்புயல்
எலி படத்தின் கதையையும், தனது புதுவிதமான கதாப்பாத்திரத்தையும் கேட்டு கதாநாயகியாக நடிக்கச் சம்மதித்துள்ளார் நடிகை சதா. சதாவின் நகைச்சுவைக் காட்சிகள் புது அனுபவம் தரும்.
1960களின் பிண்ணனியில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி.சதிஷ் குமார் தயாரிக்கிறார்.பின்னி மில் வளாகத்தில் அமைக்கப் பெற்ற நட்சத்திர வீடு, பழமையான வீடுகள், பிரம்மாண்டமான வீடுகளின் உள்க ட்டமைப்புகள், வில்லனின் ரகசிய இருப்பிடம் என 15க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட அரங்குகள் கோடிக்கணக்கில் கலை இயக்குநர் தோட்டாதரணியால் அமைக்கப்பட்டு, வசனக் காட்சிகள், சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டன.
மேலும் பல கோடி ரூபாய்க்கும் செலவில் நடன வீடு செட் அமைக்கப்பட்டு அதில் 15 நாட்களுக்கு மேலாகப் புகழ் பெற்ற மும்பை நடனக்கலைஞர்கள் ஆட, பழம்புகழ் நடன இயக்குநர் தாரா அவர்களின் நடன அமைப்பில் பாடல் படமாக்கப்பட்டது.
பூனைகள் துரத...

ரு – அதுக்கும் மேல.!
மரணத்தையும் தாண்டின தண்டனை ஏதேனும் உண்டா?
உண்டு என்கிறார் தனது படத்துக்கு ரு என்ற வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் C. சதாசிவம்.“ரு” என்றால் ஐந்து. படத்தில் ஐந்து குற்றவாளிகள் உள்ளனர் என யூகிக்க முடிகிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கு நாயகன் எத்தகைய தண்டனை வழங்குகிறான் என்பதுதான் ரு படத்தின் கதையாம். இப்படத்தில் நாயகனாக இர்ஃபானும், நாயகியாக ரக்ஷிதாவும் நடித்துள்ளனர். P.R.ஸ்ரீநார்த் என்பவர் இசையமைத்துள்ளார்.
நடிக்க முதல் முறையாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ள இயக்குநர் பேரரசு, “இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச தங்கச்சி செண்ட்டிமென்ட் இருக்கு” என்றார்.
சரி.. அந்த ‘அதுக்கும் மேல’ என்னவாக இருக்கும்?...



