Shadow

சினிமா

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

சினிமா, திரைத் துளி
விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக். மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. ஆனால் மாற்றமில்லாத அதே அன்பு” என்றார் விவேக். என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிரதான கதாபாத்திரங்களைப் பற்றி, “அன்று துடிப்பான காதல் மன்னன். இன்று பொறுப்பான காவல் மன்னன். ஆனால் என்றும் அவரெனக்கு நண்பர். இனிமை, பெண்மை – திரிஷா. அழகு, அறிவு – அனுஷ்கா. ஒரு சீரியசான, குசும்புமிக்க கதாப்...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா >> லிங்கா >> பிரபஞ்ஜெயன். DN >> சரண்யா >> பனிமலர் >> நிஷா >> அல்போன்ஸ் புத்ரன் >> கார்த்திக IB >> வத்ஸன் வீரமணி >> செல்வம் >> மகுடபதி >> விஜயலஷ்மி >> சுகன்யா >> ஜவஹர் >> சார்லஸ் சுரேஷ் >> மாஸ்டர் ஸ்ரீராம் >> ரவி ஸ்ரீநிவாசன்பணிக்குழு:>> எழுத்து, இயக்கம், தயாரிப்பு – M. மருதுபாண்டியன் >> தயாரிப்பு நிறுவனம் – கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் >> வெளியீடு – ஏ.டி.எம். புரடக் ஷன்ஸ் >> ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி >> இசை – கேம்லின் – ராஜா >> படத்தொகுப்பு – கிரண் K.N. >> பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா...
இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

சினிமா, திரைத் துளி
“எங்க ஊர்ல படம் பார்த்துட்டு வருபவர்களிடம், படமெப்படின்னு கேட்பேன். அவங்க நல்ல படம் எனச் சொன்னால், படத்தின் எத்தனை சண்டைக் காட்சி எத்தனை கற்பழிப்புக் காட்சின்னு கேட்பேன். அவங்களும் நாலு சண்டைக் காட்சி, ரெண்டு கற்பழிப்புக் காட்சி என கணக்கு சொல்வாங்க. இந்த மாதிரி படம்லாம் நான் ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். அப்போ நான் பதினொன்னாவது படிக்கிறப்ப மண் வாசனைன்னு ஒரு படம் பார்த்தேன். ஜெயமோகன் சார் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். வியாபார நோக்கத்தோடு எழுதப்படுற எழுத்த மட்டும் தொடர்ந்து வாசிச்சுட்டு, ஓர் இலக்கியப் படைப்பைப் படிக்கு நேரும்பொழுது அவன் திடுக்கிட்டு மிரண்டிடுவான். இதுவரைதான் படித்தது அனைத்தும் ஒன்னுமில்லே என அவனுக்குத் தோன்றும். உண்மைன்னா என்னன்னு காட்டும் இலக்கியம். அதுபோல், இயக்குநர் இமயத்தின் “மண்வாசனை” படம் எனக்கு நிஜத்தைக் காட்டியது. இதுவரைக்கும் பார்த்தது படமே கிடையாதுன்னு தோணுச்ச...
துறுதுறு மலபார் அழகி நேஹா

துறுதுறு மலபார் அழகி நேஹா

சினிமா, திரைத் துளி
ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரைப் புகழ் தீபக் நாயகனாக நடிக்கிறார். “மாடல், விளம்பரப் படம் என நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்துப் பெண்கள் நடித்தால் பிரபலமாவது தமிழில் தானே!! வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. என்னை விட்டு விடுமா என்ன? இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ‘தீபிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துறுதுறு வாயாடி சென்னைப் பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், தமிழ் ...
நல்லா இருந்த ஊரின் டீச்சர்

நல்லா இருந்த ஊரின் டீச்சர்

சினிமா, திரைத் துளி
“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நான் ஒரு கிராமத்துச் சாயலில் ஒரு கதாபாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய்க் காத்திருந்தேன். இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இந்தக் கதையைக் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார் ரம்யா நம்பீசன். படம் முடியும் தருவாயில் உள்ளது. “இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே அத்தகைய நேரங்களில் பேருதவி புரிந்துள்ளார் அருள்நிதி. இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளுக்குப் பிடிக்கும்” என்றார் ரம்யா....
ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

சினிமா, திரைத் துளி
ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் A. வெங்கடேஷ், ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் சர்வஜித் நடிக்கிறார். அங்காடி தெரு படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காமெடி த்ரில்லராக தயாராகி வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியதோடு, 'அங்காடி தெரு' படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்“என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படம் நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. முன்பின் ...
தொட்டால் தொடரும் விமர்சனம்

தொட்டால் தொடரும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்த...
மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்புவின் படம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இது சிம்புவால் மட்டுமே இயலும். இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பைத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் எஸ் டி ஆரின் மூன்று படங்கள் வெளிவர உள்ளது. 2015, எஸ் டி ஆருக்கு அதிர்ஷ்டமான வருடமான அமையவுள்ளது. 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று இருக்கிறது. தன் மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ் டி ஆருக்கு அந்தக் குணத்துக்காகவே கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம். அந்த வகையில் 'இது நம்ம ஆளு' டீசரில் வரும் எஸ் டி ஆரின் வசனங்களுக்கும், அவரைக் குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்ப்பு கிட்டியது. 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எ...
அஜித் சார்ன்னா பாசிடிவ்

அஜித் சார்ன்னா பாசிடிவ்

சினிமா, திரைத் துளி
எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன். “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளைச் சேர்த்து மாற்றியதும் பாடல் பதிவு செய்யப்பட்டது.” கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்திச் செல்லும். இப்பாட்டு ஒரு குத்துப் பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜித் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு 'Po...
தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ்

தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ்

சினிமா, திரைத் துளி
இந்த மாதம் 22 ஆம் தேதி துவங்க உள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா எனும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கயல் படத்தின் ஆனந்தியும் நடிக்கவுள்ளனர். டமால் டுமீல் படத்தைத் தயாரித்த கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார், தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். பல்வேறு இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்த ஆதிக் ரவிsசந்திரன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். பல்வேறு விளம்பரப் படங்களைத் தயாரித்த 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, “இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்தப் படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்பு பெறும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன். இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் குமார் அளவுக்கு இந்தப் பாத்திரத்துக்கு வேறு யாரும் பொர...
வானவில் வாழ்க்கை ஜனனி

வானவில் வாழ்க்கை ஜனனி

சினிமா, திரைத் துளி
“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்குப் பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதி கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய அனுமதி இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்று ராகத்தோடு கூறினார் ஜனனி....
அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர். அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார். “காலம் என்னைக் கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ்ப்படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.” அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்ட...
இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

சினிமா, திரைத் துளி
மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'உப்பு கருவாடு' ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து வழ...
தி தியரி ஆஃப் எவரிதிங்

தி தியரி ஆஃப் எவரிதிங்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க நோயால் (Motor neuron disease) பாதிக்கப்படுகிறார். அவர் அதிகபட்சம் இரண்டு வருடம்தான் வாழ்வாரென மருத்துவர் கெடு விதிக்கிறார். அச்சூழ்நிலையில் ஜேன், ஹாக்கிங்கின் பெற்றோர்களைச் சந்தித்து ஹாக்கிங்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறுகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர்தான் படத்தின் உண்மையான கதை தொடங்குகிறது. அத்தம்பதிக்குள் நிலவும...
உழுத வயலின் சேறு வாசனை

உழுத வயலின் சேறு வாசனை

சினிமா, திரைத் துளி
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம். ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது. "அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாகக் கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் " என்கிறார் கவிஞர் யுகபாரதி. வாசனை ஈச்சம்பழத்து ஈர வாசனை இஞ்சி முரபா கார வாசனை எலந்தபழத்து புளிப்பு வாசனை பலா இனிப்பு வாசனை கரிச காட்டு மண்ணு வாசனை காத்திரு அடிச்ச நெல்லு வாச...