Shadow

சினிமா

ஸ்கைஃபால் விமர்சனம்

ஸ்கைஃபால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Bond.. James Bond. 23 படங்கள். 50 வருடங்கள். உலகை வசீகரித்துக் கொண்டிருக்கும் Ian Fleming-இன் இறவாக் கதாபாத்திரம்.ஏதாவது ஒரு நாட்டிற்குள் தனியொருவராய் நுழைந்து, வில்லனின் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மூலமாக்கும் வழக்கமான  007 படமல்ல இது. ஓர் அட்டகாசமான துரத்தும் காட்சியுடன் தொடங்கினாலும் படம் முழுவதும் ஏராளமான ஆச்சரியங்கள். ஒரு சிறு துரும்பைக் கூட உடைக்காமல் படத்தின் வில்லனை கைது செய்து விடுகிறார் 007. சிறையில் இருந்து தப்பிக்கும் வில்லனின் வியூகத்தை 007 எப்படிச் சமாளிக்கிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.டேனியல் க்ரெய்க். ஏற்கனவே இரண்டு படங்களில் ஜேம்ஸ் பான்ட்டாக நடித்திருந்தாலும்.. சீன் கேனரி, ரோஜர் மூர், பியார்ஸ் பிராஸ்னன் என முந்தைய ஜேம்ஸ் பான்ட்கள் மக்கள் மனதில் பெற்ற இடத்தைப் பெற முடியவில்லை. ஆனால் 'ஸ்கைஃபால்' மூலம் டேனியல் க்ரெய்க், தான் ஜேம்ஸ் பான்ட் பாத்திரத்திற்கு மிகப் பொருத்...
மாற்றான் விமர்சனம்

மாற்றான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அயன், கோ என இரண்டு வெற்றிப் படங்களின் தொடர்ந்து வரும் கே.வி.ஆனந்தின் நான்காவது படம். இரட்டையர் பற்றிய படம் என்பது கூடுதல் எதிர்பார்ப்பிற்கான காரணம்.தனது தந்தையின் 'எனர்ஜியான்' என்னும் ஊட்டச்சத்து பானத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக ஐயப்படும் விமலன் கொல்லப்படுகிறான். விமலனுடன் ஒட்டிப் பிறக்கும் அகிலன், விமலனின் கொலைக்கு காரணமானவர்களை நூல் பிடித்து செல்லும் பொழுது கண்டுபிடிக்கும் திடுக்கிடும் விடயங்களுடன் படம் நிறைவுறுகிறது.இரட்டை வேடத்தில் சூர்யா. வெவ்வேறு குணாதிசியங்கள் கொண்ட இரட்டையர்கள். அதை காட்சிப்படுத்தவே பெரும்பாலான காட்சிகள் விரயமாக்கப்பட்டுள்ளன. சாருலதாவில் வரும் பிரியாமணிகளைப் போலவே வயிறொட்டிப் பிறந்தவர்கள். எனினும் இருவருக்கும் ஓர் இதயம் என வித்தியாசப்படுத்தி உள்ளனர். ஏழாம் அறிவைத் தொடர்ந்து இப்படத்திலும் டி.என்.ஏ. சூர்யாவை விடாமல் துரத்துகிறது. ஆயினும் குழப்படி மட்டும் தீர்ந்...
சாட்டை விமர்சனம்

சாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நடிகர்களின் பெயர்கள் போடும் பொழுதே அரசுப் பள்ளிகளின் மீது சாட்டையை வீசத் தொடங்கி விடுகிறார் அறிமுக இயக்குநர் அன்பழகன். லட்சிய ஆசிரியர் ஒருவர் அலட்சியமாக இயங்கும் அரசுப் பள்ளிக்குள் நுழைந்தால் என்னாகும் என்பது தான் படத்தின் கதை.ஈசன் படத்தில் உதவி ஆணையாளர் சங்கைய்யா பாத்திரத்திற்கு சரியாக பொருந்தியது போலவே இப்படத்திலும் சமுத்திரக்கனி.. தயாளன் என்னும் ஆசிரியர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். புகார் பெட்டி ஒன்று வைத்து மாணவர்களின் பிரச்சனைகளையும், எதிர்பார்ப்புகளையும் கேட்டறியும் உன்னத ஆசிரியராக வலம் வருகிறார். அமெரிக்கப் பள்ளியில் மாணவர்கள் தினம் 15 நிமிடம் தோப்புக்கரணம் போடுவதால் சுறுசுறுப்பாக இருக்கின்றனர் என கையில் வைத்திருக்கும் 'டேப்'பில் காண்பிக்கிறார். திக்கிப் பேசும் மாணவிக்கு 'டங் ட்விஸ்ட்டிங்' பயிற்சி அளிக்கிறார்.  இப்படி அவர் எது சொன்னாலும், செய்தாலும் ரசிக்க தயாராக ...
சாருலதா விமர்சனம்

சாருலதா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சன் பிக்சர்ஸில் இருந்த ஹன்சராஜ் சக்சேனாவின் 'சாக்ஸ் பிக்சர்ஸ்' டிஸ்ட்ரிப்யூட் செய்யும் முதல் படம். 'அலோன்' என்ற தாய்லாந்து படத்தைத் தழுவி தமிழில் 'சாருலாதா'வாக மாற்றியுள்ளனர். ஒரிஜினல் ஸ்டோரி என தாய்லாந்துக்காரர்களின் பெயர்களை மறக்காமல் போட்டுள்ளனர்.ஒட்டிப் பிறக்கும் இரட்டையர்களில் ஒருவரான சாருவிற்கு காதல் பிறக்கிறது. ஆனால் எதிர்பாராமல் சாரு இறந்து விட, சாருவின் காதலன் லதாவை சாரு என நினைத்து காதலித்து வருகிறான். ஆனால் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும் லதாவை கொன்று அந்தக் கல்யாணத்தை தடுக்க பார்க்கிறது சாருவின் ஆவி. லதா கொல்லப்பட்டாளா, சாருவின் காதலனுக்கு உண்மைத் தெரிந்ததா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் முடிகிறது.பேய் அல்லது ஆவி படம் என்றளவிலேயே லாஜிக் ரொம்ப பார்க்கக்கூடாது. 'ஹேப்பி பர்த் டே' என நாயகன் வாழ்த்தியவுடனேயே கனவுப் பாட்டு, சீட்டுக்கட்டு ஜோதிடம், திருமணத்திற்கு ஸ்மார்ட் ஃபோனில் ...
தொட்டுத் தொடரும் வன்மம்

தொட்டுத் தொடரும் வன்மம்

அயல் சினிமா, சினிமா
நாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. இத்தகைய வன்முறைகள் நடக்காத நாடும் இல்லை, நாளும் இல்லை.15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் சூனியக்காரிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப் பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஐரோப்பாவில் தான் இத்தகைய கொடூரச் செயல் மதத்தின் பெயரால் பெரிய அளவில் நிகழ்த்தப் பட்டது. பொதுவில் உலகம் முழுவதுமே சூனியக்காரிகள் என சந்தேகப்பட படும் பெண்களின் நிலை அவலமும், துயரமுமானது.இன்றும் ஆஃப்ரிக்காவில் பெண்களுக்கு எதிராக இத்தகைய கொலைகள் வாடிக்கையாக இருப்பது கவலை தரும் செய்தி.சூனியக்காரிகள் என சந்தேகப்படுபவர்களைக் கொல்வது ஒரு சடங்காகவே பாவிக்கப்பட்டது. அவர்களை எங்கு, எப்படிக் கொல்ல வேண்டும் என வழிகாட்டும் ஒரு புத்தகமே லத்தீன...
சுந்தர பாண்டியன் விமர்சனம்

சுந்தர பாண்டியன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  பளபளக்கும் நீல கலர் சட்டை, நல்லவர், வல்லவர் என ஏகப்பட்ட பில்டப்களுடன் கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு திரும்பியவாறு சசிகுமார் அறிமுகமாகிறார். ஊரில் உள்ள பாட்டிகள், பெண்கள் என போட்டி போட்டுக் கொண்டு அவருடன் ஆடிப் பாட விழைகின்றனர். ஆகா ஒரு முடிவோடு தான் இருக்கார் என எச்சரிக்கை ஒலியை சத்தமாக அடிக்கிறார். ஆனால் படம் பார்ப்பவர்களை திரைக்கதையால் அறிமுக இயக்குனர் பிரபாகரன்  ஈர்த்து விடுகிறார்.   நண்பர்களுக்கு ஏதாவது ஒன்றென்றால் முன்ன நிற்கும் பாசக்கார நண்பன் சுந்தர பாண்டியன். அவன் பஸ்சில் ஏறினால் அனைவரும் ஒழுக்கமாக பயணிப்பார்கள். காரணம் சுந்தர பாண்டியன் கண்டமனூர் தலைக்கட்டு குடும்பத்தில் ஒருவன். தனது நண்பனின் காதலிற்கு உதவி செய்ய போக, அந்தப் பெண் சுந்தர பாண்டியனைக் காதலிப்பதாக சொல்லி விடுகிறாள். ஆனால் பார்க்க லட்சணமாக இருக்கும் அந்தப் பெண்ணை காதலிப்பவர்களின் பட்டியலோ மிக நீளம். அ...
முகமூடி விமர்சனம்

முகமூடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிஷ்கின் தானொரு தமிழ்ப் பட இயக்குனர் தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்து விட்டார். மந்திரிக்கப்பட்டது போல நேர்க்கோட்டில் ஒவ்வொருவராக விறைப்பாக சென்று நாயகனிடம் உதை வாங்காமல், கும்பலாக ஓடிச் சென்று நாயகனிடம் உதைப்படுகின்றனர். தன் காதலுக்காக முகமூடி அணியும் நாயகன் மேல் கொலை பழி விழுகிறது. காவல்துறையினரிடம் தப்பிக்க முகமூடியைக் கழட்டாமல் இருக்கிறான். இது தெரியாமல் புரியாமல், வர்றவர் போறவரெல்லாம், "நீ செத்தாலும், முகமூடி சாவக்கூடாது" என நாயகனை ஊரைக் காப்பாற்ற வந்த சூப்பர் ஹீரோ(!?) என்று முடிவு கட்டி ஏற்றி விடுகிறார்கள்.நாயகன் யாரையாவது துரத்த ஆரம்பித்தார் என்றால் ரசிகர்கள் சோர்வடையும் வரை நிறுத்த மாட்டேங்கிறார். இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்த படத்தை சட்டென முடிப்பதா என்று இழுத்து முடிக்கின்றனர். கடைசியாக வந்தாலும் காவல்துறையினர் ஜீப்பில் வருகின்றனர். ஆனால் சூப்பர் ஹீரோ ஓடி ஓடியே.. முகமூடியை பா...
சகுனி விமர்சனம்

சகுனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எட்டப்பன், காந்தி, ஹிட்லர் என சிலரின் பெயர்கள் கால ஓட்டத்தில் அவர்களின் குணங்களாகவே அடையாளம் பெற்று விடுகின்றன. அப்படி ஒரு பெயர் தான் சகுனி. தனக்கு சாதகமாக பகடைகளை உருட்டி அரசியல் லாபம் பெறுபவர்களை குறிக்கும் சொல்லாக சகுனியைப் பாவிக்கலாம்.இரயில்வே மேம்பால திட்டத்தில் அடிபடும் தனது பாரம்பரிய வீட்டை மீட்பதற்காக சென்னை வருகிறான் கமலகண்ணன். தன் வீட்டை மீட்டானா இல்லை என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கமலகண்ணனாக கார்த்திக். வாயை சற்று கோணலாய் திறந்தபடி படம் முழுவதும் வருகிறார். எதிர்பார்த்த இடத்தில் உதவி கிடைக்காததை தொடர்ந்து சகுனித்தனம்(!?) செய்ய தொடங்குகிறார். தொடர்ந்து ஐந்து படங்கள் ஓடி விட்ட நம்பிக்கை காரணமோ என்னமோ உப்பு சப்பில்லாத கதையில் அலட்டலில்லாத நடிப்புடன் களம் இறங்கிவிட்டார். அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சொல்லி வருவது போல, சகுனி என்ற மகாபாரத பாத்திரம் குறித்து ஒன்றுமே...
தடையறத் தாக்க விமர்சனம்

தடையறத் தாக்க விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய முதல் ஃப்ரேம்மில் இருந்து பார்வையாளர்களைக் கட்டிப் போட முடியுமா? அதை சாத்தியமாக்கி இருக்கார் மகிழ் திருமேனி. கதை சொல்லும் பாணியில் அவரது முதல் படமான முன்தினம் பார்த்தேனே படத்தில் இருந்து ரொம்பவே வித்தியாசப்படுத்தி உள்ளார். அப்பொழுது வந்திருந்த விண்ணத் தாண்டி வருவாயா போலவே அவரது முதல் படம் இருந்ததோடு, வாய்ஸ்-ஓவர் என்னும் கெளதம் வாசு தேவ் மேனனின் ஸ்டைல் படம் முழுக்க விரவி இருந்தது. அவரிடம் அசோசியேட்டாக ஒரு படத்தில் பணிப் புரிந்த பாதிப்பாக இருக்கலாம். ஆனால் இம்முறை அருண் விஜய்யை வைத்து அருமையான ஆக்ஷன் படத்தைக் கொடுத்துள்ளார்.ட்ராவல் ஏஜென்சி வைத்திருக்கும் செல்வாவிற்கு அவரது காதலி ப்ரியாவுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக மஹா என்னும் ரவுடியைக் கொன்று விட்டான் என செல்வா மீது பழி வந்து விழுகிறது. செல்வாவைக் கொன்று ப...
வழக்கு எண்:18/9 விமர்சனம்

வழக்கு எண்:18/9 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்; ஆனால் மறுபடியும் தர்மமே வெல்லும்.இதிகாசங்கள் எழுதப்பட்ட காலம் முதல் இந்தியாவில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தபடும் கருத்து. 'கறை நல்லது தான்' என்று ஸர்ஃப் எக்ஸல் விளம்பரத்தில் சொல்வது போல், "தர்மம் வெல்வது நல்லது தான்"  என்பதில் கிஞ்சித்தும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் தர்மத்தைக் காக்க அக்காலம் தொட்டே 'வன்முறை' தான் ஒரே தீர்வாக முன்மொழியப்படுவது மிகவும் பரிதாபத்தற்குரிய விடயம். வழக்கு எண்: 18/9 படமும் அதற்கொரு விதிவிலக்கில்லை.சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் தமிழ்த் திரைப்படங்கள் மிக அரிது. அவ்வகையில் வழக்கு எண்: 18/9 மிக முக்கியமான படமாகிறது. விளைநிலங்கள் மனைகளாக மாறுவது, குழந்தைத் தொழிலாளர்களின் அவலம் என படம் நிறைய விடயங்களைத் தொட்டு செல்கின்றன. ஆனால் 'ஏழைகளுக்கு மறுக்கப்படும் நீதி' மற்றும் 'சுய சாதி அபிமானம்' என்ற இரண்டைப் பற்றியும் இ...
ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்

ஒரு கல் ஒரு கண்ணாடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு கல்.. ஒரு கண்ணாடி..உடையாமல் மோதி கொண்டால் காதல்என்று இயக்குனர் இராஜேஷின் முதல் படத்தில் வரும் ஒரு பாடல் வரியின்தொடக்கம் தான் படத்தின் கரு மற்றும் தலைப்பு. ஆனால் அதை முதல் படத்தில்சாத்தியப்படுத்தியது போல் இப்படத்திலும் அவருக்கு சாத்தியப்படுத்த முடியாமல் போய்விட்டது.படத்தில் கதாநாயகன் என்று யாரும் இல்லை. கதை இருந்தால் தானே கதைக்குநாயகன் என யாராவது இருக்க முடியும்? இந்த இரண்டு குறையையும் சந்தானத்தைவைத்து லாவகமாக மறைத்துள்ளார் ராஜேஷ். முந்தையப் படங்கள் அளித்தநம்பிக்கையாகவோ, படிப்பினையாகவோ இருக்கும். மற்ற பாத்திரங்களின்வசனத்திற்கு எதிர் வசனம் பேசி மட்டுமே ஒப்பேத்தாமல், சந்தானம் முழுப்படத்தையும் முதுகில் சுமப்பவராக உள்ளார். 'சந்தானம் இருக்க பயமேன்?' எனஇயக்குனர் ராஜேஷின் மனோநிலையைப் பிரதிபலிக்கும் வண்ணமாக, படத்தின் நாயகனானஉதயநிதி ஸ்டாலினும் நிறைவாய் புன்னகைத்து தலையை மட்டும் வேண...
கழுகு விமர்சனம்

கழுகு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பரீட்சையில் தேறாதது, கடன் தொல்லைகளை சமாளிக்க முடியாதது, காதலித்தவர்கள்மனம் செய்து கொள்ள பெற்றவர்கள் சம்மதிக்காதது என  தற்கொலைப் புரிந்துக்கொள்பவர்களுக்கு ஏதேதோ காரணங்கள். தேனி மாவட்டத்தில் அப்படி நிகழும் தற்கொலைகளை நம்பி பிழைக்கின்றனர் சேராவும் அவனது சகாக்களும். தற்கொலைப்புரிந்தவர்களின் பிணங்கள் 3000 அடி ஆழம் போல் விழுந்துக் கிடக்காமல் 300அடிக்குள்ளாகவே கிடைக்க வேண்டும் என்பது அவர்களின் பிரார்த்தனையாக உள்ளது.'பிணம் தூக்குபவர்கள்' என்று மலிவாக அவர்களை மற்றவர்கள்அடையாளப்படுத்துகின்றனர்.கவிதாவின் தங்கை தனது காதலருடன்தற்கொலைப் புரிந்துக் கொள்கிறாள். சேரா குழுவினர் மூன்று நாட்கள் தேடி,கவிதாவின் தங்கை உடலினை மட்டும் கண்டுபிடித்துக் கொண்டு வருகின்றனர். தனதுமகனின் உடல் கிடைக்கவில்லை என கோபப்படுபவர்கள் கவிதாவின் தங்கை உடலைமீண்டும் மலையில் இருந்து கீழே வீச முனைகின்றனர். சேரா அவர்களை தடுத்துவ...
அம்புலி விமர்சனம்

அம்புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்புலி - நிலா என பொருள்படும். இரவில் மட்டுமே தோன்றி உயிர்களை வேட்டையாடும் மிருகம் போன்ற மனிதனைக் குறிக்கும் காரணப் பெயராக தலைப்பை வைத்துள்ளனர். ஸ்டிரியோ-ஸ்கோபிக் முறையில் எடுக்கப்பட்ட முதல் முப்பரிமாண தமிழ்ப் படம் என்பது அம்புலியைப் பற்றிய விசேடமான செய்தி. தேர்வாழி கிராமத்தில் நடந்த விநோதமான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையின் கருவை அமைத்திருப்பதாக தெரிகிறது. ஒருவழியாக தனது காதலை இரண்டு வருடங்களிற்குப் பிறகு பூங்காவனத்திடம் சொல்லி விடுகிறான் அமுதன். அவன் காதலைத் தெரிவித்த நாள் முதல் கல்லூரி இரண்டு மாதங்களுக்கு விடுமுறை என்பதால், பணக்கார வீட்டுப் பையனான அமுதன் காதலியைச் சந்திக்க கல்லூரி விடுதியிலேயே தங்க முடிவு செய்கிறான். அதற்கு அமுதன் அவனுடைய நண்பன் பார்வேந்தனின் உதவியை நாடுகிறான். கல்லூரி காவலாளி (வாட்ச்-மேன்) ஆன வேந்தனின் தந்தை வேதகிரி்யும் அமுதன் தங்குவதற்கு சம்மதிக்கிறார். அன்றிரவே...
அரவான் விமர்சனம்

அரவான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவான் - குருஷேத்திரப் போர் தொடங்கும் முன் பண்டவர்கள் 'அரவான்' என்பவரை பலி கொடுப்பர். ஆக பலி கொடுக்கப்படும் நபரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.  இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளது 'காவல் கோட்டம்' நாவலிற்கு சாகித்ய அகாடெமி விருதுப் பெற்ற சு.வெங்கடேசன். அந்த நாவலின் சிறு அத்தியாயத்தை படமாக எடுத்துள்ளனர் சில மாற்றங்களுடன். 18ஆம் நூற்றாண்டில் நடப்பதாக படம் தொடங்குகிறது. அங்காடித் தெரு இயக்கிய வசந்தபாலன் சரித்திரக் கால படம் ஒன்றினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளார்.தனது ஊர்ப் பெயரைச் சொல்லி துப்பு வாங்கி, தனியாளாக களவாடி வரும் வரிப்புலியைத் தேடிச் செல்கிறார் கள்ளர் தலைவர் ஆன கொம்பூதி. வரிப்புலியின் திறமையால் கவரப்பட்டு அவனையும் ஊர்ப் பெரியவர்களின் பேச்சை மீறி தன்னோடு களவில் இணைத்துக் கொள்கிறார் கள்ளர் தலைவர். தன்னைப் பற்றிய செய்திகளை ரகசியமாகவே வைத்திருக்கும் ...
காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி - இளமை துள்ளும் குதூகலமான படம். 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தனது குறும்படத்தை அப்படியே விரிவாக்கி திரைப்படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார். அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறுப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மையால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. சொதப்பும் முக பாவம் சித்தார்த்திற்கு இயல்பாகவே வருகிறது. படம் முழுவதும் அவர் முகம், 'ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேள்வியை சுமந்தவாறே உள்ளது. சித்தார்த்தைத் தவிர்த்து வேறு எவரேனும் இப்பாத்திரத்திற்குப் பொருந்தி இருப்பார்களா என்பது ஐயம் தான். அதை சித்தார்த்தும் நன்றாக உணர்ந்ததால் தான் படத்தின...