Shadow

சினிமா

சிங்கம் II விமர்சனம்

சிங்கம் II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம்வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ளது.தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை எப்படி துரைசிங்கம் வேரோடு சாய்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.துரைசிங்கமாக சூர்யா. கையிலும், கண்ணிலும் நெருப்பு எரிகிறது. சராமாரியாக அனைவருக்கும் அட்வைஸ்களை வாரி வழங்குகிறார். ஆனால், “ஆஃப்ரிக்க குரங்கு” என இனவெறியில் பிரதான வில்லனைத் திட்டுறார் ஊருக்கு உபதேசம் செய்யும் சிங்கம். சமீபத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில், மராத்தான் போட்டியில் ஓடும் நைஜிரீயர் ஒருவர் தாகத்தில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தண்ணீர் தரும் காட்சி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. நீதியையும், தர்மத்தையும் காப்பாற்ற துரைசிங்கம் சுமார் 25 பேரை சுட்டுக் கொல்கிறார். அதில் 14 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் தென் ஆஃப்ரிக்காவினர். ‘காத்திருத்தல் தான் காதல்’ எனச் சொல்வதற்கு மட்...
அம்பிகாபதி விமர்சனம்

அம்பிகாபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்பிகாபதி – தனுஷ் நடித்த ராஞ்சனா ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங். 1937இலும் 1957இலும் வெளிவந்த ‘அம்பிகாபதி’ படத்தில், நாயகனுக்கு ஏற்படும் முடிவு தான் இப்படத்தின் நாயகனுக்கும் ஏற்படுகிறது. அதனால் தான் இந்தத் தலைப்பை நீதிமன்றம் வரை சென்று சமரசம் பேசி பெற்றனர் போலும்.காசி வாழ் தமிழ் அர்ச்சகரின் மகன் குந்தன் ஷங்கர். அவனுக்கு முஸ்லீம் பெண்ணான ஜோயா மீது காதல். ஜோயாக்கோ ஜஸ்ஜீத் சிங் மீது காதல். இந்த முக்கோணக் காதல் கதை தான் படத்தின் கதை.குந்தன் ஷங்கராக தனுஷ். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட தனுஷ். சோனம் கபூர் தனுஷின் கன்னத்தில் அறைந்தால், கிடைத்தற்கரிய ஏதோ பெற்றதாய் அழகாக பதினைந்து முறையும் இளிக்கிறார். ‘என்னைப் பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்’ என வம்படியாகச் சுற்றி காதலிக்க வைப்பதிலிருந்து, கையை அறுத்து அச்சுறுத்தி காதலிக்க வைப்பதற்கு முன்னேறியிருக்கார். குழப்பமும், சுயநலமும் மிக்க இளைய சம...
தலைவா இசை – ஒரு பார்வை

தலைவா இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின்  படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், விஜய்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம். நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். 1. பாடல் - தமிழ் பசங்க  பாடியவர்கள் - பென்னி டயால், ஷீஷே - சைகோ யூநிட்தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் "டான்சராக" நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.2. பாடல் - யார் இந்த சாலையோரம்  பாடியவர்கள் - ஜீ.வி பிரகாஷ், சைந்தவி "யார் இந்த சாலையோரம்"...
“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, 'ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)' தான்.ஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.ஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், 'சம்திங் சம்திங்' என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.ராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த ப...
தில்லு முல்லு விமர்சனம்

தில்லு முல்லு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1981-இல் பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ வெளியானது. சிவாவை நடிக்க வைத்து அப்படத்தை ரீ-மேக்கியுள்ளார் இயக்குநர் பத்ரி.முருக பக்தரான சிவகுருநாதரிடம், பக்திப் பழமாக வேடமிட்டு வேலையில் சேருகிறான் பசுபதி.  வேடம் கலையாமல் இருக்க பொய் மேல் பொய் சொல்கிறான் பசுபதி. பசுபதியின் வேடம் எப்படிக் கலைகிறது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.எப்பொழுதும் போல் அதிக சிரமப்படாமல், தன் கதாபாத்திரத்தை சிரித்து முகமாக ரசித்துச் செய்துள்ளார் சிவா. அவரது பலமே சீரியசான நேரத்திலும் அசால்ட்டாக வசனம் பேசுவது தான்.  “இது என்னோட ராஜினாமா லெட்டர். இது என் தம்பியுடைய ராஜினாமா லெட்டர். சைனீஸ்ல எழுதியிருக்கு” என சிவா சொல்லும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.தமிழ்ப் பேசும் நல்லுலகத்திற்கு "கலாய்" என்னும் வார்த்தையைத் தந்துள்ளார் சிவா. சிவாவால் காதலிக்கப்படும் பெண்ணாக இஷா தல்வார் அறிமுகமாகி உள்ளா...
தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
47616542891*வது தடவையாக வெள்ளைத் தோலினையுடைய பெண்கள் காதலிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்லும் தமிழ்ப் படம்.சஞ்சனாவைப் பார்த்த நொடியிலேயே, குமாருக்கு சில்லென சாரலடித்து அவள் மேல் காதல் வந்துவிடுகிறது. பிறகு குமார் எப்படித் தீயாக வேலை செய்து சஞ்சனாவை காதலிக்க வைக்கிறான் என்பதே கதை.குமாராக சித்தார்த். வாயில் விரல் வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி ஐ.டி. தொழிலாளியாக நடித்துள்ளார். உதயம் NH4-இல் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த சித்தார்த், இப்படத்தில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பவராக வழக்கம் போல் வந்து அசத்துகிறார். காதலித்து திருமணம் புரிந்துக் கொள்ளும் வம்சாவழியில் வந்த சித்தார்த், காதலிக்க யோசனைக் கேட்டு ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார். இந்தச் செலவழித்தல் நகைச்சுவைப் பிரிவில் வருகிறது. காதலிக்க ஐடியா சொல்லி சம்பாதிப்பவராக சந்தானம். சித்தார்த்தின் அறிமுகம் கூட படத்தில் சா...
“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குநர்களிடமும் நடிகர்கள் நடிகைகளிடமும், " 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன் மீதி மருத்துவச் செலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள்' என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர். என் பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர்.  அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அதை செய்த நபர்தான் என் ...
“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை! தனது ஆன்மீகப் பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருப்பார். இப்போது அவருக்கு பிடித்தமான, தோதுவான களத்தில் மீண்டும் இறங்குகிறார். அதாவது தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும் தயாரிப்பாளரும் நடிகருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான பாத்திரத்தில்  நடிப்பதோடு, கதை விவாதத்திலும் கலந்துக் கொள்கிறார்.  பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றிப் பாடிய பாடல் வரிகள் இதுதான்.'குட்டிப் பயலே.. குட்டிப் பயலே.. எதை தேடி நீ ஓடுற?சுட்டிப் பயலே.. ...
ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தனது தயாரிப்பு நிறுவனமான 'லோன் வொல்ஃப் (Lone wolf)' என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு, இயக்குநர் மிஷ்கின்  இயக்கி  நடித்து வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! வழக்கு எண்: 18/9 இல் நாயகனாக நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டி குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் 'ஃபர்ஸ்ட்  டீசர்' சமீபத்தில் வெளியானது. அதில் ஓடும் ட்ரெயினில் இருந்து மிஷ்கின் குதிப்பது போலொரு காட்சி வருகிறது.இது பற்றி இப்படத்தின் ஃபைட் மாஸ்டர் 'பில்லா' ஜகன், ''ரயில் வேகம் காரணமாகவும் அதன்  தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் மிஷ்கினோ 'தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்' என பிடிவாதமாகக் கூ...
“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
அறிமுகமான  'அபியும் நானும்' முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான 'உன்னை போல் ஒருவன்', வெளி வர இருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சந்திரா' முதல் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், "நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது  என்பது அறிய வரம். எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே  என் குறிக்கோள். மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும். இணை நாயகன், துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாபாத்திரம் கவர வேண்டும். அதுதான் என் உண்மையான வெற்றி. மக்கள்  மத்தியில் என் மு...
“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழாபூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா...
அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

சினிமா, திரைத் துளி
"இந்தியாவில் பிறந்தாலும் ஹாங் காங்கில் ஒரு பிரபல கட்டடக் கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது..  என் தோழியுடன்   மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டடத்தின் லிப்ஃடில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என்  தோழி அவர் தான் RGV  என அறிமுகபடுதியபோதுக் கூட எனக்கு அவரை தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய மேக்கிங்  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ஃட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. இரு மொழிகளில் தயாராகும் 'நான்தாண்டா' திரைப் படம் என்னை நி...
“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி , சிவ  கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி."அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல் பட வைக்கிறது" என் கிறார் ஆதி.இந்த மனநிலைக்கு அவரது  சகோதரர் சத்யா பிரபாஸ்  இயக்கத்தில் உருவாகும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ,'இருக்கலாம்..  இந்தப் படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என்றார்.  ...
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
"இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு முழு நீள காமெடிப் படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன் ஹன்சிகா மோத்வாணி....
இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது பட தயாரிப்பு நிறுவனமான 'ஃபோட்டான் கதாஸ்' நிறுவனத்துக்கும் இது தங்கமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும் .தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' திரைப்படத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஹைதராபாத் நகரில் நடை பெறும்  இந்த தமிழ் தெலுங்கு இரு மொழியில் தயாராகும் இந்தக் காதல் கலந்த நகைச்சுவை படத்தின் இயக்குனர் பிரபு தேவாவிடம் இணை இயக்குனராகபணியாற்றிய பிரேம் சாய். இவர் சின்னத் திரையில் நடித்துக் கொண்டிருந்த பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கௌ...