Shadow

சினிமா

சிங்கம் II இசை – ஒரு பார்வை

சிங்கம் II இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சூர்யாவும், இயக்குநர் ஹரியும் மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முன்பு  வெளியான ஆறு மற்றும் சிங்கம் முதல் பாகத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சிங்கம் இரண்டாம் பாகத்திலும் தொடருமா என்று பார்ப்போம். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். பாடல்களை எழுதியவர் விவேகா.1. பாடல் - புரியவில்லை  பாடியவர் - ஸ்வேதா மோகன் நாயகி, நாயகன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. ஸ்வேதா மோகன் குரல் அடடா அடடா.. நல்ல ஒரு "ஃபாஸ்ட் மெலடி". அருமையான இசையும் வரிகளும்.  2. பாடல் - வாலே வாலே  பாடியவர் - ஷங்கர் மகாதேவன் நாயகனின் அறிமுக பாடல், வழக்கமான ஹீரோவோட பெருமை பாடும் பாடல், வழக்கமான இசை.  குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவுமில்லை   3. பாடல் - அச்சமில்லை பா...
ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  சமீபமாக எல்லா புகழும் ரஹ்மானுக்கே என்று சொல்லி கொண்டு இருக்கிறார் . மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும்.இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியவர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்புக்காக  இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய  வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து பணி  புரிவதை பார்க்கும் போது  பிரமிப்பு அடைந்தேன். வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குரிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்  A.R.rahmaan தான் என்று கூறுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் .  ...
குட்டிப் புலி விமர்சனம்

குட்டிப் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன் குட்டிப் புலியாக உருமாறியுள்ளார். காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, இளித்த முகத்துடன் நாயகியை சந்துக்குள்ளே பார்ப்பதில் இருந்து வெளிவரும் எண்ணமே இல்லை போலும்.குட்டிப் புலி என்பவன் ஊரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வம்பிழுத்து, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் ஊர் சுற்றும் சண்டியர். அவனுக்கு கல்யாணம் செய்து பார்க்க நினைக்கிறார் அவனது பாசக்கார தாய். தாயின் எண்ணம் ஈடேறியதா என்பது தான் கதை.தொடக்கத்தில் நண்பனுக்கு ஒன்றெனில் முதல் ஆளாக வருவார் சசிகுமார். பின் காதலிப்பவர்களுக்கு ஒன்றெனில் வந்தார். பிறகு தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்பவராக இருந்தார். இப்பொழுது தன் தெருவில் வசிப்பவர்களுக்காக எதையும் செய்பவராக மீசையை முறுக்கிக் கொண்டே இருக்கார். ராஜ் கிரணுக்கு சவால் விடும் வகையில் தொடை தெரிய லுங்கி கட்டியவாறு படம் நெடுகிலும் வருகிறார்.படத்தின் ஒரு காட்சியில், “புலி...
“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

சினிமா, திரைத் துளி
தன் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் வி.டி.வி. கணேஷ். இதனால் வேதனையடைந்திருக்கும் அவர், இது சம்பந்தமாக புகார் பதிவு செய்யவும் உள்ளார். தற்போது"சரஸ்வதி சபதம்" பட ஷூட்டிங்கிற்காக மலேசியா செல்கிறார்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிப்பிடும்படியான தமிழ்ப் படங்கள் வெளிவராத நிலையில், ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ஆறாம் பாகம் தமிழகத் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் லெட்டி உயிருடன் இருக்கிறாள். அவ்வுண்மையைத் தெரியபடுத்தி வின் டீசலின் உதவியைக் கோருகிறார் வ்ரெஸ்லிங் புகழ் ராக். வின் டீசல் தனது அணியைச் சேர்க்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில், மின் தடையை ஏற்படுத்தும் கருவியை உருவாக்கி விற்க நினைக்கும் ஓவன் ஷாவைப் பிடிக்க ஒத்துக் கொள்கின்றனர். லெட்டி மீட்கப்பட்டாளா, ஓவன் ஷா பிடிப்பட்டானா போன்ற கேள்விகளுக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்பெயினிலுள்ள கேனரி தீவின் மலைப் பாதை கொண்டை வளைவுகளில் போட்டியிடும் இரு கார்களில் இருந்து தொடங்குகிறது. பின் இடைவெளியே இல்லாமல் வெறும் ஆக்ஷன் தான்.ஐந்தாவது பாகத்தைத் தொடர்ந்து வின் டீசலும், ராக்கும் இணைந்து ...
குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
"வாகை சூடவா" படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம். கிப்ரான், அடுத்து "வத்திக்குச்சி"யில்  மேலும் தன் திறமையை  நிரூபித்தார். இப்பொழுது சசிகுமார்  மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்றாவதாக  குட்டி புலி இசை வெளிவந்துள்ளது.  வைரமுத்துவின் வரிகளில் படத்தில் மொத்தம் நான்கு  பாடல்கள்.1.அருவாக்காரன்: 4.5/5 பாடியவர் - பத்மலதா, கௌஷிகி சக்ரவர்த்திஅருமையான குரல், அற்புதமான இசை மற்றும் வைரமுத்துவின் அழகிய வரிகள். இது போதாதா ஒரு பாடல் பிரபலமடைய? "அருவாக்காரன்" பாடல் பலரது கைப்பேசியில் ரிங் டோனாக அமையவிருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.2. காத்து காத்து: 4.2/5 பாடியவர் - கோல்ட் தேவராஜ் ஒரு புதுவகையான பாடல், "கோல்ட் தேவராஜின்" குரலில் மற்ற நாட்டுபுற பாடல்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டு நிற்கிறது. தொடக்கம் முதலே பின்னிட்டாங்க.  திரையில் காணும்பொழுது முகம் சுழிப்ப...
நேரம் விமர்சனம்

நேரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான...
மரியான் இசை – ஒரு பார்வை

மரியான் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் வரிகளுக்கு, யுவன் வேறு குரல் கொடுத்திருக்கிறார். ஆக பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் இசை வெளிவந்துள்ளது..படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்.1. எங்க போன ராசா:  5/5 பாடியவர் - சக்தி ஸ்ரீ கோபாலன் வரிகள் - குட்டி ரேவதி,  ரஹ்மான் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ள பாடலின் மூலம் பிரபலமடைந்த  சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் ஒலிக்கும் 'எங்க போன ராசா' பாடல் ஒரு சுகமான சோகம். பிரிவின் சோகத்தை விவரிக்கும் அந்த வரிகள் அருமை. உடன் இசைப்புயலின் மென்மையான இசை, ஒரு கணம் நம்மையும் அந்தச் சோகத்துள் சுண்டி இழுத்துக்கொள்கிறது.2. இன்னும் கொஞ்ச நேரம்: 4.5/5 பாடியவர் - விஜய் பிரகாஷ், ...
“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.    “எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல சிறுத்தை வரும். அது எப்படி எடுத்தாங்கன்னா.. சிறுத்தை ஓடிடக் கூடாதுன்னு பெரிய கூண்டு ஒன்னுப் போட்டுட்டாங்க. ஒன்னு இல்லை மூனு சிறுத்தை. சும்மா கொஞ்ச நேரம் எடுக்கல. காலையில் தொடங்கி மாலை வரை, ரொம்ப கஷ்டம். ‘சீக்கிரம் மறைஞ்சுடுப்பா’ என நான் சூரியனை வேண்டிக்கிட்டேன்.    கேமிராவைக் கூண்டுக்கு வெளில வச்சுட்டாங்...
நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார். ‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி...
சூது கவ்வும் விமர்சனம்

சூது கவ்வும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோகச் சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.   ஆட்களைக் கடத்தி, மிரட்டி (!?) பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.   தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையர...
மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

மூன்று பேர் மூன்று காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிஞ்சி, மருதம், நெய்தல் என மூன்று திணைகளில் வாழும் மூன்று இணைகளின் காதல் பற்றிய படம்.கண்ணுக்கு குளிர்ச்சியாய் மலையில் தொடங்குகிறது படம். வாய் ஓயாமல் பேசும் வருணாக விமல். ஏதாச்சும் பேசிய வண்ணமே உள்ளார். 'உங்க வலதுக் கையைப் பிடிச்சுக்கவா?" என விமல் கேட்பதற்கு மறுக்கிறார் நாயகி. உடனே விமல், 'அப்ப என் கையையாவது நீங்க பிடிச்சுக்குங்க' என்கிறார். உடனே வேறொரு காட்சி. வேறென்னவோ பேசுகிறார். நகைச்சுவையாகப் பேசுகிறேன் என்று அவரே சொல்லிக் கொள்கிறார். அறிமுக நடிகையான லாசினி அஞ்சனாவாக நடித்துள்ளார். நிச்சயமாகிவிட்ட அஞ்சனாவை துரத்தித் துரத்தி, மன்னிக்க, பேசிப் பேசி காதலிக்கிறார். லாசினிக்கு நிச்சயிக்கப்பட்டவருடன் பிணக்கு ஏற்பட்டு காதல் விலக, விமலின் காதலை ஏற்கிறார். லாசினிக்கு நடிக்க அதிகம் வாய்ப்புக் கிடைக்கவில்லை. கிடைத்ததிலும் சோபிக்கவில்லை. விமல் திடீரென லாசினியுடன் பேசுவதை தவிர்க்கிறார்.ஏன...
எதிர்நீச்சல் விமர்சனம்

எதிர்நீச்சல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான்.நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 என தமிழில் முன்பே நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கம்-பேக்கான இங்கிலீஷ் விங்கிலீஷிலும் நடித்திருப்பார். ஆனால் இப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படத்தில் குழந்தைகளுடன் சிரித்து சிரித்துப் பேசிப் பழகும் ஆங்கில ஆசிரியையாகவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணம் 'கலெக...
நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

நான் ராஜாவாகப் போகிறேன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை போல் இருக்கும் ராஜாவைத் தேடி, இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து சென்னை புறப்படுகிறான் ஜீவா. ஜீவா ராஜாவை சந்திக்கிறானா இல்லையா என்பதற்கு பதிலுட்ன் படம் நிறைவேறுகிறது.நாயகனாக நகுல். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது படம் மீண்டும் வந்துள்ளது. அவரது முதற்படமான 'பாய்ஸ்' வந்து பத்து வருடங்கள் ஆகிறது. எனினும் அவர் கொஞ்சி பேசும் தமிழ் மட்டும் இன்னும் மாறவே இல்லை. இந்தப் படத்தில் கிக்-பாக்சிங் வித்தகராக, திலீப் சுப்பராயனின் ஸ்டன்ட்டில் ரசிக்க வைக்கிறார். ரேனிகுண்டா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நிஷாந்த் நகுலின் நண்பன் வஹாப்பாக நடித்துள்ளார். நன்றாக நடித்திருந்தாலும், அவரது வாயிலும் வசம்பைத் தேய்க்கணும்.நாயகியாக அவின் மோடி. ரீமா என்ற பாத்திரத்தில் நாயகனுக்கு தோழியாக நடிக்கிறார். திடீரென வில்லியாகி அவதாரம் எடுத்து கிலியை ஏற்படுத்துவார் என பல திரைப்படங்கள் பார்த்த அனுபவத்...
யாருடா மகேஷ் விமர்சனம்

யாருடா மகேஷ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தின் ட்ரெயிலர் தான் படத்தின் மூளதனமே!! ('ல' குறில் அல்ல நெடிலே!! மூளையின் மழூஉ.)பொறுப்பற்ற ஞாபக மறதிக்காரனான ஷிவா சிந்தியாவைக் காதலிக்கிறான். கல்யாணம் செய்துக் கொள்கிறான். அவர்களுக்கு குழந்தையும் பிறந்து விடுகிறது. மகேஷ் என்பவரிடமிருந்து சிந்தியாவிற்கு ஒரு அழைப்பு வருகிறது. யார் "அந்த" மகேஷ் என்றும், அவனை சிவா கண்டுபிடித்தானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இந்தப் படத்தில் வரும் அனைத்தும் "குறியீடுகள்" என்ற வாசகம் எழுத்தாகவும், அதை மேஜர் சுந்தரராஜன் குரலில் படித்தும் காட்டுகின்றனர். படத்தின் தொடக்கத்தில் இருந்தே இயக்குநரின் சேட்டை தொடங்கி விடுகிறது. கூட்டமாக நிற்பவர்களில் ஒருவர் மீது மட்டும் ஏன் கல் விழுகிறது என தமிழிலும், ஆங்கிலத்திலும் சொல்லி கதையை அனிமேஷனில் தொடங்குகின்றனர். அரைத்த மாவை அரைக்காமல் புதிதாக முயற்சி செய்துள்ளனர். முதல் பாதி எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்...