Shadow

சினிமா

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

சினிமா, திரைத் துளி
பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ' ஷிவானி'  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண்  புகைப்பட நிருபருக்காக அழுகிறது.  என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறே...
தலைவா விமர்சனம்

தலைவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைவா - எதிர்ப்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமான தலைப்பு. இயக்குநர் விஜயும் நடிகர் விஜயும் இணையும் முதல்படம். சற்றே பெரிய படம். காதலியை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறான் விஸ்வா. தொழிலதிபர் என நினைத்துக் கொண்டிருந்த தந்தை, மக்கள் கூட்டம் ஒன்றின் தலைவர் எனத் தெரிய வருகிறது. தன் கண் முன்பே இறக்கும் தந்தையின் மறைவிற்குப் பின், விஸ்வாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் கதை.டான்ஸ் மாஸ்டர் விஸ்வாவாக விஜய். இளமை துள்ளலுடன் அமைதியாக அசத்துகிறார். சுமார் ஒரு மணி நேரம் படம் கவிதை போல் அழகான காதல் கதையாக நகர்கிறது. இடைவேளை வரை பார்த்த அதே விஜய் மீண்டும் இரண்டாம் பாதியிலும். ஆனால் துள்ளல் குறைந்து, முகத்தில் எதையோ சாதிக்கத் (!?) துடிக்கும் தீவிரத்தை பிரதிபலித்தவாறே உள்ளது அவர் முகம். ஆனால் படத்தில் விஜய் அதிர்ந்து ஒரு குத்து வசனம் கூட பேசாதது மிகப் பெரிய ஆறுதல். ஆன...
ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
101 நிமிடப்படம்.   கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.    கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் வைத்திருக்கான் என நம்புவதை முதலில் தமிழ்ப்பட நாயகிகள் நிறுத்த வேண்டும். உயிரின் மதிப்பை அறியாதவனின் மன முதிர்ச்சி எந்த அளவில் இருக்கும்? தற்கொலை என அச்சுறுத்தி நாயகியிடம் ஈட்டிய வெற்றித் தந்த குதூகலத்தில், கல்யாணத்திற்காக கையை அறுத்து பெற்றோரை அடிபணிய வைக்கிறான். நான் உயிரைக் கொடுக்கப் போ...
தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

அயல் சினிமா, சினிமா
2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை.ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். ஆனால் கோல்ட் லயனை வஞ்சகமாகக் கொன்று லயன் குழுவின் தலைவராகிறார் சில்வர் லயன். சில்வர் லயனின் நோக்கம் தங்கத்தை அபகரிப்பது. அவரது நோக்கம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களும் அவர்களின் ஆயுதங்களும் தான். கோல்ட் லயனின் மகனான யென் யீயின் உடை ப...
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது.இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ' இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது  அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு  ஃப்ரொஃபஷ்னல்l நடிகையாக  மழை வெயில் எனப் பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குநர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும்  என் வெற்றிய...
ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்.விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம்.அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் தெறித்து விழுவார்கள். சிக்ஸ்-பேக் ஹீரோன்னா சும்மாவா? மூளையின் மெமரி செல்களை அழிக்க பரத்திற்கு கரன்ட் தருகிறார்கள். பரத் துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனால் உடனே எழுந்து அடியாட்களை துவம்சம் பண்ணுகிறார். முகத்தில் வெட்டுகளுடன் உம்மென்று வருகிறார் முதல்பாதியில். இடையிடையில் தாடியில்லாத வழவழப்ப...
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 1. பாடல் - ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் - பபோன், மரியா  வரிகள் - நா.முத்துக்குமார்  பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் "அடியே" பாடலை பாடியவர். கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்.2. பாடல் - ஒசக...
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ஃபிட...
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.“எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான். ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். என்னமோ குறையுதே சார்ன்னு நான் கேட்டேன். ஃபைனல் எடிட்டிங் பண்ணிட்டா நல்லா இருக்கும். ஒரு முக்கியமான ஆளுக்காக வெயிட் பண்றேன்.. அவர் வர ரெண்டு நாள் ஆகும் என்றார். அப்புறம் ஃபைனல் எடிட்டிங் முடிஞ்சு நானும், ரஜினி சாரும் கேட்டோம். அட்டகாசமாக இருந்தது. யாரந்த முக்கியம...
சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சினிமா, திரைத் துளி
“நீதிக்கு தண்டனை” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அதிரடியாய் நுழைந்தவர் சரண்ராஜ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், அடுத்து தனது மகன் தேஜ்ராஜ் என்பவரை நடிகராக களம் இறக்குகிறார் .“என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான்    நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தி இருக்கிறார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்” என்றார் சரண்ராஜ். “பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட், ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாலு மகேந்திராவின்  பயிற்சி பட்டறையில் நடிப்பு எனப் பயிற்சியு...
சொன்னா புரியாது விமர்சனம்

சொன்னா புரியாது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"ஏன்டா.. கல்யாணமே வேணாம்னு சொல்ற?""உங்களுக்கு சொன்னா புரியாது" என கிட்டர் எடுத்துப் பாடத் தொடங்கி விடுகிறார் ஷிவா. படத்தின் தலைப்பை எப்படி நியாயப்படுத்தியிருக்கார் பாருங்க இயக்குநர்?வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஷிவாவின் 20 வருடக் கனவு. அந்தக் கனவு நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் சுபமாய் முடிகிறது.டப்பிங் ஆர்டிஸ்ட் ஷிவாவாக ஷிவா. தமிழ்நாட்டின் மானத்தைக் காக்க அறிமுகமாகி, விக்ரமின் ‘லாலா’விலிருந்து, ரஜினியின் ‘அஜக்குன்னா அஜக் தான்’, மொழிபெயர்க்கப்படும் ஜெட்லி பட வசனம், சாம் அன்டர்சனின் நடனம் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்க்கிறார். கோபம், வருத்தம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்துப் உணர்ச்சிகளுக்கும் சிரித்தவாறே முகத்தை வைத்துள்ளார். அவரது அனைத்துப் படங்களைப் போலவே, எந்தச் சூழ்நிலையிலும் அசால்ட்டாக வசனம் பேசி ரசிக்க வைக்கிறார். அஞ்சலியாக வசுந்தரா ...
பட்டத்து யானை விமர்சனம்

பட்டத்து யானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை. ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில்லனாக்...
சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சினிமா, திரைத் துளி
சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர்கள்:>> அஜீத்  >> நயன்தாரா >> ஆர்யா >> ராணா டகுபதி >> தாப்ஸி >> கிஷோர் >> அதுல் குல்கர்னி >> மகேஷ் மஞ்சுரேக்கர் >> சுமா ரங்கநாத்பணிக...
கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடித்த  3  படத்தைத்  தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?பிறக்கின்ற குழந்தைகள் யாரு...
மரியான் விமர்சனம் விமர்சனம்

மரியான் விமர்சனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் 13 வருட காத்திருப்புஒருவழியாகத் திரையேறி விட்டது.சூழலால் நீரோடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மரியான், அந்நாட்டில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பினானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.அம்பிகாபதியில் அசத்திய தனுஷின் நடிப்பு கண்ணிலிருந்து மறையும் முன் மரியானில் மீண்டும் தனது நடிப்புத் திறமையை மேலும் அழுத்தமாகப் பதிக்கிறார். 2011 இல் வெளிவந்த மயக்கம் என்ன படத்திலிருந்தே பெரிதும் வியக்க வைக்கிறார். காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி எனப் படத்தினை ஐந்தாகப் பிரித்துள்ள இயக்குநரின் எதிர்பார்ப்பை, தனது நடிப்பால் சிந்தாமல் சிதறாமல் பூர்த்தி செய்துள்ளார் தனுஷ். முதல் காட்சியிலிருந்து படம் முடியும் வரை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளார். தனுஷின் நண்பன் சக்கரையாக வரும் அப்புக்குட்டி எப்பொழுதும் போல் பாத்திரமாகவே வந்து ...