Shadow

சினிமா

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழாபூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா...
அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

சினிமா, திரைத் துளி
"இந்தியாவில் பிறந்தாலும் ஹாங் காங்கில் ஒரு பிரபல கட்டடக் கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது..  என் தோழியுடன்   மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டடத்தின் லிப்ஃடில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என்  தோழி அவர் தான் RGV  என அறிமுகபடுதியபோதுக் கூட எனக்கு அவரை தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய மேக்கிங்  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ஃட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. இரு மொழிகளில் தயாராகும் 'நான்தாண்டா' திரைப் படம் என்னை நி...
“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி , சிவ  கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி."அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல் பட வைக்கிறது" என் கிறார் ஆதி.இந்த மனநிலைக்கு அவரது  சகோதரர் சத்யா பிரபாஸ்  இயக்கத்தில் உருவாகும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ,'இருக்கலாம்..  இந்தப் படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என்றார்.  ...
சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
"இயக்குநர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும், திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது. இது ஒரு முழு நீள காமெடிப் படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவா கார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிப்பெறும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படப்பிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்'' என்கிறார் மகிழ்ச்சியுடன் ஹன்சிகா மோத்வாணி....
இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

இயக்குநராகும் சின்னத்திரை நடிகர் பிரேம் சாய்

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான கௌதம் வாசுதேவ மேனனுக்கும், அவரது பட தயாரிப்பு நிறுவனமான 'ஃபோட்டான் கதாஸ்' நிறுவனத்துக்கும் இது தங்கமான நேரம் என்றுதான் சொல்ல வேண்டும் .தங்க மீன்கள் படத்துக்கு கிடைக்கும் எதிர்பார்ப்பைத் தொடர்ந்து  தரமான வித்தியாசமான கதைகளை,  தகுதியான திறமையானவர்களை தேர்ந்தெடுக்கும் ஃபோட்டான் கதாஸ் நிறுவனம் தங்களது அடுத்த தயாரிப்பான 'தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும்' திரைப்படத்தின் தொடர்ந்து நடைபெற்று வரும் படப்பிடிப்பால் மிகவும் உற்சாகமாக உள்ளனர். ஹைதராபாத் நகரில் நடை பெறும்  இந்த தமிழ் தெலுங்கு இரு மொழியில் தயாராகும் இந்தக் காதல் கலந்த நகைச்சுவை படத்தின் இயக்குனர் பிரபு தேவாவிடம் இணை இயக்குனராகபணியாற்றிய பிரேம் சாய். இவர் சின்னத் திரையில் நடித்துக் கொண்டிருந்த பிரபலமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படத்தின் இயக்குநர் பிரேம் சாய் பற்றி தயாரிப்பாளர் கௌ...
சிங்கம் II இசை – ஒரு பார்வை

சிங்கம் II இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சூர்யாவும், இயக்குநர் ஹரியும் மீண்டும் தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்துள்ளனர். இந்தக் கூட்டணியில் முன்பு  வெளியான ஆறு மற்றும் சிங்கம் முதல் பாகத்தின் பாடல்கள் நல்ல வரவேற்ப்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றி சிங்கம் இரண்டாம் பாகத்திலும் தொடருமா என்று பார்ப்போம். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள். பாடல்களை எழுதியவர் விவேகா.1. பாடல் - புரியவில்லை  பாடியவர் - ஸ்வேதா மோகன் நாயகி, நாயகன் மீதுள்ள காதலை வெளிப்படுத்தும் பாடல் இது. ஸ்வேதா மோகன் குரல் அடடா அடடா.. நல்ல ஒரு "ஃபாஸ்ட் மெலடி". அருமையான இசையும் வரிகளும்.  2. பாடல் - வாலே வாலே  பாடியவர் - ஷங்கர் மகாதேவன் நாயகனின் அறிமுக பாடல், வழக்கமான ஹீரோவோட பெருமை பாடும் பாடல், வழக்கமான இசை.  குறிப்பிட்டு சொல்லும்படியாக எதுவுமில்லை   3. பாடல் - அச்சமில்லை பா...
ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

ஆஸ்கார் நாயகன் பற்றி ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்

சினிமா, திரைத் துளி
தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன்  சமீபமாக எல்லா புகழும் ரஹ்மானுக்கே என்று சொல்லி கொண்டு இருக்கிறார் . மரியான் படத்தின் இசை கடந்த சில வருடங்களாக தமிழ் திரை உலகம் கேட்டிராத மாபெரும் இசையாகும்.இந்த வெற்றிக்கு முழுக்க முழுக்க உரியவர் A.R .ரஹ்மான் மட்டும் தான் . இதை தவிர படத்தின் பின்னணி இசை கோர்புக்காக  இரவு பகலாக அயராது உழைத்து தன்னுடைய  வெளிநாட்டு இசை நிகழ்சிகளையும் ஒத்தி வைத்து இதுதான் தன்னுடைய முதல் படம் போல் பாவித்து பணி  புரிவதை பார்க்கும் போது  பிரமிப்பு அடைந்தேன். வெறும் திறமை மட்டும் நம்மை உச்சத்தில் உட்கார வைக்காது அதற்குரிய உழைப்பும் தொழில் பக்தியும் வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம்  A.R.rahmaan தான் என்று கூறுகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன் .  ...
குட்டிப் புலி விமர்சனம்

குட்டிப் புலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுந்தர பாண்டியன் குட்டிப் புலியாக உருமாறியுள்ளார். காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு, இளித்த முகத்துடன் நாயகியை சந்துக்குள்ளே பார்ப்பதில் இருந்து வெளிவரும் எண்ணமே இல்லை போலும்.குட்டிப் புலி என்பவன் ஊரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வம்பிழுத்து, உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில் ஊர் சுற்றும் சண்டியர். அவனுக்கு கல்யாணம் செய்து பார்க்க நினைக்கிறார் அவனது பாசக்கார தாய். தாயின் எண்ணம் ஈடேறியதா என்பது தான் கதை.தொடக்கத்தில் நண்பனுக்கு ஒன்றெனில் முதல் ஆளாக வருவார் சசிகுமார். பின் காதலிப்பவர்களுக்கு ஒன்றெனில் வந்தார். பிறகு தன்னை நம்பியவர்களுக்காக எதையும் செய்பவராக இருந்தார். இப்பொழுது தன் தெருவில் வசிப்பவர்களுக்காக எதையும் செய்பவராக மீசையை முறுக்கிக் கொண்டே இருக்கார். ராஜ் கிரணுக்கு சவால் விடும் வகையில் தொடை தெரிய லுங்கி கட்டியவாறு படம் நெடுகிலும் வருகிறார்.படத்தின் ஒரு காட்சியில், “புலி...
“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

“அது நான் இல்லை!!” – வி.டி.வி கணேஷ்

சினிமா, திரைத் துளி
தன் பெயரில் போலியாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் ட்விட்டர் கணக்கிலிருந்து பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார் வி.டி.வி. கணேஷ். இதனால் வேதனையடைந்திருக்கும் அவர், இது சம்பந்தமாக புகார் பதிவு செய்யவும் உள்ளார். தற்போது"சரஸ்வதி சபதம்" பட ஷூட்டிங்கிற்காக மலேசியா செல்கிறார்
ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் 6 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குறிப்பிடும்படியான தமிழ்ப் படங்கள் வெளிவராத நிலையில், ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் ஆறாம் பாகம் தமிழகத் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.இறந்ததாக நினைத்துக் கொண்டிருக்கும் லெட்டி உயிருடன் இருக்கிறாள். அவ்வுண்மையைத் தெரியபடுத்தி வின் டீசலின் உதவியைக் கோருகிறார் வ்ரெஸ்லிங் புகழ் ராக். வின் டீசல் தனது அணியைச் சேர்க்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் பட்சத்தில், மின் தடையை ஏற்படுத்தும் கருவியை உருவாக்கி விற்க நினைக்கும் ஓவன் ஷாவைப் பிடிக்க ஒத்துக் கொள்கின்றனர். லெட்டி மீட்கப்பட்டாளா, ஓவன் ஷா பிடிப்பட்டானா போன்ற கேள்விகளுக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்பெயினிலுள்ள கேனரி தீவின் மலைப் பாதை கொண்டை வளைவுகளில் போட்டியிடும் இரு கார்களில் இருந்து தொடங்குகிறது. பின் இடைவெளியே இல்லாமல் வெறும் ஆக்ஷன் தான்.ஐந்தாவது பாகத்தைத் தொடர்ந்து வின் டீசலும், ராக்கும் இணைந்து ...
குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

குட்டிப்புலி இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
"வாகை சூடவா" படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த எம். கிப்ரான், அடுத்து "வத்திக்குச்சி"யில்  மேலும் தன் திறமையை  நிரூபித்தார். இப்பொழுது சசிகுமார்  மற்றும் லக்ஷ்மி மேனன் நடிப்பில் மூன்றாவதாக  குட்டி புலி இசை வெளிவந்துள்ளது.  வைரமுத்துவின் வரிகளில் படத்தில் மொத்தம் நான்கு  பாடல்கள்.1.அருவாக்காரன்: 4.5/5 பாடியவர் - பத்மலதா, கௌஷிகி சக்ரவர்த்திஅருமையான குரல், அற்புதமான இசை மற்றும் வைரமுத்துவின் அழகிய வரிகள். இது போதாதா ஒரு பாடல் பிரபலமடைய? "அருவாக்காரன்" பாடல் பலரது கைப்பேசியில் ரிங் டோனாக அமையவிருக்கிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை.2. காத்து காத்து: 4.2/5 பாடியவர் - கோல்ட் தேவராஜ் ஒரு புதுவகையான பாடல், "கோல்ட் தேவராஜின்" குரலில் மற்ற நாட்டுபுற பாடல்களில் இருந்து ரொம்பவே வேறுபட்டு நிற்கிறது. தொடக்கம் முதலே பின்னிட்டாங்க.  திரையில் காணும்பொழுது முகம் சுழிப்ப...
நேரம் விமர்சனம்

நேரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான...
மரியான் இசை – ஒரு பார்வை

மரியான் இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
தனுஷ் படத்திற்கு முதன் முறையாக ரஹ்மான் இசையமைத்திருக்கிறார் என்பதால் இப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது. அது போதாதென்று  ரஹ்மான் இசையில் கொலை வெறி நாயகனின் வரிகளுக்கு, யுவன் வேறு குரல் கொடுத்திருக்கிறார். ஆக பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இப்படத்தின் இசை வெளிவந்துள்ளது..படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள்.1. எங்க போன ராசா:  5/5 பாடியவர் - சக்தி ஸ்ரீ கோபாலன் வரிகள் - குட்டி ரேவதி,  ரஹ்மான் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ள பாடலின் மூலம் பிரபலமடைந்த  சக்தி ஸ்ரீ கோபாலன் குரலில் ஒலிக்கும் 'எங்க போன ராசா' பாடல் ஒரு சுகமான சோகம். பிரிவின் சோகத்தை விவரிக்கும் அந்த வரிகள் அருமை. உடன் இசைப்புயலின் மென்மையான இசை, ஒரு கணம் நம்மையும் அந்தச் சோகத்துள் சுண்டி இழுத்துக்கொள்கிறது.2. இன்னும் கொஞ்ச நேரம்: 4.5/5 பாடியவர் - விஜய் பிரகாஷ், ...
“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

“13 வருட காத்திருப்பு” – மரியான் தனுஷ்

சினிமா, திரைச் செய்தி
ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதல்முறையாக இணைகிறார் தனுஷ். அதைப் பற்றிக் குறிப்பிடுகையில், இது பதிமூன்று வருட காத்திருப்பு என்கிறார். 50 அடி ஆழக் கடலினுள் நடப்பது, நமீபியா பாலைவனங்களில் வெறும் காலுடன் நல்ல வெயிலில் நடப்பது என தனுஷை இயக்குநர் பரத்பாலா சக்கையாகப் பிழிந்துள்ளார்.    “எந்தப் படத்திற்கும் இவ்வளவு கஷ்டப்பட்டதில்லை. இனி பரத்பாலா படத்தில் நடிக்கவே கூடாது என முடிவு பண்ணேன். ஆனா இப்ப ரிசல்ட்டைப் பார்க்கிறப்ப, மீண்டும் அவர் படத்தில் நடிக்கணும்னு தோணுது. படத்தில் ஒரு சீனுல சிறுத்தை வரும். அது எப்படி எடுத்தாங்கன்னா.. சிறுத்தை ஓடிடக் கூடாதுன்னு பெரிய கூண்டு ஒன்னுப் போட்டுட்டாங்க. ஒன்னு இல்லை மூனு சிறுத்தை. சும்மா கொஞ்ச நேரம் எடுக்கல. காலையில் தொடங்கி மாலை வரை, ரொம்ப கஷ்டம். ‘சீக்கிரம் மறைஞ்சுடுப்பா’ என நான் சூரியனை வேண்டிக்கிட்டேன்.    கேமிராவைக் கூண்டுக்கு வெளில வச்சுட்டாங்...
நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

நாகராஜ சோழன் MA, MLA விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார். ‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி...