
“பேய் இருக்கு!!”
சத்யா நாகராஜ், S.செல்லதுரை, சாமி.P.வெங்கட், பாலாமணி ஜெயபாலன் என நான்கு நண்பர்கள். குவைத்தில் வாழும் தமிழர்கள். ஒரு தொழில் தொடங்கும் யோசனையின் முடிவாக சினிமாவைத் தேர்ந்தெடுத்தனர். புதியவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு தரணும் என்ற முடிவுடன், “வரம் கிரியேஷன்ஸ்” என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினர். சென்னையில் இருக்கும் பழம்பெரும் இயக்குநரான ஏ.கே.வேலனின் மகன் A.K.V.கலைஞானியைத் தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொல்லியுள்ளனர்.
பின் படத்தில் பணி புரியும் ஒவ்வொருவரையும் சல்லடை போட்டு எடுத்துள்ளார்கள். உதாரணத்திற்கு 60 கதைகளை வாங்கி, அதை பலதரப்பட்ட பின்னணியுடையடவர்களுக்கு மின்னஞ்சல் செய்து, அந்த ரிசல்ட்டின் அடிப்படையில் “இருக்கு ஆனா இல்ல” படத்தின் இயக்குநர் கே.எம்.சரவணனைத் தேர்வு செய்துள்ளனர். 100 பேர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயகி மனிஷா. ஐ.டி. துறையில் வேலை செய்யும் ஷமீரையும் அப்படித...












