
“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்
மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழாபூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா...




