
சிநேகாவின் காதலர்கள் – இசை வெளியீட்டு விழா
இயக்குநர் விக்ரமணனே அசந்துவிடுவார். அப்படியொரு நெகிழ்வான பின்னணிக் கொண்டது ‘சினேகாவின் காதலர்கள்’ படத்தின் முதற்புள்ளி. பேச்சுலர்களாக இருந்த பொழுது, ஒரே அறையில் தங்கியவர்கள் தயாரிப்பாளர் கா.கலைக்கோட்டுதயமும் இயக்குநர் முத்துராமலிங்கனும். அப்பொழுது முத்துராமலிங்கன் ‘சத்ரியன்’ அரசியலிதழின் ஆசிரியர்; கலைக்கோட்டுதயம் அந்த இதழில் பணி புரியும் தலைமைச் செய்தியாளர். அந்த நட்பு இப்பொழுது அவர்களை படம் பண்ண வைத்திருக்கிறது.
“நான் 12 வருஷத்துக்கு முன்னாடி சின்னத் திரைக்கு வந்தேன். ‘தமிழன்’ தொலைக்காட்சி தொடங்கினேன். அப்பவே வெள்ளித் திரைக்கு வரணும்னு ஆசை. ஆனா என் தம்பிகள் இருவர், எஸ்.பி.சரணையும் வெங்கட் பிரபுவையும் வைத்து “ஞாபகம் வருதே” என படமெடுத்து நஷ்டமடைந்தவர்கள். நஷ்டமாகிடுவோமோன்னு பயமாக இருந்தது.
இப்போ போட்ட பணம் முழுவதுமாக இழந்தாலும் சமாளித்துக் கொள்ளும் நிலையில் இருக்கேன். படம் நன்றாகப் போனால்...
















