
அஞ்சான் விமர்சனம்
தொன்மத்தை நவீனப்படுத்தி மீட்டுருவாக்கம் செய்வது கலையினொரு அம்சம். தளபதி படம் இதிகாசத்தின் ஒரு சின்னஞ்சிறு பகுதியின் நவீன மீட்டுருவாக்கமே! அவ்வகைமையைச் சார்ந்த படம்தான் லிங்குசாமியின் ‘அஞ்சான்’. பிருத்விராஜ் செளகான் என்னும் மன்னரைதான் சூர்யா நடிக்கும் ராஜூ பாய் பாத்திரமாக மீட்டுருவாக்கம் செய்துள்ளார் லிங்குசாமி. முதல் தாரைன் போரில் முகமது கோரியைப் பிழைத்துப் போ என பிருத்விராஜ் செளஹான் அனுப்புவது போல், வில்லன் மனோஜ் பாயை முதல் முறை எச்சரித்து அனுப்பி விடுகிறார் சூர்யா. பிருத்விராஜ் செளஹான் சுயம்வரத்தில் சம்யுக்தாவைத் தூக்கிச் சென்றதுபோல், சூர்யா மணப்பெண் கோலத்தில் இருக்கும் கமிஷ்ணர் பெண்ணான சமந்தாவைக் கடத்தி விடுகிறார். ஆக, இப்படத்தை மற்றுமொரு பழிவாங்கும் கதை என புறந்தள்ளிவிட முடியாது.
பொதுவாக அதி நாயகத்துவமுள்ள படத்திற்கு தலைப்பு நாயகன் பெயரையோ அல்லது அவரைப் புகழும் சிறப்புப் பெயரையோ வைப்ப...















