
வேட்டை விமர்சனம்
வேட்டை - இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது.குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. "அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது" என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் "ரன்" படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்...















