
பொன்னர் சங்கர் விமர்சனம்
பொன்னர் சங்கர் - கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை.கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். பொன்னி வளநாட்டை ஆளும் தாளையார் காளி மன்னன், தாமரையின் மைந்தர்களால் மரணம் ஏற்படும் என்ற ஆருடத்தை நம்பி பிறந்தவுடன் அக்குழந்தைகளை அழிக்க சதி திட்டமிடுகிறார். அச்சதித் திட்டத்தில் இருந்து இரட்டையர்களான அக்குழந்தைகள் எப்படி எவரால் தப்பித்து, வளர்ந்து தாளையார் காளியுடன் போரிட்டு வெல்கிறார்களா என்ற கேள்விக்க...













