
தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்
தம்பி வெட்டோத்தி சுந்தரம் - உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறது படத்தின் சுவரொட்டி. 'கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் சதவிகிதம் அதிகம்; அதே போல் குற்ற எண்ணிக்கைகளின் அளவும் அதிகம்' என ஓர் ஆய்வு குறிப்பிடுவதாக சொல்லும் இயக்குனர் வி.சி.வடிவுடையானின் சொந்த மாவட்டமும் அஃதே.எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு 'வெட்டோத்தி இல்ல'த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் இருப்பதைத் தடுக்க கடத்தல் தொழிலில் இறங்குகிறான். படித்தவனின் வாழ்க்கை எப்படித் திசை திரும்பியது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.கரண் சலிப்படையாமல் மீண்டும் நாயகனாக தோன்றியுள்ளார். சுந்தரம் என்னும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். முடிந்த வரை நல்லவனாக தம் பிடித்து பார்த்து விட்டு, கடத்தல்...















