Shadow

திரை விமர்சனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

தம்பி வெட்டோத்தி சுந்தரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தம்பி வெட்டோத்தி சுந்தரம் - உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்கிறது படத்தின் சுவரொட்டி. 'கன்னியாகுமரி மாவட்டத்தில் தான் படித்தவர்கள் சதவிகிதம் அதிகம்; அதே போல் குற்ற எண்ணிக்கைகளின் அளவும் அதிகம்' என ஓர் ஆய்வு குறிப்பிடுவதாக சொல்லும் இயக்குனர் வி.சி.வடிவுடையானின் சொந்த மாவட்டமும் அஃதே.எம்.ஏ., பி.எட். படித்த சுந்தரத்திற்கு 'வெட்டோத்தி இல்ல'த்தை மட்டும் விட்டுவிட்டு அவனின் பெற்றோர் காலமாகின்றனர். அரசு வேலைக்கென்றே காத்திருக்கும் சுந்தரம், தன் வீட்டை வங்கி ஏலத்திற்கு விடாமல் இருப்பதைத் தடுக்க கடத்தல் தொழிலில் இறங்குகிறான். படித்தவனின் வாழ்க்கை எப்படித் திசை திரும்பியது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.கரண் சலிப்படையாமல் மீண்டும் நாயகனாக தோன்றியுள்ளார். சுந்தரம் என்னும் பாத்திரத்திற்கு பொருந்துகிறார். முடிந்த வரை நல்லவனாக தம் பிடித்து பார்த்து விட்டு, கடத்தல்...
ஏழாம் அறிவு விமர்சனம்

ஏழாம் அறிவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏழாம் அறிவு- ஆறு வருடங்களுக்குப் பிறகு தமிழில் படம் இயக்கியுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ். கஜினி திரைப்படத்திற்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைகிறார்; கமலின் மகள் ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார் என்று எதிர்பார்ப்புகளை ஏகத்திற்கு வளர்த்து, கர வருடத்தின் ஐப்பசி 9ஆம் தேதி அன்று வந்த தீபாவளி திருநாளில் வெளியிடப்பட்டது. ஆறாவது அறிவினும் உயர்ந்த அறிவு என தலைப்பைப் பொருள் கொள்ளலாம். தனது குருமாதாவால் பணிக்கப்படும் போதி தர்மர் சைனாவில் பரவும் தொற்று நோயைத் தடுக்க பல்லவ நாட்டின் தலைநகரமான காஞ்சியில் இருந்து புறப்படுகிறார். குருமாதாவின் கட்டளையை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களுக்கு தற்காப்புக் கலையையும் பயிற்றுவித்து, அம்மக்களுக்காகவே இறக்கிறார். 1598 வருடங்களுக்குப் பிறகு அவரது மரபணு அமைப்பை இணையத்தில் காணும் சுபா ஸ்ரீனிவாசன், போதி தர்மரின் வாரிசுகள் எவரேனும் காஞ்சியில் வாழக் கூடும் என த...
வேலாயுதம் விமர்சனம்

வேலாயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேலாயுதம் - நவீனத்துவத்தால் சோடைப் போயிருக்கும் தமிழ்க் கலாச்சாரம், வீரம் மற்றும் இன்னபிற போன்றவைகளைத் தட்டி எழுப்பும் ஓர் உன்னத திரை முயற்சி.  குறியீடான படத்தின் தலைப்பில் இருந்தே அதை உணரலாம். வேல் பண்டையத் தமிழர்களின் ஆயுதம். வேலாயுதன் என்பது முருகனைக் குறிக்கும். முருகன் தமிழ்க் கடவுள்; வேலாயுதம் தமிழ்ப் படம். ஒவ்வொருவருக்கு உள்ளும் வேலாயுதம்(கடவுள்) வீற்றிருக்கிறார் என்ற வேதாந்த சாரத்தினை படத்தின் இறுதியில் நாயகனின் வசனமாக வைத்து மக்களை விழிப்புற செய்கிறார்கள்.பவுனூர் என்னும் கிராமத்தில் பாசக்கார அண்ணன், தங்கை வாழ்கிறார்கள். மனிதர் உணர்ந்துக் கொள்ள அவர்களுடையது மனித பாசம் அல்ல; அதையும் தாண்டி புனிதமானது. புனிதமானவர்களின் வாழ்க்கையில் சோதனைக்கு பஞ்சமிராது. அப்படித் தான் அண்ணன், தங்கை இருவரும் சென்னைக்கு பயணிக்கும் பொழுது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் அவர்கள் வாழ்க்கையில் சோதனை நேர்கிறது...
சதுரங்கம் விமர்சனம்

சதுரங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 சதுரங்கம் - அதிசயமாய் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. கோ படத்தின் பரவலான வெற்றி காரணமாக இருக்கலாம்.'திசைகள்' என்னும் வாரயிதழில் வேலை செய்யும் திருப்பதிசாமி, சமூக அவலங்களை தன் எழுத்தின் மூலம் வெளிக் கொணருபவர். உண்மைகளை பகிரங்கமாக எழுதும் நேர்மையாளனுக்கு ஏற்படக் கூடிய சங்கடங்கள் திருப்பதிசாமிக்கு எழுகிறது. அச்சங்கடங்களில் இருந்து திருப்பதிசாமி எப்படித் தப்பினார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.ஸ்ரீகாந்த நாயகனாக. 2006ல் வர வேண்டிய படம்.துரோகி(2010) படத்திற்குப் பிறகு வெளியாகி உள்ளது. தெனாவட்டனவராய் அறிமுகப்படுத்தப்பட்டு காரியத்தில் வீர்யமுள்ளவரைப் படம் முடியும் வரை தோன்றுகிறார். ஒட்ட நறுக்கிய தலை முடியுடனும், சிறு புன்னகையைத் தேக்கிய முகத்துடனும் வரும் ஸ்ரீகாந்திற்கு இது முக்கியமான படமாக இருக்கும். இவரால் பாதிக்கப்பட்டவர்கள் மிரட்டும் பொழுது கா...
மங்காத்தா விமர்சனம்

மங்காத்தா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மங்காத்தா - வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா.தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களைச் சுற்றலில் விடுகிறது. இறுதியாக பணம் யார் கையில் சேர்ந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.விநாயக் மகாதேவனாக அஜித். தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த நாயகனுக்குரிய இலக்கணத்தைத் தூக்கிப் போட்டு மிதித்து துவம்சம் பண்ணி விட்டார் தல. அசல் நாயகன் என அஜீத் ரசிகர்கள் மார் தட்டிக் க...
தெய்வத்திருமகள் விமர்சனம்

தெய்வத்திருமகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தெய்வத்திருமகள் - பாரதி கண்ட புதுமை இயக்குனராக ஏ.எல்.விஜய் உருவாகி உள்ளார். பிற மொழிகளில் உள்ள நல்லப் படைப்புகளை தமிழில் கொணர்ந்து வருகிறார். அதற்காக வருடக் கணக்கில் மெனக்கெடுகிறார் என்பது அவரது பேட்டியில் இருந்து தெரிய வருகிறது. "ஐ ஆம் சாம்" என்ற ஆங்கிலப் படத்தின் தழுவி, ஆறு வயது தந்தைக்கும் ஐந்து வயது மகளுக்கும் இடையேயான நேசத்தைச் சித்திரிக்கும் அற்புதமான படத்தினைத் தந்துள்ளார் இயக்குனர்.ஆறு வயதிலேயே மனவளர்ச்சி நின்று விடும் கிருஷ்ணாவை சமூக சேவகி ஒருவர் மணக்கிறார். கிருஷ்ணாவின் மனைவி இறந்து விட, தன் மகள் நிலாவை தனக்கு தெரிந்தவரை வளர்த்து வருகிறார் கிருஷ்ணா. நிலாவின் தாய் வழி தாத்தா, நிலாவை கிருஷ்ணாவிடம் இருந்து பிரித்து விடுகிறார். நிலாவை மீட்க அனுராதா ரகுநாதன் என்னும் வக்கீலின் உதவியுடன் நீதி மன்றத்தின் உதவியை நாடுகிறார் கிருஷ்ணா. நிலா தன் தந்தையுடன் இணைந்தாளா என்ற கேள்விக்கு பதிலுட...
காஞ்சனா விமர்சனம்

காஞ்சனா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 காஞ்சனா - முனி படம் பெற்ற வரவேற்பை நம்பி தைரியமாக களம் இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். தர்க்கத்திற்கே இடமில்லா கற்பனை என முன்னறிவிப்போடு படம் தொடங்குகிறது. கதை, நாயகன் ராகவா லாரன்ஸ், நாயகனின் தாய் கோவை சரளா தவிர முந்தைய படமான 'முனி'க்கும், காஞ்சனாவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. பகலில் எதற்கும் அஞ்சாதவனாகவும், இரவானால் பேயிற்கு மட்டும் பயப்படுவனாக ராகவா. கிரிக்கெட் விளையாட மைதானம் கிடைக்காமல் நண்பர்களுடன் காலி மனைக்கு விளையாட செல்லும் இடத்தில் இருந்து ஸ்டம்ப்பில் ஒட்டி வரும் இரத்தத் துளிகள் மூலம் பேயை வீட்டிற்குள் கொணர்ந்து விடுகிறான் ராகவா. பேய்களை விரட்ட ராகவா குடும்பத்தினர் முயல, பேய்கள் ராகவாக்குள் புகுந்து கொள்கின்றன. பேய்களின் வரலாறைத் தொடர்ந்து படம் தனது முதல் பகுதியான முனி போல் நிறைவுறுகிறது.ஆடுதல், பாடுதல், நல்லது செய்தல், அழகான நாயகியை காதலிப்பது போன்றவை தான் நாய...
அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அழகர்சாமியின் குதிரை - இலக்கியத்தை திரைப்படமாக்கும் முயற்சிகள் தமிழில் அவ்வப்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் அத்தகைய முயற்சியில் தேர்ந்த வெற்றியை 'தில்லானா மோகனாம்பாள்' படம் பெற்றது. தங்கர்பச்சானும் தனது படைப்பான 'ஒன்பது ரூபாய் நோட்'டை திரைப்படமாக இயக்கியுள்ளார். அந்த முயற்சியின் சமீபத்திய நீட்சியாக பாஸ்கர் சக்தி அவர்களின் சிறுகதையான 'அழகர்சாமியின் குதிரை'யை இயக்குநர் சுசீந்திரன் படமாக உருமாற்றியுள்ளார்.ஊரை ரட்சிக்கும் அழகர்சாமிக்கு, திருவிழா எடுத்தால் மட்டுமே மழை பெய்யும் என நம்புகின்றனர் மல்லையாபுரத்து மக்கள். ஆனால் ஊர் எல்லையில் உள்ள கோயில் மண்டபத்தில் இருக்கும் மரக் குதிரை காணாமல் போகிறது. திருவிழா தடைப்படுமே என ஊர் மக்கள் அஞ்சும் நேரத்தில் உயிருள்ள குதிரை ஒன்று ஊருக்குள் வருகிறது. அழகரின் குதிரை தான் அது என மகிழ்ந்து, அக்குதிரையைப் பிடித்துக் கொள்கின்றனர். தனது பொதிக் குதி...
கோ விமர்சனம்

கோ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோ - ஒழுங்குப்படுத்து, ஒன்றுசேர், எதிர் (oppose), தலைவன் என திரைப்படத்தின் தலைப்பினை பல அர்த்தங்களோடு பொருத்திப் பார்க்கலாம்.மக்களுக்கு ஆரோக்கியமான அரசாங்கத்தை அளிப்பதாக அதகளப்படும் அரசியலுக்குள் வசந்தன் என்னும் பட்டதாரி இளைஞனின் 'சிறகுகள்' அமைப்பு களமிறங்குகிறது. அதைத் தொடர்ந்து ஏற்படும் சுவாரசியமான சம்பவங்களோடு படம் நிறைவுறுகிறது.வசந்தனாக அஜ்மல். அரசியலில் ஒரு கட்டாய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என்ற உத்வேகம் கொண்ட படித்த இளைஞனாக வருகிறார். ஆடம்பர விழாக்களில் செலவிடப்படும் பணத்தில் ஆயிரம் குழந்தைகளைப் படிக்க வைக்கலாமே என்ற ஏக்கத்தினைச் சுமந்தவாறு திரையில் அறிமுகமாகிறார். எதிர்ப்புகளைக் கொண்டு துவளாமல் நம்பிக்கையுடன் மேடையில் பேசும் பாத்திரத்திற்கு கச்சிதமாய் பொருந்துகிறார்.அஷ்வினாக ஜீவா. 'தின அஞ்சல்' என்ற நாளிதழின் கலகலப்பான புகைப்படக் கலைஞராய் தொடக்கம் முதல் இற...
பொன்னர் சங்கர் விமர்சனம்

பொன்னர் சங்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொன்னர் சங்கர் - கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை.கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். பொன்னி வளநாட்டை ஆளும் தாளையார் காளி மன்னன், தாமரையின் மைந்தர்களால் மரணம் ஏற்படும் என்ற ஆருடத்தை நம்பி பிறந்தவுடன் அக்குழந்தைகளை அழிக்க சதி திட்டமிடுகிறார். அச்சதித் திட்டத்தில் இருந்து இரட்டையர்களான அக்குழந்தைகள் எப்படி எவரால் தப்பித்து, வளர்ந்து தாளையார் காளியுடன் போரிட்டு வெல்கிறார்களா என்ற கேள்விக்க...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...
மன்மதன் அம்பு விமர்சனம்

மன்மதன் அம்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மன்மதன் அம்பு - தசாவதாரத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் வெளிவரும் படம். யாவரும் கேளிர், காருண்யம் என தொடங்கி, படத்தின் பிரதான பாத்திரங்களான மூவரின் பெயர்களில் இருந்து மன், மதன், அம்பு என்பதை எடுத்துக் கோர்த்து தலைப்பாக்கி உள்ளனர்.கோடீஸ்வரரான மதனகோபால் விடுமுறைக்கு செல்லும் தனது காதலியான அம்புஜாக்ஷியைக் கண்காணிக்க மேஜர் இராஜ மன்னாரை நியமிக்கிறார். சந்தேகிக்கும் மதனகோபாலுடனான காதலை அம்புஜாக்ஷி ஏற்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மேஜர் ஆர்.மன்னார் ஆக கமல் ஹாசன். ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகத்தில் அசத்தலாக திரையில் தோன்றுகிறார். அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட அல்வா சாப்பிடுவது போன்றதொரு பாத்திரம். அனுபவம் காரணமாக நடிக்க அதிகம் சிரமப்படாமல் படு இயல்பாய் திரையில் வலம் வருகிறார். 'தகுடு தத்தம்..' என்ற பாடலை எழுதி பாடிய கமல...
எந்திரன் விமர்சனம்

எந்திரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று 'சிட்டி' என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை இல்லாத ஓர் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் குழு மறுக்கிறது. வசீகரன் மீண்டும் 'சிட்டி' மனித உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் படி பயிற்சியளிக்கிறார். உணர்ச்சி வந்ததும் வசீகரனின் காதலியான் சனா மேல் 'சிட்டி' ரோபோவுக்கு காதல் வருகிறது. காதல் வந்து எடக்கு செய்யும் 'சிட்டி' ரோபோவை கடுப்பாகி, வெறுப்பாகி அழித்து விடுகிறார் வசீகரன்....
ரத்த சரித்திரம் விமர்சனம்

ரத்த சரித்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு 'ரத்த சரித்திரம்' என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர்...
முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்தினம் பார்த்தேனே - கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள். சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் ஆர்த்தி எனும் பெண்ணின் மீது மீண்டும் மிக மெதுவாக காதல் மல்ர்கிறது. அவளது கடந்த காலம் சஞ்சயை சிறிது சலனப்படுத்தும் சமயத்தில் ஆர்த்தியின் மீதான பலரின் வதந்தி உண்மை என சஞ்சயிற்கு தெரிய வருகிறது. அந்த குழப்பத்திலேயே தன் மேல் ஈர்ப்புள்ள அனு எனும் உடன் பணி புரியும் பெண்ணிடம் அவசர அவசரமாக காதலை வெளிப்படுத்துகிறான். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெ...