
அரவான் விமர்சனம்
அரவான் - குருஷேத்திரப் போர் தொடங்கும் முன் பண்டவர்கள் 'அரவான்' என்பவரை பலி கொடுப்பர். ஆக பலி கொடுக்கப்படும் நபரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளது 'காவல் கோட்டம்' நாவலிற்கு சாகித்ய அகாடெமி விருதுப் பெற்ற சு.வெங்கடேசன். அந்த நாவலின் சிறு அத்தியாயத்தை படமாக எடுத்துள்ளனர் சில மாற்றங்களுடன். 18ஆம் நூற்றாண்டில் நடப்பதாக படம் தொடங்குகிறது. அங்காடித் தெரு இயக்கிய வசந்தபாலன் சரித்திரக் கால படம் ஒன்றினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளார்.தனது ஊர்ப் பெயரைச் சொல்லி துப்பு வாங்கி, தனியாளாக களவாடி வரும் வரிப்புலியைத் தேடிச் செல்கிறார் கள்ளர் தலைவர் ஆன கொம்பூதி. வரிப்புலியின் திறமையால் கவரப்பட்டு அவனையும் ஊர்ப் பெரியவர்களின் பேச்சை மீறி தன்னோடு களவில் இணைத்துக் கொள்கிறார் கள்ளர் தலைவர். தன்னைப் பற்றிய செய்திகளை ரகசியமாகவே வைத்திருக்கும் ...















