Shadow

திரை விமர்சனம்

அரவான் விமர்சனம்

அரவான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரவான் - குருஷேத்திரப் போர் தொடங்கும் முன் பண்டவர்கள் 'அரவான்' என்பவரை பலி கொடுப்பர். ஆக பலி கொடுக்கப்படும் நபரைக் குறிக்கும் சொல்லாக தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.  இப்படத்திற்கு கதை, வசனம் எழுதியுள்ளது 'காவல் கோட்டம்' நாவலிற்கு சாகித்ய அகாடெமி விருதுப் பெற்ற சு.வெங்கடேசன். அந்த நாவலின் சிறு அத்தியாயத்தை படமாக எடுத்துள்ளனர் சில மாற்றங்களுடன். 18ஆம் நூற்றாண்டில் நடப்பதாக படம் தொடங்குகிறது. அங்காடித் தெரு இயக்கிய வசந்தபாலன் சரித்திரக் கால படம் ஒன்றினை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளார்.தனது ஊர்ப் பெயரைச் சொல்லி துப்பு வாங்கி, தனியாளாக களவாடி வரும் வரிப்புலியைத் தேடிச் செல்கிறார் கள்ளர் தலைவர் ஆன கொம்பூதி. வரிப்புலியின் திறமையால் கவரப்பட்டு அவனையும் ஊர்ப் பெரியவர்களின் பேச்சை மீறி தன்னோடு களவில் இணைத்துக் கொள்கிறார் கள்ளர் தலைவர். தன்னைப் பற்றிய செய்திகளை ரகசியமாகவே வைத்திருக்கும் ...
காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி - இளமை துள்ளும் குதூகலமான படம். 'காதலில் சொதப்புவது எப்படி' என்ற தனது குறும்படத்தை அப்படியே விரிவாக்கி திரைப்படமாக்கி விட்டார் இயக்குனர் பாலாஜி மோகன். நாளைய இயக்குனர் என்ற நம்பிக்கையை தற்போது இயக்குனர் ஆகி மெய்ப்பித்து விட்டார். அருண் வீட்டிற்கு ஒரே பிள்ளை. மிகவும் செல்லமாய் வளர்க்கப்பட்டாலும் பொறுப்பான கல்லூரி மாணவன். வேறு துறை மாணவியான பார்வதி மேல் அருணிற்கு காதல் மலர்கிறது. சின்ன புரிதலின்மையால் பிரியும் அவர்கள் மீண்டும் இணைகிறார்களா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. சொதப்பும் முக பாவம் சித்தார்த்திற்கு இயல்பாகவே வருகிறது. படம் முழுவதும் அவர் முகம், 'ஏன் இப்படி நடக்கிறது?' என்று கேள்வியை சுமந்தவாறே உள்ளது. சித்தார்த்தைத் தவிர்த்து வேறு எவரேனும் இப்பாத்திரத்திற்குப் பொருந்தி இருப்பார்களா என்பது ஐயம் தான். அதை சித்தார்த்தும் நன்றாக உணர்ந்ததால் தான் படத்தின...
முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

முப்பொழுதும் உன் கற்பனைகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முப்பொழுதும் உன் கற்பனைகள் - படத்தின் கதை சுருக்கம் தலைப்பினுள்ளேயே அடங்கி விடுகிறது.திருவலஞ்சுழி என்னும் ஊரில் பிறக்கும் ராம் என்பவன் தன் சிறு வயதிலேயே தந்தையை இழந்து, அவனது அம்மாவின் அரவணைப்பில் வளர்கிறான். சென்னையில் வேலைக் கிடைத்து, மென்பொருள் போட்டிக்காக பெங்களூரு செல்கிறான். அங்கே சாருவை சந்திக்கிறான். தாயின் இறப்பில் மனமுடையும் ராமை தேற்றுகிறாள் சாரு. மெல்ல சாருவின் மீது காதல் வயப்படுகிறான் ராம். சாருவை இருவர் கடத்தி விடுவதாக நினைக்கிறான். அவர்களிடம் இருந்து சாரு தப்பித்து வந்து விட்டதாக கற்பனை செய்து அவளை அவர்கள் கண்ணில் படாமல் காப்பாற்றி வருவதாக நினைத்து வருகிறான். கற்பனையிலேயே தன்னுடன் வாழுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் திரிபுக்காட்சியில்(Delusion) இருந்து ராமை மீட்டாளா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.ராம் ஆக அதர்வா நடித்துள்ளார். புன்னகைக்கிறார்; ஷவருக்கு அடியில் இருக்...
தோனி விமர்சனம்

தோனி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படமிது. 'டூயட் மூவிஸ்' எனற அவரது தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் வரும் பொழுது Celebrating Cinema என்ற பதமும் தோன்றுகிறது. ஏனைய படங்களுடன் ஒப்பிடுகையில் அது உண்மை தானெனப்படுகிறது. 100% தேர்ச்சிக் கணக்கிற்காக மாணவர்கள் மற்றும் அவரது  பெற்றோர்கள் மீது பள்ளி நிர்வாகம் தரும் அழுத்தத்தைப் பற்றிப் பதிந்துள்ளது இப்படம். இளையராஜாவின் பின்னணி இசை படத்தின் கூடுதல் பலம். வெங்கட்ரமண சுப்ரமணியன் பதிவாளர் அலுவலகத்தில் கையூட்டு வாங்காமல் பணி புரியும் ஓர் உத்தம அரசு ஊழியர். தன் மகன் கார்த்திக்கையும், மகள் காவேரியையும் நல்ல (!?) தனியார் பள்ளியில் சக்திக்கு மீறி படிக்க வைக்கிறார். செலவுகளைச் சமாளிக்க ஊறுகாயும் தயாரித்து விற்கிறார். கல்வி தான் தன் பிள்ளைகளுக்குச் சொத்தாக இருக்கும் என நம்பும் அவரின் மகனுக்கோ கிரிக்கெட்டில் பெரும் ஆர்வம். பள்ளி நிர்வாகமோ கார்த்திக...
மெரினா விமர்சனம்

மெரினா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மெரினா - மெரினா கடற்கரை சென்னையின் அடையாளங்களில் ஒன்று. அந்தக் கடற்கரையில் சுண்டல், சங்கு இத்யாதிகள் விற்கும் சிறுவர்கள், யாசகம் பெறும் ஒரு பெரியவர், குதிரையை சவாரிக்கு விட்டு சம்பாதிக்கும் ஒரு ஆள், தன் மகளை ஆட விட்டு பாடல் பாடிப் பிழைப்பவர், தபால்காரர், பொழுதுபோக்க வரும் சில காதல் இணைகள் குறித்த படமாக 'மெரினா' உள்ளது.தந்தை, தாய் இறந்ததும் அம்பிகாபதியை அவனது சிற்றப்பா 'டாஸ்மாக்'கில் வேலையில் சேர்த்து விடுகிறார். அங்கு வேலை செய்யப் பிடிக்காமல் அம்பிகாபதி என்னும் சிறுவன் பட்டுக்கோட்டையில் இருந்து அமரர் ஊர்தி வாகனத்தில் சென்னை வந்து இறங்குகிறான். சென்னையில் பிழைப்பது எளிது என ஒருநாள் ஊர்ச் சுற்றி பார்த்துத் தெரிந்துக் கொள்கிறான். முதலில் தண்ணீர்ப் பொட்டலம் விற்கிறான். அதற்கு தடை விதிக்கப்பட்டதும் சுண்டல் விற்க தொடங்குகிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் உள்ளவனான அம்பிகாபதி சம்பாதித்து 'டு...
நண்பன் விமர்சனம்

நண்பன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நண்பன் - எந்திரன் என்னும் மிகப் பெரிய முதலீட்டுப் படத்திற்குப் பிறகு.. அமீர்கான் நடித்த '3 இடியட்ஸ்' படத்தை அப்படியே சிந்தாமல், சிதறாமல் எடுத்து தமிழ்ப்பட பார்வையாளர்களுக்கு அளித்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.  இளைய தளபதி விஜய்யுடன் ஷங்கர் இணையும் முதல் படம் இது. ஷங்கர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.கொசக்சி பசபுகழ் என்பவர் பஞ்சவன் பாரிவேந்தன் என்பவருக்கு பதிலாக 'ஐ.இ.சி.' என்னும் கல்லூரியில் இயந்திரப் பொறியியல் படிக்கிறார். குருட்டாம்போக்காக மனனம் செய்து பரீட்சையில் வாந்தி எடுப்பதை விட விருப்பம் சார்ந்த துறையைக் காதலுடன் அணுகுவதே சிறந்தது என எண்ணம் உடையவர் கொசக்சி பசபுகழ். அவரது நண்பர்களான சேவற்கொடி செந்திலின் பயத்தைப் போக்கவும், வெங்கட் ராமகிருஷ்ணனின் விருப்பம் சார்ந்த துறையையும் தேர்ந்தெடுக்கவும் உதவுகிறார். கொசக்சி பசபுகழ்...
வேட்டை விமர்சனம்

வேட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வேட்டை - இயக்குநர் லிங்குசாமியின் படம்.ஓர் ஊரில் பாசமிகு அண்ணன் தம்பி உள்ளனர். அண்ணன் பயங்கொள்ளியாகவும், தம்பி அதற்கு எதிர்மாறாகவும் உள்ளான். காவல் துறை அதிகாரியான அவர்களது தந்தை வேலையில் உள்ள பொழுதே இறப்பதால் அவரின் மூத்த மகனுக்கு அந்தப் பணி கிடைக்கிறது. அண்ணனின் பயத்தைப் போக்க வெளியில் இருந்து உதவி வருகிறான் தம்பி. இதை அவ்வூர் தாதாக்கள் தெரிந்துக் கொள்கின்றனர். பிறகு என்னாகிறது என்பதுடன் படம் சுபமாய் நிறைவுறுகிறது.குலவிச்சை கல்லாமல் பாகற் படும் என்ற பழமொழி படம் முழுவதும் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது. "அப்பா போலீசு, தாத்தா போலீசு. உன் உடம்பில் போலீஸ் ரத்தம் ஓடுது" என்ற வசனத்தால் வாய்புலற்றப்படுகிறது. பிருந்தா சாரதியின் வசனங்கள் படத்தின் நகைச்சுவைக்கு உதவி உள்ளது.10 வருடத்திற்கு முன் லிங்குசாமியின் "ரன்" படத்தில் நடித்த மாதவனைக் காணவில்லை. இப்டத்தில் மாதவன் உப்பி போய் பெரிதாய் உள்...
ராஜபாட்டை விமர்சனம்

ராஜபாட்டை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 ராஜபாட்டை - அரசர் செல்வதற்கான அகன்ற பாதை அல்லது நேர்முறையான வழி.படத்திற்கும், தலைப்பிற்கும் எந்தளவு தொடர்பு இருக்கும் என சரியாக ஊகிக்க முடியவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் தன் வெளிநாட்டு ஜீப்பில் செல்லும் சாலைகளைக் குறிக்கலாம் அல்லது நாயகன் தங்கி இருக்கும் விடுதிக்கு செல்லும் சாலையைக் குறிக்கலாம். ஆனால் கண்டிப்பாக நேர்முறையான வழி என்ற பொருள் வருமாறு தலைப்பு வைக்கப்பட்டிருக்காது என்பது மட்டும் திண்ணம்.அனல் முருகன் இரண்டாம் வரிசையில் நிற்கும் ஸ்டன்ட் ஆர்டிஸ்ட். தற்செயலாக முருகனுக்கு.. தட்சணாமூர்த்தி என்பவரை சில ரவுடிகளிடம் இருந்து காப்பாற்றி அடைக்கலம் தர நேருகிறது. தட்சணாமூர்த்திக்கு சொந்தமாக இருக்கும் ஓர் ஆசிரமத்தை, அது அமைந்திருக்கும் இடத்திற்காக 'அக்கா' என்றழைக்கப்படும் ரங்கநாயகி ஆக்கிரமிக்க முயல்கிறார். தட்சணாமூர்த்தியின் இடத்தை ஒரு கட்சியின் தலைவி ஆன அக்கா வள...
உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உச்சிதனை முகர்ந்தால் - தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம்.புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு.  சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருப்பாரோ என அச்சத்தில் தன் மகளை விட்டு விட்டு மீண்டும் இலங்கைத் திரும்புகின்றார் புனிதவதியின் தாயார். நடேசன் தம்பதியினருடன் தனித்து விடப்படும் புனிதவதியின் நிலை என்ன ஆனாது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கடலில் கரைத்த பெருங்காயம் போல் வணிகக் குப்பைய...
மெளனகுரு விமர்சனம்

மெளனகுரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
 மெளனகரு - ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் தமிழ்ப் படங்கள் மத்தியில் வந்துள்ள நல்லதொரு மாற்றுப் படம்.பணத்திற்கு ஆசைப்பட்டு ஒரு கொலை செய்கிறார் காவல் துறை உதவி ஆணையர். அவருக்கு மூன்று காவல்துறை அதிகாரிகள் உதவி செய்கின்றனர். பின் அந்தத் தவறை மறைக்க அவர்கள் மேலும் தவறுகள் செய்ய வேண்டி வருகிறது. இவர்களிடம் கருணாகரன் என்னும் கல்லூரி மாணவன் சந்தர்ப்ப வசத்தால் சிக்கிக் கொண்டு அல்லாடுகிறான். கருணாகரனின் எதிர்காலம் என்ன ஆனது என்பதற்கும், தவறிழைக்கும் காவல்துறையினர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கும் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மருத்துவ மாணவி ஆர்த்தி ஆக இனியா. படத்தின் நாயகி என்றே சொல்ல முடியாது. திரையில் மட்டுமே தோன்றக் கூடிய பெண் போலில்லாமல் அன்றாட வாழ்வில் நாம் காணும் எண்ணற்ற கல்லூரிப் பெண்களில் ஒருவராக தெரிகிறார்.  எந்தவித பூச்சுகளும் அற்று நெற்றியில் பருக்கள் கொண்ட பெண...
மம்பட்டியான் விமர்சனம்

மம்பட்டியான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மம்பட்டியான் - 1983ல் தான் நடித்து வெற்றிப் பெற்ற படத்தை தற்போது தன் மகன் 'டாப் ஸ்டார்' பிரஷாந்த்தை நடிக்க வைத்து தயாரித்து இயக்கி உள்ளார் தியாகராஜன். இந்தப் படத்தின் நாயகன் பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து ஏழைகளுக்கு அளிக்கும் உத்தம தமிழ் ராபின்கூட்.சின்னசாமியையும், அவரது மனைவியையும் பெரியப் பண்ணையின் அடியாட்கள் வைத்து அடித்து எரித்து விடுகிறார். சின்னசாமியின் மகன் வீறு கொண்டு பெரியப் பண்ணையையும் அவருடன் இருக்கும் ஏழு பேரையும் கொன்று விடுகிறார். கத்தி எடுத்தது தான் எடுத்தாச்சு.. அப்படியே ஏழைகளைக் கொடுமைப்படுத்தும் பணக்காரர்கள்களை எல்லாம் கொள்ளையடித்து ஏழைகளுக்கு உதவ முடிவு செய்கிறார். காட்டுக்குள் பதுங்கி இருக்கும் மம்பட்டியான் சட்டத்தின் நீண்ட கைகளில் சிக்கினாரா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.பெண் சிங்கம், இளைஞன் எனத் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடித்தாலும் மீரா ஜாஸ்மினை ரொம...
ஒஸ்தி விமர்சனம்

ஒஸ்தி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒஸ்தி - மேன்மை. மேதகு குணம் கொண்டவனாக நாயகன் இருப்பான் என தலைப்பைக் கண்டு யூகிக்கலாம். ஆனால் காவல்துறை அதிகாரியாக வரும் நாயகனின் காக்கிச் சட்டையில் இணைக்கப்பட்டிருக்கும் பெயர்த் தகட்டிலேயே அவரது பெயர் "ஓஸ்தி வேலன்" ஆக உள்ளது.நாயகன் பாலனாக இருக்கும் பொழுது அவனது தாய் மறுமணம் புரிந்துக் கொள்கிறார். சிறு வயது முதலே மாற்றாந்தகப்பனுடனும், அவர் மூலமாக பிறந்த தன் தம்பியிடமும் நாயகன் பகைமைப் பாராட்டி வருகிறான். நாயகனின் காளை பருவத்தில் அவனது தாய் இறக்க, மாற்றாந்தகப்பன் மற்றும் அவன் தம்பியுடனுனான உறவில் மேலும் சிக்கல் எழுகிறது. அந்தச் சிக்கல்களை நாயகன் எவ்வாறு கலைகிறார் என்பதுடன் படம் நிறைவுறுகிறது.சந்தானம் இல்லாத தமிழ்ப் படம் நமுத்து போன பஜ்ஜி ஆகி விடும் போல. படத்தின் கலகலப்பிற்கு காரணமாக உள்ளார். வையாபுரி, மயில்சாமி, தம்பி இராமையா என நகைச்சுவை நடிகர்கள் இருந்தாலும் சந்தானம் மட்டுமே தனித்த...
போராளி விமர்சனம்

போராளி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
போராளி - தனக்குள் மிருகங்களைப் மறைத்தவாறு போலியான முகங்களோடு சில மனிதர்கள் வாழ்கிறார்கள். அத்தகைய மிருக மனிதர்கள் மத்தியில் வாழும் ஒவ்வொருவருமே போராளி தானென்று படம் தொடங்குகிறது. தந்தையின் இரண்டாம் மனைவி மற்றும் அவள் தம்பி் என உறவினர்கள் சேர்ந்து அதி புத்திசாலி பள்ளி மாணவனான குமரனைப் படிக்க அனுப்பாமலும், எவருடனும் பழக விடாமலும் வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வருகின்றனர். குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும், குமரனுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை எடுத்துச் சொல்கின்றனர். சொத்துக்கள் குமரன் பெயரில் உள்ளது எனத் தெரிய வரும் குமரனுடைய சித்தியின் கோபம் அவருக்கு உதவியாய் இருப்பவர்கள் மேல் விழுகிறது. விளைவு குமரனினுடைய பெரியப்பாவின் நண்பரும் அவர் மகளும் கொல்லப்படுகின்றனர். நாயகன் வீறு கொண்டு எழுந்து எய்தவர்களை விட்டு எய்யப்பட்ட அம்புகளை (அடியாட்கள்) கொன்று தீர்க்கிறான். முன்பே சித்தியால் வள...
மயக்கம் என்ன விமர்சனம்

மயக்கம் என்ன விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மயக்கம் என்ன - கலக்கத்திலோ, குழப்பத்திலோ, உணர்வுநிலைத் தடுமாற்றத்திலோ உள்ளவரைப் பார்த்து வாஞ்சையுடன் கேட்கப்படும் அன்பாக  தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.வனவிலங்கு புகைப்படக்காரர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தில் உள்ளவர் கார்த்திக் சுவாமிநாதன். கார்த்திக்கின் நெருங்கிய நண்பனான சுந்தர், யாமினி என்னும் பெண்ணை அவனது நட்பு வட்டத்திடம் தன் தோழியாக அறிமுகப்படுத்துகிறான். யாமினிக்கு கார்த்திக்கைப் பிடிக்கத் தொடங்குகிறது. நண்பனின் தோழி என கார்த்திக் விலகப் பார்த்தாலும் இயற்கையின் வேதியியலில் இருந்து தப்ப இயலாமல் யாமினியிடம் காதல் வயப்படுகிறான். சுந்தருக்கு உண்மைத் தெரியும் பொழுது, சுந்தரின் தந்தை இடையில் புகுந்து கார்த்திக்கிற்கும் யாமினிக்கும் மணம் புரிந்து வைக்கிறார். தான் எடுத்த புகைப்படத்திற்கு விருதை வேறொருவர் பெறுகிறார் எனத் தெரிந்ததும் மயக்கமுற்று விழுகிறான் கார்த்திக். அந்த மயக்கத்தில் இருந்து க...
பாலை விமர்சனம்

பாலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பாலை - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்நாட்டின் வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படம் என்று பெருத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய படம். சங்க இலக்கியங்களில் உள்ள குறிப்புகளை சுமார் 6 ஆண்டுகள் ஆய்வு செய்து இத்திரைப்படத்தின் கருவை உருவாக்கினாராம் இப்படத்தின் இயக்குனர் ம.செந்தமிழன்.முல்லை நிலப்பகுதியான ஆயக்குடி (ஆயர்க்குடி) -யில் வாழும் தமிழர்களை வடக்கில் இருந்து வரும் தமிழறியா வந்தேறிகள் பாலை நிலப்பகுதிக்கு துரத்தி விட்டு விடுகின்றனர். முல்லைக்கொடி என தற்காலிக தங்குமிடத்திற்கு பெயர் வைத்துக் கொண்டு வாழுகின்றனர் தமிழர்கள். பாலை (!?) வருகிறது என அறிகுறி தென்படுவதால் குழப்பமுறும் தமிழர்கள், இழந்து விட்ட தன் சொந்த மண்ணான ஆயக்குடியைக் கைப்பற்ற விரும்புகின்றனர். அவர்கள் விருப்பம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.தமிழர்கள் வந்தேறிகளால் பாலை நிலத்திற்கு துரத்தப்பட்டதாகவும், அத...