
உச்சிதனை முகர்ந்தால் விமர்சனம்
உச்சிதனை முகர்ந்தால் - தமிழகத்தில் தஞ்சம் புகும் ஈழத்துச் சிறுமி பற்றிய நெகிழ்வான படம்.புனிதா என்றழைக்கப்படும் புனிதவதியின் வயது 13. அவளின் சொந்த ஊர் கிழக்கிலங்கையின் முக்கிய நகரங்களில்(!?) ஒன்றான மட்டக்களப்பு. சிங்கள இராணுவத்தினரால் களவியல் வன்முறைக்கு ஆளாகி கர்ப்பமுறுகிறார். இலங்கையில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பகிரங்கமாக பேசி சிறைச் செல்லும் பேராசிரியர் நடேசனும் அவரது மனைவி நிர்மலாவும், கள்ளப் படகில் வந்து சேரும் புனிதவதி மற்றும் அவரது தாயாருக்கு அடைக்கலம் அளிக்கின்றனர். தன் கணவர் சிங்கள இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருப்பாரோ என அச்சத்தில் தன் மகளை விட்டு விட்டு மீண்டும் இலங்கைத் திரும்புகின்றார் புனிதவதியின் தாயார். நடேசன் தம்பதியினருடன் தனித்து விடப்படும் புனிதவதியின் நிலை என்ன ஆனாது என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.கடலில் கரைத்த பெருங்காயம் போல் வணிகக் குப்பைய...
















