Shadow

திரைத் துளி

ஆர்வக்கோளாறில் அனிருத்

ஆர்வக்கோளாறில் அனிருத்

சினிமா, திரைத் துளி
இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி  என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.'ஆக்கோ' - சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே  என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து  இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும்,  தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில்  அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே  அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ...
நஸ்ரியாவின் நிக்காஹ்!

நஸ்ரியாவின் நிக்காஹ்!

சினிமா, திரைத் துளி
2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு  நேற்று பிறந்த நாள். “நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான 'திருமணம் எனும் நிக்காஹ்' திரையிடப்பட  தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன்.  இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு  ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார். ...
நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

நானி – வாணியின் ‘ஆஹா கல்யாணம்’

சினிமா, திரைத் துளி
யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்தியத்  திரையுலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'பேண்ட் பஜா பராத்' படத்தைத் தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட ஆடம்பரத் திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த  காதல் உணர்வோடு கலவையாகத்  தயாரிக்கப்படும் படம் தான் ' ஆஹா கல்யாணம்'.   நான் ஈ  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி, துடிப்புள்ள  நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து  வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா  நாயகியாக நடிக்கிறார் . அழகுப்புயலாக வளம் வரும் வாணி, நானியுடன்  இனிப்பும் கா...
ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

ஜீரோ ரூல்ஸ் “49-ஓ”

சினிமா, திரைத் துளி
ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் , கவுண்டமணி நடிக்கும் 49-ஓ.சென்னையில் நேற்று துவங்கிய  மழைத்துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது. இது பெரு  மழை.. சிரிப்பு மழை. Zero rules entertainment என்ற புதிய பட  நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குநர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49-ஓ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது. கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு  பஞ்சமா என்ன!!! படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க படத்தின் தலைப்பான 49-ஓ என்ற பரபரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுக்குவதா என்பதே பின்னணி. இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவ...
தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

தத்துவப்பாடல் பாடிய வி.டி.வி.கணேஷ்

சினிமா, திரைத் துளி
'இங்க என்ன சொல்லுது' படத்தின் இசை  டிசம்பர் 5 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  இதுவரை வெளிவராத கதை களத்தின்  பின்னணியில், நகைச்சுவை இழை ஓட படமாக்கப்பட்ட இங்க என்ன சொல்லுது திரைப்படத்தில் கதாநாயகனாக வி.டி.வி.கணேஷ் நடிக்க, அவருக்கு  இணையாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார்.  எஸ்.டி.ஆர். (STR)  இந்தப் படத்தில் கௌரவத் தோற்றத்தில் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளார்.அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் முக்கிய நடிகர்களான பாண்டியராஜன், மயில் சாமி, இயக்குநர் கே. எஸ் .ரவி குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் ஸ்வர்ணமால்யா நடித்துள்ளார். இப்படத்தில் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஒரு முக்கிய கதாபாத்திரத...
“கள்ளப்படம்” தொடங்கியது

“கள்ளப்படம்” தொடங்கியது

சினிமா, திரைத் துளி
இறைவன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆனந்த் பொன்னிறைவன் தயாரிப்பில் உருவாகி வருகிறது "கள்ளப்படம்". பிரபல இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜெ.வடிவேல் இப்படத்தின் இயக்குநராய் களம் இறங்குகிறார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய் இருந்த ஸ்ரீ ராம சந்தோஷ் ஒளிப்பதிவு செய்ய, காகின் படத்தொகுப்பில், கே இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா கடந்த 21 ஆம் தேதியன்று சென்னையில் நடைபெற்றது. ஒளிப்பதிப்வாளர் பி.சி.ஸ்ரீராமும் இயக்குநர் மிஷ்கினும் கலந்து கொண்டு படத்தைத் தொடங்கி வைத்தனர். தன்னுடைய இணை இயக்குநரை ஆசிர்வதிக்கும் விதமாக இயயக்குநர் மிஷ்கின் படத்தின் மூன்று காட்சிகளை இயக்கினார்....
நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

நேர்மையைப் பரப்பும் ‘வீரம்’ அஜீத்

சினிமா, திரைத் துளி
மிகவும் எதிர்பார்க்கப்படும், பொங்கலுக்கு வெளிவர உள்ள வீரம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. படப்பிடிப்பு திட்டமிட்ட படி முடிவடைந்த மகிழ்ச்சியும், முடிவடைந்ததால் ஒரே குடும்பம் போல் பழகி வந்த அனைவரும் பிரிய நேரிடும் துக்கமும் ஒரு சேர  காற்றில்  மிதந்தது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட பட்ஜெட்டில் படப்பிடிப்பை முடித்த இயக்குநர் சிவாவையும், அவரது தொழில்நுட்ப கலைஞர்களையும் மலர்ந்த முகத்தோடு பாராட்டினார்கள் தயாரிப்பாளர்கள். "அஜீத் அவர்களின் தொழில் பக்தியும் , நேர்மையும் மற்றவர்கள் இடையே பரவுவதே இந்த திட்டமிட்ட பயணத்துக்கு காரணம்" என்று கூறி பொங்கலுக்கு வீரம் நிச்சயம் என பெருமையுடன் கூறினர் தயாரிப்பாளர்கள் பாரதி ரெட்டி , வெங்கட்ராம ரெட்டி ஆகியோர். நடிகர்கள்:>> அஜீத் >> தமன்னா >> சந்தானம் >> பாலா >> விதார்த் >> முனிஷ...
ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

ஆர்யாவின் ‘த ஷோ பீப்பிள்’

சினிமா, திரைத் துளி
சில கூட்டணிகள் அறிவிப்பின் போதே வெற்றி நிச்சயம் என்ற கட்டியத்துடன் அறிவிக்கப்படும் .அதைப் போல ஆர்யாவுடன்  இயக்குநர் ராஜேஷ் அமைத்த வெற்றிக் கூட்டணி  'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தைத் தொடர்ந்து  இப்போது மீண்டும் வெற்றிப்பாதையில் பயணிக்க விழைகிறது. தொடர் வெற்றிகளால் தற்போது உச்சத்தில் இருக்கும் ஆர்யா தன்னுடைய சொந்தப்பட நிறுவனமான 'The Show People' நிறுவனத்தின் மூலம் இப்படத்தைத் தயாரிக்க உள்ளார். 2014 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தொடங்க உள்ள இந்தப் படத்தில் சந்தானமும் இணைவது கூட்டணியின் பலத்தை அதிகரிக்க உள்ளது. தங்களுடைய முந்தைய வெற்றி படங்களை விட இந்தப் படம்  எல்லா  மக்களையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறுகின்றனர் ஆர்யா-ராஜேஷ் -சந்தானம்  ஆகியோர்.  ...
மனதில் மாயம் செய்தாய்

மனதில் மாயம் செய்தாய்

சினிமா, திரைத் துளி
தொலை தொடர்ப்பு சாதனங்கள் எந்த அளவுக்கு சாதகமானதோ  அந்த அளவுக்கு பாதகமானதும் கூட. இந்த உண்மையை பல செய்திகள் வாயிலாக நாம் படித்தும் கேட்டும் இருப்போம். இந்த மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் படம் தான் "மனதில் மாயம் செய்தாய் (M M S)".ஃபுல் ஹவுஸ் என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் சார்பில் ஜெய்சன் புலிகுட்டி மற்றும் வின்ஸ் மன்கடன் தயாரித்து உள்ள இந்த காதல் கலந்த த்ரில்லர் படத்தில் நடித்துள்ளோர் சேது (மைனா புகழ்), பிரின்ஸ், ரிச்சா பானாய், திஷா பாண்டே, மனோபாலா மற்றும் பலர். சேதுவின் நடிப்பும், படத்தின் திரைக்கதை வசனமும் மிகப் பெரிய பலம் என்பது பார்த்தவர்களின் கணிப்பு. இந்தப் படத்தை பற்றிய தயாரிப்பாளர்களின் கருத்து, "இது எங்களது நிறுவனத்தின் முதல் தயாரிப்பு. படத் தயாரிப்பின் நுணுக்கங்களை நாங்கள் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எங்களுக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு...
தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

தைரியமூட்டிய அஜீத் – அக்ஷரா

சினிமா, திரைத் துளி
உலகெங்கும் வசூல் சாதனை புரிந்து வரும் 'ஆரம்பம்' படத்தில் மத்திய  மந்திரி மகளாக நடித்து,  அஜீத் குமாரின் குளிர் கண்ணாடியைக்  கழற்ற சொல்லும் காட்சியில் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளான  அக்ஷரா..  அந்தக் காட்சியைப் பற்றியும் , ஆரம்பம் திரைப்படத்தை பற்றியும், தன்னைப் பற்றியும் தன்னுடைய கனவையும் இதோ நம்மோடு பகிர்ந்து  கொள்கிறார்.'நான் அஜீத் சாருடைய தீவிர ரசிகை. அவருடன் நடிக்க வேண்டும் என்று மிக ஆவலாய் காத்துக் கொண்டு இருந்தவள். என் நல்ல நேரம் அந்தத் தருணம் என் திரை உலகப் பயணத்தின் ஆரம்பத்திலே அமைந்தது. அஜீத் சாருடைய ரசிகர்கள் பலம், திரை அரங்கில் அந்தக் காட்சியைப் பார்க்கும் போது  தான் தெரிந்தது.  பயமாக இருந்தது என்றால் மிகை ஆகாது.  அந்த காட்சியில் நடிக்கும் போதே அஜீத் சார்தான் என்னை தைரியமூட்டினார். இப்போது எனக்கு இந்த அளவுக்கு நல்ல பெயர் கிட்டி இருப...

பொல்லாதவனாக கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
ஹிந்தியில் முதன்முறையாக,  “கன்ஸ் ஆஃப் பெனாரஸ் (Guns of Benares)” என்னும் படத்தில் அறிமுகமாகிறார் கணேஷ் வெங்கட்ராம்.வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ படம் தான் ஹிந்தியில், ‘கன்ஸ் ஆஃப் பெனாரஸ்’ என மீள் உருவாக்கம் செய்யப்படுகிறது. டேனியல் பாலாஜி நடித்த பாத்திரத்தில் கணேஷ் வெங்கட்ராமன் நடிக்கிறார்.“இயக்குநர் சேகர் சூரி எனது கதாபாத்திரத்தைப் பற்றி சொல்லும் பொழுது எனக்கும் முழுவதும் பிடித்து விட்டது. இதற்கு முன் கேங்ஸ்டராக நடித்ததில்லை. முழுப் படமும் பெனாரசில் தான் எடுக்கப்படவுள்ளது. எனது கதாபாத்திரம் பற்றி சொல்லணும்னா.. கொக்கைனுக்கு அடிமையான பொல்லாதவனாக நடிக்கிறேன். எனது கையில் அகோரியை  பச்சை குத்தியிருப்பேன்.நான் ஹிந்தி நன்றாகப் பேசுவேன் எனினும், 20 நாளுக்கு முன்பே பெனாரஸ் சென்று உ.பி. மாநில தொனியைப் பழகி வர்றேன். அந்த ஊர் மாஃபியாக்களின் பாடி லேங்க்வேஜ...
ஜெய் “ஆந்திரா மெஸ்”

ஜெய் “ஆந்திரா மெஸ்”

சினிமா, திரைத் துளி
தலைப்பில் என்ன இருக்கிறது என்ற காலம் போய்  தலைப்பில் தான் எல்லாமே இருக்கிறது என்கிற காலம் இது போலும். ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு  சூட்டியுள்ள படங்கள் உடனே பிரபலமாகாவது  வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.  ‘ஷோ போட் (Show boat)’  ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும்  படத்தின் தலைப்பு 'ஆந்திரா மெஸ்'. சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே  'ஆந்திரா மெஸ்'.  ...
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்

சினிமா, திரைத் துளி
சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த  S .P.சரணின்  கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார்  இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் 'திருடன் போலீஸ்'.திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர்    எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக  இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள்,  எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாகத் திகழு...
இல்ல ஆனாலும் இருக்கு

இல்ல ஆனாலும் இருக்கு

சினிமா, திரைத் துளி
மனம் கவரும், இளமை தளும்பும், தொழில் நுட்பத்தில் முத்திரை பதிக்கும் தரமான படங்களை மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் ஆர்.எஸ்.இன்போடைன்மென்ட் நிறுவனம்,  விண்ணை தாண்டி வருவாயா, கோ, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன் வசந்தம்  ஆகிய படங்களை  தொடர்ந்து தற்போது ரவி. கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா ஜோடியாக துளசி நடிக்கும் 'யான்' படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. தலைப்பில் மட்டுமின்றி படத்தின் தரத்திலும் வித்தியாசமாக இருக்க முனையும் இந்த நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு  'இல்ல ஆனாலும் இருக்கு'. நகைச்சுவை கலந்த திகில் படமான 'இல்ல ஆனாலும் இருக்கு' திரைப்படத்தில் 15 புதிய தொழில் நுட்ப கலைஞர்கள் அறிமுகமாக உள்ளனர். 'ஒரே படத்தில் இவ்வளவு கலைஞர்களை அறிமுகப்படுத்துவது   மிகவும் பெருமைக்குரியது. இவர்கள் எல்லோருமே நிச்சயமாகத்  திரையுலகில்  பிரக...
உலகநாயகனைச் சந்தித்த அட்லி

உலகநாயகனைச் சந்தித்த அட்லி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே  நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த  இளம்  இயக்குநர் அவர் மீது  உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி.'ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி  பெற வேண்டும் , அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய  உழைப்பு அதன்  பிரதிபலனாகக் கிடைத்த வெற்றி ஆகியவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிந்தவர் , படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த பொது அந்த மனிதரின்  திரையுலக...