Shadow

சமூகம்

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

மதுரையின் திருவிழா – மக்களின் திருவிழா

கட்டுரை, சமூகம்
இதோ இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது மாமதுரையின் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதி நிறைவுக்கு வந்திருக்கிறது. நேற்று திருக்கல்யாணம் கண்ட சொக்கநாதரும், மீனாட்சியும் இன்று காலை மதுரை வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் மிதந்தபடி தேரோடியிருக்கிறார்கள். திருவிழாவின் இரண்டாம் பகுதியாக, நாளைக் காலையில் இந்த விழாவின் இன்னொரு சூப்பர் ஸ்டாரான கள்ளழகர் மதுரைக்குள் வருகிறார். அடுத்த நாலைந்து நாட்களுக்கு அவர் போகும் இடமெல்லாம் அமளிதுமளியாகும். திருவிழாக்கள் என்பது ஒரு சமூகத்தின் இருப்பை, இயல்பைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு. அந்த வகையில் திருவிழாக்களின் நகரம் என்றால் அது எப்போதும் மதுரைதான். வருடம் முழுக்க ஏதாவது ஒரு திருவிழா அதற்கேயுரிய தன்னியல்போடு, கொண்டாட்டங்களோடு நடந்துகொண்டே இருக்கும். பங்குனி மாதமே இந்த மெகா திருவிழாவிற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும். மீனாட்சிஅம்மனு...
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – கவிஞர் தாமரையின் பங்களிப்பும் வேண்டுகோளும்

சமூகம்
உலகப்புகழ் பெற்ற ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று அமைய இருக்கிறது. தமிழ் தொடர்பான உருப்படியான வேலை என்றால் அது இதுதான். தமிழ் இருக்கை என்றால் என்ன? எதற்காக அது அமைக்கப்பட வேண்டும்? உலகெங்கும் சுமார் 10 கோடித் தமிழர்கள் உள்ளோம். உலகின் பெரிய இருபது மொழிகளில் தமிழும் அடக்கம். உலகின் ஆறு செம்மொழிகளில் தமிழும் ஒன்று. எனினும் உலக அளவில் தமிழ்மொழிக்கான அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. பன்னாட்டு ஆய்வாளர்களைக் கவர முடியாமையும், அதனால் உலகத்தரம் வாய்ந்த ஆய்வுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமையும் இதற்கான காரணங்களில் அடங்கும். நமது பண்டைத்தமிழ் இலக்கியங்கள், உலக அங்கீகாரம் பெற்ற பிறமொழி இலக்கியங்களுக்கு நிகராக வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்யப்பட வேண்டியது அவசியம். பன்னாட்டு அளவில் முதன்மையான பல்கலைக்கழகங்களில் தமிழைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும் போது இந்தப் போதாமைக...
ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

ஹார்வார்ட் தமிழ் இருக்கை – தள்ளிப்போகாதே, தள்ளிப்போடாதே!

கட்டுரை, சமூகம்
ஹார்வார்ட் தமிழ் இருக்கையை வாழ்த்தி கவிஞர் தாமரை எனக்கு ஒரு கடிதம் எழுதியதுடன் ஹார்வார்ட் தமிழ் இருக்கைக்கு ஒரு லட்சம் ரூபா நிதியுதவியும் அளித்திருக்கிறார். அவர் எழுதிய மடல் இதுதான். அன்புள்ள அ.முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு, வணக்கம். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் 'தமிழ் இருக்கை' பற்றி நான் ஏற்கெனவே அறிந்திருந்த போதிலும், உங்களுடனான தொலைபேசி உரையாடலில் கூடுதலாகத் தெரிந்து கொண்டேன். தாங்கள் இதற்காக அமைக்கப் பட்டிருக்கும் குழுவில் ஒருவர் என்பதறிந்து மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். முதன்முதலாக இது பற்றித் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட முதல் எண்ணம், ' தமிழர்கள் நாம் எப்போது பார்த்தாலும் தமிழ்ப் பெருமை பேசித் திரிகிறோம், ஆனால் இப்போதுதான் ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைப்பது பற்றி யோசிக்கிறோம், ஏன் இந்த எண்ணம் முதலிலேயே தோன்றவில்லை?' என்பதுதான். எப்படியோ திருமிகு வைதேகி ஹெர்பர்ட் அவர்க...
பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிடம்...
பீப் பாடலும் டூப் சீற்றமும்

பீப் பாடலும் டூப் சீற்றமும்

கட்டுரை, சமூகம்
நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல.. கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல.. குட் பொம்பள எவளுமிங்கில்ல.. ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல.. ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா.. அவளோட ஆச தீர, உன்ன விலகி ஓடு வா இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு...
ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

ஜல்லிக்கட்டு புகைப்படக் கண்காட்சி

சமூகம்
தமிழர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டைப் பற்றிய புகைப்படக் கண்காட்சி, நவம்பர் 2 முதல் 8 வரை சென்னை லலித் கலா அகாடெமியில் நடக்கவுள்ளது. தமிழர்களின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் வகையில் நடைபெறும் இந்த புகைப்படக் கண்காட்சியை நடிகரும் இயக்குநருமான கமலஹாசன் இன்று காலை 10:30 மணி அளவில் திறந்து வைத்தார். J.சுரேஷ் எனும் புகைப்பட நிருபரின் முயற்சியால் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகைப்படத்துறையில் 23 வருடங்கள் அனுபவம் கொண்ட அவர், புகைப்படத்துறை சம்பந்தமான பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிட்த்தக்கது. தமிழரின் வீரத்தையும், மாண்பையும் சிறப்பிக்கும் இந்தக் கண்காட்சியை வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் நிச்சயமாகக் காண வேண்டும்....
இனியொரு விதி செய்வோம்.!

இனியொரு விதி செய்வோம்.!

கட்டுரை, சமூகம்
அமெரிக்க அரசு அக்டோபர் மாதத்தை குடும்ப வன்முறை விழிப்புணர்வு (Domestic Violence Awareness) மாதமாக அனுசரிக்கிறது. இது தொடர்பில் நிறைய கருத்தரங்கங்கள், விவாத நிகழ்ச்சிகள் நாடெங்கும் நடத்தப்படுகின்றன. நான்கில் ஒரு பெண் உடல், உளவியல் ரீதியான வன்முறைக்கு ஆளாகிறார் என்றும் இத்தகைய வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும் அரசின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.தன்னுடைய துணையை அல்லது குடும்ப உறுப்பினர்களை அடிப்பது, அச்சுறுத்துவது, பாலியல் ரீதியாக சித்திரவதை செய்வது, உளவியல் ரீதியாகத் துன்புறுத்துவது, திருமணப் பந்தத்தை முறித்து விடுவதாக பயமுறுத்துவது, குடும்பத்தை நிர்கதியாய் விட்டுவிட்டு வெளியேறி விடுவேன் என்றோ, குடும்ப உறுப்பினர்களை வீட்டை விட்டு விரட்டி விடுவேன் என்றோ பயமுறுத்துவது என பல்வேறு முகங்களைக் கொண்டதுதான் குடும்ப வன்முறை. படித்தவர், பாமரர், ஆண், பெண், இனம், மொழி, மதம், நா...
அழகு, பெண்மை, பாரம்பரியம்

அழகு, பெண்மை, பாரம்பரியம்

சமூகம்
அழகிய தமிழ் மகள் எனும் மகுடத்தை வெல்லப் போவது யார்? அழகிய தமிழ் மகள் மகுடம் போக, 15 பட்டங்களும் வெல்வதற்கு உள்ளன. 'வாவ் செலிப்ரேசன்' எனும் இந்தியாவின் முதல் முழுமையான நிகழ்வு மாத இதழ், நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய இளைஞர்களின் விழிப்புணர்வு மற்றும் முன்னேற்றத்துக்காக இயங்கும் ‘டேக் கேர் இந்தியா’ எனும் நிறுவனத்துடன் இணைந்து இப்போட்டியை வழங்குகிறது. அழகு, பெண்மை, பாரம்பரியம் ஆகிய மூன்றையும் ஒரே மேடையில் இணைக்கும் ஒரு மாறுபட்ட முயற்சி. இந்தப் போட்டியின் மூலம் உலகம் முழுவதும் பரந்து கிடக்கும் தமிழ்ப் பண்பாடையும், பெண்மையையும், அழகையும் புரிந்து பாராட்டுவதே இதன் நோக்கம். மூன்று சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில், போட்டியாளர்களின் திறமையையும் அறிவையும் சோதிக்கும் மூன்று சுற்றுகள் உள்ளன. 18 முதல் 25 வயது உள்ள உலக தமிழ்ப் பெண்கள் இதில் கலந்து கொள்ள azhagiyatamilmagal.com/submit எனும் வலைதளத...
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கட்டுரை, சமூகம்
கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக்க...
5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

கட்டுரை, சமூகம்
ஐந்து வயதாகும் K.L.தீரஜ், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கிறான். தேசிய அளவில் மூன்று ரெக்கார்ட்கள் முன்னமே படைத்து, India Book of Records இல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீரஜ் தனது முதல் ரெக்கார்ட்டை, பிறந்த இரண்டு வருட ஒன்பது மாதங்களில் படைத்துள்ளான். இளவயதில் அதிக எண்ணிக்கையில் அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனின் முதல் ரெக்கார்ட். 215 தேசிய கொடிகளை, 2 நிமிடம் 15 நொடிகளில் அடையாளம் கண்டுள்ளார். தீரஜ் தனது இரண்டாவது ரெக்கார்டை, மூன்று வருடம் ஏழு மாதங்கள் என அவன் வயதிருந்த பொழுது படைத்துள்ளான். படைப்புகளைப் பார்த்து அதைப் படைத்த படைப்பாளர்களின் பெயர்களை, ஒரு நிமிடத்திற்குள் அதிகளவில் சொல்லியுள்ளான். அதே தினத்தில் தனது மூன்றாவது ரெக்கார்டையும் படைத்துள்ளான். தீரஜின் மூன்றாவது ரெக்கார்ட், உலக வரைப்படப் புதிரை மிக இளவயதில் விடுவித்துள்ளான். டாக்டர் ப...
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

அரசியல், சமூகம்
சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே! நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், தொலைக்காட்ச , இணையத்தளம், பண்பலை உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் இந்த சினிமா ஊடகவியலாளர்கள் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் திரையுலக பிரமுகர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செய்திகளைக் கொடுத்து சினிமா உலகுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பத...
சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சரிந்த கோபுரம் – சரியாத நம்பிக்கை

சமூகம்
செப்டம்பர் மாதத்தின் இன்னொரு காலைப் பொழுது.. பெரியம்மா வீட்டில் இருந்ததால் மகனைப் பற்றிய கவலை இல்லை. வீட்டில் வேலைகளை முடித்து, பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த மகளை பஸ்ஸில் ஏற்றி விட்டு நானும் ஆஃபீசுக்குக் கிளம்பினேன். இப்போது பள்ளிகள் திறந்து விட்டதால் வழக்கமான ட்ராஃபிக்குடன் குழந்தைகளை அழைத்துச் செல்லும் மஞ்சள் நிற பஸ்களின் கூட்டமும் சேர்ந்து கொள்ள எல்லாச் சாலைகளிலும் கூடுதல் வாகன அணிவகுப்பு. இது போன்ற காலை பரபரப்பில் வண்டி ஓட்டுகையில் ரேடியோவில் ஒளிபரப்பாகும் நகைச்சுவையான உரையாடல்களையும் பாடல்களையும் கேட்டுக் கொண்டே ட்ரைவ் செய்வது பெரிய ஸ்ட்ரெஸ் பஸ்டர். காரை நிறுத்திவிட்டு அலுவலகத்தில் நுழையும் வரை எதிர்படுவோரைப் பார்த்துப் புன்னகைப்பதும், தெரிந்தவர்களுக்கு குட்மார்னிங் சொல்லிக் கொண்டு கடந்து போவதும் எனக்கு அனிச்சையான ஒன்றாகி இருந்தது. பதிலுக்குக் கிடைக்கும் புன்னகையும், குட்மார்னிங்க...
எங்கே போனாய் ரெனி!?

எங்கே போனாய் ரெனி!?

கட்டுரை, சமூகம்
மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள். “அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் வாங்க வேண்டும் என்று பெருமிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.. மேலும் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளும் spring break என்று ஒரு வாரம் விடுமுறையில் வந்திருப்பதை எத்தனை மகிழ்ச்சியாகச் சொன்னார்? அப்படி எல்லாம் இருக்காது.. நீ யாரையோ நினைத்துப் பேசுகிறாய்” என்றேன் மகளிடம்,. கொஞ்ச நேரத்தி...
கற்றதனாலாய பயன்

கற்றதனாலாய பயன்

கட்டுரை, சமூகம்
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய 'திருத்தப்பட வேண்டியவர்கள்' என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. நமது கல்வியமைப்பு, அதன் தேர்வு முறைகள், விடைத்தாள் திருத்தும் முறைகளில் நிலவும் அபத்தங்களைச் சொல்லும் கட்டுரை அது. இதன் நீட்சியாக, நமது கல்விமுறையின் இந்தப் பக்கங்களை ஒரு மாணவியாகவும், பின்னாளில் ஒரு கல்லூரி ஆசிரியையாகவும் கடந்து வந்த எனது அனுபவத் தெளிவுகளைப் பகிர்வது சரியாக இருக்கும் என்பதால் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன். மாணவியாக இருந்த காலத்தில் பரிட்சை ஹாலில் சில மாணவ மாணவியர் செய்யும் திருட்டுத்தனங்கள், அது தொடர்பான குறும்புகள், அவர்களைக் கண்டுபிடிக்க, ஆசிரியர்கள் சுற்றிச்சுற்றி வந்ததெல்லாம் இப்போதும் நன்கு நினைவில் இருக்கிறது. பின்னாளில் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய போது பல கல்லூரிகளுக்கும் தேர்வு மேற்பார்வையாளராகச் சென்ற போது எதிர் கொண்ட அனுபவங்...
தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

தமிழர் உணர்வை மதிப்போம் – விஜய் டி.வி.

கட்டுரை, சமூகம்
தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும் தமிழ் மண்ணின் மாண்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றைக்கும் உறுதியான நிலைப்பாடுகளுடனே இருந்திருக்கிறது விஜய் டிவி. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும் திறமையையும் முன்னிறுத்துவதை தன் முதல்கடமையாக வைத்திருக்கிறது. இதனாலயே விஜய் டிவியின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் உலக தமிழர்களின் அன்பும் ஆதரவும் பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றி வருகிற உண்மைக்கு புறம்பான சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம். மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கிற கலைநிகழ்ச்சிக்கும் விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டும் அல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் செய்திகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. விஜய் டிவி எப்போத...