Shadow

மற்றவை

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

கட்டுரை, மற்றவை
மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித...
வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

வட அமெரிக்காவில் இலையுதிர்காலம்

கட்டுரை, மற்றவை
இந்த வர்ணஜாலங்களைக்கண்டுகளிக்க ஏதுவாகப்பலரும் பிரயாணம் செய்யும் வகையில் மலையோர ரயில்களும், மலைப்பிரதேசங்களும் ஆயத்தமாக இருக்கும். Vermont, NY மாநிலங்களைச் சுற்றி இருக்கும் மலைச் சூழந்த காடுகளின் அழகை ரசிக்க வேண்டிப் பலரும் படையெடுக்கும் நேரமிது.ஒவ்வொரு மரத்திலும் பல வண்ண வண்ண இலைகள். அவை தரையெங்கும் உதிர்ந்துக் கிடப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். அதன் அழகே அழகு!இந்தப் பருவத்தில் வரும் மழையும், காற்றும் இலைகளை உதிர வைத்து இலையுதிர்காலம் முடிந்தது, பனிக்காலத்திற்குத் தயாராகுங்கள் என்று மொட்டையாய் நிற்கும் மரங்களையும், மனிதர்களையும் பார்த்து சொல்வது போல் இருக்கும். காலையில் கண் விழித்துப் பார்த்தால் மூடுபனியினால் போர்த்தப்பட்ட புல்வெளிகள், நீர்த்தெளித்து விட்டதைப்போல் சாலைகள், 'சில்'லென்ற அதிகாலைத் தென்றல், புகைமூட்டம் போல் இருக்கும் அடர்ந்த மூடுபனியில் பள்ளிக்குச் செல்...
மேகமலை ஒரு பயணம்

மேகமலை ஒரு பயணம்

கட்டுரை, மற்றவை
சில நாட்களுக்கு முன் குமுதம் இதழ் மூலம் இந்த மேகமலை பற்றியறிந்த என் தந்தை தன்னை அங்கே அழைத்து செல்லுமாறு கேட்டார்.  அலுவலகத்தில் ஒரு வாரம் விடுப்பில் இருந்த நான், மேகமலை செல்ல இது தான் சரியான நேரம் என்று முடிவெடுத்து அதற்க்கு வேண்டிய  தகவல்களை சேகரிக்க தொடங்கினேன். அனைத்து விவரங்களும் சேகரித்த பின்னர், நாங்கள் ஒரு ஐந்து நபர்கள் விழுப்புரத்தில் இருந்து ஆகஸ்ட் 14 காலை 5 மணிக்கு  போலேரோ வில் புறப்பட்டோம்.கடல் மட்டத்திலிருந்து 1500 மீ உயரத்திலிருக்கும் மேகமலை, தேனியிலிருந்து கம்பம் செல்லும் வழியில் சின்னமனூர் என்னும் ஊரிலிருந்து  35 கி மீ தொலைவில் இருக்கிறது. இப்படி ஒரு இடமிருப்பது அநேக மக்களுக்கு தெரியாத காரணத்தினால் தானோ என்னவோ ஊட்டி, கொடைக்கானல் போல் இல்லாமல் இங்கே இயற்கை இன்னும் கொஞ்சி விளையாடி கொண்டிருக்கிறது.காலை 11 மணியளவில் சின்னமன்னூரை அடைந்தோம்...
இது நம்ம ஊருங்க!!

இது நம்ம ஊருங்க!!

கட்டுரை, மற்றவை
நம்ம ஊர். அது என்ன ஊர்? "கோயம்புத்தூர்." கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.கன்னியரின் இதழழகை கோவையென்பார்!கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன். தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்.இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி.அதனைக்கேட்டு முன்னவனே நாடாள...
ஐவரிட்ட ஞானம்

ஐவரிட்ட ஞானம்

கட்டுரை, மற்றவை
மு.கு.: கடவுள் வந்திருந்தார் || சுஜாதா || பாரதி மணி || நடிப்பனுபவம் (!?)விதியாகப்பட்டது வலியது. சிவனேயென அனைத்துக்கும் பார்வையாளனாக இருந்த என்னை கவிஞர் பத்மஜா நாராயணன் பாரதி மணியின் நாடகத்தில் கோர்த்து விட்டு விட்டார். ‘ஒன்னுமில்ல தினேஷ். சின்னதா மாப்பிள்ளை கேரக்டர். அஞ்சாறு வசனம் தான். சிரிச்சுட்டே இருக்கணும். உங்களால் பண்ண முடியாதா? சும்மா நடிக்காதீங்க!!’ என்றார் நான் நடிக்க மறுத்த பொழுது. அவருக்கென்ன அச்சு அசல் மாமியாய் கலக்கி விட்டார்.முதல் நாள் நாடகம் முடிந்ததும் என் நண்பரிடம் என் நடிப்புத் திறமையைப் பற்றிக் கேட்டேன்.“மாப்பிள்ளை மாதிரி பளபளன்னு இருந்தீங்க.”“அலோ நடிப்பைப் பற்றிச் சொல்லுங்க. நிச்சயதார்த்தம் தடைப்பட்டவுடன் நல்லா பதட்டப்பட்டேனா!?”“பதட்டமா? நீங்களா!! உங்களால் அதெல்லாம் முடியுமா? சீன் முடியுற வரை சிரிச்ச முகமா தான் இருந்தீங்க.”பதட்டப்படா விட்டாலு...
2500$ பெறுமானமுள்ள படம்

2500$ பெறுமானமுள்ள படம்

கட்டுரை, சினிமா, மற்றவை
சேட்டை படத்திற்கு, "ஆபாசம்.. நாராசம்.. கவிச்சி" என ஏகப்பட்ட அர்ச்சனைகள் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட 'ஒன்பதுல குரு' என சொல்கின்றனர். ஆனால் படம் அந்த அளவுக்கு மோசமில்லை என்று தான் நினைக்கிறேன். காரணம் சேட்டை ஹிந்திப் படமான 'டெல்லி-பெல்லி'யின் ரீ-மேக். அந்தப் படத்தின் அழகான வசனங்களை எல்லாம் வடிகட்டி மொன்னையான படமாக சேட்டையை எடுத்துள்ளனர்."This girl has given me blow job.. I am 21st century man, I have given her oral pleasure also" என வசனம் வரும் ஹிந்திப் படத்தில். அதே வசனத்தை பிரேம்ஜி தமிழில், "உங்க பொண்ணு என்னை ரேப் பண்ணிட்டா" என சொல்வார். காமெடி(!?)யாக இருக்குமோ?  மடுவில் ஆபாசத்தைக் கண்டவர்கள் மலையில் என்னக் காண்பார்கள்?காமெடி என்ற பெயரில் 'ஒன்பதுல குரு' படத்திலும், 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்திலும் நன்றாக கழுத்தறுத்திருப்பனர். இரண்டுமே வ...
“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

கட்டுரை, சினிமா, மற்றவை
விசாம் அகமது காஷ்மீரிவிஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!!க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்?ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?// யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said?ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது... இது ராகவன்'ஸ் இன்ஸ்டின்க்ட் ...
ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, மற்றவை
ஞாநி - சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!   எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.    நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். 'என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?' என...
மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மற்றவை
நடு நாயகமாக மனுஷ்ய புத்திரன் வீற்றிருக்க அவரின் இரு பக்கமும் 16 காலி நாற்காலிகள் மேடையில் இருந்தது. உயிர்மையின் ஆதர்ச தொகுப்பாளர் ரோகினி நாற்காலிகளை நிரப்ப ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வெள்ளை பைஜாமாவில் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவை மேடைக்கு அழைத்தார். அரங்க விதிமுறையின் படி மேடையில் எவரேனும் ஏறினால் கை தட்டல் ஒலி எழுந்தது. அப்படியே நாற்காலிகள் கை தட்டலின் ஊடே நிரம்பத் தொடங்கியது. எழுத்தாளர் இமையம் என்று ரோகினி அழைத்ததும், யாராவது எழுகிறார்களா என அனைவரையும் போல அரங்கைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரோ ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையோடு எழுந்து மேடைப் பக்கமாக நடந்தார். சரி அவர் தான் இமையம் போலும் என மெல்ல கை தட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவரோ தனக்கும் அந்த விழாவிற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தலையைக் குனிந்து கொண்டு மிக அசிரத்தையாகவும், நிதானமாகவும் நகர்ந்தார். மெல்ல எழுந்த கை தட்டல் அ...
குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

குப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை

கட்டுரை, மற்றவை
  என்னிடம் அடிக்கடி ஒரு இளைஞன் வருவான், வறுமையான சூழலில் அவன் பிறந்திருந்தாலும் வறுமையை கொஞ்சம் கூட வெளிக்காட்டாத அவன் பேச்சுத் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும், எவ்வளவு பெரிய கஷ்டமான வேலை அவனிடம் சொன்னாலும் முகம் சுளிக்காமல் எத்தகைய சிரமத்தையும் தாண்டி அந்த வேலையை முடித்து விடுவான்,  ஒருநாள் அவனிடம் நான் தனியாக பேச நேரிட்டது, அப்போது தான் அவன் மனதுக்குள் கிடந்த அத்தனை ஆசை. அபிலாஷைகளை என்னிடம் கொட்டித் தீர்த்தான், தான் கிராமத்தலையாரியின் மகன் என்பதையும். தனக்கு மிகச்சிறிய வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது என்பதையும் என்னிடம் சொல்லி நான் எப்படியும் அரசியலில் பெரிய தலைவராக ஆக வேண்டும் என்றும் அதற்கு நான் உதவி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டான்,அவன் ஜாதகம் உட்பட அனைத்தையும் நான் பரிசோதித்து பார்த்தேன், அவன் அரசியல் தலைவராவதற்கான எந்தவித சாத்தியக்கூறும...
இந்திய மூளை வெங்காயமா?

இந்திய மூளை வெங்காயமா?

மற்றவை
   விலங்கியல், பொறியியல், வேதியியல் என்ற வார்த்தைகளை கேட்டவுடன் இவைகளெல்லாம் அயல்நாட்டார் கண்டுபிடித்த விஞ்ஞானம்.  இந்தியாவிற்கும் அதற்கும் எள் முனை அளவேனும் சம்பந்தமில்லையென்று பலர் கருதுகிறார்கள்.   இந்தியர்களின் அறிவில் உதித்தது.  கலைகளும் இலக்கியங்களும் தான் பௌதீக வாழ்க்கைக்கு தேவையான எதையும் ஆதிகால இந்தியர்கள் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை.  அதை பற்றிய அறிவு என்பதே அவர்களுக்கு இருந்ததில்லை என்றும் சிலர் பேசுகிறார்கள் இப்படி பேசுவது சரியா?  முறையா?  என்பதை பற்றி கூட அவர்கள் சிந்திப்பது இல்லை.  வெள்ளைகாரர்களையும், அயல் நாட்டினரையும் கால் பிடித்தே பழக்கப்பட்டவர்களால்.  இந்தியர்களின் அறிவு கம்பீரத்தை புரிந்து கொள்ளவும் முடிவதில்லை, தெரிந்து கொள்ளவும் முயலவில்லை.  சமீபத்தில் என்னை சந்தித்த எழுத்தாளர் ஒருவர...
“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

“டண்டேலி” – சிலிர்க்கும் அனுபவம்

கட்டுரை, மற்றவை
ஊர் சுற்றுவது என்றால் முதலில் கையைத் தூக்குகின்ற ஆள் நானாக தான் இருப்பேன். அது ஏற்கனவே பார்த்த இடமாக இருந்தாலும் சரி, பார்க்காத புது இடமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது போவது என்றால் இரட்டை மகிழ்ச்சி தான். ஓர் இடத்திற்குப் போகும் முன், அந்த இடத்துல என்ன இருக்கு ஏது இருக்கு என்று கூகுள் ஆண்டவர் உதவியோடு ஆராய்ச்சிப் பண்ண ஆரம்பித்து விடுவேன். பிறகு நண்பர்களோடு அந்த இடத்திற்கு செல்ல ஆவலோடு காத்துக் கோண்டு இருப்பேன். இப்படிக் கல்லூரி காலங்களிலும், அலுவலகங்களில் பணிபுரியும் போதும் பல இடத்துக்குச் சென்று வந்துள்ளேன். இவை அனைத்திற்கும் நேர்மாறாக அமைந்தது நான் கடந்த மாதம் சென்ற ஒரு சுற்றுலா. சென்னையிலிருந்து இடம் பெயர்ந்து ஹைதராபாத்திலுள்ள ஒரு நிறுவனத்தில் நவம்பர் மாத இறுதியில் இணைந்தேன். அதே நிறுவனத்தில் பணிபுரியும் சில தமிழ் நண்பர்களின் அறையில் ஐந்தாவது நபராக அடைக்கலம் புகுந்தேன். ஒரு வியாழனன்று...
எழுந்து நட லட்சியப் பாதையில்..

எழுந்து நட லட்சியப் பாதையில்..

கட்டுரை, மற்றவை
  அது ஒரு குளிர்காலம்.  காலைப் பனியில் பசும் புற்கள் எல்லாம் பனி மகுடம் சூட்டிக் கொள்ளும் பொற்காலம். வயோதிகர்களின் எலும்பையும் உதிர செய்யும் கஷ்ட காலம்.  ஆனால் இளைஞர்களுக்கு உடல் சக்தி அதிகம் விரையமாகாத திருவிழா காலம் எனலாம்.  அதனால் தான் பகவத் கீதையில் கண்ணன் மாதங்களில் நான் மார்கழி என சொன்னான்.  சில மனிதர்கள் இருக்கிறார்கள் எந்த காலம் வந்தாலும் முகத்தில் சோக சாம்பலையே பூசிக் கொண்டு சதா சர்வ காலமும் உற்சாகமின்றியே திரிவார்கள் உடலில் ஊக்க சக்தி கும்மாளம் போடும் வாலிப பருவத்தில் கேட்டால் நான் நினைத்தது நடக்கவில்லை கேட்டது கிடைக்கவில்லை.  நாம் நடக்கும் பாதையில் ஒவ்வொரு அடியிலும் இரும்பாலான ஆணிகளிளே குத்துகிறது என்பார்கள்.  அறிவும் அனுபவமும் ஒருங்கே கை கோர்க்கும் நடு வயது பருவத்திலோ என்னை புரிந்து கொள்ளும் மனைவியில்லை என் பேச்சை கேட்...
கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கார் ஓட்ட தண்ணிக்கு எங்கே போவது?

கட்டுரை, மற்றவை
இந்தியாவில் கார் வாங்கும் நடுத்தர வருவாய் மக்களின் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அவர்களை குறிவைத்து டாடா நிறுவனம் ஒருலட்சம் ரூபாய்க்கு நனோ வகை கார்களை தயாரித்து அறிமுகம் செய்தது.   அடுத்தக்கட்டமாக தண்ணீரில் ஓடும் காரை தயாரிக்க டாடா நிறுவன தலைவர் ரத்தன் டாடா முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் முதல் கட்டமாக 75 கோடி ரூபாயை முதலிடு செய்துள்ளார்.பெட்ரோல் டீசல் விக்கும் விலையில் தண்ணீரில் கார் ஓடினால் நல்லதுதான்.முதலில் சுத்தமான காற்று சொர்ப்ப அளவிலேனும் கிடைக்கும் மதிய வெயிலில் புழுதிக்காற்றில் முகத்தை மூடிக்கொண்டு பாலைவன வாசிகளாட்டம் நடக்கும் அவஸ்தை குறையும்.அடுத்ததாக பெட்ரோல் பங்கில் காத்திருக்க வேணாம் மண்ணென்னை கலந்து இருக்குமோன்னு பயத்தோடு வண்டி ஓட்ட வேணாம்.மிக முக்கியமாக பெட்ரோல் விலை ஏறிப்போச்சி லாரி வாடகை கூடிப்போச்சி அதனால பால் விலை காய்கறி விலை குண்டூசி விலை கூட கூ...
உடலைக் கிழித்து உணர்வைக் காட்டும் ஓவியங்கள்

உடலைக் கிழித்து உணர்வைக் காட்டும் ஓவியங்கள்

கட்டுரை, மற்றவை
    நமது முன்னோர்கள் கலைகளில் மிக சிறந்ததாக ஓவியங்களை கொண்டாடினார்கள்.  ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி சொல்ல வேண்டிய விஷயத்தை தூரிகை எடுத்த ஓவியன் ஒரே ஒரு படக்காட்சியில் சொல்லிவிட முடியும் என்பதினால் தான் அது கலைகளின் சிறந்ததாக போற்றப்படுகிறது.  மனிதனின் சரித்திரத்தோடு ஆதி முதல் பின்னி பிணைந்து இருப்பது ஓவியம் தான்.  தனது கருத்துக்களை பதிவு செய்ய விரும்பிய மனிதன் முதன் முதலில் கண்டுபிடித்தது எழுத்துக்களை அல்ல ஓவியங்களைத் தான்.     ஆதி மனிதன் தான் வாழ்ந்த குகைகளில் பச்சிலை சாறு செம்மண் கொழுப்பு ஆகியவைகளை கொண்டு மிருகங்களின் உருவங்களையும் வேட்டையாடும் விதத்தையும் மிக அழகாக தீட்டியுள்ளான்.  குகைகளில் மட்டுமல்ல மலைச்சரிவுகளிலும் அவன் தீட்டியுள்ள பல்வேறு ஒவியங்களை இன்றும் காணலாம்.  அத்தகைய ஓவியங்கள் மத்திய பிரதேசத்திலுள்ள சிங்கன்ப...