
சுவிட்சர்லாந்து
மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித...
















