Shadow

மற்றவை

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

ஜீரோ டிகிரி – வட்டம் தாண்டும் தமிழ்ப் புத்தகங்கள்

மற்றவை
ஜீரோ டிகிரி என்பது சாரு நிவேதிதாவின் மிகப் புகழ் பெற்ற நூலாகும். அப்புத்தகத்தின் பெயரில் ஒரு பதிப்பகத்தைத் இணைந்து தொடங்கியுள்ளனர் திருமதி காயத்ரி ராமசுப்ரமணியமும் ராம்ஜி நரசிம்மனும். இப்பதிப்பகத்தின் அறிமுக விழா சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்திலுள்ள கலையரங்கில் ஜனவரி 18 அன்று நடைபெற்றது. அறிமுக விழாவில், சாரு நிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தர்ராஜன் ஆகியோர் எழுதிய தமிழ் நூல்களை, ஸீரோ டிகிரி பப்ளிஷிங் என்ற பதிப்பகம், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டனர். இவ்விழாவில் எழுத்தாளர்கள், சாருநிவேதிதா, பாலகுமாரன், பட்டுக்கோட்டை பிரபாகர், இந்திரா சௌந்தரராஜன், மதன், பாஸ்கி, கவிதா சொர்ணவேல், ஸ்ரீராம் கண்ணன் உள்ளிட்ட ஏராளமான எழுத்தாளர்களும், வாசகர்களும், இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்கமாக, கஞ்சிரா கலைஞர் ஹரீஷ்குமார் அவர்களின் தலைமையிலான...
வீரையன் விமர்சனம்

வீரையன் விமர்சனம்

மற்றவை
வீரையன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்தின் காவல் தெய்வங்களில் ஒருவர். சிறு தெய்வங்கள், குறிப்பாகத் தமிழகத்தின் காவல் தெய்வங்கள் எல்லாம் மனிதர்களாக வாழ்ந்து தனது தியாகத்தாலோ, வீரத்தாலோ அந்தப் பகுதி மக்களின் அன்பையும் மரியாதையுக் சம்பாதித்திருப்பார்கள். அப்படி, தொழில்நுட்பத் தொடர்பு சாதனங்கள் புகுந்து மக்களின் அன்றாட வாழ்வைப் பாதித்திராத1989 ஆம் ஆண்டில், தஞ்சாவூரில் வாழ்ந்த மிகச் சாதாரண மனிதன் எப்படித் தன் தியாகத்தால் வீரையன் ஆகிறான் என்பதுதான் படத்தின் கதை. படத்தில் மூன்று கதைகள் ஒன்றோடு ஒன்று பிணைந்து வருகின்றன. இந்தப் படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் நல்லவர்கள். சூழ்நிலைகள் பாதகமாய் அமைகிறது. வீரையனாக ‘ஆடுகளம்’ நரேன் நடித்துள்ளார். பொறுப்பான நல்ல தந்தை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என முடிசூட்டிக்கொண்டிருக்கும் ஜெயப்ரகாஷ்க்கு மிகச் சிறந்த போட்டியாகப் பரிணமித்து வருகிறார். படத்தின் தலை...
சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்

சென்னை மாலில் “ஸ்குவாஷ்” போட்டிகள்

மற்றவை
19வது ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டி, மூன்றாம் முறையாகச் சென்னையில் நிகழ்கிறது. இப்போட்டியை, ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ஏஷியன் ஸ்குவாஷ் ஃபெடரேஷனுடன் இணைந்து, தமிழ்நாடு ஸ்குவாஷ் ரேக்கட்ஸ் அசோசியேஷன்   நடத்துகிறது. இதற்கு முன்னர், இப்போட்டி 2002இலும், 2010இலும் சென்னையில் நடந்துள்ளது. ஸ்குவாஷ் போட்டியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், ஸ்குவாஷைப் பிரபலப்படுத்தவும், ஆசிய ஸ்குவாஷ் சேம்பியன்ஷிப் போட்டியைச் சென்னை ராயப்பேட்டையிலுள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்துகின்றனர். இன்று முதல் 30 ஆம் தேதி வரை 5 நாட்கள் போட்டிகள் நடக்கவுள்ளன. ஏற்கெனவே, 2011 இனாகரல் உலகக் கோப்பையையும், 2012 U-21 உலகக் கோப்பையையும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மக்கள் மத்தியில் கிடைத்த ஆரவார வரவேற்பினை மனதில் கொண்டே, மதிய வேளையில் காலிறுதிப் போட்டிக...
லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

லக்ஸ் – பொழுதுபோக்கின் புதிய பரிமாணம்

கட்டுரை, மற்றவை
SPI சினிமாஸ் நிறுவனம் வழங்கும் லக்ஸ், ஒரு மாறுபட்ட, நவீனமான மற்றும் உள்ளம் கவர்கின்ற சினிமா அனுபவத்தை வழங்குவதற்காக அனைத்துப் பாரம்பரிய வழக்கங்களைத் தகர்த்தெறிகிற ஒரு புதிய சினிமா அமைவிடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஃபீனிக்ஸ் மாலில் 11 திரைகள் கொண்ட 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய SPI சினிமாஸின் லக்ஸ் தியேட்டர் திறக்கப்பாட்டுள்ளது. இதில் உணவகம், கஃபே, ரீடெய்ல் ஸ்டோர், ஸ்பா, விளையாட்டு இடம் என பல நவீன வசதிகள் கொண்டுள்ளன. இது படைப்புத்திறன, நவீன ஸ்டைல், வசதி, தரம் என அனைத்தையும் கொண்டு நவீன தொழில்நுட்பத்தில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்கூடம் லக்ஸ் கதவைத் திறந்தவுடனே காற்றோட்டம் கொண்ட இடம், இத்தாலி நாட்டு மார்பிள், வெல்வெட் போன்ற சுவர், கிரிஸ்டல் விளக்குகள், அழகிய வடிவங்கள் பதிக்கப்பட்ட கண்ணாடிப் பரப்புடன் பார்வையாளர்களை வரவேற்கிறது. முன்கூட்டத்தில் உணவகம் உள்ளது. முன்கூட்டத்தின் ம...
“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

“அம்மா”.. “அம்மா”.. என்று லட்சம் முறை அழைக்கலாம் – இயக்குநர் சேரன்

கட்டுரை, மற்றவை
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, கோடான கோடி நன்றிகள்.. பசித்த வயிற்றுக்கு குறைந்த விலையில் “அம்மா உணவகம்” ஆரம்பித்தபோதே நீங்கள் ஏழைகளின் இதயங்களில் நிரந்தரமாக குடியேறிவிட்டீர்கள். இப்போது “அம்மா திரையரங்கம்” கொண்டுவந்ததின் மூலமாக திரையுலகில் வாழ்க்கை இழந்து, எப்படி இனி திரைப்படம் எடுத்து வாழப்போகிறோம், என தவித்து நின்ற ஆயிரக்கணக்கான தயாரிப்பாளர்கள் இதயங்களிலும், கண்களில் ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு இயக்குநராகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட என்போன்ற ஆயிரக்கணக்கான இயக்குநர்கள், உதவி இயக்குநர்களின் இதயங்களில் என்றும் மறக்காத, மறக்க நினைக்காத வண்ணம் தனிப்பெரும் தலைவியாக குடிகொண்டு அம்மா என்ற சொல்லுக்கு அர்த்தம் கற்பித்துவிட்டீர்கள். “அம்மா திரையரங்கம்” என்ற இந்த திட்டம் சென்னை நகரம் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் நிறுவப்படவேண்டும் என்பதே எங்கள் வே...
“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

“மரணித்தது நானல்ல!!” – பாலு மகேந்திரா

கட்டுரை, சினிமா, மற்றவை
“எனது படைப்புகள் மூலம் மரணத்தின் பின்பும் நான் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பேன். மரணிக்கப் போவது என் உடல்தான். நானல்ல!” என நிறைவாகக்கூற ஒரு மகத்தான கலைஞனால் மட்டும்தான் முடியும். தமிழகத்தில், சினிமாவை கலையாகப் பார்த்த சொற்பமானவர்களில் முதன்மையானவர் பாலு மகேந்திரா. அவருள் சினிமா விதையை முதன்முதலில் விதைத்தது ஓர் அமெரிக்கர். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியராக இருந்த ஃபாதர் லோரியோ, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ப்ரொஜெக்டரில் சினிமா காண்பிப்பாராம். கண்டியில் இங்கிலாந்து இயக்குநர் மழையை வரவழைத்த அதிசயத்தைப் பார்த்து தாமும் அதைச் செய்ய ஆசைப்பட்டார் பாலு மகேந்திரா. அன்றுதான் அவருக்கு இறவாப் புகழைப் பெற்று தந்திருக்கும் கருவியான கேமிராவை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்து சொல்லமுடியாத பரவசத்தை அடைந்துள்ளார். சினிமா ஆசை அவரை பூனே திரைப்படக் கல்லூரிக்குத் துரத்தியது. குறைந்த ஒ...
தமிழில் மோடி!

தமிழில் மோடி!

புத்தகம், மற்றவை
குஜராத் முதலமைச்சரும் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளருமான திரு.நரேந்திர மோடியின் இளமைப்பருவம் முதல் அவரது தலைமையின் கீழ் குஜராத் மாநிலம் கண்டிருக்கும் பல்துறை வளர்ச்சிகள் வரை விவரிக்கும் “நரேந்திர மோடி – நேர்மையும் நிர்வாகத் திறமையும்” என்ற புத்தகத்தை பத்திரிகையாளர் எஸ்.சந்திர மெளலி எழுதியிருக்கிறார். ஏராளமான அரிய புகைப்படங்களும், நேரடித் தகவல்களும் கொண்ட புத்தகத்தை நூற்றாண்டு கண்ட அல்லயன்ஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. திரு.நரேந்திர மோடி சென்னை வந்திருந்தபோது அந்தப் புத்தகத்தை வெளியிட, தமிழக பா.ஜ.க. தலைவர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. அகில இந்திய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்....
இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

கட்டுரை, மற்றவை
பரப்பளவில் இந்தியாவை விட பல மடங்கு பெரிய நாடான அமெரிக்காவைப் பற்றிப் படித்ததும் கேட்டதும் தான் உண்டு. அதன் பூகோள அமைப்பு, உணவு, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் மற்றும் தட்பவெப்ப நிலைகள் என பல்வேறு அம்சங்கள் நிச்சயம் நம்மை வியக்க வைக்கும். அதுவும் இங்குள்ள ஐம்பது மாநிலங்கள் ஒவ்வொன்றும் தன்னகத்தே ஒளித்து வைத்திருக்கும் செயற்கை, இயற்கைச் செல்வங்கள் எவரையும் அதிசயத்தில் ஆழ்த்தும். கனடாவில் இருந்து அமெரிக்கா வருகிறவர்களே இந்த வித்தியாசங்களைப் பார்த்து வாய் பிளக்கும் போது இந்தியாவில் இருந்து வந்த என் போன்றவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.வடகிழக்கில் 'ஜோ' வென்ற இரைச்சலுடன் காண்பவர் மனதை கொள்ளை கொள்ளும் அழகிய நயாகரா நீர்வீழ்ச்சி, அடர்ந்த காடுகள், மலைகள், ஆறுகள், குளங்கள், குறுகிய, அகலமான, நெரிசலான தெருக்கள், ஓங்கி உயர்ந்த பளபளக்கும் கட்டடங்கள், சாலைகளில் மஞ்சள் நிற வாடகைக் கார்கள், பரபரப்பான நக...
அமேசான் என்கிற ஆச்சர்யம்!

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

கட்டுரை, மற்றவை
வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர். அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் வ...
தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

தமிழ்ப் புத்தாண்டு – ஒரு மீள் பார்வை

கட்டுரை, மற்றவை
பள்ளி நாட்களில் பூமத்திய ரேகை, கடக ரேகை, மகர ரேகை என்றெல்லாம் படித்திருப்போம். இதெல்லாம் புவியியல் அறிஞர்கள் பூமிப் பந்தின் குறுக்கே ஏற்படுத்திய கற்பனைக் கோடுகள். இதில் பூமத்திய ரேகையானது நடுவிலும், இதற்கு மேலும் கீழுமாக  கடக ரேகை, மகர ரேகைகள் ஓடுகின்றன. அதாவது பூமத்திய ரேகையின் வடக்குப் பகுதியில் கடக ரேகையும், புமத்திய ரேகையின் தெற்குப் பகுதியில் மகர ரேகையும் அமைந்திருக்கின்றன. ஆண்டு முழுவதும் சூரியனின் ஒளி கடக ரேகைக்கும், மகர ரேகைக்கும் இடைப்பட்ட பகுதியில் விழுகிறதுநமது பூமியானது அதன் அச்சில் இருந்து 23.5 பாகை சாய்வுக் கோணத்தில் சுழன்று கொண்டிருப்பதால் செங்குத்தாய் விழும் சூரியனின் ஓளி பூமியின் மீது நகர்வதாகத் தோன்றுகிறது. இதனால்தான் பருவ கால மாற்றங்கள் எல்லாம் ஏற்படுகின்றன.இதன் அடிப்படையில்தான் மூன்று மாதத்திற்கு ஒரு பருவமாய், நான்கு பருவ காலங்களை மேற்கத்திய அறிவியல் சமூகம் வரையறுத...
புதிய பொலிவில் “இது தமிழ்”

புதிய பொலிவில் “இது தமிழ்”

மற்றவை
இயன்றவரை இனிய தமிழில் என்பதைத் தன் ஆதார நோக்கமாய்க் கொண்டு இயங்கி வரும் “இது தமிழ்” இணைய தளம், இன்று முதல் புதிய பொலிவுடன் தனது இரண்டாவது அத்தியாயத்தை துவக்குகிறது. புதிய நிர்வாகம், புதிய ஆசிரியர் குழு, புதிய தள வடிவமைப்பு, புதிய செயல்திட்டங்கள் இவற்றோடு எங்களின் ஆதார நோக்கமும் சேர்ந்திணைய, இத் தமிழர் திருநாளில் புதிய மேம்படுத்தப்பட்ட “இது தமிழ்” தளத்தினை உங்கள் பார்வைக்கும் பயனுக்கும் படைக்கிறோம். இந்தத் தளத்தின் வளர்ச்சியில் எங்களுக்கு இணையான பங்களிப்பு இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடமும் இருப்பதாகத் தீவிரமாய் நம்புகிறோம். எனவே எங்களின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் உங்களின் மேலான பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம். உங்களின் பேராதரவையும் பெருங் கவனத்தையும் வேண்டி நிற்கும்.. ஆசிரியர் குழு.கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை அனுப்பிட..ithuTamil@...
முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

கட்டுரை, மற்றவை
சம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர் பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் இசைப்பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு,  “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்பட்டது. இவரது ஆரம்பக்கால இசை வாழ்க்கையாக கருதப்படும், பத்மபூஷன் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யையாக இருந்ததில் தொடங்கி, கடந்த ஆண்டு கர்நாடக இசை உலகத்தின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ பட்டம்பெற்ற வரை அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ளன. “கடும் உழைப்பே, புகழுக்கும் வெற்றிக்கும் விலையாகும். ஒவ்வொரு நிமிட வேலையிலும் முழு ஈடுபாடு, வெற்றியோ தோல்வியோ, எப்போதுமே தனது சிறந்ததைத்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் அவசியம். நான் இந்நிலையை அடைந்ததற்கு, எனது ஒருமைப்பட்ட குவிமையமும், என்னைச் சுற்றியுள்ள சிறந்த ஆன்மாக்களும் கடவுளும் அளித்த ஆதரவே காரணம். இந்தப் ...