Shadow

கதை

கி.பி.5

கி.பி.5

கதை, படைப்புகள்
கி.பி.4 கிருஷ்ணப்பிள்ளை, அவரது மனைவி, அவரது மருமகள் மூவரும் தொலைக்காட்சியில் ஆர்வமாக மதிய உணவினையும் மறந்து தொடர் ஒன்றினை பார்த்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர, நான்காவதாக ஒருவரும் யாருக்கும் தெரியாமல் தொலைக்காட்சியைப் பார்த்தார். அது தொட்டிலில் இருந்த கிருஷ்ணப்பிள்ளையின் பேத்தி. கால்களால் நெம்பி நெம்பி தலையை மட்டும் வெளியில் நீட்டி பார்த்துக் கொண்டிருந்தது. கருவில் இருக்கும் பொழுதே அத்தொடரின் கதாநாயகியோட வேதனையும், போராட்டமும் குழந்தைக்குத் தெரியும். பிரசவத்திற்காக மருத்துவமனையில் இருந்த பொழுது கூட, அறையில் இருந்த தொலைக்காட்சியில் கிருஷ்ணப்பிள்ளையின் மருமகள் விடாமல் தொடரினைப் பார்த்தாள். தொடரினால் ஏற்பட்ட பாதிப்புகள் குழந்தையை சென்று அடைந்தன. ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணிற்கு தான் புரியும் என்பதற்கேற்ப மருத்துவர் பிரசவ தேதி செவ்வாய்க்கிழமை என்று குறிப்பிட்டு இருந்தும், தாயின் மனதை...
கி.பி.4

கி.பி.4

கதை, படைப்புகள்
கி.பி.3 வயதானதால் கிருஷ்ணப்பிள்ளைக்கு மறதி அதிகமாகி விட்டதென வருவோர் போவோர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டாள் அவரது மனைவி. கிருஷ்ணப்பிள்ளைக்கு ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டு வந்தது. 'என்ன பெருசா மறதிய கண்டுட்ட? இன்னோர் தடவ அப்படி சொன்னா பாரேன்!' என்று கிருஷ்ணப்பிள்ளை கோபித்துக் கொண்டார். 'ஆயிரந்தடவ சொல்வேன்' என்று பதில் வந்தது. நல்லவேளையாக வாக்குவாதம் முற்றி போராக மாறாமல் போட்டியில் முடிந்தது. 'நல்லா கேட்டுக்கோங்க...பச்ச மொளகா வேண்டாம். காஞ்ச மொளகா 50 கிராம் வேணும். தலைக்கு தேங்க எண்ணெய் வேணும். சமைக்கறதுக்கு நல்லெண்ணெய் ஒரு லிட்டர் வேண்டாம். கொஞ்சமா வீட்டுல துவரம்பயிர் இருக்கிறதால, கடலப்பயிர் வேண்டாம். துவரம்பயிர் மட்டும் 500 கிராம் வாங்கிட்டு வாங்க. துணி தோய்க்கிற சோப்பு பெருசு ஒன்னு, குளிக்கிற சோப்பு நாலு. பெருங்காயம் சின்ன வெங்காயம் வேணாம். பெரிய வெங்காயம் கால் கிலோ. ஒரு லிட்டர் பால். க...
கி.பி.3

கி.பி.3

கதை, படைப்புகள்
கி.பி.2 மதர் தெரசாவின் சேவையை பாராட்டி செய்தி தாளில் ஒரு நினைவு கட்டுரை வெளிவந்திருந்தது. கிருஷ்ணப்பிள்ளை தமது வாழ்க்கையை அந்தப் புண்ணிய ஆத்மாவோடு ஒப்பிட்டுப் பார்த்தார். இதுவரை சமூகத்திற்கென ஒரு நல்லது கூட செய்ததில்லை என்ற உண்மை, பெரும் குற்ற உணர்ச்சியாக மாறி கிருஷ்ணப்பிள்ளையை போட்டு வாட்டியது. இனிமேல் தினமும் நாட்டிற்கோ, சமூகத்திற்கோ ஒரு நல்லதாவது செய்து விட வேண்டுமென சபதம் மேற்கொண்டார். அன்று மாலை காலார நடந்துக் கொண்டிருக்கும் பொழுது, சாலையோர மரத்தடியில் நோய்வாய்ப்பட்ட நொண்டி நாய் ஒன்று ஈனஸ்வரத்தில் முனகிக் கொண்டிருந்தது. நாயின் மீது கிருஷ்ணப்பிள்ளைக்குப் பரிதாபம் பொங்கியது. அந்நாயினுடைய ஒருவேளை பசியையாவது போக்கி விட வேண்டுமென்ற நல்லெண்ணத்தில், பக்கத்துக் கடையிலிருந்து ரொட்டித் துண்டுகள் வாங்கி நாயிற்கு போட்டார். நாய் சாப்பிடும் அழகினைப் பார்க்க, ஆயிரம் கண்கள் வேண்டுமென நினைத்துக் கொண...
கி.பி.2

கி.பி.2

கதை, படைப்புகள்
கி.பி.1 எவ்வளவு முயன்றாலும் கிருஷ்ணப்பிள்ளைக்கு நாட்கள் திருப்திக்கரமாக நகர்வதாக இல்லை. புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை எனினும், புத்தகம் உற்ற துணை என்று கேள்விப்பட்டிருக்கார். எப்படிப்பட்ட புத்தங்களைப் படிக்கலாம் என்று கிருஷ்ணப்பிள்ளை ஆழ்ந்து யோசித்து, தனது வயதிற்கு ஆன்மீக புத்தகம் தான் சரி என்று முடிவு செய்தார். வீட்டுப் பரணையிலிருந்து அவர் தந்தை உபயோகித்திருந்த 'அத்வைதம்' என்னும் புத்தகத்தை தூசி தட்டி எடுத்தார். அனைவரும் கடவுள் என்ற அத்வைத கொள்கை கிருஷ்ணப்பிள்ளைக்கு மிகவும் பிடித்து விட்டது. அந்தக் கொள்கையின்படி எல்லாம் கடவுளாக தோன்ற வேண்டும், ஆனால் கிருஷ்ணப்பிள்ளைக்கு தான் மட்டுமே கடவுளென தோன்றியது. கண்ணாடி முன் நின்றுக் கொண்டு தலையைச் சுற்றி ஏதாவது ஒளிவட்டம் தோன்றுகிறதா என்று அடிக்கடி சோதித்து பார்த்தார். தான் கடவுளாகி விட்டதை யாரிடமாவது சொல்ல வேண்டுமென ஆவல் கிருஷ்ணப்பிள்ளையை வாட்டி...
கி.பி. 1

கி.பி. 1

கதை, படைப்புகள்
~~கிறிஸ்து பிறந்த 1940 வருடங்களுக்கு பிறகு கிருஷ்ணப்பிள்ளை பிறந்தார். நண்பர்களால் செல்லமாக கி.பி. என்றழைக்கப்பட்டார். சாதாரண குடும்பத்தில் பிறந்து சர்க்கார் உத்தியோகத்தில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டார். அவரது தற்போதைய நிலை குறித்து எவருக்கும் அக்கறை இல்லை எனினும், அக்கறையோடு சேகரித்ததில் கிடைத்த சுவையான தகவல்களின் தோகுப்பு.~~ இவ்வுலகிலேயே மிகவும் கடினமான செயல் எதுவென்று கேட்டால், அவரவர்களது வயதிற்கேற்ப தனது அனுபவத்தை சொல்வார்கள். உதாரணத்திற்கு பள்ளி பருவத்தில் பள்ளிக்குப் போவது, கல்லூரி பருவத்தில் அழகியப் பெண்கள் பாராமுகமாக இருப்பது, இளைஞர் பருவத்தில் வேலைக் கிடைக்காமல் இருப்பது, கல்யாணமானவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருப்பது, முதுமையில் ஒதுக்கப் படுவது என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இவையெல்லாம் கிருஷ்ணப்பிள்ளைக்கு குழந்தைத்தனமான செயல்களாக தோன்றின. அவரைப் பொறுத்தவரை இப்பிரஞ்சத்திலிய...
இருட்டில் கட்டிய தாலி

இருட்டில் கட்டிய தாலி

கதை, படைப்புகள்
அம்மன் கோவில் மணியடிக்கும்  போது இரவு நேரம் மணி பனிரெண்டை தாண்டி இருக்கும்.  மணி விடாமல் அடித்தது.  யாரோ கயிற்றை பிடித்து தொங்குவது போல் விடாமல் மணியோசை கேட்கவும் ஊரே எழுந்துவிட்டது.  பொதுவாக இப்படி கிராமத்தில் எங்கோ தீப்பிடித்து விட்டாலும், யார் வீட்டிலாவது திருடன் புகுந்து மாட்டிக் கொண்டாலோ ஊராரை கூப்பிட மணியடிப்பது வழக்கம்.இன்றும் அப்படி தான் எதாவது அசம்பாவிதம் நடந்திருக்கும் என்று ராகவன் எழுந்தான்.  பாதி தூக்கத்தில் இருந்த மனைவி தூக்கம் கலையாமலேயே ஏங்க எழுந்து போவாதிங்க, பேசாம படுங்க எதுனாலும் காலையில் பேசிக்கலாம் என்று முணு முணுத்தாள் நீ சும்மா கிட போயி என்னன்னு பார்த்தா தான் உறக்கம் வரும் என்று எழுந்த ராகவன் கையில் டார்ச் லைட்டை எடுத்து கொண்டு தெரு கதவை திறந்து சாலையில் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.தெரு முனையில் இருந்து பார்க்கும் போதே அம்மன் கோவில் வெளிச்சத்தில் நிறைய பேர் கூ...
சூது கவ்வும்

சூது கவ்வும்

கதை, படைப்புகள்
குருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, 'என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா?' என தழுதழுக்கக் கேட்கிறார். ஒரே ஒரு திசையில் மட்டும் மனம் சற்று சலனம் அற்று மீண்டும் விக்கித்துக் குறுகுகிறது. எதுவும் யோசிக்காமல் கிரீடம் அற்ற கலைந்த கேசத்தோடும், மேலாடை மறந்த திறந்த மார்போடும், கலங்கிய கண்களோடும் நடுநிசியில் கானகம் நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார். நடந்து கொண்டிருப்பவன் மன்னர் மன்னன் அல்ல. மன அமைதி தேடிச் செல்லும் சாதாரணன். பரம ஞானியான விதுரரை...
மேற்கு

மேற்கு

கதை, படைப்புகள்
'ஏன் நீ வேலைய விடக் கூடாதா?'ஜான்சனிற்கு ஒன்றரை வயது இன்னும் முழுமையாக ஆகவில்லை, ஆனால் அவன் உடைத்த பொருட்களின் விலை ஒன்றை லட்சத்தை தாண்டியது. ஜெனிலியா இதற்காகவே அலுவலக விடுமுறையை ஒரு வருடத்திற்கு மேல் நீடிக்க வேண்டியதாகி விட்டது. ஜேம்ஸ் எவ்வளவோ சொல்லியும் ஜெனிலியா வேலையை விட சம்மதிக்கவில்லை. "இனிமே நீ வேலைக்கு போலாம்."அமெரிக்காவில் பிரபலமாகி வரும் 'மிஸ்டர். மாம்' கலாச்சாரத்திற்கு ஜேம்சும் மாறி விட்டான். கட்டாய ஓய்வினை வாங்கிக் கொண்டு ஜான்சனை நேருக்கு நேராக சமாளிப்பதென முடிவுக்கு வந்து விட்டான்.   ஜெனிலியாவிற்கு இந்த முடிவு பிடிக்கவில்லை எனினும், ஜேம்சிற்கு ஜான்சனுடன் பொழுது நன்றாக போனது. வீட்டு வேலைகள் அனைத்தும் இரண்டு நாட்களிலயே பழகி விட்டது.  மாதத்திற்கு ஒருமுறை நடக்கும் மருத்துவ ஆலோசனைக்கு ஜான்சனை அழைத்து சென்றான் ஜேம்ஸ்.இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ம...
தனிமை

தனிமை

கதை, படைப்புகள்
ஊரே பூங்குழலி வீட்டில் துக்கம் அனுஷ்டித்துக் கொண்டிருந்தது. ஆனால் சத்யசீலன் மட்டும் தனியாய் விளக்கும் ஏற்ற மறந்து இருளில் அமர்ந்து இருந்தான். ஏமாற்றமும் அதனால் ஏற்பட்ட எரிச்சலும் சத்யசீலனை பாடாய்படுத்தியது. தனக்கு நேர்ந்த அவமானத்தை எப்படி கலைவது என்று புரியாமல் தவித்தான். கிணறு வெட்ட போய் பூதம் கிளம்பியது போல, சத்யசீலன் பூங்குழலிக்கு செய்த நல்லதை அவள் கெட்டதாக மாற்றி விட்டிருந்தாள். பூங்குழலியை உயிருடன் கொளுத்த விரும்பிய சதிகார கூட்டத்திடம் இருந்து, தனி ஒருவனாக போராடி அவளை மீட்டான். ஆனால் பூங்குழலியோ நன்றி மறந்து, தனது முகத்தில் கரி பூசி விட்டதாக புலம்பிக் கொண்டிருந்தான் சத்யசீலன். திடீரென்று தன் பின்னால் யாரோ நிற்பது போல் சத்யசீலனிற்கு தோன்றியது. திரும்பி பார்த்த சத்யசீலனிற்கு கோபத்தில் கண்கள் சிவந்தது. குழந்தை முகம் மாறாத பதிமூன்று வயது பூங்குழலி, மன்னிப்புக் கோறும் பாவனையில் சங்கடத்து...
என்திசை வீசா தென்றல்

என்திசை வீசா தென்றல்

கதை, படைப்புகள்
எவ்வளவு நாள்? வசந்தம் போய் கோடையும் வந்து விட்டது.துவைக்கப் பட்ட கருஞ்சேலையாய் சாலை ஈரத்தில் மின்னிக் கொண்டிருந்தன. வழுக்கிக் கொண்டிருக்கும் வாகனங்களின் மறுபுறம் செவ்வண்ண தென்றலாய் அவள். நான் பார்க்க.. நான் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன் தென்றல் பேருந்தில் ஏறும் வரை. மழைக் காலத்தில் சாரல் தானே அடிக்கும்.. எங்கிருந்து தென்றல் வந்தது என என்னால் யோசிக்க முடியவில்லை. ஒருவேளை செவ்வண்ணம் என்னுள் வானவில்லை தோற்றுவித்திருக்கலாம். கடைசியில் நானுமா? ஆனால் வெளியில் தெரிந்தால் தானே நான் நாண வேண்டி இருக்கும் என பீறிட்டு எழும் கவிதை எழுதும் ஆசையையும் அடக்கிக் கொண்டேன். நான் சாப்பிடும் அளவு குறைகிறதா, தூக்கம் சரியாக வருகிறதா,காதல் பாட்டு பிடிக்கிறதா என என்னை உள்நோக்கி பார்த்தேன். வானவில்லும், மழையும் ஒருங்கே தெரிந்தது.ம்ம்..நடப்பவை எல்லாம் இயற்கைக்கு மாறாகவே நடக்கின்றன. அக்னி நட்சத்திரம் அனைத...
கெளரி வீட்டு பஞ்சாங்கம்

கெளரி வீட்டு பஞ்சாங்கம்

கதை, படைப்புகள்
"எங்க வச்சேள்?"சோமு ஐயர் தன் வீட்டில் உள்ளவர்களிடம் ஆயிரம் தடவைக்கு மேல் இந்த கேள்வியை கேட்டு விட்டார். ஆனால் யாருக்கும் எதுவும் தெரியவில்லை. வீட்டு வாசலில் அமர்ந்திருக்கும் ஊர் தலைவர் முருகேச முதலியாரிடம் என்ன சொல்வது என்று புரியாமல் தவித்தார் ஐயர். இரண்டு நாட்களாக முருகேச முதலியார் ஐயர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருக்கிறார்."நம்பிக்கிட்ட புதுசு வாங்கிட்டு வர சொல்லி இருக்கேன். புதன்கிழமை வந்துடும்" என்றார் ஐயர். "ஆனா.. பெளர்ணமி செவ்வாய்கிழமை தானே!" சில நாட்களுக்கு முன் நடந்த கோயில் திருவிழாவின் போது, "பாப்பானுக்கு புரோகிதமும், செட்டிக்கு வணிகமும் சொல்லி கொடுக்காமலே வந்துடும் அந்த மாதிரி...." என்று ஏதோ மேற்கோள் காட்டி பேசினார் ஆறுமுகக் கவுண்டர். அங்கிருந்த முருகேச முதலியார், கவுண்டரின் மேற்கோளை மறுத்தார். அதன் காரணமாக ஏற்பட்ட வாக்குவாத முடிவில், கடை ஒன்று வைத்து தன்னாலும் வணிக...
திருடி – சவால் சிறுகதை

திருடி – சவால் சிறுகதை

கதை, படைப்புகள்
காமினி. எந்த தேவதைகளாலும் ஆசிர்வதிக்கப் படவில்லை. ஆனால் அனைத்து சாத்தான்களாலும் சபிக்கப்பட்டவள். அவளைப் பற்றி முதலில் கேள்விபடுபவர்கள் அப்படி தான் நினைத்துக் கொள்வார்கள். ஆனால் பார்த்து பழகினால் தான் தெரியும் காமினியே ஒரு தேவதை என்று. அப்படி காமினி ஒரு தேவதை என அவளை நம்ப வைக்க அவளின் தாத்தா பரந்தாமன் கடந்த ஐந்து வருடங்களாக முயன்று வருகிறார். ஆனால் கடந்த ஐந்த நாட்களாக அவர் மருத்துவமனையில் தன்னிலை இழந்து சிகிச்சை பெற்று வருகிறார். பரந்தாமன் மருத்துவமனைக்கு சென்ற தினத்தில் இருந்து காமினியை கவனிக்க ஆள் இல்லை. சிவா மட்டும் தான் அடிக்கடி வந்து அவள் உயிரை வாங்கிக் கொண்டிருந்தான். சிவாவின் தொல்லை பொறுக்க முடியாமல் எங்கேயாவது ஓடிவிடலாம் என காமினி நினைத்தாள். ஆனால் எங்கே ஓடுவது என அவளுக்கு தெரியவில்லை. ஏன் தான் தாத்தாவிற்கு உடம்பு சரி இல்லாமல் போனதோ என கோபம் கோபமாக வந்தது. எல்லாம் அந்த சாமியறையில் ...
நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

கதை, படைப்புகள்
"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி,அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்." "ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன். அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர். "வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க, வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??" என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட். சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். "நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட...
அவன்

அவன்

கதை, படைப்புகள்
இராஜ வீதிக்காரர்கள் உண்மையிலேயே அப்படியொரு முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைத்துப் பார்க்கவே அவனால் முடியவில்லை. அதை நினைக்க நினைக்க அவனுக்கு இரத்தம் கொதித்தது. வேறேதாவது காரணத்திற்காக இம்முடிவு எடுக்கப் பெற்றிருந்தால், அவனே முன்னின்று தலையைக் கொடுத்தாவது செய்து முடித்திருப்பான்."ஆயிரத்தி தொள்ளாயிரத்தி பதினொன்னு" என்று கண்களை மூடியவாறே எண்ணிக் கொண்டிருந்தான். தூக்கம் வருவதாக இல்லை. 'பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த கீழ் வகுப்புப் பெண்ணை அவர்கள் வீதி வழியாக அழைத்து சென்றதற்காக கலெக்டர் ஆஷ் துரையை கொல்லப் போகிறார்கள். இதை மேலிடத்தில் சொல்லி தடுக்கலாம், ஆனால் கலெக்டர் கொல்லப் பட வேண்டியவன். இன்னும் பதினேழு நாட்கள் மீதம் உள்ளது' என்று யோசித்தவாறே சிறிது கண்ணயர்ந்தான்.வாஞ்சிநாதனை எதிர்ப்பார்த்து அவன் முன்னதாகவே மணியாச்சி இரயில் நிலையத்திற்கு சென்று விட்டான். இரயில் வந்து நின்ற சில...
மனிதர்களைக் கண்காணிக்கும் ஒற்றர்கள்

மனிதர்களைக் கண்காணிக்கும் ஒற்றர்கள்

கதை, படைப்புகள்
நமது இந்து மதத்தை பற்றி குறை கூறுபவர்கள் உங்கள் மதத்தில் பல கடவுள்கள் இருக்கிறார்கள் ஒரு தெய்வ வழிபாடு என்பது இல்லைவே இல்லை.  என்று முக்கியமான ஒரு குற்றசாட்டை முன் வைக்கிறார்கள்.  நம்மில் பலரும் அந்த குற்றசாட்டை கேட்டு அவர்கள் சொல்வதும் உண்மைதானே.கல்விக்கு ஒரு கடவுள்,  செல்வத்திற்கு பெற, இறப்பிலிருந்து தப்பிக்க என ஏகப்பட்ட கடவுள்களை வைத்திருக்கிறமே.  என்று தனக்குள்ளேயே சமதானம் சொல்லி கொள்பவர்களும் உண்டு, பல தெய்வ வழிபாடு எல்லாம் இல்லை ஒரே தெய்வம் தான் அதற்கு பல பெயர்களை வைத்திருக்கிறார்கள்  என்று பதில் சொல்பவர்கள் கூட ஒரே தெய்வத்திற்கு பல பெயர்கள் என்றால் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்று சொல்லப்படுகிறதே யார் அந்த தேவர்கள் என்று கேட்டால் பதில் சொல்ல முடியாமல் பலநேரம் தவிக்கிறார்கள்.  நெருப்பின் கடவுள் அக்கினி காற்றின் கடவுள் வாயு, தண்ணிரின் கடவுள் வருணன் என்று எல்லாம் சொல்லப்படுபவைகள் உண்ம...