
புன்னகையின் பின்னால்
“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி."ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன?? நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்."எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க.""சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்ட. ஆஃபீசுக்கு ஓடுறேன்."சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான்.நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் ...
















