Shadow

Tag: ஜங்கன்

ஆனா.. எம திருடனுங்க!!

ஆனா.. எம திருடனுங்க!!

கட்டுரை, சமூகம்
இது தான்டா போலீஸ்!!ஹிஹி.. என்னத்த சொல்ல? புனைவுன்னு வேணுமின்னா வச்சுக்கலாம்.காந்தி சொன்ன மாதிரி இரவுல தனியா பொண்ணுங்க நடந்து போய் அறுபத்து நாலு வருஷத்துக்கு முன்ன சுதந்திரம் வாங்குனது உண்ம தான்னு நிருபிச்சுடுவாங்க போல. ஆனா பசங்களால தான் பகல்ல கூட தைரியமா நடமாட முடியாது போல. ஒவ்வொரு தெரு முக்குக்கும் வெள்ளச் சட்ட போட்ட பணம் பிடுங்கி பூச்சாண்டி 'லிஃப்ட்' கேக்குற மாதிரியே கைய காட்டி உசுர வாங்குறாங்க.ஹெல்மட் போடாமல் போய் அவர்களிடம் சிக்கினால்.. எங்கப்பா காசை நான் வீணா செலவழிச்சு கெட்டுப் போறேன்னு எம்மேல இருக்கிற  அக்கறையில் காசைப் பிடுங்கி வச்சுக்கிறாங்க. மாமாக்கு தான் என் மேல எவ்ளோ அக்கறை!? நான் ப்ரென்ட்ச எல்லாம் மாமான்னு தான்னு கூப்பிடுவேன். நீங்க பாஸூ!? அதான் 'போலீஸ் உங்கள் நண்பன்'னு விவேக் ஏதோ படத்துல சொல்வாரே!! அத பாத்ததில் இருந்து தான்.எல்லா டாக்குமென்ட்சும...
இரத்த வைரம்

இரத்த வைரம்

அயல் சினிமா, சினிமா
ப்ளட் டைமன்ட் - சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் முக்கியமாக வைரம், தங்கம், டைட்டானியம், பாக்ஸைட் (bauxite), ருட்டைல் (rutile) போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால் உள்நாட்டுப் போரை தீர்மானித்தப் பொருள் அங்கு கிடைத்த வைரங்களே. ஒரு நாட்டின் வளமே அந்நாட்டிற்கு சாபமாய் மாறும் கொடுமை, கொழுத்த வல்லரசுகளின் பார்வையில் அவை விழும் பொழுதே!!உலகின் மூன்றாவது மிக நீள...
யார் தாதா?

யார் தாதா?

அரசியல், கட்டுரை
(செவி வழி கதை)மும்பையில ஒரு பெரிய தாதா.. இருக்கேனே அவன் பெயர் என்ன?ஏதோ இப்ராஹிம்னு வருமே!!ஆங்... தாவூத் இப்ராஹிம். பாகிஸ்தானுல இருக்கான் இப்ப. அவன் மதுரையில ஒருபெரிய நகைக் கடை ஆரம்பிச்சிருக்கான். அழகிரி போய் காசு கேட்டிருக்கான்.அவனுங்க தரல. அந்த கடை திறப்பு விழாவிற்கு முன்னாடி நாளு, அந்த கடைஇருக்கிற தெருவை சுத்தி பெரிய பள்ளம் வெட்டி கடைக்கு போக வழி இல்லாமசெஞ்சுட்டாங்க.உடனே தாவூத் கலைஞருக்கு போன் பண்ணி, "உன் பேரனும், கொள்ளுப் பேரனும் இந்தரோட்டுல இந்த கார்ல போயிட்டிருக்காங்க. நீ உன் பணத்த எல்லாம் புதைச்சுவச்சிருக்கிற இடத்துல என் ஆளு 'பெட்ரோலோடும் 'லைட்டரோடும் நிக்கிறான்"என்று சொல்லியிருக்கான்.கலைஞர் வாயே திறக்கல. உடனே மதுரைக்கு போன் பண்ணார். நைட்டோட நைட்டா புதுரோடு போட்டுக் கொடுத்திருக்காங்க. நான் கேட்கிறேன்.. இவங்களுக்கு ஏன் இந்தவேலை? நிழல் உலகத்துல இருக்கிற...
தி ஹர்ட் லாக்கர்

தி ஹர்ட் லாக்கர்

அயல் சினிமா, சினிமா
  ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ தாக்கும் நவீன ஆயுதங்களின் முன் தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்த முடியாத சோர்வும், மறைந்திருந்து தாக்குபவர்களால் ஏற்படும் எரிச்சலும், கண் முன் சக மனிதர்கள் சிதறும் கோரமும் தளர்வுற செய்யும். ஒரு வெடிகுண்டு அகற்றும் குழுவில் ஏற்படும் இத்தகைய தளர்வுறல்களை அழகாக சொல்லியிருக்கும் படம்'. வியட்னாம் போரில் வெடிகு...
ஜவ்வுத்தாள் பை உலகம்

ஜவ்வுத்தாள் பை உலகம்

அயல் சினிமா, சினிமா
மாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று. குப்பை கூல கோபுரங்கள் நாளை.குப்பைகளால் மனித இனம் சூழப்பட்டு மீள இயலாமல் ஸ்தம்பித்துப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்குவதற்கு முக்கி திணரும் மக்காத ஜவ்வுத்தாள் பைகள் நம்மை எங்கு சென்றாலும் துரத்துக்கின்றன. தொங்க விடப்பட்டிருக்கும் கயிறை ஒரு முனையில் பொசுக்கி சிகரெட் பிடிக்க உதவும் பெட்டிக் கடைகள் முதல் வக்கனையாய் மெருகேத்தப்பட்ட 'டிசைன் கவர்களுள் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற பொருட்களை கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குளிர் சாதன பல்பொருள் அங்காடி வரை ஜவ்வுத்தாள் பை நம் மீது செலுத்தும் அக்கிரமிப்பு உடம்பெங்கும் முளைக்கும் ரோமம் போல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது.  நாம் தூக்கிப் போடும் இந்த பைகள் காற்றில், பேருந்தில், தெருவோரங்களில், சீரனமாகாமல் மாட்டின் வயிற்றில், கோவில் குளங்களில், பசும...
என் பெயர் ஹான்

என் பெயர் ஹான்

அயல் சினிமா, சினிமா
"என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை." இதை அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து சொல்லத் துடிக்கும் 'ரிஸ்வாஸ் கான்' என்ற முஸ்லீம் இளைஞனை பற்றிய படம். யார் அவன்? ஏன் அப்படி சொல்ல நினைக்கிறான்? என்று கதை முன்னும் பின்னும் பயணிக்கிறது. 'அஸ்பெர்ஜர் சின்ட்ரோம்'. ரிஸ்வாஸ் ஹானுக்கு உள்ள குறை. இந்த குறை உள்ளவர்கள் மற்றவர்களின் முகத்தை பார்த்து பேச முடியாதவர்களாகவும், சமூகத்தில் சஜமாக பழக முடியாதவர்களாகவும் இருப்பர். ஆனால் மிகுந்த அறிவாளிகளாக இருப்பர். எனினும் தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் கேட்க விழைகிறார்களா என்ற கவலையின்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய குறை உள்ள ரிஸ்வாஸ் ஹான் என்னும் இளைஞனாக படத்தில் வலம் வருகிறார் ஷாருக். நடிப்பின் முதிர்ச்சி அநாசயமாய் வெளிப்படுகிறது. தாயின் இறப்பிற்கு பின் தம்பியிடம் அமெரிக்கா வரும் ஷாருக்கிற்கு, தம்பி மனைவி தான் ஆறுதல் அள...
திருமூலர் நதியா என்நண்பன்

திருமூலர் நதியா என்நண்பன்

கதை, படைப்புகள்
தலை முடி நரைக்கிறதே என கவலைப்படாதவர் எவரேனும் உள்ளனரா? என்நண்பனுக்கும் அதே கவலை தான். அதுவும் சாதாரண கவலை இல்லை. மிகப் பெரும்கவலை. திருமணம் வேறு அவனுக்கு ஆகவில்லை. இப்ப புரியும் என்று நினைக்கிறேன்அவனது கவலையின் அளவு."பிறந்தா ஒரு நாள் சாக தான் போறோம். அந்த மாதிரி தலையும் நரைக்க தான்போகுது. தலை நரைச்சுடுச்சு என்று எனக்கு எந்த கவலையும் இல்ல. எங்க அம்மாவநினைச்சா தான் கவலையா இருக்கு. ஏன்னா எங்க அம்மாவுக்கு அவங்க அம்மான்னாஉசுரு. அவங்களுக்கு என் கல்யாணத்த பார்க்கனுமாம். ம்ம்.. எங்க பாட்டியோடஆசைய நிறைவேத்த முடியலையேன்னு அவங்க அழ.. அத பார்த்து நான் கண் கலங்க"என்று எனக்கு கண் கலங்கியும் காண்பித்தான். அவனை திருப்திப்படுத்த என்னால்அப்பொழுது அவனுக்கு கண் கலங்கி காட்ட முடியவில்லை.  ஆனால் அவனது திருமணம்நரையால் தடங்கல் ஆகிறது என்பதை இப்படி தலையை சுற்றி மூக்கை தொடுவது போல்சொல்லி உயிரெடுக...
சட்டாம்பிள்ளை

சட்டாம்பிள்ளை

கதை, படைப்புகள்
"ச்சே.. எத்தன தடவ சொன்னாலும் இந்த அம்மாவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லை."வெள்ளைச் சட்டையை நீலமாக்கி விடுவதால் உடன் படிக்கும் மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேருகிறது.'கான்வென்ட்ல படிக்கிற தொர வர்றான் பாருங்கடா.'அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைப் பொறுத்தவரை கான்வென்ட்ல படிக்கிற பசங்கள் எல்லாம் ஒன்றுக்கும் லாயக்கற்றவர்கள். குண்டு அடிப்பது, வயலில் நண்டு பிடிப்பது, ஆலமர விழுதுகளில் தலைக்கீழாக தொங்குவது, பள்ளிக்கு வரும் வழியில் இருக்கும் மாந்தோப்பில் திருட்டு மாங்காய்களை பறிப்பது போன்ற வேலைகளில் கான்வென்ட் மாணவர்களுக்கு நிபுனுத்துவம் போதாது. அப்படிப்பட்டவர்களுடன் தன்னை ஒப்பிடுவது ஞானசம்பந்தனுக்கு எரிச்சலாக இருந்தது.. இதற்காகவே மாந்தோப்பில் இருந்து மற்றவர்களை விட  நிறைய மாங்காய்களை பறித்துக் கொண்டு வந்து அனைவருக்கும் கொடுப்பான். எப்படி குட்டிக் கரனம் அடித்தாலும் 'கா...
இது தான்டா போலீஸ்!!

இது தான்டா போலீஸ்!!

கட்டுரை, சமூகம்
1973, சிதம்பரம்..சைக்கிளில் டைனமோ இல்லாமல் சென்ற இருவரை மடக்குகிறார் காக்கி சட்டை காவல்காரர். சைக்கிளை மிதித்துக் கொண்டிருந்தவர் மிடுக்காக இறங்கி, தனது பையில் கை விட்டு தபால் ஆபீசில் தரப்படும் அடையாள அட்டையை எடுத்து நீட்டுகிறார். காவல்காரர் அதைப் பார்த்து விட்டு, "நீங்க போகலாம் சார்" என்று பம்முகிறார்."இவன் என் பையன்" என்று பின்னால் அமர்ந்திருந்த பையனை காட்டி, "இந்த காலேஜுல தான் படிக்கிறான். ஏதாச்சும் பிரச்சனைன்னா பார்த்துக்குங்க" என்று ஆங்கிலத்தில் சொல்கிறார். "சரிங்க சார்."1989, கடலூர்..வேகமாக சென்றுக் கொண்டிருந்த இரு சக்கர வண்டியை நிறுத்துகிறார் காவல்காரர்."எங்கடா போற?" "சகாயம் சார் ட்யூஷனுக்கு." "துரை ஏன் இவ்ளோ வேகமா போறீங்க? லைசென்ஸ் இருக்கா?" "இல்ல சார்." "ஓ.. துரைக்கு லைசென்ஸ் வேற இல்லையா?" என்று மீசை கீழ் நான்கு பற்கள் தெரிவது போல் நமுட்டு சிரிப்ப...