
ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review
பட்டாம்பூச்சியை உருவகமாகப் பயன்படுத்தி, மானுட வாழ்க்கையின் நிலையற்றத்தன்மையைக் குறித்தும், அதை சாஸ்வதமென நம்பி நடப்பவற்றிற்குப் பொறுப்பேற்கும் மனித மனங்களின் முரணைக் குறித்தும் படம் தத்துவார்த்தமாகச் சொல்கிறது. 'பட்டாம்பூச்சிகளைப் போல் ஒருநாள் சிறகடித்துவிட்டு, என்றென்றைக்கும் அது நித்தியம் என நினைத்துக் கொள்ளும் நாம் (We are like butterflies who flutter for a day and think it is forever)' எனும் கார்ல் சாகனின் (Carl Sagan) மேற்கோளுடன் படம் தொடங்குகிறது.
கல்லூரிக் காலத்தில் தனக்கும் சூர்யா குமரவேலுக்கும் இருந்த உறவைப் பற்றிக் கணவனிடம் எப்படியாவது சொல்ல நினைக்கிறார் கெளரி. கணவன் அர்ஜுனுக்கோ, கல்யாணத்திற்கு மறுதினமே வேலை பறிப் போன மன அழுத்தத்தில் இருக்கிறார். கணவனிடம் தனிமையான சூழலில் உண்மையைச் சொல்லிவிட நினைத்து, கொடைக்கானல் போகும் வழியிலுள்ள குறிஞ்சிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எதிர்பா...







