அகண்டா விமர்சனம்
அகண்டம் என்றால் முழுமை, பரம்பொருள், கடவுள் எனப் பொருள்படும்.
படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு இரண்டு வேடங்கள். அகண்டா ருத்ர சிக்கந்தர் அகோரி, மற்றும் ஊருக்கு நல்லது செய்யும் பணக்காரர் முரளி கிருஷ்ணா. பாலய்யா படத்தில் ஆடியன்ஸ் என்ன எதிர்பார்ப்பார்களோ அதை மட்டும் தந்தால் போதுமென்ற அதி தெளிவுடன் படத்தை இயக்கியுள்ளார் பொய்யபதி ஸ்ரீனு (Boyapati Srinu).
அகண்டா அறிமுகமாகும் பொழுது 40 பேரைக் கொல்கிறார். க்ளைமேக்ஸில் 150 பேரைக் கொல்கிறார். பாலய்யா என்றாலே அதிநாயகன் (சூப்பர் ஹீரோ) தானே! தொடையைத் தட்டி ட்ரெயினைப் பின்னுக்கு அனுப்பும் விசேஷ சக்தி பல்லண்டத்திலேயே (Multiverse) இவர் ஒருவருக்குத்தான் உண்டு. சிவன் கையிலுள்ள திரிசூலத்தில் கூட மூன்று பிளேடு (blade) தான் இருக்கும். அகண்டா கையிலிருப்பதோ ஐந்து பிளேடுகளுடன் ஐஞ்சூலமாய் இருக்கிறது.
படத்தின் பிரம்மாண்டத்திற்கு மிக முக்கிய காரணம், A.S.பிரகாஷின் கலை இயக...