
சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review
சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை.
அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என பார்வையாளர்கள் மனதில் ஒட்டாத சம்பவங்களை எதிர்கொள்கிறாள் நாயகி. பார்வையாளகளைப் பாதிக்காவிட்டாலும், நாயகியின் அகத்தில் பெரிய மாற்றம் நேரிடுகிறது.
சீதா மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். இரண்டு நிமிடத்தில் பேசித் தீர்த்து விடக் கூடிய சின்னஞ்சிறு பிரச்சனைதான் அவருக்கு. ஆனால் அவரது தந்த...
















