
ரெட்ட தல விமர்சனம் | Retta Thala review
தமிழ் சினிமாவில், 30 ஆண்டுகளாகத் தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கப் போராடி வருபவர் அருண் விஜய். அவ்வப்போது ஒரு பெரிய பிரேக் கிடைத்தாலும் அதைத் தக்க வைக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து சில படங்கள் அவருக்கு அமைந்து விடுகிறது. அப்படிப்பட்ட அருண் விஜய்க்குத் தடம் படத்துக்குப் பிறகு ஒரு பெரிய பிரேக் கிடைக்கவில்லை.
'ஆசையே துன்பத்திற்குக் காரணம்' என்ற புத்தரின் போதனையை மையக்கருத்தாக வைத்து உருவாகியிருக்கும் படம். சிறு வயதில் இருந்தே தங்களுக்கெனக் குடும்பம் என எதுவும் இல்லாமல் ஆதரவற்றவர்களாக வளர்கிறார்கள் அருண் விஜயும், சித்தி இத்னானியும். இதில் சித்தி இத்னானி, கிடைத்த இந்த ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விடவேண்டும்ம், பணத்துக்காக எதுவும் செய்யலாம் என நினைப்பவர். ஐந்து ஆண்டுகள் வெளியூரில் இருந்த அருண் விஜய் சித்தியைத் திருமணம் செய்ய அவரைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வருகிறார். வந்த இடத்தில் அவரின் காத...
















