Shadow

Author: Dinesh R

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

SISU: அழிவில்லாத நாயகனின் அதகளமான பழிவாங்கும் சம்பவம்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
இறக்க மறுக்கும் அழிவில்லாத நாயகனான கோஷேய், முதல்பாகமான சிசு (SISU) படத்தில், தங்கக்கட்டிகளுக்காக நாஜிக்களை துவம்சம் செய்திருப்பார். நவம்பர் 21 வெளிகாயவுள்ள அதன் அடுத்த பாகத்தில், தன் குடும்பத்தைக் கொன்ற இரஷ்ய இராணுவ வீரரைப் பழிவாங்கக் களம் இறங்குகிறார் நாயகன். மனித இனத்தின் ஆதி உணர்ச்சிகளில் ஒன்றான பழிவாங்கும் உணர்ச்சிதான் இப்படத்தின் மையக்கரு. இப்படத்தின் ட்ரெய்லரிலேயே ரத்தம் தகிக்கும் அந்தத் தகிப்பினை உணர முடிகிறது. ஒரு மனிதனின் அந்தப் பழி வாங்கும் தகிப்பைத் திரையில் கொண்டு வந்திருக்கும் ஜோர்மா தோமிலாவின் நடிப்பை மிகவும் சிலாகிக்கிறார் இயக்குநர் ஜல்மாரி ஹெலாண்டர். ஆவர், “ஜோர்மாவுடன் வேலை செய்வது எப்போதும் ஓர் இனிமையான உணர்வைத் தரும். அவர் தனக்கே உரிய தனித்துவமான முறையில், முகத்தில் உணர்ச்சிகளை கொண்டு வந்துவிடுவார். குறிப்பாகக் கோபத்தையும் சோகத்தையும் வசன உதவியின்றியே அவரால் வெளிப்படுத்த...
மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

மெஸன்ஜர் விமர்சனம் | Messenger review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் புதுவிதமான களங்களில், கான்செப்ட்களில் திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் குறைந்து விட்டது என்றே சொல்லலாம். ஆனால் கொரியன் திரைப்படங்களிலும், சீரீஸ்களிலும் பல பேன்டஸி கான்செப்ட்கள் இன்றும் தினம் தினம் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மாதிரியான ஒரு ஃபேன்டஸி கான்செப்ட்டில் உருவாகி இருக்கும் படம் தான் “மெஸஞ்ஜர்” ஆகும். ரமேஷ் இளங்காமணி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், மனிஷா ஸ்ரீ, ஃபாத்திமா ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படம் ஃபேண்டஸி கான்செப்டில் உருவாகியிருக்கும் ஒரு காதல் திரைப்படமாகும். காதல் தோல்வியில் இருக்கும் சக்திவேலன், அதில் இருந்து வெளிவர முடியாமல் ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரது ஃபேஸ்புக் மெஸன்ஜருக்கு தற்கொலை செய்து கொள்ளாதீங்க என ஒரு மெசேஜ் வருகிறது. அனிதா என்ற பெண் அனுப்பியிருக்கும் அந்த மெசேஜை படித்து மேலும் அவரிடம் பேச, அனிதா ...
பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

பைசன் காளமாடன் விமர்சனம் | Bison Kaalamadan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்திய அணிக்குத் தேர்வான மணத்தி P. கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையைக் கருவாக எடுத்துக் கொண்டு தன்னோட வலிகளையும் ஏக்கங்களையும் இணைத்து பைசனை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். அவரது முந்தைய படங்கள் பேசிய அரசியலையும் கைவிடாமல், படத்தின் பின்னணியாக வெங்கடேச பண்ணையார் - பசுபதி பாண்டியன் பகையின் பின்னணியில், கபடியில் சாதிக்க நினைக்கும் கபடி வீரனின் சமூகச் சூழலையும் மனநிலையையும் பதிந்துள்ளார். கபடி என்றால் வனத்தி கிட்டான்க்கு உயிர். அவனது திறமையைக் கண்டு ஊக்குவித்துத் தொடர்ந்து விளையாட வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறார் கந்தசாமி. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய அணியின் சார்பில் சர்வதேசப் போட்டிகளில் விளையாட இடம் பிடிக்கிறார். கிட்டானின் இந்த சாதனைப் பயணம் எத்தகையது என்பதைப் பற்றிய படம்தான் பைசன் காளமாடன். கிட்டானின் குலதெய்வம் காளமாடன் ஆவார். சீறிப் பாயும் கிட்டானின் திறம்பட்ட விளையாட்டைச் ச...
டியூட் விமர்சனம் | Dude review

டியூட் விமர்சனம் | Dude review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"தாலி முக்கியமில்லையா?""இல்ல. அதுக்குப் பின்னாடி இருக்கிற பொண்ணோட மனசுதான் முக்கியம்." Z தலைமுறையினருக்கான ஒரு கொண்டாட்டமான படத்தில், புனிதமென சினிமா அடைகாத்து வந்த தாலி சென்ட்டிமென்ட்டைச் சுக்குநூறாக அறுத்தெறிந்து விட்டுள்ளார் அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன். படத்தின் முதல் காட்சியே, நாயகன் தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்குப் சென்று கோபாவேசத்தில் யதேச்சையாக அவளது தாலியை அறுத்துவிடுகிறான். அவனை அடி வெளுத்து விடுகின்றனர். படம் இப்படி நகைச்சுவையாகத் தொடங்கினாலும், படம் மிக அழுத்தமாகத் தமிழ் சினிமா வியந்தோதி வந்த தாலி சென்ட்டிமென்ட்டை அடி வெளுத்துள்ளது. அந்த 7 நாட்கள் அம்பிகா, சின்ன தம்பி குஷ்பு, புதுப்பேட்டை சோனியா அகர்வால் என இந்த தாலி பல பெண்களைக் காவு வாங்கியுள்ளது. நாயகன் அணிவிக்கும் ஐடி கார்டைப் தாலியாகப் பாவித்துக் கண்ணில் ஒத்திக் கொள்ளும் முன்னாள் காதலி, கல்யாணத்திற்குப் பின...
டீசல் விமர்சனம் | Diesel review

டீசல் விமர்சனம் | Diesel review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பார்க்கிங், லப்பர் பந்து முதலிய வெற்றிப்படங்களை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்' ஆகும். இயக்குநர் சண்முகம் முத்துசாமி கச்சா எண்ணெய் பின்னணியில் பல அதிர்ச்சிகரமான விஷயங்களை விவாத்துள்ளர். சென்னை கடலோரப் பகுதியில் வசிக்கும் மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தையே கேள்விக்குள்ளாக்கும் சில விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கின்றன. நாயகன் ஹரிஷ் கல்யாணும், அவரது வளர்ப்பு தந்தை சாய்குமாரும் கச்சா எண்ணெய் கடத்தல் தொழிலில் கிங்-பின்னாக இருக்கிறார்கள். அவர்களது ஆதிக்கத்தைப் பிடிக்காத இன்னொரு கோஷ்டி அந்தத் தொழிலைக் கைப்பற்ற காவலதிகாரி வினய் உதவியுடன் இயங்குகிறது. அதே நேரம் கார்ப்பரேட் முதலாளி ஒரு தனியார் துறைமுகம் ஒன்றை அமைக்க காய் நகர்த்துகிறார். இந்தச் சூழலில் மீனவர்கள் நிலை என்ன ஆனது, அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆனது, கார்ப்பரேட் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டதா போன்ற கேள்விகள...
மருதம் விமர்சனம்

மருதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மருதம் என்பது வயலையும், வயல் சார்ந்த இடங்களையும் குறிக்கும் ஒரு நிலப்பிரிவைக் குறிக்கும் திணையாகும். தமிழ் சினிமாவில் விவசாயிகளை வைத்து, ‘விவசாயின்னா யார் தெரியுமா? அவன் சேத்துல கால் வைக்கலனா சோத்துல நாம கை வைக்க முடியுமா?’ என்பது போலவே உணர்வுகளைப் பிழிந்து, அதை வைத்து கல்லா கட்டி விட்டன பல படங்கள். ஆனால் கன்டென்ட்டுக்காக விவசாயியைப் பற்றி எடுக்காமல், விவசாயிகளின் யதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காட்டி, அத்தோடு அப்படி பல விவசாயிகள் சில மோசடி பேர்வழிகளிடம் சிக்கித் தங்கள் சொத்தை, வாழ்வை இழந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படமே மருதம் ஆகும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தன் சொந்த நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து, மனைவி, மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விதார்த். அரசுப் பள்ளியை விட தன் மகன் தனியார் பள்ளியில் படித்தால் தான் அவன் வாழ்க்கை பிரக...
Kantara: Chapter 1 விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு. கனகவதியாக ருக்மிணி...
இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
மருதம் – SRM உதவி பேராசிரியரின் இயக்கத்தில்

மருதம் – SRM உதவி பேராசிரியரின் இயக்கத்தில்

சினிமா, திரைச் செய்தி
அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் C வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்” ஆகும். சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர் அருள்தாஸ், "கஜேந்திரன் சார் முன்பே அறிமுகம். 10 வருடங்கள் முன்பு என்னை அழைத்து ஃபிலிம் இன்ஸ்டியூட் முடித்துள்ளேன். ஒரு குறும்படம் நடித்துத் தாருங்கள் என்றார். பின் இப்போது மீண்டும் அழைத்து படம் செய்வதாகச் சொன்னார். மகிழ்ச்சியுடன் சென்று நடித்தேன். திரையுலகில் சாதிப்பதற்காகத் துடிக்கும் அனைவருக்கும் நான் தோள் கொடுப்பேன். நண்பர் வட தமிழகத்தைச் சேர்ந்தவர். அந்தப் பக்கத்து...
Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

ஆன்‌மிகம், இது புதிது, சமூகம்
“ஷரதோத்சவ்” எனும் இலையுதிர்காலத் திருவிழாவைச் சென்னையில் 47 ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறது SMCA. நந்தனத்திலுள்ள மந்திரா கார்டனஸில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை இவ்விழா கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, முதல்முறையாகக் கிராமப்புற வங்காளம் போலவே வடிவமைக்கப்பட்ட குடில்களுக்கு மத்தியில் நவராத்திரியைச் சென்னையில் கொண்டாடுகின்றனர். சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கித் தொடங்கப் பெறும் இந்த விழா, இசைக் கச்சேரிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் மேடை அரங்கேற்றங்கள், உணவுத் திருவிழா, பல்வேறு போட்டிகள், குலுக்கல் முறை பரிசுகள் என பிரம்மாண்டமாய் ஐந்து நாட்கள் நிகழ்கின்றன. பல்வேறு சிறப்புமிக்க வணிக அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன. SMCA - நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகி...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...
மருதம் – விவசாயியும், விவசாயி வாழ்வும்

மருதம் – விவசாயியும், விவசாயி வாழ்வும்

சினிமா, திரைத் துளி
அறுவர் பிரைவேட் லிமிடெட் சார்பில் C. வெங்கடேசன் தயாரிப்பில், விதார்த் நடிப்பில், இயக்குநர் V. கஜேந்திரன் இயக்கத்தில், விவசாயியின் வாழ்வியலை, விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாகப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “மருதம்” ஆகும். சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்கால சமூகத்தில், 'இன்னொருவனை ஏமாற்றித்தான் நாம் முன்னுக்கு வரவேண்டும். அது தவறில்லை' என்ற எண்ணம் எல்லோரிடத்திலும் மேலோங்கிவிட்டது. இப்படிப்பட்ட சமூகத்தில் ஏமாற்றத்திற்குள்ளாகிப் பாதிகப்படும் ஒரு விவசாயி, அந்த பாதிப்பிலிருந்து மீள்கிறானா, இல்லையா என்பது தான் இப்படத்தின் மையம். பரபரப்பான சம்பவங்களுடன், அழுத்தமான திரைக்கதையில் அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இயக்குநர்கள் சரவண சுப்பையா, மோகன் ராஜா, பொம்மரிலு பாஸ்கரிடம் பணி...
சரீரம் விமர்சனம் | Sareeram review

சரீரம் விமர்சனம் | Sareeram review

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தைத் தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையைச் சொல்லும் ஒரு படம் தான் சரீரம். இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கித் தயாரித்துள்ள, உன்னதமான காதலையும், கடவுள் தந்த சரீரத்தின் பெருமையைப் பேசும் இப்படத்தில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போதே காதல் வயப்படும் ஜோடியின் காதலுக்கு நாயகியின் பணக்காரக் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களிடம் இருந்து ஓடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அங்கும் அவர்கள் துரத்த தங்கள் புனிதமான காதலுக்காக நாயகன் பெண்ணாகவும், நாயகி ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாகப் பாலின மாற்றத்தை அடைந்தார்களா, அந்தக்...
காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
“படையாண்ட மாவீரா: அறம் சுமந்த ஒருவனது வரலாறு” – கெளதமன்

“படையாண்ட மாவீரா: அறம் சுமந்த ஒருவனது வரலாறு” – கெளதமன்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், “தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை. தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு ...