Author: Dinesh R

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்ஷன் கிங் அர்ஜுன்
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'பிளாஸ்ட்' திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ''இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால...

“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.
அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும்.
இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும்.
சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படு...

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்
நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு.
மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் அந்தரங்கமான தருணங்களை வீடியோவாக்கிப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார்.
சின்ன பகவதி சிண்ட்ரோமில் இருந்து வெளியில் வராத ஜெய்யின் மேனரிசங்களைப் பார்த்துப் பனையூருக்குச் சென்று இளைய தளபதியை எப்படியாவது மீண்டும் நடிக்க அழைத்து வந்துவிட வேண்டுமெனப் படத்தில் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார் யோகிபாபு. இயக்குநரும...

கருப்பு விமர்சனம் | Karuppu review
நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும்.
பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து பெற பேபிகண்ணனின் உதவியை நாடிச் சிக்கிக் கொள்கின்றனர். நான்கு மாதமாகியும் நகைகள் கிடைத்தப்பாடில்லை. கருப்புக்கு மிளகாய் அரைத்துப் பூசி நியாயம் வேண்டுகிறார் பினுவின் தந்தையாக நடித்துள்ள இந்திரன்ஸ். பினுவாக நடித்துள்ள அனகா மாயா ரவியும், இந்திரன்ஸும், தங்களது நடிப்பால் ...

EXAM விமர்சனம் | Amazon Prime Video
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் - காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.
தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது.
டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது.
மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம்...

இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana
'வடசென்னை 2' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில், தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாகப் பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.
இந்தப் பரபரப்பான அறிவிப்பைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலகப் பயணத்தை பற்றிய உரையாடல் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றது. வடசென்னை பட...

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்
BV ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும்.
மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இயக்குநர் சசி, “பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்...

ரவீந்திர சங்கீதம் – என்றும் புதுமை | Sur O Lohori
கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 165 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், ‘Sur O Lohori (இசையும் தாளகதியும்)’, கலை மற்றும் கலாச்சார நிறுவனம் மூலம் மெல்லிசை இசை அஞ்சலி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருபது பாடல்களுடன் நூறு குரல்களில் இசைக்கப்பட்ட ரவீந்திர சங்கீதம், சென்னையில் கோலாகலமாக அரங்கேறியது. ஒரு பான் இந்தியா நிகழ்வாக, நாட்டின் 11 முக்கிய நகரங்களில் இக்கொண்டாட்டம் நடைபெறுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அருந்ததி டெப், மெல்லிசை ட்யூன்களின் கருத்தாக்கத்திற்கும் இசையமைப்பிற்கும் மூளையாக இருந்து இந்நிகழ்ச்சியை இயக்கினார். ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு கலாச்சார நிறுவனம் நிகழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது.
Chironutan எனப் பெயரிடப்பட்ட இந்நிகழ்வு, மே 10 ஆம் தேதி அன்று மாலை, சத்யபாமா பல்கலைக்கழகத்தின் RJ ஆடிட்டோரியத்தில், நூறு பாடகர்கள் ஒத்திசைவான குரலில் பாட அற்புதமாக அரங்கேறியது. கூடுதல் சிறப்பம...

REMINA | மறதியில் இருந்து கண்ணியமான வாழ்விற்கு
டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடு பராமரிப்பில் கண்ணியம், தனிப்பயனாக்கம் மற்றும் மனிதத் தொடர்பை மீண்டும் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட, ரெமினா என்ற செயற்கை நுண்ணறிவுத் துணை இயங்குதளத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.“அன்பு. அக்கறை. நினைவாற்றல்” என்ற உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ரெமினா, டிமென்ஷியாவுடன் வாழும் நபர்களின் கதைகள், நினைவுகள், அன்றாடப் பழக்கவழக்கங்கள், விருப்பங்கள் மற்றும் தனித்துவத்தைக் கதைப்புத்தகமாகச் சேமிப்பதன் மூலம் அவர்களுக்கு ஆதரவளிக்க ஒரு புதிய வழியை அறிமுகப்படுத்துகிறது. ஒரு பராமரிப்புத் திட்டத் தளம் அல்லது ஒரு டிஜிட்டல் மருத்துவப் பதிவேடு என்பதைத் தாண்டி, டிமென்ஷியா மற்றும் நினைவாற்றல் குறைபாடுள்ள நபரைப் புரிந்து கொள்ள குடும்பங்கள், பராமரிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் உதவி பெறும் வாழ்க்கைக் குழுக்களுக்கு உதவும் வகையில் ரெமினா ...

29* விமர்சனம் | 29 Tamil movie review
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை.
இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் (5), கூதிர் காற்று, அறுந்த காற்றாடி (6), கவிழ்த்துப் போட்டா ரோஜாக்கள் (7), காதல் மனசின் அதிகபிரசங்கித்தனம் (8), நெருப்பின் நடனம் (9), சான்றோன் எனக் கேட்ட காதலி (10) என்பனவே அவ்வத்தியாயங்களுக்கு ரத்ன குமாரிட்ட தலைப்புகளாகும்.
அயோத்தி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரீத்தி அஸ்ரானி, 21 வயது பெண் விஜியாக இப்படத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். The Wo...

சேயோன் படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் அன்று, அவர் 'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.பாக்யஸ்ரீ போர்ஸை ‘சேயோன்’ குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்று மகிழ்வதுடன், இத்திறமைமிக்க நடிகை இந்த விறுவிறுப்பான திரைப்படத்தின் ஓர் அங்கமாக இணைந்திருப்பதால், படக்குழுவினர் ஒரு உற்சாகமான ...

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்
யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா?
ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் காரில் வந்த ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் என்கிறது அக்குழந்தை. ஆறு பிணங்களுக்கு மத்தியில் காருக்குள் ஒரு ஆறு வயது குழந்தை மட்டும் கால் சென்ட்டர் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது என படம் தொடங்கிய 25 ஆவது நிமிடத்தில், நம் மொத்த உலகத்தையும் காலுக்கடியில் நழுவ வைத்து விடுகிறது. சுமார் இரண்டரை மணி நேரம...

29* – தன்னை யாரென உணர்தல்
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் '29' திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் 'Welcome To The World of 29' என்ற பிரத்தியேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், "இந்தப் படத்தின் கதை காதலைப் புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்தக் கதை என்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டது. இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலைப் பேசும் படைப்பாக '29' இருக்கும். தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும்" என்று நம்பிக்கை தெரிவித்...

கர விமர்சனம் | Kara review
போர் தொழில் இயக்குநரின் இரண்டாவது படமென்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கூடுதலாக இருந்தது. 1990 காலகட்டத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர் எழுத்தாளர் ஆல்ஃப்ரெட் பிரகாஷும், இயக்குநர் விக்னேஷ் ராஜாவும். அதற்கு ஒரு வலுவான காரணமும் இருக்கிறது. அது கதை சார்ந்த காரணமல்ல, லாஜிக் சார்ந்த காரணம். கதை, படத்தில் நேர்கோட்டில் இருந்தாலும், அதை இன்னும் நேர்க்கோட்டில் சொல்ல வேண்டிய பொறுப்புடன், கதையைச் சிம்பிளாகச் சொல்ல முயற்சி செய்கிறோம்.
தனுஷ் தனது 16-ஆவது வயதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தனது கிராமத்தில், தன் அப்பாவிடமிருந்து பணத்தைத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார் (இவை காட்சிகளாக இல்லை), அதன்பின், தன் இளம் வயதில், திருச்சி அருகேயுள்ள திருவெறும்புதூரில் ஒரு எம்.எல்.ஏ வீட்டில் திருடுகிறார் தனுஷ். அந்தத் திருட்டில் மாட்டியும் விடுகிறார்....


