Shadow

சினிமா

தங்க மீன்கள் விமர்சனம்

தங்க மீன்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான்.செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ போன்ற பாடல்களில் செல்லம்மாவின் குறும்புத்தனம் இயல்பாய் உள்ளது. நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் மனதை வருடுகின்றன. காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வரும் பெண்களின் அடையாளமாய் வடிவு எனும் கதாபாத்திரத்தில் ஷெல்லி கிஷோர் நடித்துள்ளார். படத்தில் இவர் செல்...
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

சினிமா, திரைத் துளி
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது'  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்கப்பட்டார்.இந்த ஜோடி தேர்வைப் பற்றி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிகச் சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்தக் கதா...
மூடர்கூடம் விமர்சனம்

மூடர்கூடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.வெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் நாயகன் என இவரை மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளலாம். இவருக்கு ஜோடியாக சிந்து ரெட்டி சில நிமிடங்கள் தோன்றி மறைகிறார். தாடி வைத்த முகத்துடன் வரும் குபேரன் சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கிறார். ஒரு வீட்டிற்குள் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது என்றாலும், படத்தின் இறுதியில் ஃப்ரேம் முழுவதையும் ஆட்கள் நிரப்பிக் கொள்கிற...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இன...
“அம்மா அம்மம்மா” – சரண்யா

“அம்மா அம்மம்மா” – சரண்யா

சினிமா, திரைத் துளி
ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.“நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச்  சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக, அந்தக் குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா  கெஞ்ச, குழந்தையை அவர்களிடம்...
“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

சினிமா, திரைத் துளி
பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ' ஷிவானி'  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண்  புகைப்பட நிருபருக்காக அழுகிறது.  என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறே...
தலைவா விமர்சனம்

தலைவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தலைவா - எதிர்ப்பார்ப்பிற்கும், எதிர்ப்பிற்கும் காரணமான தலைப்பு. இயக்குநர் விஜயும் நடிகர் விஜயும் இணையும் முதல்படம். சற்றே பெரிய படம். காதலியை அழைத்துக் கொண்டு தந்தையைப் பார்க்க இந்தியா வருகிறான் விஸ்வா. தொழிலதிபர் என நினைத்துக் கொண்டிருந்த தந்தை, மக்கள் கூட்டம் ஒன்றின் தலைவர் எனத் தெரிய வருகிறது. தன் கண் முன்பே இறக்கும் தந்தையின் மறைவிற்குப் பின், விஸ்வாவின் நிலைப்பாடு என்ன என்பது தான் கதை.டான்ஸ் மாஸ்டர் விஸ்வாவாக விஜய். இளமை துள்ளலுடன் அமைதியாக அசத்துகிறார். சுமார் ஒரு மணி நேரம் படம் கவிதை போல் அழகான காதல் கதையாக நகர்கிறது. இடைவேளை வரை பார்த்த அதே விஜய் மீண்டும் இரண்டாம் பாதியிலும். ஆனால் துள்ளல் குறைந்து, முகத்தில் எதையோ சாதிக்கத் (!?) துடிக்கும் தீவிரத்தை பிரதிபலித்தவாறே உள்ளது அவர் முகம். ஆனால் படத்தில் விஜய் அதிர்ந்து ஒரு குத்து வசனம் கூட பேசாதது மிகப் பெரிய ஆறுதல். ஆன...
ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

ஆதலால் காதல் செய்வீர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
101 நிமிடப்படம்.   கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.    கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் வைத்திருக்கான் என நம்புவதை முதலில் தமிழ்ப்பட நாயகிகள் நிறுத்த வேண்டும். உயிரின் மதிப்பை அறியாதவனின் மன முதிர்ச்சி எந்த அளவில் இருக்கும்? தற்கொலை என அச்சுறுத்தி நாயகியிடம் ஈட்டிய வெற்றித் தந்த குதூகலத்தில், கல்யாணத்திற்காக கையை அறுத்து பெற்றோரை அடிபணிய வைக்கிறான். நான் உயிரைக் கொடுக்கப் போ...
தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

தி மேன் வித் தி அயர்ன் ஃபிஸ்ட்ஸ்

அயல் சினிமா, சினிமா
2012 இல் வெளிவந்த இந்த அமெரிக்கப் படம், “இரும்புக்கை மாயாவி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு இரு வாரங்களுக்கு முன் தமிழகத் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிரபல முத்து காமிக்ஸ் நாயகனான இரும்புக்கை மாயாவியின் பெயரை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தி கொண்டுள்ளனர். படத்தில் எந்த மாயாவியும் இல்லை.ஜங்கள் வில்லேஜ் என்ற கிராமம் பல போராளி குழுக்களின் தலைமையகம். அவ்வூரின் வழியாக கொண்டு செல்லப்படும் தங்கத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்படி, லயன் குழுவின் தலைவர் கோல்ட் லயனிடம் ஒப்படைக்கிறார் அப்பிராந்தியந்தின் கவர்னர். ஆனால் கோல்ட் லயனை வஞ்சகமாகக் கொன்று லயன் குழுவின் தலைவராகிறார் சில்வர் லயன். சில்வர் லயனின் நோக்கம் தங்கத்தை அபகரிப்பது. அவரது நோக்கம் நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் நிறைவுறுகிறது படம்.படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களும் அவர்களின் ஆயுதங்களும் தான். கோல்ட் லயனின் மகனான யென் யீயின் உடை ப...
அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரையுலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக  வந்த   செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்கள்: தீயா  வேலை செய்யணும் குமாரு மற்றும் சிங்கம் 2 இல் நடித்தது தான் காரணமாகக் கூறப்படுகிறது.இந்தப் புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது, ' இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது. என்னைப் பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது  அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான். ஒரு  ஃப்ரொஃபஷ்னல்l நடிகையாக  மழை வெயில் எனப் பாராமல் உழைப்பதும், இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும், நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குநர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன். இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும்  என் வெற்றிய...
ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

ஐந்து ஐந்து ஐந்து விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும்.விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, தலையில் அடிபட்டதால் அரவிந்திற்கு ஏற்படும் கற்பனை என மருத்துவர் கூறுகிறார். லியனா என்பவர் காதலியா கற்பனையா என்ற அரவிந்தின் தேடலுக்கான விடை தான் படம்.அரவிந்தாக பரத். சிக்ஸ்-பேக் கட்டுடலுடன் களம் இறங்கியுள்ளார். நாயகர்கள் ஈர்க்குச்சி போலிருந்தாலே வில்லன்கள் ஆளுக்கொரு மூலையில் தெறித்து விழுவார்கள். சிக்ஸ்-பேக் ஹீரோன்னா சும்மாவா? மூளையின் மெமரி செல்களை அழிக்க பரத்திற்கு கரன்ட் தருகிறார்கள். பரத் துடிதுடித்துப் போய் விடுகிறார். ஆனால் உடனே எழுந்து அடியாட்களை துவம்சம் பண்ணுகிறார். முகத்தில் வெட்டுகளுடன் உம்மென்று வருகிறார் முதல்பாதியில். இடையிடையில் தாடியில்லாத வழவழப்ப...
வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

வணக்கம் சென்னை இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
சிவாவும், ப்ரியா ஆனந்தும் நடிக்கும்  இப்படத்தின் மூலம் இயக்குநராக திரையுலகில் கால் பதிக்கிறார் கிருத்திகா உதயநிதி. தனது  முதல் இரண்டு படங்களின் மூலம் பல இளைஞர்களின் நெஞ்சில் இடம் பிடித்துள்ள அனிருத் அந்த வேட்டையை மேலும் தொடர்கிறாரா என்று பார்ப்போம்.படத்தில் மொத்தம் 7 பாடல்கள். 1. பாடல் - ஹே காற்றில் ஏதோ புதுவாசம்  பாடியவர்கள் - பபோன், மரியா  வரிகள் - நா.முத்துக்குமார்  பர்பி படத்தில் வரும் க்யோன் பாடல் மூலம் பிரபலமடைந்த பபோன்,  தமிழில் பாடும் முதல் பாடல் இது. கலக்குகிறார் மனிதர்.இவருக்கு மறுமுனையில் பாடகர் மரியா. இவர் ஏற்கனவே ரஹ்மான் இசையில் வெளிவந்த கடல் படத்தின் "அடியே" பாடலை பாடியவர். கிதார் மற்றும் சேக்ஸோஃபோனில் தொடங்கி பல இன்ஸ்ட்ருமென்ட் மூலம்  ஒரு புத்துணர்ச்சியூட்டும் பாடலைக் கொடுத்துள்ளார் அனிருத்.2. பாடல் - ஒசக...
இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

இரண்டாம் உலகம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“இன்னிக்கு (ஆகஸ்ட் 4) ஃப்ரெண்ட்ஸ் டே. லவ்வர்ஸ் டே மாதிரி இங்க ஃப்ரெண்ட்ஸ் டே கொண்டாடப்படலை. அதற்கு காரணம், செல்வராகவன் மாதிரி இயக்குநர்கள் தான். எனக்கும் அவருக்கும் நேரடி பழக்கம் இல்லை. அவருடைய ‘மயக்கம் என்ன’ படத்திலும், என் ‘கோ’ படத்திலும் ஹீரோ ஃபோட்டோக்ராஃபர். சோ ஃபோன் பண்ணி அரை மணி நேரம் கதை சொன்னேன். ஆனா அவர் தனுஷை வச்சு பிளான் பண்ணியிருந்த அடுத்த படத்தின் கதை இதுல இருந்தது. அவர் அந்தப் படத்தையே கை விட்டுட்டார்” என்றார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.“செல்வராகவன் படம் ஒவ்வொன்னும் ரொம்ப வித்தியாசமாக இருக்கும். அவருக்கு அவரே தான் போட்டி. இந்தப் படத்தில் என்னப் பண்ணியிருக்கார்னு பார்க்க.. சினிமாவை சேர்ந்த டெக்னிஷீயன்ஸே ஆவலாக வெயிட் பண்றாங்க. ஆர்யா.. இப்ப தான் ‘நான் கடவுள்’ பார்த்த மாதிரி இருக்கு. அதற்குள் இன்னொரு பெரிய கேரக்டர். அவரை நீங்க தினமும் காலை மகாபலிபுரத்தில் பார்க்கலாம். உடலை ஃபிட...
கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

கல்யாண சமையல் சாதம் – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
அறிமுக இசையமைப்பாளர் அரோரா புல்லாங்குழல் வாசித்து விழாவினைத் தொடங்கினார். அவர் 2000 பாடல்களுக்கு மேல் FLUTIST ஆகப் பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு இவரை இசையமைப்பாளராகப் பரிந்துரைத்தது புஷ்பா கந்தசாமி என்பது குறிப்பிடத்தக்கது.“எனக்கு இவன் நவீன். சினிமாக்காக வச்சுக்கிட்ட பெயர்தான் அரோரா. எனக்கு அவனை எப்ப தெரியும்னா.. பிறந்ததில் இருந்தே தெரியும். நானும் இவனோட சித்தப்பா வி.எஸ்.குமாரும் 35 வருட நண்பர்கள். நாங்க கிரிக்கெட் விளையாடுறப்ப இவன் பார்த்துட்டு இருப்பான். ‘ராணா’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு ம்யூசிக் போட்டிருந்தார். என்னமோ குறையுதே சார்ன்னு நான் கேட்டேன். ஃபைனல் எடிட்டிங் பண்ணிட்டா நல்லா இருக்கும். ஒரு முக்கியமான ஆளுக்காக வெயிட் பண்றேன்.. அவர் வர ரெண்டு நாள் ஆகும் என்றார். அப்புறம் ஃபைனல் எடிட்டிங் முடிஞ்சு நானும், ரஜினி சாரும் கேட்டோம். அட்டகாசமாக இருந்தது. யாரந்த முக்கியம...
சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சரண்ராஜின் மகன் தேஜ்ராஜ்

சினிமா, திரைத் துளி
“நீதிக்கு தண்டனை” படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகிற்கு அதிரடியாய் நுழைந்தவர் சரண்ராஜ்.  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, பெங்காலி உட்பட அனைத்து மொழிகளிலும் சேர்த்து நானூறு படங்களுக்கு மேல் நடித்த சரண்ராஜ், அடுத்து தனது மகன் தேஜ்ராஜ் என்பவரை நடிகராக களம் இறக்குகிறார் .“என்னை எல்லா மொழிகளிலும் நடிகனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு ரசிகனுக்கும் நான்    நன்றியுள்ளவனாக இருப்பேன். எனது மகன் தேஜ்ராஜ் நடிக்கணும்னு ஆசைப்பட்டார். உடனே ஏத்துக்கொண்ட நான் அவனை வாழ்த்தினேன்.பல இயக்குனர்கள் என் மகன் தேஜ்ராஜை வாழ்த்தி இருக்கிறார்கள். நிறைய இயக்குனர்கள் அறிமுகப்படுத்த ஓகே சொல்லி இருக்கிறார்கள். அதுபற்றி அறிவிப்பு விரைவில் வரும்” என்றார் சரண்ராஜ். “பாண்டியன் மாஸ்டரிடம் ஸ்டன்ட், ரகுராம் மாஸ்டரிடம் நடனம், பாலு மகேந்திராவின்  பயிற்சி பட்டறையில் நடிப்பு எனப் பயிற்சியு...