
தங்க மீன்கள் விமர்சனம்
சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான்.செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ போன்ற பாடல்களில் செல்லம்மாவின் குறும்புத்தனம் இயல்பாய் உள்ளது. நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் மனதை வருடுகின்றன. காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வரும் பெண்களின் அடையாளமாய் வடிவு எனும் கதாபாத்திரத்தில் ஷெல்லி கிஷோர் நடித்துள்ளார். படத்தில் இவர் செல்...















