Shadow

சினிமா

சொன்னா புரியாது விமர்சனம்

சொன்னா புரியாது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"ஏன்டா.. கல்யாணமே வேணாம்னு சொல்ற?""உங்களுக்கு சொன்னா புரியாது" என கிட்டர் எடுத்துப் பாடத் தொடங்கி விடுகிறார் ஷிவா. படத்தின் தலைப்பை எப்படி நியாயப்படுத்தியிருக்கார் பாருங்க இயக்குநர்?வோல்க்ஸ்வேகன் கார் வாங்க வேண்டும் என்பது தான் ஷிவாவின் 20 வருடக் கனவு. அந்தக் கனவு நிறைவேறியதா என்பதற்கு பதிலுடன் படம் சுபமாய் முடிகிறது.டப்பிங் ஆர்டிஸ்ட் ஷிவாவாக ஷிவா. தமிழ்நாட்டின் மானத்தைக் காக்க அறிமுகமாகி, விக்ரமின் ‘லாலா’விலிருந்து, ரஜினியின் ‘அஜக்குன்னா அஜக் தான்’, மொழிபெயர்க்கப்படும் ஜெட்லி பட வசனம், சாம் அன்டர்சனின் நடனம் எனப் பாரபட்சமில்லாமல் அனைவரையும் கலாய்க்கிறார். கோபம், வருத்தம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்துப் உணர்ச்சிகளுக்கும் சிரித்தவாறே முகத்தை வைத்துள்ளார். அவரது அனைத்துப் படங்களைப் போலவே, எந்தச் சூழ்நிலையிலும் அசால்ட்டாக வசனம் பேசி ரசிக்க வைக்கிறார். அஞ்சலியாக வசுந்தரா ...
பட்டத்து யானை விமர்சனம்

பட்டத்து யானை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பட்டத்து யானை – அரச சின்னங்களைத் தாங்கியதும், அரசன் பவனி வரவும் அரண்மனையில் வளர்க்கப்படும் யானை. அப்படி யார் இந்தப் படத்தில் யானை என்று தெரியவில்லை. ஐஸ்வர்யாவை வில்லன்களிடமிருந்து ஏன், எதற்கு, எப்படி சரவணா காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.சமையல்காரர் சரவணனாக விஷால். படத்தின் முதற்பாதியின் கடைசியில் அடிக்கத் தொடங்குபவர், அதன்பின் படம் முடியும் வரை அனைவரையும் சகட்டுமேனிக்கு பறக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். டி.வி.எஸ். 50, கோயில் உண்டியல், பெரிய இரும்பு ஜல்லிக் கரண்டி, சோடா பாட்டில், பீர் பாட்டில் என ஒருமுறை உபயோகித்த ஆயுதத்தை மறுமுறை உபயோகிக்க மாட்டேங்கிறார். எத்தனையோ பேருடன் எவ்வளவோ சண்டைப் போட்டாலும்.. சட்டை கிழிந்து விடாமல் அலேக்காக வில்லன்களை துவம்சம் செய்யும் மாபெரும் சண்டக்கோழியாக உள்ளார். ஒரு துளி ரத்தம் சிந்தாமல், அனைவரையும் இரத்தக்களறியாக்கி சிதறவிடுகிறார். பிரதான வில்லனாக்...
சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சினிமா, திரைத் துளி
சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர்கள்:>> அஜீத்  >> நயன்தாரா >> ஆர்யா >> ராணா டகுபதி >> தாப்ஸி >> கிஷோர் >> அதுல் குல்கர்னி >> மகேஷ் மஞ்சுரேக்கர் >> சுமா ரங்கநாத்பணிக...
கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடித்த  3  படத்தைத்  தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?பிறக்கின்ற குழந்தைகள் யாரு...
மரியான் விமர்சனம் விமர்சனம்

மரியான் விமர்சனம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் 13 வருட காத்திருப்புஒருவழியாகத் திரையேறி விட்டது.சூழலால் நீரோடி கிராமத்தில் இருந்து சூடான் நாட்டிற்கு வேலைக்கு செல்லும் மரியான், அந்நாட்டில் ஏற்படும் பிரச்சனையில் இருந்து தப்பினானா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.அம்பிகாபதியில் அசத்திய தனுஷின் நடிப்பு கண்ணிலிருந்து மறையும் முன் மரியானில் மீண்டும் தனது நடிப்புத் திறமையை மேலும் அழுத்தமாகப் பதிக்கிறார். 2011 இல் வெளிவந்த மயக்கம் என்ன படத்திலிருந்தே பெரிதும் வியக்க வைக்கிறார். காதல், பிரிவு, வலி, உறுதி, எழுச்சி எனப் படத்தினை ஐந்தாகப் பிரித்துள்ள இயக்குநரின் எதிர்பார்ப்பை, தனது நடிப்பால் சிந்தாமல் சிதறாமல் பூர்த்தி செய்துள்ளார் தனுஷ். முதல் காட்சியிலிருந்து படம் முடியும் வரை தொண்ணூறு சதவிகிதத்திற்கும் மேலான காட்சிகளில் நீக்கமற நிறைந்துள்ளார். தனுஷின் நண்பன் சக்கரையாக வரும் அப்புக்குட்டி எப்பொழுதும் போல் பாத்திரமாகவே வந்து ...
சிங்கம் II விமர்சனம்

சிங்கம் II விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிங்கம்வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் மூன்று வருடங்களுக்குப் பின் வந்துள்ளது.தூத்துக்குடியில் நடக்கும் போதைப் பொருள் வியாபாரத்தை எப்படி துரைசிங்கம் வேரோடு சாய்க்கிறார் என்பது தான் படத்தின் கதை.துரைசிங்கமாக சூர்யா. கையிலும், கண்ணிலும் நெருப்பு எரிகிறது. சராமாரியாக அனைவருக்கும் அட்வைஸ்களை வாரி வழங்குகிறார். ஆனால், “ஆஃப்ரிக்க குரங்கு” என இனவெறியில் பிரதான வில்லனைத் திட்டுறார் ஊருக்கு உபதேசம் செய்யும் சிங்கம். சமீபத்தில் வெளிவந்த எதிர்நீச்சல் படத்தில், மராத்தான் போட்டியில் ஓடும் நைஜிரீயர் ஒருவர் தாகத்தில் தவிக்கும் சிவகார்த்திகேயனுக்கு தண்ணீர் தரும் காட்சி ஏனோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. நீதியையும், தர்மத்தையும் காப்பாற்ற துரைசிங்கம் சுமார் 25 பேரை சுட்டுக் கொல்கிறார். அதில் 14 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் தென் ஆஃப்ரிக்காவினர். ‘காத்திருத்தல் தான் காதல்’ எனச் சொல்வதற்கு மட்...
அம்பிகாபதி விமர்சனம்

அம்பிகாபதி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அம்பிகாபதி – தனுஷ் நடித்த ராஞ்சனா ஹிந்திப் படத்தின் தமிழ் டப்பிங். 1937இலும் 1957இலும் வெளிவந்த ‘அம்பிகாபதி’ படத்தில், நாயகனுக்கு ஏற்படும் முடிவு தான் இப்படத்தின் நாயகனுக்கும் ஏற்படுகிறது. அதனால் தான் இந்தத் தலைப்பை நீதிமன்றம் வரை சென்று சமரசம் பேசி பெற்றனர் போலும்.காசி வாழ் தமிழ் அர்ச்சகரின் மகன் குந்தன் ஷங்கர். அவனுக்கு முஸ்லீம் பெண்ணான ஜோயா மீது காதல். ஜோயாக்கோ ஜஸ்ஜீத் சிங் மீது காதல். இந்த முக்கோணக் காதல் கதை தான் படத்தின் கதை.குந்தன் ஷங்கராக தனுஷ். நமக்கு மிகவும் பழக்கப்பட்ட தனுஷ். சோனம் கபூர் தனுஷின் கன்னத்தில் அறைந்தால், கிடைத்தற்கரிய ஏதோ பெற்றதாய் அழகாக பதினைந்து முறையும் இளிக்கிறார். ‘என்னைப் பார்க்கப் பார்க்க தான் பிடிக்கும்’ என வம்படியாகச் சுற்றி காதலிக்க வைப்பதிலிருந்து, கையை அறுத்து அச்சுறுத்தி காதலிக்க வைப்பதற்கு முன்னேறியிருக்கார். குழப்பமும், சுயநலமும் மிக்க இளைய சம...
தலைவா இசை – ஒரு பார்வை

தலைவா இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின்  படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், விஜய்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம். நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். 1. பாடல் - தமிழ் பசங்க  பாடியவர்கள் - பென்னி டயால், ஷீஷே - சைகோ யூநிட்தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் "டான்சராக" நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.2. பாடல் - யார் இந்த சாலையோரம்  பாடியவர்கள் - ஜீ.வி பிரகாஷ், சைந்தவி "யார் இந்த சாலையோரம்"...
“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, 'ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)' தான்.ஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.ஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், 'சம்திங் சம்திங்' என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.ராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த ப...
தில்லு முல்லு விமர்சனம்

தில்லு முல்லு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
1981-இல் பாலசந்தரின் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தில்லு முல்லு’ வெளியானது. சிவாவை நடிக்க வைத்து அப்படத்தை ரீ-மேக்கியுள்ளார் இயக்குநர் பத்ரி.முருக பக்தரான சிவகுருநாதரிடம், பக்திப் பழமாக வேடமிட்டு வேலையில் சேருகிறான் பசுபதி.  வேடம் கலையாமல் இருக்க பொய் மேல் பொய் சொல்கிறான் பசுபதி. பசுபதியின் வேடம் எப்படிக் கலைகிறது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.எப்பொழுதும் போல் அதிக சிரமப்படாமல், தன் கதாபாத்திரத்தை சிரித்து முகமாக ரசித்துச் செய்துள்ளார் சிவா. அவரது பலமே சீரியசான நேரத்திலும் அசால்ட்டாக வசனம் பேசுவது தான்.  “இது என்னோட ராஜினாமா லெட்டர். இது என் தம்பியுடைய ராஜினாமா லெட்டர். சைனீஸ்ல எழுதியிருக்கு” என சிவா சொல்லும் பொழுது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது.தமிழ்ப் பேசும் நல்லுலகத்திற்கு "கலாய்" என்னும் வார்த்தையைத் தந்துள்ளார் சிவா. சிவாவால் காதலிக்கப்படும் பெண்ணாக இஷா தல்வார் அறிமுகமாகி உள்ளா...
தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

தீயா வேலைசெய்யணும் குமாரு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
47616542891*வது தடவையாக வெள்ளைத் தோலினையுடைய பெண்கள் காதலிக்கப்பட வேண்டியவர்கள் எனச் சொல்லும் தமிழ்ப் படம்.சஞ்சனாவைப் பார்த்த நொடியிலேயே, குமாருக்கு சில்லென சாரலடித்து அவள் மேல் காதல் வந்துவிடுகிறது. பிறகு குமார் எப்படித் தீயாக வேலை செய்து சஞ்சனாவை காதலிக்க வைக்கிறான் என்பதே கதை.குமாராக சித்தார்த். வாயில் விரல் வைத்தாலும் கடிக்கத் தெரியாத அப்பாவி ஐ.டி. தொழிலாளியாக நடித்துள்ளார். உதயம் NH4-இல் சீரியசாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த சித்தார்த், இப்படத்தில் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டிருப்பவராக வழக்கம் போல் வந்து அசத்துகிறார். காதலித்து திருமணம் புரிந்துக் கொள்ளும் வம்சாவழியில் வந்த சித்தார்த், காதலிக்க யோசனைக் கேட்டு ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறார். இந்தச் செலவழித்தல் நகைச்சுவைப் பிரிவில் வருகிறது. காதலிக்க ஐடியா சொல்லி சம்பாதிப்பவராக சந்தானம். சித்தார்த்தின் அறிமுகம் கூட படத்தில் சா...
“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குநர்களிடமும் நடிகர்கள் நடிகைகளிடமும், " 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன் மீதி மருத்துவச் செலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள்' என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர். என் பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர்.  அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அதை செய்த நபர்தான் என் ...
“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை! தனது ஆன்மீகப் பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருப்பார். இப்போது அவருக்கு பிடித்தமான, தோதுவான களத்தில் மீண்டும் இறங்குகிறார். அதாவது தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும் தயாரிப்பாளரும் நடிகருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான பாத்திரத்தில்  நடிப்பதோடு, கதை விவாதத்திலும் கலந்துக் கொள்கிறார்.  பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றிப் பாடிய பாடல் வரிகள் இதுதான்.'குட்டிப் பயலே.. குட்டிப் பயலே.. எதை தேடி நீ ஓடுற?சுட்டிப் பயலே.. ...
ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தனது தயாரிப்பு நிறுவனமான 'லோன் வொல்ஃப் (Lone wolf)' என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு, இயக்குநர் மிஷ்கின்  இயக்கி  நடித்து வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! வழக்கு எண்: 18/9 இல் நாயகனாக நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டி குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் 'ஃபர்ஸ்ட்  டீசர்' சமீபத்தில் வெளியானது. அதில் ஓடும் ட்ரெயினில் இருந்து மிஷ்கின் குதிப்பது போலொரு காட்சி வருகிறது.இது பற்றி இப்படத்தின் ஃபைட் மாஸ்டர் 'பில்லா' ஜகன், ''ரயில் வேகம் காரணமாகவும் அதன்  தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் மிஷ்கினோ 'தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்' என பிடிவாதமாகக் கூ...
“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
அறிமுகமான  'அபியும் நானும்' முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான 'உன்னை போல் ஒருவன்', வெளி வர இருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சந்திரா' முதல் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், "நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது  என்பது அறிய வரம். எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே  என் குறிக்கோள். மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும். இணை நாயகன், துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாபாத்திரம் கவர வேண்டும். அதுதான் என் உண்மையான வெற்றி. மக்கள்  மத்தியில் என் மு...