Shadow

சினிமா

ஆரம்பம் விமர்சனம்

ஆரம்பம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை  ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ஆகவே...
சுட்ட கதை விமர்சனம்

சுட்ட கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சுட்ட கதை – முழு நீள ஃபேண்டசி தமிழ்ப்படம்.‘பாஸ்மார்க்’கில் (BOSSMARK) குடித்து விட்டு ஒருவரை ‘சுட்டு’க் கொலை செய்து விடுகிறார் கோரமலை கான்ஸ்டபிள் ராம்கி. பின் என்னானது என்பது தான் சுட்ட கதை.கான்ஸ்டபிள் ராம்கியாக பாலாஜி. அவர் அனிச்சைத் திருட்டு (Kleptomania) எனும் உளக்குறையால் பாதிக்கப்பட்டவர். இவரும் வலப்பக்க காது கேளாதவருமான கான்ஸ்டபிள் சங்கிலிராயனும் லட்சியவாதிகள். கோரமலையில் தர்மத்தை நிலைநாட்டுவது தான் அவர்களின் அந்த உயரிய லட்சியம். சிலந்தி எனும் மலைவாசிப் பெண்ணால் அவர்களின் லட்சியம் கொஞ்சம் சறுக்கினாலும், ஒரு கட்டத்தில் “ஃபிகரை விட தர்மமே முக்கியம்” என சிலந்தியையே தூக்கி எறிகின்றனர். கான்ஸ்டபிள் சங்கிலிராயனாக வெங்கி. இந்த இருவர் தான் படத்தின் கதாநாயகர்கள்.  சிலந்தியாக லக்ஷ்மி பிரியா. அறிமுக நாயகி. கோரமலையின் மலைவாழ் மக்களின் சாமி (அ) வீராங்கனை. இடுப்பில் ஒரு குறுவாள...
ரகளபுரம் விமர்சனம்

ரகளபுரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ரகளபுரம் - கருணாஸ் மிக சிரமப்பட்டு தயாரித்து நடித்துள்ள படம். பயந்தாங்கொள்ளி வேலுவிற்கு கான்ஸ்டபிள் வேலை கிடைக்கிறது. பிறகு என்னாகிறது என்பது தான் கதை.படத்தின் கதாநாயகன் தொடைநடுங்கி வேலுவாக கருணாஸ். தன்னை ‘கதையின் நாயகன்’ என்றே சொல்லிக் கொள்கிறார். கதாபாத்திரத்திற்கு அவர் முகம் பொருந்துகிறது. நன்றாக நடனம் ஆடுகிறார். கதைப்படி, துப்பறியும் சாம்பு பாணியில் இன்ஸ்பெக்டராகி விடுகிறார். ஆனால் அதற்கான சுவாரசியமும் திருப்பமும் போதிய அளவு திரைக்கதையில் இல்லை. மேலும் கருணாஸ் நாயகன் என்றால் நகைச்சுவைப் படமாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும், முழுவதுமாக திருப்திப்படுத்தப்படவில்லை. அறிமுக நாயகியாக அங்கனா ராய். அதாவது கருணசுக்கு ஜோடியாக ஒருவர் தேவை என்பதால் படத்தில் உள்ள ஒரு பாத்திரம். கருணாசின் அம்மாவாக உமா பத்மநாபன். சரண்யா பொன்வண்ணனை ஏனோ ஞாபகப்படுத்துகிறார். கோவை சரளா, சிங்கம்புலி ...
உலகநாயகனைச் சந்தித்த அட்லி

உலகநாயகனைச் சந்தித்த அட்லி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் அட்லி தன்னுடைய முதல் படமான 'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் நல்ல தரமான காதல் படங்களை இயக்குவதில் ஒரு நிபுணர் என்பதை தன்னுடைய முதல் படத்தின் வெற்றியிலே  நிருபனம் செய்துள்ளார். இந்த அரிய வாய்ப்பு எல்லா அறிமுக இயக்குநருக்கும் கிட்டுவதில்லை. ஆனால் இந்த  இளம்  இயக்குநர் அவர் மீது  உள்ள எதிர்பார்ப்பையும் மீறி பெரும் வெற்றி அடைந்துள்ளார். இன்று படத்தின் 25ஆம் நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ கமலஹாசனை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் அட்லி.'ராஜா ராணி படத்தை கமல் சார் தான் துவக்கினார். வெற்றி பெற்றதும் அவரிடமே ஆசி  பெற வேண்டும் , அவருக்கு இந்த வெற்றியை சமர்ப்பிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். என்னுடைய  உழைப்பு அதன்  பிரதிபலனாகக் கிடைத்த வெற்றி ஆகியவைப் பற்றி விவரமாகக் கேட்டு அறிந்தவர் , படத்தின் சிறு நுணுக்கத்தையும் விசாரித்த பொது அந்த மனிதரின்  திரையுலக...
வருகிறது கொரியன் ‘கொரில்லா’

வருகிறது கொரியன் ‘கொரில்லா’

சினிமா, திரைத் துளி
தென் கொரியாவும் சீனாவும் இணைந்து தயாரிக்கும் படம், மிஸ்டர் கோ (Mr. Go). ஆசியாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மிஸ்டர் கோ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.நவம்பர் 14 அன்று இப்படம் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கான படமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் 3டி-யில் எடுக்கப்பட்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் முதலிய மொழிகளில் வெளியாகும் முதல் கொரியப்படம் ‘மிஸ்டர் கோ’ என்பது குறிப்பிடத்தக்கது.பேஸ்பால் விளையாடும் லிங் லிங் எனும் 3டி டிஜிட்டல் கதாபாத்திரமான கொரில்லா தான் படத்தின் சிறப்பம்சம். படத்தில் 100% கொரியன் தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொரியன் பட வரலாறில் இது முதல்முறையாகும்.‘200 பவுண்ட்ஸ் ப்யூட்டி’ மற்றும் ‘டேக் ஆஃப்’ படங்களின் இயக்குநரான கிம் யாங்-க்வா (Kim Yong Hwa) தான் இப்படத்தி...
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின்  போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.                “தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,                 இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,                 கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,                 தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நன்றி”என அப்போஸ்டரில் உள்ளது.நேற்றிரவு கோவையில் விடியற்காலை 03:00 மணிக்கு படத்தின் போஸ்டரை ஒட்டினார். மேலும் அவரது பயணம் மதுரை, திருச்சி, செலம் என பல ஊர்களுக்கும் தொடரும். இந்தப் பயணத்தில், அவரது படம் வெளியிடப்பட்டிருக்கும் திரையரங்க...
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார். பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.   சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியா...
முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  'ராஜா ராணி'.அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த 'ராஜா ராணி' முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து  இதுவரை வந்த படங்களில்  இதுவே பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாட்டிலும் இந்தப் படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது.டாலர் கணக்கில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 800,000 டாலரையும் தாண்டுகிறது. மலேசியாவில் 'ராஜா ராணி'யின்  வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருக்கிறதாக விவரங்கள் தெரிவிக்கிறது.2011 ஆம் ஆண்டு வெளி வந்த 'எங்கேயும் எப்போதும்' படத...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏராளமான ஆச்சரியங்கள். அதில் பேராச்சரியமாக, ‘டாஸ்மாக்’ பாடலில்லாமல் வந்திருக்கும் மிஷ்கினின் படமிது. ஏன் மருந்துக்குக் கூட படத்தில் ஒரு பாடல் இல்லை. அதனால் படத்தில் கதாநாயகியும் இல்லை.படத்தைச் செலுத்துவது இளையராஜாவின் பின்னணி இசை. படக் கதையின் கருவிற்கு நம்மை தயார்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் இசைஞானி. அவரை கெளரவப்படுத்தும் வகையில் ‘முன்னணி இசை கோர்ப்பு’ எனப் படம் தொடங்கும் முன் எழுத்துகள் வருகின்றன. இரவில் நடக்கின்ற கதை. ஒரு படம் முழுவதும் பார்வையாளரை இருட்டினிலேயே தடுமாற்றமின்றி அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி வி.ரங்கா. ஆக படத்தின் ஒளியும் ஒலியும் படத்தின் ‘மூடை’ கன கச்சிதமாக பார்வையாளர்களிடம் கடத்துகிறது.ஆட்டுக்குட்டி சந்துருவாக ஸ்ரீ. ‘வழக்கு எண்:18/9’ படத்தில் அறிமுகமானவரின் இரண்டாவது படம். எத்தனை பேருக்கு இத்தகைய வாய்ப்பு அமையும்? மருண்ட வி...
ராஜா ராணி விமர்சனம்

ராஜா ராணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லியின் முதல் படம். எனினும் பெரிய படங்களுக்கு ஒப்பான விளம்பரத்தினை தயாரிப்புக் குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காதல் தோல்விக்கு பின்பும் காதலும்/வாழ்க்கையும் உண்டு என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை.ஏர்வாய்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் டெலிகாலர் சூர்யாவாக ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படத்தில் அதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். பயந்த சுபாவத்துடனும் கொச்சையான ஆங்கில உச்சரிப்புடனும் படத்தின் முதல் பாதி கலகலப்பிற்கு உதவுகிறார். நயன்தாராவிற்குக் கோபமாக ஃபோன் செய்து அழும் பொழுது, ‘எங்கப்பாக்கு மட்டுந்தாங்க பயப்படுவேன். மத்தபடி ஐ லவ் யூங்க’ என நயன்தாராவிடம் சொல்லும் பொழுது என பல இடங்களில் ரசிக்க வைக்க...
தங்க மீன்கள் விமர்சனம்

தங்க மீன்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான்.செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ போன்ற பாடல்களில் செல்லம்மாவின் குறும்புத்தனம் இயல்பாய் உள்ளது. நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் மனதை வருடுகின்றன. காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வரும் பெண்களின் அடையாளமாய் வடிவு எனும் கதாபாத்திரத்தில் ஷெல்லி கிஷோர் நடித்துள்ளார். படத்தில் இவர் செல்...
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

சினிமா, திரைத் துளி
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது'  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்கப்பட்டார்.இந்த ஜோடி தேர்வைப் பற்றி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிகச் சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்தக் கதா...
மூடர்கூடம் விமர்சனம்

மூடர்கூடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.வெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் நாயகன் என இவரை மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளலாம். இவருக்கு ஜோடியாக சிந்து ரெட்டி சில நிமிடங்கள் தோன்றி மறைகிறார். தாடி வைத்த முகத்துடன் வரும் குபேரன் சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கிறார். ஒரு வீட்டிற்குள் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது என்றாலும், படத்தின் இறுதியில் ஃப்ரேம் முழுவதையும் ஆட்கள் நிரப்பிக் கொள்கிற...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இன...
“அம்மா அம்மம்மா” – சரண்யா

“அம்மா அம்மம்மா” – சரண்யா

சினிமா, திரைத் துளி
ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.“நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச்  சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக, அந்தக் குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா  கெஞ்ச, குழந்தையை அவர்களிடம்...