
பண்ணையாரும் பத்மினியும் – இசை வெளியீட்டு விழா
விழா தொடங்கும் முன், ஃபியட் கார் வைத்திருப்பவர் சிலரின் அனுபவங்களைக் காணொளியாகப் போட்டனர். ‘ஃபியட் கார்களுக்கு உயிருண்டு. நம்முடன் அவை ஒரு பந்தத்தை உருவாக்கி விடும்’ என காரின் மீதுள்ள காதலோடு அவர்கள் கண்கள் மலரப் பேசினார்கள்.படத்தில் நான்கு பாடல்கள். இரண்டு பாடல்களை கவிஞர் வாலியும், மீதி இரண்டு பாடல்களை படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும் எழுதியுள்ளனர். இசையமைப்பாளரைப் பார்க்க பள்ளி மாணவனைப் போல உள்ளார். அடுத்த படத்திற்கும் தன்னை வந்து பார்க்கச் சொன்ன கவிஞர் வாலியை மிகவும் மிஸ் செய்வதாக விழாவில் சொன்னார் ஜஸ்டின்.‘உனக்காகப் பிறந்தேனே எனதழகா
பிரியாமல் இருப்பேனே பகல் இரவா’ எனத் தொடங்கும் ஒரு பாடலை கவிஞர் வாலி எழுதியுள்ளார். பண்ணையாரான ஜெயபிரகாஷுக்கும், அவரது மனைவியான துளசிக்கும் இடையே உள்ள காதலையும் அன்னியோன்னியத்தையும் பிரதிபலிக்கும் பாடலாகப் பிரமாதமாக உள...














