குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு ஒரு படம், பொங்கலுக்கு ஒரு படமென அடித்து ஆடுகிறார் அஜித். அவரது வெள்ளை-கருப்பு முடி திரையில் தெரிந்ததுமே, திரையரங்கம் அதிர ஆரம்பித்து விடுகிறது.
அடிதடிதான் வாழ்க்கை என்றிருக்கும் விநாயகம், அகிம்சாவாதியான நல்லசிவத்தின் மகள் கோப்பெரும்தேவி மீது காதல் வயப்படுகிறார். அடிதடி வாழ்க்கையா அல்லது கோப்பெரும்தேவியா என விநாயகம் முடிவெடுப்பதுதான் படத்தின் கதை.
விநாயகமாக அஜித். வெள்ளை தாடி , வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை என திரையில் ஜொலிஜொலிக்கிறார். சும்மா வந்து நின்றாலே விசில் சத்தம் காதைக் கிழிக்கிறது. எத்தனைபேர் வந்தாலும் அடித்து துவம்சம் பண்ணுகிறார். இந்தக் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு, அஜித்தின் குரலையும் தொழில்நுட்ப உதவியால் கம்பீரமாக்கியுள்ளனர்.
படத்தில் அஜித்திற்கு நான்கு தம்பிகள். தமிழ் சினிமாவின் வழக்கம்போல், அஜித் ஒரு பாசக்கார அண்ணன். பாலா தான் அஜித்தின் பெரிய தம்பி. மலையாளப் பக்க...
இந்தமுறை பொங்கல், தமிழ்த்திரைப்பட ரசிகர்களுக்கு மிகவும் விசேடமானது. நீண்ட நாள் கழித்து அதிசயமாய் இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்துள்ளது. போதாக்குறைக்கு பொங்கலைச் சிறப்பிக்க ‘கம்ப்ளீட் ஸ்டார்’ மோகன்லாலும் களத்தில் இறங்கியுள்ளார்.
மதுரையின் தனிப்பெரும் தாதா சிவன். அவர் ஏதேனும் நினைத்தாலே அதை நிறைவேற்றுவான் அவரது வளர்ப்பு மகன் சக்தி. ஒரு விபத்தினைக் காண நேர்ந்து மனம் மாறும் சக்தி, அவனது தந்தையிடம் அடிதடியை விடச்சொல்கிறான். பின் என்னானது என்பதுதான் கதை.
பலமுறை பார்த்துச் சலித்துப் போன ‘போக்கிரி’ பாத்திரத்தில் மீண்டும் விஜய். எதிரில் நிற்பவர் முகத்தைப் பார்த்துப் பேச மாட்டேங்கிறார். மோகன் லால் எவ்வளவு பெரிய ஆள்? கேரளாவிலிருந்து நமக்காக வந்திருக்காரே என்றாவது மோகன்லாலில் முகத்தைப் பார்த்துப் பேசியிருக்கலாம். பாடல் காட்சிகளில் மட்டும் அசின், நயன்தாராவின் பின்புறத்தைத் தொட்டவர்.. இப...
விஜய் – மோகன்லால் இனைந்து நடிக்கும் படம் ஜில்லா. மலையாள சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறக்கும் மோகன்லால் தமிழில் நடித்தது பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டவை.ஜில்லா படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது பற்றி?ஜில்லா படத்தில் நடிக்க முதல் காரணம் விஜய். அடுத்தது சூப்பர்குட் என்ற தரமான நிறுவனம். இதற்கெல்லாம் மேலாக நான் மலையாளப் படங்களில் பிஸியாக இருந்த வேளையில் விடாமல் என்னைத் துரத்தி கதை சொன்ன இயக்குநர் நேசன். ஏதோ வருகிறோம், போகிறோம் என்றால் மோகன்லால் எதற்கு? கதை அழகாக இருந்தது. அதில் எனது கேரக்டரும் வலுவாகப் பொருந்தும்படியாக இருந்தது.விஜய்க்கும் அப்பாவாக நடிக்கிறீர்களே? ஹீரோ இமேஜ் பாதிக்காதா?படம் பார்க்கும் யாருக்கும் அப்படியொரு கேள்வி எழாது. மதுரை மண்ணுக்கே உரித்தான வீரமும் கெளரவமும் கலந்த பாத்திரத்தில் வந்திருக்கிறேன்.தமிழில் விஜய்க்கு, பெரிய ரசிகர்கள் உள்ளனர். கேரளாவில் உங்களுக்கும்...
இசைஞானி இளையராஜா கடந்த சில வாரங்களுக்குமுன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய இளையராஜா மருத்துவர்களின் அலோசனையின்படி கட்டாய ஓய்வில் இருந்தார்.
இதனால் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாமல் போனது. இருந்தும் ரசிகர்களை ஏமாற்றாமல், வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் தோன்றி ரசிகர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தினார்.
தற்போது பூரண நலம்பெற்று மீண்டும் தன் இசைப்பயணத்தைத் தொடங்கிய இளையராஜா, புதிய உற்சாகத்தோடு கவிஞர் சினேகன் நடிக்கும் இராஜராஜ சோழனின் போர்வாள் திரைப்படத்திற்காக ஒரு பாடலை ஞாயிற்றுக்கிழமை (05.01.2014) அன்று, பிரசாத் தியேட்டரில் கம்போஸ் செய்துள்ளார். திங்கட்கிழமை (06.01.2014) அன்று, அந்தப் பாடலுக்கான குரல்பதிவு செய்யும் பணியையும் தொடர்கிறார்.
இசைஞானி உடல்நலம் பெற்று திரும்ப...
இன்றைய இளைய சமுதாயத்தினரின் தவிர்க்க முடியாத அல்லல்களை நகைச்சுவையுடன் சொல்லவரும் ஒரு திரைப்படம். நம் சமுதாயத்தின் இரண்டு கோடிகளில் உள்ள இருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் அதன் விளைவுகளும்தான் புலி வால் எனும் இத்திரைப்படம்.எந்த விலை கொடுத்தும் வெற்றியை மட்டுமே தக்க வைக்க நினைக்கும் உயர் அந்தஸ்த்தில் இருக்கும் ஓர் ஐ.டி. நிறுவனர் கார்த்திக். கார்த்திக்கின் காதலியான மோனிகா தான் அவனின் பி.ஏ.வும் கூட. கார்த்திக்காக பிரசன்னா; மோனிகாவாக ஓவியா. சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண மனிதன் காசி. காசியுடன் வேலை பார்க்கும் செல்வியும் காசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். காசியாக விமல்; செல்வியாக அனன்யா. கார்த்திக்கின் பெற்றோரால் அவனுக்கு நிச்சயிக்கப்படும் பெண் பவித்ரா. பவித்ராவாக இனியா.நீரோடையாக சென்றுகொண்டிருந்த அவரவர் வாழ்க்கையில், பவித்ரா கார்த்திக்குக்காக...
“அஜித் சார், கிராமத்துப் பின்னணில படம் பண்ணி நாளாச்சு. இது மலையாளப் படத் தழுவலோ, ரஜினியின் முரட்டுக்காளை படத் தழுவலோ இல்லை. அஜித் சாருக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். அவரோட அந்த முகத்தை இந்தப் படத்தில் காட்டியிருக்கோம். படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. எல்லாத் தரப்பினருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் ஃபேமிலி என்ட்டர்டெயினராக இருக்கும்” என்றார் இயக்குநர் சிவா. “அஜித் சாரோடவும், ஷிவா சாரோடவும் இது எனக்கு முதல்படம்” என மகிழ்ச்சியில் இருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத். படத்தின் தீம் மியூசிக் படத்திற்கான எதிர்பார்ப்பை அடுத்த கட்டதிற்கு நகர்த்தியுள்ளதாக இயக்குநர் சிவாவும் இசையமைப்பாளருக்கு நன்றியினைச் சொல்லிக்கொண்டார்.“எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும். எனக்கு அஜித் சார் படத்தில் வொர்க் பண்ணணும் என்பது தான் அந்தக் கனவு. அது நிறைவேறியதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். 110 நாள் ஷூட்...
குறிப்பிட்ட அளவு திறமைகள் உள்ள சிலர், தனது வாழ்நாளில் கற்பனைக்கு எட்டாத அளவில் பெரிய சாதனைகளையும் சாகசங்களையும் நிகழ்த்தி அசத்த விரும்புகிறார்கள். அவர்களின் சாகசக்கனவு நிறைவேற நிஜ வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத வகை வகையான சோதனைகளைச் சந்திக்கிறார்கள்.சதா சர்வகாலமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நாயகன்தான் வால்டெர் மிட்டி. லைஃப் பத்திரிகையில் வேலை செய்யும் அவன், தன்னை ஒரு விமான ஓட்டியாகவும், மருத்துவராகவும், கொலைக்காரனாகவும் வினோத விபரீதக் கற்பனையில் மிதக்கிறான்.ஆனால் நிஜ வாழ்வில் அவன் ஒரு பயந்த சுபாவம் கொண்டவன். சின்ன விஷயத்தைக்கூட சரியாக அவனால் புரிந்துகொள்ள் முடியாது! அப்படிப்பட்டவன் தன் வேலை சம்பந்தமாக உலகம் முழுக்க சுற்றுப்பயணம் செல்கிறான். அப்போது நடக்கும் சுவாரசியமான தடாலடிச் சம்பவங்கள்தான் படத்தில் வரும் மீதி கதை.1939இல் ...
ஆர்யா, விஜய் சேதுபதியுடன் புறம்போக்கு படத்தில் ஷாமும் இணைகிறார். குலு மணாலியில் ஜனவரி 14, 2014 முதல் படப்பிடிப்புத் தொடங்கவிருக்கிறது. பிக்கேனர், ஜெய்ப்பூர், பொக்ரான், ஜெய்சால்மர் என முதலில் வடஇந்திய நகரங்களில் படப்பிடிப்பு நடத்திவிட்டு ஹைதராபாத், சென்னைக்கு படப்பிடிப்பிற்காக வரவுள்ளனர்.“என் முதல்படம் இயற்கைக்குப் பிறகு ஷாமுடன் மீண்டும் இணைவதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கேன். ஷாம் வேலையில் மிகுந்த ஈடுபாடுடன் இருப்பவர். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் என 2014இன் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும். பல நடிகர்கள் ஒரே படத்தில் நடிக்கும் ட்ரெண்ட்டையும் தொடங்கி வைக்கிறோம். தலைப்பைப் போலவே படத்தின் கதையும் வித்தியாசமானது” என்கிறார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். “புறம்போக்கு பவர்ஃபுல்லான கரு கொண்ட கதை. மூன்று ஹீரோக்களுக்குமே முக்கியத்துவம் உள்ளது. ஷூட்டிங்கிற்காக ஆர்வமாகக் காத்திருக்கேன்” என்றார் ஷ...
இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.'ஆக்கோ' - சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ...
‘திருமணம் எனும் நிக்காஹ்’ நகைச்சுவை கலந்த காதல் படம். இந்து மத மற்றும் இஸ்லாம் மத திருமணச் சடங்குகளும் கலாச்சாரங்களும் படத்தில் அதன் அழகியலோடு பதியப்பட்டுள்ளதாம்.“படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம்னு யோசிச்சப்ப.. ‘நிக்காஹ் எனும் திருமணம்’ என்ற வீட்டிலிருந்த இன்விடேஷனில் பார்த்தேன். கொஞ்சம் உல்டா பண்ணி ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என மாத்திட்டேன். இந்தப் படத்தில் ஒரு அரசியல் வச்சிருக்கோம். அதாவது சகோதரத்துவத்துடன் இருவரும் இருக்கலாம் என்பதை.. ரொம்ப சிக்கலாக புனித நூல் கொண்டுலாம் சொல்லாமல் திருமணத்தில் வைக்கப்படும் உணவை வச்சியே சொல்லியிருக்கோம் ” என்றார் இயக்குநர் அனிஸ்.“இரண்டு கலாச்சாரங்களை இசையால் பிரதிபலிக்க ரீ-சர்ச் பண்ணி இந்தப் படத்திற்கு மியூசிக் பண்ணியிருக்கேன். அதனால இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்” என்றார் இசையமைப்பாளர் ஜிப்ரான். மேலும் இப்படத்தின் ஒளிப்பதிவாளரான லோகநாதனைப் பரி...
2013 ஆம் ஆண்டின் மிகப் பெரிய தமிழ்த்திரையுலக கண்டுபிடிப்பு நஸ்ரியாதான். இளமை கொஞ்சும் குறும்புடன் அறிமுகமாகி உடன் நடிக்கும் நடிகர்களிடம் இப்படி ஒரு திறமை பார்த்ததில்லை என ப் பாராட்டப்படும் நஸ்ரியாவுக்கு நேற்று பிறந்த நாள். “நடிகையாக இது என்னுடைய முதல் பிறந்த நாள். இத்துடன் என்னுடைய முதற்படமும் என்னுடைய மிக முக்கியப் படமுமான 'திருமணம் எனும் நிக்காஹ்' திரையிடப்பட தயாராக இருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் பிரியா. என் இயல்பான சுபாவத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம் இது. படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்திலும் என் பாத்திரத்தை ரசித்து நடித்தேன். இந்த இனிய பிறந்த நாளில் எனக்கு ஊக்கமும், ஆதரவும் தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி” என்றார். ...
யஷ் ராஜ் ஃப்லிம்ஸ் இந்தியத் திரையுலகில் தங்களுக்கென ஒரு பிரத்தியேக இடத்தை தரமான படங்கள் மூலம் நிர்மாணித்து கொண்டவர்கள். சர்வதேச அளவில் பெரும் வரவேற்பு கொண்டுள்ள யஷ் ராஜ் நிறுவனம் முதல் முறையாக தமிழில் 'ஆஹா கல்யாணம்' மூலம் தடம் பதிக்க உள்ளனர். ஹிந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'பேண்ட் பஜா பராத்' படத்தைத் தமிழில் தயாரித்து உள்ளனர். சடங்கு, சம்பிரதாயம் உள்ளிட்ட ஆடம்பரத் திருமணங்களைப் பற்றியும், அந்தத் திருமணத்தை நடத்தும் நிறுவனங்கள் பற்றியும், இசை கலந்த காதல் உணர்வோடு கலவையாகத் தயாரிக்கப்படும் படம் தான் ' ஆஹா கல்யாணம்'. நான் ஈ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நானி, துடிப்புள்ள நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக மும்பையிலிருந்து வரும் மற்றொரு இளம் நாயகி வாணி குப்தா நாயகியாக நடிக்கிறார் . அழகுப்புயலாக வளம் வரும் வாணி, நானியுடன் இனிப்பும் கா...
டிசம்பர் 20 அன்று உலகெங்கும் 4800 ஸ்க்ரீனில் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டிலும் 200 ஸ்க்ரீன்களுக்கு படம் திரையிடப்படுகிறது. தமிழில் ‘டப்’ செய்யப்படும் முதல் அமீர்கான் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. நேரடி தமிழ்ப்படங்களான ‘என்றென்றும் புன்னகை’ மற்றும் ‘பிரியாணி’யுடன் களத்தில் இறங்குகிறது. படத்தின் பிரமோஷனுக்காக நேற்று சில மணி நேரங்கள் சென்னை வந்து சென்றனர் படக்குழுவினர்.காத்ரீனா கைஃப் மற்றும் அபிஷேக் பச்சனுடம் முதல்முறையாக இணைந்து நடிக்கிறார் அமீர்கான். ‘கஜினி, 3 இடியட்ஸ்’ போன்ற முழு கமர்ஷியல் படங்கள், பின் சமூக அக்கறையுள்ள படங்கள் என தான் பிரித்துப் பார்ப்பதில்லை என்று கூறும் அவர், ‘நான் எதையும் திட்டமிடுவதில்லை. இந்த நொடி வாழ ஆசைப்படுறேன். எனக்கு தூம்:3 இல் இந்த பாத்திரம் பிடிச்சிருந்தது பண்றேன். வித்தியாசமான பாத்திரங்களில் பண்ணணும் என தேடிப் பண்ணுவதில்லை. ஆனால் ஒரே மாதிரி கதாபாத்த...
ஜீரோ ரூல்ஸ் என்டேர்டைன்மென்ட் தயாரிப்பில் , கவுண்டமணி நடிக்கும் 49-ஓ.சென்னையில் நேற்று துவங்கிய மழைத்துளி ஒன்று விரைவில் பெரு மழையாக பரவ உள்ளது. இது பெரு மழை.. சிரிப்பு மழை. Zero rules entertainment என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் டாக்டர் சிவபாலன் தயாரிக்க, இயக்குநர் கௌதம் வாசு தேவ மேனனின் முன்னாள் இணை இயக்குநர் ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் உருவாகும் 49-ஓ படப்பிடிப்பில் இந்த சிரிப்பு மழை பெய்தது. கதையின் நாயகனாக நடிப்பவர் கவுண்ட மணி என்றால் சிரிப்புக்கு பஞ்சமா என்ன!!! படங்களைத் தேர்வு செய்து நடிக்கும் கவுண்டமணி, இந்தப் படத்தைத் தேர்ந்தெடுக்க படத்தின் தலைப்பான 49-ஓ என்ற பரபரப்பான தலைப்பு மட்டுமின்றி, வித்தியாசமான கதை பின்னணியுமே காரணம் எனலாம்.தேர்ந்தெடுப்பதா அல்லது ஒதுக்குவதா என்பதே பின்னணி. இந்தப் படத்தில் கவுண்டமணி ஒரு விவசாயி ஆக நடிக்க அவ...