Shadow

திரைச் செய்தி

தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
தமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல். படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெளியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனம...
யுரேகாவின் தொப்பி

யுரேகாவின் தொப்பி

சினிமா, திரைச் செய்தி
மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.  நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் சுந்தரு, வெளிநாட்டில் வாழ்பவரே! அமெரிக்க வாழ்த் தமிழரின் இசையில், பாடல்கள் நேட்டிவிட்டி (Nativity) இசையுடன் ஒலிக்கிறது என்பதை விட, வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்க முடிகிறது என்பது கூடுதல் விசேஷம்.  Denotified criminals என குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி கள ஆய்வு செய்தே திரைக்கதை அம...
வில்லியாகும் ஷகிலா

வில்லியாகும் ஷகிலா

சினிமா, திரைச் செய்தி
பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள். நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் 'ஊழல்'தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர். கேமிராக்கு முன் அசிஸ்டெண்ட் கமிஷ்ணர், கமிஷ்ணரின் தங்கையாக ஒரு திருநங்கை வேடன், மனநிலை பாதிக்கப்பட்டவராக மூன்று வேடமேற்று நடித்துள்ளார் P.ரவிக்குமார். கேமிராக்கு பின் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என மூன்று வேலைகளையும் அவரே செய்துள்ளார். சென்னைவாசியான ரவிக்குமார் சினிமா கனவுகளில் மும்பைக்குச் ச...
“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

“மக்கள் நல்லவர்கள்!” – சேரன்

சினிமா, திரைச் செய்தி
‘ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தினை சேரன் முடித்து எட்டு மாதங்கள் ஆகிறது. தன் படத்தை வெளியிட்டால், வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை நிலுவுகிறது என்பதால் மாற்றுவழியை யோசித்தார். 2013இல், 298 படங்கள் தணிக்கைச் சானிறிதழ் பெற்றுள்ளன. அவற்றில் 155 படங்கள்தான் வெளியாகியுள்ளன. மீதி படங்களுக்கு திரையரங்கு கிடைக்கவில்லை. இதற்குத் தீர்வு காண, கடந்த எட்டு மாதமாக மக்களை அணுகி, திரையரங்கிற்கு வராமல் ஏன் திருட்டு டி.வி.டி.களையும், இணையத்தில் தரவிறக்கம் செய்தும் படம் பார்க்கிறார்கள் என ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அதை வீடியோவாகத் திரையிட்டனர். அனைவருக்குமே தெரிந்த பதிலைதான் ஆய்வில் சேரன் பெற்றுள்ளார். டிக்கெட் விலை ஏற்றம் மற்றும் தியேட்டர் கேண்டீனில் விற்கப்படும் பாப்-கார்ன், கோலா முதலியவைகளுக்கு ஆகும் செலவுதான் பிரதான குறையாக மக்களால் சொல்லப்படுகிறது. மல்ட்டிஃப்ளக்ஸில் நடக்கும் பார்க்கிங் கொள்ளையைப் பற...
ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

சினிமா, திரைச் செய்தி
ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் பேசியதோடு ஆர்யாவைத்தான் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நடிகைகளுக்கு மட்டுமா நண்பர்? நடிகர்களுக்கும்தான் உற்ற நண்பர்; இயக்குநர்களுக்கும் ஆத்ம நண்பர்; தயாரிப்பாளர்களுக்கும் நெருங்கிய நண்பரென! “உங்க பாடல் வெளியீட்டு விழாவிற்கே வர மாட்டீங்களே.. ‘அமர காவியம்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கீங்க...
வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஆதாமிண்ட மகன் அபூ’ எனும் மலையாளப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் டப் செய்யப்படும் முதல் தென்னிந்தியப் படமென்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. மேலும் டர்க்கீ (துருக்கி), ஈரான், மலேசியா நாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ‘சில்வர் பீகாக்’ விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கிய மது அம்பட், மணிரத்னத்தின் அஞ்சலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொழிமாற்றத்திற்கு உதவிய விஸ்வம் நம்பீசன், “இது ஹஜ் பயணம் பற்றிய கதை. ஹஜ் பயணம் எப்படிப் பண்ணணும் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சலீம் அகமது. இந்தப் படத்தை, நான் ஒரு மனிதனின் பயணமாகத்தான் பார்க்கிறேன். ஒரு உண்மையான ம...
“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

சினிமா, திரைச் செய்தி
‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம். “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை. ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்). முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில்...
மனித உரிமை பேசும் ‘யான்’

மனித உரிமை பேசும் ‘யான்’

சினிமா, திரைச் செய்தி
R.S.Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் “யான்” படம்தான் அந்நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த வாலியை, அவரது வீட்டுக்கே சென்று ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை வாங்கியுள்ளார். ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாலே பார்வையில்.. அம்பா எனத் தொடங்கும் யூத்ஃபுல்லான பாடலை எழுதியுள்ளார் வாலி. படத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் ரவி.கே.சந்திரன் முதலில் அபிஷேக் பச்சனிடம்தான் கொடுத்துப் படிக்கச் சொல்லியுள்ளார். எனினும் தனக்கு நன்றாகத் தெரிந்த தமிழ் மொழியில்தான், முதற்படத்தை எடுக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் ரவி.கே.சந்திரன். ‘நீங்க இரண்டு வேலை பண்ணணும்னு நினைச்சீங்கன்னா.. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது’ என கே.வி.ஆனந்த் தான் ரவி.கே.சந்திரனுக்கு யோசனை அளி...
தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

சினிமா, திரைச் செய்தி
“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி அமரன். “இயக்குநர் ராஜபாண்டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்டால்.. ‘விருப்பப்படி பண்ணுங்க’ என எடிட்டிங் ரூம் பக்கமே வர மாட்டார். ராஜபாண்டி சார் ஸ்க்ரிப்ட் பார்த்தீங்கன்னா.. மூணு பெர்ஸ்பெக்டிவ்ல கதை அமைஞ்சிருக்கும். நான் அதை இன்னொரு வெர்ஷன்ல பண்ணலாமான்னு கேட்டப்ப.. டைரக்டர் ஒத்துக்கிட்ட...
“தூக்குடா சோலர் ஸ்டார!”

“தூக்குடா சோலர் ஸ்டார!”

சினிமா, திரைச் செய்தி
“'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்துல முக்கியமான ரோலில் நடிச்சிருக்காரு சோலர் ஸ்டார். அவர் யாருன்னா.. தேவயாணி மேடம் புருஷன் இராஜ்குமார் சார். எப்படி, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா!’ல பவர் ஸ்டாரை நடிக்க வச்சோமோ அப்படி இந்தப் படத்தில் இவர் நடிச்சிருக்கார். வாயில ஜாங்கிரி வச்சுக்கிட்டு, சோலார் ஸ்டார் என படம் நூறு நாளும் நூத்தம்பது நாளும் போச்சுன்னு விளம்பரம் பண்ணியிருந்தார். சரி இவரை மாதிரி ஒரு ஆள் தேவைன்னு.. தூக்கு இவரன்னு சொன்னேன். அவரைத் தூக்கிட்டு வந்துட்டாங்க. அதுல என்னன்னா.. அவர் வீட்டுல சொல்லிக்காம துணிமணிலாம் கட்டிட்டு வந்துட்டிருக்கார். அவர் வீட்டுல ஃபோன் பண்ணிக் கேட்கிறாங்க, ‘அவர் வந்திருக்காரா? சொல்லாம ஓடி வந்துட்டாரு’ன்னு. நான் அவர்ட்ட கேட்டேன். “ஏன்ங்க சொல்லாம வந்தீங்க?” என. அதுக்கு அவர் சொன்னார்.. அவங்க வீட்டுல ஒப்பாரி வச்சு அழுவுறாங்களாம். சந்தானம் ஆர்யா சூர்யாவையே ஓட்டுவான். நீ ...
“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

“வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
“சந்தானம் சார் நடிச்சா நல்லாயிருக்கும்னு கிரேஸி மோகன் சார் சொன்னார். அவர் டேட் கிடைக்காதுன்னு சொன்னாங்க. இரண்டு நாள் வந்து நடிச்சுக் கொடுத்தார். பார்த்ததும், அழகா இருக்காரே இவரை நடிக்க வச்சா ஏதாச்சும் பிரச்சனை ஆயிடுமோன்னு நினைச்சேன். இரண்டு நாளும், டைம்க்கு வந்து எப்படி டையலாகை இன்னும் அழகா பண்ணலாம்னு வொர்க் பண்ணிட்டு இருந்தார். அந்த க்வாலிட்டி ரொம்ப பிடிச்சிருந்தது. என்னோட ‘மரியாதை ராமண்ணா’ படத்தில் நடிக்கிறார். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. ஒரு சாதாரண மனுஷன் அசாதாரண சூழலில் இருந்தா என்னாகும் என்பதுதான் கதை. அவருக்கு இந்த ஜானர் சூட் ஆகும். ஏன்னா அவர் அழகா இருக்காங்க. நல்லா காமெடி பண்றாங்க. தெலுங்கில் ஹிட்டாச்சு. ஹிந்தியில் ரொம்ப ஹிட்டாச்சு. தமிழ்ல ரொம்ப ரொம்ப ஹிட்டாகும்னு நம்புறேன்” என்றார் தெலுங்கின் சூப்பர் ஸ்டார் இயக்குநரான ராஜ்மெளலி. “நீரோன்னா சிக்ஸ் பேக் வச்சிருக்கணும், லான்றிக்குப் போட...
சைவத்தில் சேவல்

சைவத்தில் சேவல்

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார். “இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் படத்துக்கு. தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கும் சாராவுக்கும் ஒரு போட்டி இருந்தது. இந்தப் படத்தில், அப்படி நாசர் சாருக்கும் சாராவுக்கும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். ஆனா சைலன்ட்டாக ஸ்கோர் செய்திருப்பது ‘ரே பால்’ என்ற பையன்தான். படம் பார்த்து முடிக்கிறப்ப, கண்டிப்பாக இந்தப் பையனைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்” என்றார் இயக்கு...
தேவதை ஒருவரல்ல.. மூவர்!

தேவதை ஒருவரல்ல.. மூவர்!

சினிமா, திரைச் செய்தி
ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய். ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது.சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என ஜீ.வி.பிரகாஷிடம் பரிந்துரைத்துள்ளார். விஷூவலில் சாராவின் லிப்-சின்க் கச்சிதமாய் இருப்பது பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. தெய்வத்திருமகள் படத்தில் சாராவிற்கு பின்னணிக் குரல் கொடுத்த ஷ்ரிங்காதான் சைவம் படத்திலும் கொடுத்துள்ளார். ஷ்ரிங்கா, சாரா, உத்ரா, ஆகிய மூவரும் மேடையில் தோன்றி...
“என் குடும்பம் இது!” – நாசர்

“என் குடும்பம் இது!” – நாசர்

சினிமா, திரைச் செய்தி
சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை. “எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என தனக்கு மகளாக நடித்தவரை மேடையில் இருந்தே தேடினார் நாசர். விழாவிற்கு சர்ப்ரைஸாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த அனுஷ்காவும், இரு பக்கமும் திரும்பி அவரது மகள் யாரெனப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த நாசர், “எனக்கு ஒரு மகள் இருக்கா.. ஆறடி உயரத்தில்” என்றார் அனுஷ்காவைப் பார்த்து. “நான் உன்னைத்தான் என் மகள் என ச...
“விஷால் கருப்பு மனிதன்தான!?”

“விஷால் கருப்பு மனிதன்தான!?”

சினிமா, திரைச் செய்தி
“விஷால் நடிக்கணும்னு ரொம்ப விருப்பப்பட்டது என் மனைவிதான். ‘அவன் இவன்’ பார்த்த பிறகு.. நான் ரொம்பவே சந்தோஷப்பட்டேன். நீ ரொம்ப நல்ல நடிக்கிறன்னு அவன்கிட்ட சொன்னேன். ஸ்டெப் பை ஸ்டெபாக அவன் கோலை (goal) அச்சீவ் பண்றான். அனைவரிடமும் நட்பாகப் பழகுகிறான். இவன் எல்லோரையும் லைக் பண்றான். இவனை மத்தவங்களுக்குப் பிடிக்குது. ரொம்ப சந்தோஷமான அப்பாவாக உணர்கிறேன். ‘நான் சிகப்பு மனிதன்’ என படம் பண்றேன்னு சொன்னான். “நீ எப்படி சிகப்பு மனிதன்? நீ கருப்பு மனிதன்தான?” எனக் கேட்டேன். “இல்ல டாடி.. சிகப்பு மனிதன் என்பது கேரக்டருன்னு சொன்னான். சினிமா தான் நெ.1 எண்டர்டெயினிங் இண்டஸ்ட்ரி உலகத்தில். அந்த இண்டஸ்ட்ரியோட நானும் என் மகனும் நண்பர்களும் அசோசியேட் ஆகியிருப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்றார் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி. “கிரிக்கெட்டாகட்டும் சினிமாவாகட்டும் விஷாலிடம் எனக்கு ரொம்ப பிடிச்சது அவருடைய “தில்”லு....