Shadow

திரைச் செய்தி

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

இதுவரை வந்திராத கதை – சாயா படம்

சினிமா, திரைச் செய்தி
“இதுவரை தமிழ்ப்படங்களில் சொல்லப்படாத வித்தியாசமான கதை” என்பதில் மிக உறுதியாக உள்ளார் சாயா படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல். ஒவ்வொரு மனிதனைச் சுற்றியும் மின்காந்த அலைகள் இருக்கும்; அதை ஆரா என்பார்கள்; ஆராவின் ஒளியைக் கொண்டே, உடலிலுள்ள நோயினை அறிய முடியுமெனப் படத்தைப் பற்றிக் கூறும் பொழுது இயம்பினார் இயக்குநர். இந்தப் படத்தின் நாயகன், மனிதர்களைச் சுற்றி இருக்கும் ஆராவைக் காணக் கூடிய சக்தி பெற்றவர் என படத்தின் ட்ரெயிலரில் இருந்து யூகிக்க முடிகிறது. நாயகன் இறந்தவர்களுக்கே உயிர் கொடுப்பது போல் முன்னோட்டத்தில் காட்சிகள் வருகிறது. மேலும், ''ஆத்மா என்பது எப்படிப்பட்டது? ஒரு மனிதன் இறந்தபின் அவன் ஆத்மா அவனது உடலைப் பார்க்க முடியுமா? பார்த்தால் என்ன செய்யும்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘சாயா’ படம் பதிலளிக்கும்'' என்றார் இயக்குநர். இந்தப் படம் அமானுஷ்யமான பேய்ப் படமென நினைத்துக் கொள்ள வேண்டாம். த...
ரெமோ லட்டு

ரெமோ லட்டு

சினிமா, திரைச் செய்தி
"என்னை இந்தப் படத்தில் நாயகியா நடிக்க வச்சா சரியா பொருந்தும்னு பரிந்துரை செய்தது பி.சி.ஸ்ரீராம் சார் தானென பாக்கி (பாக்கியராஜ் கண்ணன்) சொன்னார். அவருக்கு ரொம்ப நன்றி. எங்கப்பாம்மா என்னைச் சுலபத்தில் பாராட்டிட மாட்டாங்க. ஆனால், திரையரங்கில் ரெமோ பார்த்துட்டு “லட்டு மாதிரி இருக்க!” எனப் பாராட்டினாங்க. இந்தப் பாராட்டு, பி.சி.ஸ்ரீராம் சாரோட கேமிரா மேஜிக்கால் தான் நடந்தது” என்றார் ரெமோ படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ். “என்னிடம் படத்தைப் பற்றிப் பேசுறவங்க, அந்த பிங்க் சேலையில் ரொம்ப அழகா இருந்தீங்க. எங்க வாங்குனீங்க எனக் கேட்கிறாங்க. ‘அடப்பாவிகளா! அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்? காஸ்ட்யூமர் அனு பார்த்தசாரதி மேடமைக் கேளுங்க’ன்னு சொல்லிட்டு வர்றேன். அவ்ளோ அக்கறையாகப் பார்த்துப் பார்த்து எனக்கு எது நல்லாயிருக்கும்னு உடை வடிவமைத்துக் கொடுத்த அவங்களுக்கு நன்றி. யாராச்சும் நான் அழகுன்னு சொன்னா ந...
ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

ரெமோ: 2 க்ளைமேக்ஸ் – 3 மைக் – 4 டப்பிங்

சினிமா, திரைச் செய்தி
24 ஏ.எம்.ஸ்டூடியோஸ், ரெமோ படத்தின் விநியோகஸ்தர்களைக் கெளரவிக்கும் வகையில் நன்றி விழாவைக் கொண்டாடினர். அவ்விழாவில் அனைவருக்கும் நன்றி சொன்ன சிவகார்த்திகேயன், “இந்தப் படம் ஆஹோ ஓஹோ எனச் சொல்ல முடியவிட்டாலும், இந்தக் குழு நிச்சயம் தமிழ் சினிமா பெருமைப்படுமளவு ஒரு தரமான நல்ல படத்தை எடுக்கும். அதன் தொடக்கம் தான் இந்தப் படம்” என்றார். படக்குழுவினரும் தங்களுக்கு நேர்ந்த சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். “பொதுவாக டப்பிங்கில் ஒரு மைக் தான் இருக்கும். இங்க மைக்கிற்கு மேல் ஒரு ட்யூப் இருந்தது. பத்தாதற்கு என் ஷர்ட்டில் ஒரு காலர் மைக் வச்சாங்க. ‘அவ்ளோ தானா! நாலாவது மைக்கும் இருக்கா?’ என நினைச்சேன். ‘மூனு மைக் தான்’ என்றார் ரெசூல் பூக்குட்டி. ‘என் மைண்ட்-வாய்ஸையும் சேர்த்து அந்த மைக் கேப்ச்சர் பண்ணிடுச்சு. அப்ப விளையாட்டாய்த் தெரிஞ்சாலும், தியேட்டரில் பார்க்கும் பொழுதுதான் அதோட எஃபெக்ட் தெரிஞ...
தேவி தமன்னா

தேவி தமன்னா

சினிமா, திரைச் செய்தி
தேவி படம் நாயகியை மையப்படுத்தும் கதையாச்சே! நீங்க இந்தப் படத்தில் எப்படி? உங்களுக்கு ஓகேவா மாஸ்டர்?' "ரஜினி சாரே சந்திரமுகி பண்ணார். எனக்கென்ன சார்?" என பிரபுதேவா இயக்குநர் ஏ.எல்.விஜய்க்குப் பதில் சொல்லியுள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று 'வுட்'களுக்கும் நன்றாகத் தெரிந்த பிரபு தேவாவை முதல் நாயகனாகவும்; மும்பையில் பிரபுதேவாவின் பக்கத்து வீட்டுக்காரரும், ஜாக்கி சான் படத்தில் பிரதான பாத்திரம் ஏற்றிருப்பவருமான சோனி சூட்-டை இரண்டாம் கதாநாயகனாகவும் நியமித்துள்ளனர் பிரபுதேவா ஸ்டுடியோஸ். ஆனால், மூன்று மொழிகளுக்கான தேவியாக யாரைத் தேர்வு செய்வதென்ற கேள்வி இயக்குநர் விஜய் முன் பிரம்மாண்டமாய் எழுந்துள்ளது. பிரம்மாண்டம் என்றால் பாகுபலி. ஆக, மூன்று மொழிகளிலும் பட்டையைக் கிளப்பிய பாகுபலியின் குந்தலதேசத்து அவந்திகாவைத் தேவியாக்கி விடலாமென விஜய் முடிவெடுத்து, தமன்னாவிடம் கதையைச் சொல்லியுள்ளார் வி...
இது உலக சினிமா செல்லம்

இது உலக சினிமா செல்லம்

சினிமா, திரைச் செய்தி
இன்னமுமே உடற்தேய்வு நோய் (AIDS) பற்றிய கற்பிதங்கள் பலவாறாக இருக்கும் சூழலில், அந்நோய் பற்றிப் போதிய விழிப்புணர்வு இங்கில்லை. அதை மையமாக வைத்து, எட்டுக் கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மருத்துவமனையைச் சுற்றி நிகழும் படமாக ‘சில சமயங்களில்’ படம் உள்ளது. பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படம் ‘கோல்டன் க்ளோப்’ விருதுகளுக்காகப் போட்டியிடத் தேர்வாகியுள்ளது. அதற்காக, அக்டோபர் 6 ஆம் தேதி திரையிடப்படுகிறது. வாக்கெடுப்பில் சிறந்த பத்து அயல் மொழிப் படங்களில் ஒன்றாகத் தேர்வாகுமென படக்குழுவினர் நம்பிக்கையோடு உள்ளனர். ஆஸ்கர் லட்சியத்திற்கு இது ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்றும் கருதுகின்றனர். ரசிகர்களுக்குத் திரையிடப்படும் முன் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து பல பரிசுகளை அள்ளுமென்றும் திண்ணமாக உள்ளனர். “நான் நடித்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. மீண்டும் நடிக்கணும் என்றால் என் கணவரும், புகுந்த வீட்டினரும் ஒத்...
ரெமோ – ஏன்? யார்? எப்படி?

ரெமோ – ஏன்? யார்? எப்படி?

சினிமா, திரைச் செய்தி
“ஒரு நல்ல டைட்டில சொல்றவங்களுக்கு 20,000 என அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கிட்டச் சொன்னோம். ஒண்ணும் தேறலை. ‘ஐ-ஃபோன் 6 எஸ்’ தர்றோம் என்று கூடச் சொல்லிப் பார்த்தாச்சு. ‘நெருப்புடா’ பாடின நம்ம அருண்ராஜா காமராஜ்தான் ரெமோ எனத் தலைப்பைச் சொன்னார். ‘நல்லாயிருக்கே ஏன்?’ எனக் கேட்டதுக்கு, “அந்நியன்ல ரெமோவும் காதலுக்காக வேஷம் போட்டுப் போவார்” எனச் சொன்னார். எங்களுக்கும் ரோமியோ போல் கேட்ச்சியா டைட்டில் தேவைப்பட்டது. அதுவுமில்லாம ரெமோ ஆல்ரெடி சக்சஸான ஒரு பெயர்” என்றார் சிவகார்த்திகேயன். “இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் செகெண்ட் ஹீரோயின் தான். சிவகார்த்திகேயன் தான் ஃபர்ஸ்ட் ஹீரோயின்” என்றார் சதீஷ். அதை ஆமோதித்த கீர்த்தி சுரேஷும், “ஆம், சதீஷ் சொன்னாப்ல இந்தப் படத்தில் நான் செகண்ட் ஹீரோயின்தான். நான் இதுவரை யாரைப் பார்த்தும் இப்படி என் வாழ்க்கையில் பொறாமைப்பட்டதே இல்லை” என்றார். “மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்...
‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் என்பதால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடம் கூடியுள்ளது. தயாரிப்ப...
ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

சினிமா, திரைச் செய்தி
“குழந்தைகளுக்கான சினிமா என்பது தமிழில் அருகிவிட்டது அல்லது இல்லவே இல்லைன்னு சொல்லலாம். அந்த வகையில், ஜம்புலிங்கம் 3D எனும் படத்தை நான் ‘தமிழ் ஹாரி பாட்டார்’ எனச் சொல்வேன். மிகச் சுவாரசியமான படம்” எனப் புகழ்ந்தார் Y.G.மகேந்திரன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு, எஸ்.வி.சேகர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வாழ் தமிழரான ஹரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாடகம், இசை என தமிழ்க்கலை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொறுப்பேற்பெடுத்து ஜப்பானில் அரங்கேற உதவி செய்து வருபவர். அதனால்தான் நாடகக் கலைஞர்களான க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், Y.G.மகேந்திரன் போன்றோர்களும், இசைக் கலைஞர்களான கங்கை அமரன் முதலியவர்களும் ஹரியின் நட்பிற்காகவும் நற்குணத்துக்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த ஜப்பானியர் ஒருவரின் அழகு தமிழ் கொஞ்சும் உரை மனதிற்கும் காதிற்கும் இனிமையா...
குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

குற்றப்பரம்பரை – தலைப்பும் கதையும் வேறு

சினிமா, திரைச் செய்தி
இயக்குநர் பாரதிராஜாவின் கனவுப்படமான 'குற்றப்பரம்பரை'க்கும், பாலாவின் அடுத்த படத்தின் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தான் மீண்டும் மீண்டும் சீண்டப்படுவதாக ஆவேசமாக உள்ளார் இயக்குநர் பாலா. வேல ராமமூர்த்தியின் நாவலைப் படமாக்குகிறார் பாலா என்ற செய்தி வெளியானது. பாலாவைக் கவர்ந்த அந்த நாவலின் பெயர் 'கூட்டாஞ்சோறு'. விகடனில் தொடராக வெளிவந்தது. அந்நாவலில் இருந்து ஒரு களத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு, தானும் வேல ராமமூர்த்தியும் திரைக்கதை அமைத்துள்ளதாகக் கூறுகிறார் பாலா. சென்ற ஆண்டு, கூட்டாஞ்சோறு நாவலை "குற்றப்பரம்பரை" எனப் பெயர் மாற்றி 'டிஸ்கவரி புக் பேலஸ்' எனும் பதிப்பகம் வெளியிட்டது. இந்தப் பெயர் குழப்பமே அனைத்துக்கும் ஆதாரச் சுழி. இதனை பாலா, பாரதிராஜாவிடம் தெளிவுபடுத்தியுள்ளார். அந்நிலையில், "பாலா, என் எச்சிலைத் திங்க மாட்டான் என நம்புகிறேன்" என பாரதிராஜா பேட்டியளித்துள்ளார். மூத்த இய...
சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சினிமா, திரைச் செய்தி
“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன். ‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார். ‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்டப்...
பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

பிச்சைக்காரன் – சகுனமும்! திரைப்படத் தலைப்பும்?

கட்டுரை, சமூகம், சினிமா, திரைச் செய்தி
பிச்சைக்காரன் படத்தின் வெற்றி விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரைப் பாராட்டிய இயக்குநர் மோகன் ராஜா, “இந்தப் படத்தின் வெற்றி, தலைப்பு விஷயத்தில் தமிழ் சினிமாவுக்கு இருக்கும் மூட நம்பிக்கைகளை உடைத்துள்ளது. ‘தனி ஒருவன்’ என்ற தலைப்பு வச்சதுக்கு, “என்ன சார் தனி ஒருவன்னு வச்சிருக்கீங்க? படம் அவ்ளோதான்”எனச் சொன்னாங்க. தனியா ஒருவன்னா வச்சேன்; தனி ஒருவன்னுதான வச்சேன்! அதுக்கே பிச்சைக்காரன்னு தலைப்பு வச்சாப்ல என்னைப் பார்த்தாங்க. அப்ப பிச்சைக்காரன் வச்சதுக்கு அவங்களை எப்படிப் பார்த்திருப்பாங்க? ‘மாதவனுக்கு இதான் சார், இறுதிச்சுற்று. இனி அவருக்கு படமே வராது. தலைப்பே சரியில்லை’ன்னாங்க. இப்ப அந்த மூட நம்பிக்கைலாம் உடைஞ்சிடுச்சு. அப்படிச் சொல்லக் கூடாது. இனி இது போல தலைப்பு வைப்பாங்க. “அபசகுனம்” என்ற தலைப்புக்கு கவுன்சிலில் பத்து பேரு சண்டை போட்டாலும் போட்டுக்குவாங்க” என்றார். “நான் விஜய் ஆண்டனியிடம்...
அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

அஞ்சல – இரட்டை வேடங்களில் பசுபதி

சினிமா, திரைச் செய்தி
“ஒரு டீக்கடையின் வரலாறுதான் அஞ்சல படத்தின் கதை. அந்த டீக்கடையும், அதைச் சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றிய கதை” என்றார் இயக்குநர் தங்கம் சரவணன். “நான் நடித்த படங்களிலேயே, என் மனதுக்கு மிகவும் நெருக்கமான சில படங்களில் இதுவும் ஒன்னு” என்றார் பசுபதி. தந்தை, மகன் என இரு வேடங்களில் பசுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சின்னக் கவுண்டர், சிங்கார வேலன், எஜமான் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.வி.உதயக்குமார், இப்படத்தில் நாயகியின் தந்தையாக நடித்துள்ளார். “ஷூட்டிங் ஸ்பாட்லயே, பசுபதியின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய் கை தட்டினேன். அவ்வளவு அருமையாக கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இதற்கு முன், சிவாஜி சாரின் நடிப்பைப் பார்த்து கை தட்டியிருக்கேன். அதன் பின் பசுபதிக்குத்தான்” என்றார் இயக்குநர் உதயக்குமார். “நான் படத்தை 100 தடவைக்கு மேல் பார்த்துட்டேன். பசுபதி சார் நடிச்ச போர்ஷனைப் பார்க்கிறப்...
பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

பெண்ணும் அவளது உணர்வுகளும் – தன்ஷிகா

சினிமா, திரைச் செய்தி
“உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைத்திருந்த கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ‘சார்மி’ என்ற பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்தில் எனக்கு இந்தக் கதாப்பாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. எனினும் இந்தக் கதாப்பாத்திரத்தில் என்னால் சோபிக்க முடியுமா என்ற ஐயம் என்னுள் இருந்து வந்தது உண்மைதான். ஆனால் படத்தைப் பார்த்த அனைவரும் என்னைப் பாராட்டுவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருகிறது. என்னுடைய நடிப்பில் சிறிது அதிகமாய் உணர்வுகளைக் காட்டினாலும் படத்தின் முழு அளவியலே மாறிவிடக் கூடும். அவை எல்லாவற்றையும் சரி வர அமைத்து இந்தக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். பெண்ணுக்கும் அவளது உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ‘திறந்திடு சீசே’ படத்தில் நடித்தது எனக்கு மிகவும் பெருமையாகவுள்ளது. குடி பழக்கம், பாலியல் வன்கொடு...
ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி

ஒ காதல் கண்மணி – பரிசோதனை முயற்சி

சினிமா, திரைச் செய்தி
மேற்கத்திய இசை, ஹிந்துஸ்தானி இசை தெரிந்த அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தமிழிசையும் தெரிந்தவர் எனப் பாராட்டிய வைரமுத்து, “ஓ காதல் கண்மணி படத்தில் நான் ஐந்து பாடல்களை எழுதியுள்ளேன். ‘மென்ட்டல் மனதில்’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மானும் மணிரத்னமும் எழுதியுள்ளனர். அன்று நான் வெளியூர் சென்றுவிட்டேன். அதனால் இரண்டு கவிஞர்கள் உருவாகிவிட்டனர். இந்தப் பாடலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் மணிரத்னம். ‘நான் இனி வெளியூர்க்குப் போகக் கூடாது’ எனச் சொன்னேன்” என்றார். மேலும், “மணிரத்னம் 24 படங்கள்தான் இயக்கியுள்ளார். எண்ணிக்கை அளவில் அது குறைவும். ஆனால் தர அளவில் அது அதிகம். இன்னும் சில ஆண்டுகளில் கல்யாணம் எனும் சடங்கு நிலவுமா என்பது சந்தேகமே! மணிரத்னம் இப்படத்தில் அதைப் பற்றித்தான் விவாதித்துள்ளார். இப்படத்தின் கதை மணிரத்னத்தின் பரிசோதனை முயற்சி” என்றார் வைரமுத்து. “சில கனவுகளில் வாழ்ந்துடலாம் போல் தோணும். அப்...