Shadow

திரை விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

Kantara: Chapter 1 விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காந்தாரா படத்தின் ப்ரீக்வலாக சாப்டர் 1 வந்துள்ளது. முந்தைய படத்தில், பூதகோலா ஆட்டத்தில் நாயகனின் தந்தை மறைந்த இடத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்படத்தின் கதை விவரிக்கிறது. காந்தாராவிலுள்ள ஈஸ்வரன் பூந்தோட்டம் எனும் காட்டை ஈஸ்வர கணங்களே பாதுகாக்கின்றன. அங்கு விளையும் மிளகு, பாங்காரா தேசத்து மன்னனை ஈர்க்கிறது. அமானுஷயச் சக்திகளால் பாங்காரா தேசத்து மன்னன் கொல்லப்படுகிறான். காந்தாராவிலுள்ள ஒரு கிணற்றில் பெர்மி (Bermi) கண்டெடுக்கப்படுகிறான். அவன் இளைஞன் ஆனதும், எல்லா மக்களும் சமம் என்ற கருத்தில் ஊன்றி, பாங்காரா தேசத்து துறைமுகத்தை வரிகளற்று அனைவருக்கும் திறந்துவிடுகிறான். அவனது செய்கையால் கோபப்படும் குலசேகரன் எனும் பாங்காரா மன்னன் (காந்தாராவில் கொல்லப்பட்டவரின் பேரன்), காந்தாராவைத் தீக்கிரைக்காகிறான். கடவுள்களால் பாதுகாக்கப்படும் காந்தாராவின் எதிர்வினைதான் படத்தின் முடிவு. கனகவதியாக ருக்மிணி...
இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இட்லி கடை விமர்சனம் | Idly Kadai review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ப பாண்டி, ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களுக்குப் பின் தனுஷ் இயக்கியிருக்கும் 4 ஆவது படம் “இட்லி கடை” ஆகும். எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கிறார் தனுஷ். தனுஷூடன் நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தேனி மாவட்டத்து சங்கராபுரம் கிராமத்தில் ராஜ்கிரண் நடத்தும் இட்லி கடை அந்த ஊரின் அடையாளமாகத் திகழ்கிறது. இயற்கையான முறையில் நல்ல கைப்பக்குவத்துடன் சுவையான இட்லி சமைப்பவர் ராஜ்கிரண். அவரது மகன் தனுஷ் படிப்பை முடித்து வசதியாக வாழ வெளியூருக்கு வேலைக்குச் செல்கிறார். பாங்காங்கில் தொழிலதிபர் சத்யராஜ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் வேலை செய்யும் தனுஷைச் சத்யராஜின் மகள் ஷாலினி பாண்டே காதலிக்க, தனுஷூடன் திருமணம் நிச்சயம் ஆகிறது. இதற்கிடையில் திருமணத்திற்குச்...
பல்டி விமர்சனம்

பல்டி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மெட்ராஸ்காரன் படத்துக்குப் பிறகு ஷேன் நிகாம் தமிழில் மீண்டும் நடித்திருக்கும் படம் பல்டி. தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கியுள்ளார். சாந்தனு, செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம் தான் சாய் அபயங்கர் இசையில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். தமிழக, கேரள எல்லைப்பகுதியில் வசிக்கும் ஷேன் நிகம், சாந்தனு மற்றும் இரண்டு நண்பர்கள் கபடி வீரர்களாவர். பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி குழுவில் விளையாடி வெற்றிகளைக் குவிக்கிறார்கள். அதே பகுதியில் விதவிதமான வட்டித் தொழில் செய்து வரும் மூன்று கேங்குகள் இடையே கடும் தொழில் போட்டி நிலவுகிறது. செல்வராகவன், அல்ஃபோன்ஸ் புத்ரன் மற்றும் பூர்ணிமா இந்த மூன்று கேங்குமே ஒருவரை ஒருவர் அழிக்கக் காத்திருக்கின்றனர். ஒரு கட்டத்த...
சரீரம் விமர்சனம் | Sareeram review

சரீரம் விமர்சனம் | Sareeram review

சினிமா, திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் காதலுக்காகப் பல்வேறு தியாகங்களைச் செய்த காதலர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தைத் தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையைச் சொல்லும் ஒரு படம் தான் சரீரம். இயக்குநர் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கித் தயாரித்துள்ள, உன்னதமான காதலையும், கடவுள் தந்த சரீரத்தின் பெருமையைப் பேசும் இப்படத்தில், புதுமுகங்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கல்லூரியில் படிக்கும்போதே காதல் வயப்படும் ஜோடியின் காதலுக்கு நாயகியின் பணக்காரக் குடும்பமே எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களிடம் இருந்து ஓடி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படுகிறார்கள். அங்கும் அவர்கள் துரத்த தங்கள் புனிதமான காதலுக்காக நாயகன் பெண்ணாகவும், நாயகி ஆணாகவும் தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்ள முடிவெடுக்கிறார்கள். அவர்கள் முழுமையாகப் பாலின மாற்றத்தை அடைந்தார்களா, அந்தக்...
காயல் விமர்சனம் | Kaayal review

காயல் விமர்சனம் | Kaayal review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
காயல் – காய்தல் – வாடுதல் திருமதி தேன்மொழி தற்கொலை புரிந்து கொள்ள, அவரைச் சார்ந்தோர்கள் எல்லாம் துக்கத்தில் வாடுகின்றனர். அவரது மரணம் கொலையா, தற்கொலையா என்பதை ஒரு சமூக நோக்குடன் அணுகுகிறது திரைக்கதை. காயல், எழுத்தாளர் தமயந்தியின் முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டிச்சேரி, பிச்சாவரம், வேளாங்கண்ணி, ராமேஸ்வரம் என படத்தின் கதை நெய்தல் திணைகளிலேயே பயணிக்கிறது. இரங்கலும், இரங்கல் நிமித்தமும் நெய்தல் திணையின் அக ஒழுக்க உரிப்பொருளாகும். இரங்கலுக்கு துக்கம், சோகம், வருத்தம் எனும் அர்த்தங்கள் வந்தாலும், இப்படத்தின் கருவான இழந்தவரை எண்ணி வருந்துதல் என்பதோடு சாலப் பொருந்துகிறது. தேன்மொழியாக காயத்ரி நடித்துள்ளார். தீமையைக் கண்டால் சீறியெழும் பெண்ணாகப் படைக்கப்பட்டிருந்தாலும், தேன்மொழி பாத்திரத்தை முடித்த விதத்தில் ஏமாற்றத்தை அளித்துள்ளார் தமயந்தி. படத்தின் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவ...
மதராஸி விமர்சனம் | Madharaasi review

மதராஸி விமர்சனம் | Madharaasi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
துப்பாக்கிக் கலாச்சாரத்தை தமிழ்நாட்டிற்குள் அறிமுகப்படுத்த நினைக்கிறது ஒரு வலுவான குழுமம் (syndicate). அதைத் தடுக்க நினைக்கிறார் NIA அதிகாரியான ப்ரேம். அவரது முயற்சியில், அவருக்குத் துருப்புச் சீட்டாகக் கிடைக்கிறார் ரகு ராம். குழுமத்தைச் சென்னைவாசியான (மதராஸி) ரகு தடுத்தானா இல்லையா என்பதே படத்தின் முடிவு. தனது வெற்றி சூத்திரங்கள் அனைத்தையும் இப்படத்தின் திரைக்கதையில் பிரயோகித்துள்ளார் ஏ.ஆர். முருகதாஸ். கஜினியில் நாயகன்க்குக் குறுகிய 'கால நினைவாற்றல் இழப்பு (Short term memory loss)' இருப்பது போல், மதராஸியில் நாயகனுக்குத் 'திரிவரண்மை ஒழுங்கின்மை (Delusional disorder)' இருக்கிறது. அவர் மனம் உருவகித்துக் கொள்ளும் மாய தோற்றங்கள், எத்தகைய சூழலில் எழும் என்பதற்கு ஓர் அழகான நினைவோடை (flash-back) காட்சியையும் வைத்துள்ளார் முருகதாஸ். துப்பாக்கி படத்தின் இடைவேளை காட்சி போல், சிவகார்த்திகேயன் வில்லன்...
காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

காந்தி கண்ணாடி விமர்சனம் | Gandhi Kannadi review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பணம் உறவுகளைப் பிணைத்து, வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் என நம்புபவன் கதிர். சம்பாதிப்பதற்கான வாய்ப்புகளைத் தவறவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவன். காதல் திருமணம் புரிந்து கொண்டு, ஊரை விட்டு ஓடி வந்த காந்தி, மனைவிதான் உலகம் என வாழ்பவர். காந்தி தன்னுடைய அறுபதாம் கல்யாணத்தைப் பிரம்மாண்டமாக நடத்தித் தரும்படி எவென்ட் மேனேஜ்மென்ட் செய்யும் கதிரிடம் செல்கிறார். கதிரும் காந்தியும் சந்தித்துக் கொள்வதில் தொடங்கும் படம், கதிரின் வாழ்க்கையில் அச்சந்திப்பு எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதோடு முடிகிறது. காட்சிரூபமாகக் கதைசொல்வதை விட வசனங்களின் மூலமே அனைத்தையும் சொல்லிவிடலாம் என்ற பாணியால், ஒரு ஃபீல்-குட் படத்திற்கான அத்தனை அம்சங்களைக் கொண்டிருந்தும், படம் அதன் இலக்கை அடையத் தடுமாறியுள்ளது. ஒரு நல்ல ஐடியாவை எடுத்துக் கொண்டு, அதில் முழுத் திருப்தியுற்று, சுவாரசியமாகவோ நெகிழ்ச்சியாகவோ திரைக்கதைய...
Lokah Chapter 1: Chandra விமர்சனம்

Lokah Chapter 1: Chandra விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோயின் படம் எனும் பெருமையைப் பெற்றுள்ளது இப்படம். தன் சக்திகளை மறைத்துக் கொண்டு, பெங்களூருவில் சாதாரணளாக வாழ்கிறாள் சந்திரா. சந்திராவின் சக ஊழியை மிரட்டும் முருகேசனைத் தாக்குகிறாள் சந்திரா. உடலுறுப்புகளுக்காக மனிதர்களைக் கடத்தும் முருகேசனும், அவனது ஆட்களும் சந்திராவைக் கடத்துகின்றனர். சந்திராவைக் காப்பாற்ற விரையும் அவளது பக்கத்து வீட்டுக்காரப் பையனான சன்னிக்கு, சந்திரா தான், கேரளத் தொன்மவியல் வியந்தோதும் கள்ளியங்காட்டு நீலி எனத் தெரிய வருகிறது. காணாமல் போகும் முருகேசனை விசாரிக்கும் காவலதிகாரி நாச்சியப்பா கெளடாவிற்குச் சந்திரா மீது சந்தேகம் வருகிறது. மனித உடலுறுப்புகளை விற்கும் அமைப்பினர், சந்திராவையும் சன்னியையும் துரத்துகின்றனர். அதிலிருந்து இருவரும் எப்படித் தப்பினார்கள் என்பதே படத்தின் முடிவு. இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கெளடாவாக சாண்டி மாஸ்டர் மிரட்டியுள்ளார்...
சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

சொட்ட சொட்ட நனையுது விமர்சனம் | Sotta Sotta Nanaiyuthu review

சினிமா, திரை விமர்சனம்
காரைக்குடியைச் சேர்ந்த செல்வந்தனான ராஜாவிற்கு தலையில் சொட்டை தோன்றி முழு வழுக்கையாக மாறிவிடுகிறது. அதனால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகும் ராஜாவிற்குக் கல்யாணமும் தள்ளிப் போகிறது. எதிர் வீட்டில் வசிக்கும் ராயல் பாட்டியின் வீட்டுக்குப் படிப்பு முடித்து வரும் அவரது பேத்தி பிரியாவை ராஜா விரும்ப, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமாகிறது. இந்நிலையில், கல்யாணத்துக்கு முன் தினம் கல்யாணத்தை ராஜாவே நிறுத்துகிறான். கல்யாணத்தை ராஜா ஏன் நிறுத்தினான், அதன் பின் என்னாகிறது என்பதே படத்தின் கதை. அறிமுக இயக்குநரான நவீத் S. ஃபரீத் அவர்களின் தந்தை ஷேக் ஃபரீத், நாயகனின் தந்தை பண்ணை பரமசிவமாக நடித்துள்ளார். ப்ரோக்கர் குலுக்கல் குமரேசனாக ரோபோ சங்கர் நடித்துள்ளார். நாயகனின் கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யும் ராக்கெடியாக விஜய் டிவி புகழ் வருகிறார். இப்படத்திற்கு வசனமும் திரைக்கதையும் எழுதி, நண்பனின் நாயக...
வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

வீரவணக்கம் விமர்சனம் | Veeravanakkam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
"வசந்தத்திண்டே கனல் வழிகளில்" என்று மலையாளத்தில், 2014 ஆம் ஆண்டு வந்த படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து வீர வணக்கமாக வெளியிட்டுள்ளனர்.நீதி மறுக்கப்பட்டவனுக்கு இரக்கம் காட்டுபவன்தான் உண்மையான கம்யூனிஸ்ட் - P.கிருஷ்ண பிள்ளை கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான P.கிருஷ்ண பிள்ளையின் (1906 – 1948) சரிதத்தை ஒட்டி, இப்படம் இயற்றப்பட்டுள்ளது. E.M.S.நம்பூதிரிபாட், A.K.கோபாலன் ஆகியோரும் P.கிருஷ்ண பிள்ளை தொடங்கும் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்குகின்றனர். இப்படம் நிகழும் காலகட்டம் 1940 முதல் 1946 வரையாகும். சிறையில் இருந்தவாறே, தங்கம்மாவைக் காதலித்து மணம் புரிகிறார் P.கிருஷ்ண பிள்ளை. சாதி ஒடுக்குமுறை உச்சத்தைத் தொடும் ஒரு கிராமத்திற்குச் சென்று, மக்களை ஒருங்கிணைத்து அவர்களது உரிமையை மீட்கப் போராடுவதுதான் படத்தின் கதை. இக்கதையை மக்களுக்கு நினைவூட்டி, அனைத...
நறுவீ விமர்சனம் | Naruvee review

நறுவீ விமர்சனம் | Naruvee review

சினிமா, திரை விமர்சனம்
மலைவாழ் குழந்தையர்க்குக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்துகிறது நறுவீ திரைப்படம். நறுவீ என்றால் நறுமணம் எனப் பொருள்படுமாம். கல்வியின் அவசியம் குறித்த படமென்பது படத்தின் ஒருவரிக் கதையாக இருந்தாலும், அதை ஹாரர் த்ரில்லர் படமாகத் திரைக்கதையில் மாற்றம் செய்துள்ளனர். குன்னூர் மலையிலுள்ள தேயிலைத் தோட்டத்திற்கு வின்சு ரேச்சல், Vj பப்பு, பாடினி குமார் முதலியோர் வருகிறார்கள். இவர்களுக்கு உதவ கேத்தரின் இணைகிறார். பெரும் காஃபி பவுடர் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் இவர்களது வருகைக்குப் பின்னுள்ள காரணம் வணிகம் மட்டுமே. ஆனால் குன்னூர் மலையை அவர்கள் தொட்டதும் அவர்களுக்கு நிறைய அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பதற்குப் பதிலாக ஒரு சோக கதையையும், ஒருவரது சேவை மனப்பான்மையும், அது தவறாகப் புரிந்து கொள்ளப்படும் கல்வியின்மையும் தொட்டுப் பயணிக்கிறது திரைக்கதை. இதனூடாக, நேரடியாக அல்லாமல் சுற்றி...
இந்திரா விமர்சனம் | Indra review

இந்திரா விமர்சனம் | Indra review

சினிமா, திரை விமர்சனம்
குடித்து விட்டு போலீஸ் ஜீப்பினை ஓட்டி விபத்தினை ஏற்படுத்தியதால், இடைக்கால பணி நீக்கத்தில் உள்ளார் காவல்துறை அதிகாரியான இந்திரா. குடிப்பழக்கம் அதிகமானதால் கண் பார்வையையும் இழந்து விடுகிறார் இந்திரா. அவரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக் கொள்ளும் அவரது காதல் மனைவி கயல் பூட்டிய வீட்டிற்குள் கொடூரமாகக் கொலை செய்யப்படுகிறார். வேலை, கண் பார்வை, காதல் மனைவி என அனைத்தையும் இழந்து வேதனையில் வாடும் கோபக்கார இந்திரா கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரது முயற்சி கைக்கூடியதா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. நாயகியாகக் கயலெனும் பாத்திரத்தில் மெஹ்ரீன் பிர்சாடா நடித்துள்ளார். குடிகார கணவனிடம் பாராமுகமாக இருப்பதும், கண்பார்வை இழந்த கணவனை அக்கறையாகப் பார்த்துக் கொள்வதும் எனச் சிறப்பாக நடித்துள்ளார். இரண்டாம் பாதியில் வரும் ஃப்ளாஷ-பேக்கில், வேலைக்காரப் பெண் மதியாக அனிகா நடித்துள்ளா...
கூலி விமர்சனம் | Coolie review

கூலி விமர்சனம் | Coolie review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மேன்ஷன் ஓனரான தேவா, தன் நண்பன் ராஜசேகர் இறந்ததாகக் கேள்விப்பட்டு விசாகப்பட்டினம் செல்கிறார். ராஜசேகர் கொல்லப்பட்டிருக்கிறார் என அறிந்து, கொலையாளியைக் கண்டுபிடிக்க நினைக்கிறார். கொலையாளியைக் கண்டுபிடித்துப் பழிவாங்கினாரா இல்லையா என்பதே படத்தின் கதை. ஃப்ளாஷ்-பேக்கில், 5821 என்ற எண் கொண்ட வில்லையை அணிந்த கூலியாக இளம் ரஜினியை அசத்தலாக ரீ-கிரியேட் செய்துள்ளனர். அவருக்கும் சக கூலியாக வரும் ராஜசேகருக்குமான நட்பு நன்றாக இருந்தாலும், அழுத்தம் போதவில்லை. ராஜசேகராக சத்யராஜ் நடித்துள்ளார். ரஜினியின் அறிமுக பாடல் தவிர்த்து, ரஜினியிசம் எனும் மேஜிக்கையோ, ரஜினியின் வசீகரத்தையோ தூண்டி விடும் எழுத்தோ, பிரத்தியேக ஷாட்ஸோ படத்தில் இல்லை. அதையும் மீறி ரஜினி, தன்னிருப்பை அட்டகாசமாகப் படம் முழுவதும் நிறைக்க முயற்சித்துள்ளார். அதற்கு அவருக்கு ஒரு வசன உச்சரிப்போ, ஒரு விசிலோ கூடப் போதுமானது. தயாளாக நடித்துள்ள ஷெளபி...
நாளை நமதே விமர்சனம் | Naalai Namadhey review

நாளை நமதே விமர்சனம் | Naalai Namadhey review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நந்தன் பேசிய அரசியலை, அதை விடச் சிறப்பாகவும் அழுத்தமாகவும் இப்படம் பேசியுள்ளது. நந்தன் படத்தின் போதாமையாக, பலவீனமான கதாபாத்திர வார்ப்பு அமைந்திருந்தது. இப்படத்தின் பலமாக இருப்பதே, யதார்த்தமான அழுத்தமான கதாபாத்திரங்களின் வார்ப்புதான்! சிவதாணுபுரம் எனும் கிராமத்தைத் தனித்தொகுதியாக அறிவிக்கிறது அரசு. அக்கிராமத்தைச் சார்ந்த ஆதிக்க சாதியினர், ஒடுக்கப்பட்ட மக்களைச் சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாதென மிரட்டி விட்டுச் செல்கிறார்கள். சுதந்திரப் போராட்ட தியாகியான, அமுதாவின் தாத்தாவைத் தேர்தலில் நிற்கும்படி கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாவட்ட ஆட்சியரும், காவல்துறை அதிகாரிகளும் நிர்பந்திக்கின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகச் செல்லும் வழியில், அமுதாவின் தாத்தாவையும், அவருடன் சென்றோரையும் வெட்டிக் கொல்வதோடு மட்டுமல்லாமல், தன் சாதியைச் சேர்ந்தவரையும் கொன்றெரித்து, ஊர்க்கலவரமாக அதைத் திரிக்கி...
காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

காத்துவாக்குல ஒரு காதல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
வடசென்னையில் ஜிம் வைத்திருக்கும் ஜீவா, மேகாவை உருகி உருகிக் காதலிக்கிறார். அப்பகுதி இளைஞர்கள் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும் போது, ரத்னா அவர்கள் கையில் கத்தியைக் கொடுத்துச் சீரழிக்கிறான். அதனால் கோபமுறும் ஜீவா, 'மாஸ்' எனும் அடைமொழியுடன் ரத்னாவை எதிர்க்கிறான். மோதல் முற்றும் தருவாயில் ஜீவாவின் காதலை நிரந்தரமாக இழக்கிறாள் மேகா. ஆனால், காற்று வாக்கில் காதலை இழந்தாலும், நூதனமான முறையில் மீண்டும் ஜீவாவுடனே இணைகிறார் மேகா. படத்தின் சண்டை இயக்குநராகப் பணிபுரிந்திருக்கும் சூப்பர் சுப்புராயனுக்கு, இது திரையுலகில் 50 ஆவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு டெரரான ரோலில் தோன்றி, அதே வேகத்தில் மறைகிறார். படத்தின் முதற்பாதியின் சிக்கலும் அதுதான். கத்தியுடன் ஏகப்பட்டு பேர் குறுக்கமருக்க ஓடிக் கொண்டே உள்ளனர். கழுத்து அறுபட்டு இறக்கின்றனர். கதை நிகழும் களத்தின் சூழலையும் பிரச்சனையையும் அழுத்தமாகப் பதிவ...