Shadow

திரை விமர்சனம்

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

சினிமா, திரை விமர்சனம்
அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை. 9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. புத்தரின் பெயரைத் தாங்கிய அந்த லாரியில் தயாரிப்பாளரும் இயக்குநருமான மூர்த்தி கோபமாக வீற்றுள்ளார். அது நினைவா, கனவா, தீர்க்கதரிசனமா என்ற கேள்விக்கு எல்லாம் படத்தின் பின்பாதியிலேயே பதில் கிடைக்கிறது. படகில் வெள்ளைப் புடவை அணிந்த பெண், ஓர் ஆந்தை, கருப்பு நாய் ஒன்று, பச்சைக்கிளி, கறுப்புப் பூனை, துறவி போல் ஆண் ஒருவர், அச்சுறுத்தும் ஒரு சாமியாரினி ஆகி...
வடம் விமர்சனம் | Vadam review

வடம் விமர்சனம் | Vadam review

சினிமா, திரை விமர்சனம்
இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் அதைப் பிடித்து அடக்க வேண்டும். இது காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையேயான போட்டியாகக் கருதப்படுகிறது. அடக்கவே முடியாத காளைகளை வளர்ப்பதைக் கெளரவமாகவும் வீரமாகவும் கருதுபவர் ரத்தினவேல். அவரால் விரட்டி விடப்பட்ட, ஒற்றைக் கண் காளைக் கன்றைத் தன் அன்பாலும் பயிற்சியாலும், யாராலும் அடக்க முடியாத காளையாகப் மாற்றி விடுகிறார் வெற்றிவ...
அனோமி விமர்சனம் | Anomie review

அனோமி விமர்சனம் | Anomie review

சினிமா, திரை விமர்சனம்
அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது யார் என்றும், எதற்காகக் கொலை செய்தனர் என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.காவல்துறை அதிகாரி ஜிப்ரானாக ரஹ்மான் நடித்துள்ளார். முதற்பாதியில் சற்றே அலட்சியமாக இருப்பவர், நீதிமன்றத் தலையிடலுக்குப் பின், இரண்டாம் பாதியில் துரிதமாகச் செயற்பட்டுக் குற்றவாளியை அணுகுகிறார். அழுத்தமாக ...
ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பட்டாம்பூச்சியை உருவகமாகப் பயன்படுத்தி, மானுட வாழ்க்கையின் நிலையற்றத்தன்மையைக் குறித்தும், அதை சாஸ்வதமென நம்பி நடப்பவற்றிற்குப் பொறுப்பேற்கும் மனித மனங்களின் முரணைக் குறித்தும் படம் தத்துவார்த்தமாகச் சொல்கிறது. 'பட்டாம்பூச்சிகளைப் போல் ஒருநாள் சிறகடித்துவிட்டு, என்றென்றைக்கும் அது நித்தியம் என நினைத்துக் கொள்ளும் நாம் (We are like butterflies who flutter for a day and think it is forever)' எனும் கார்ல் சாகனின் (Carl Sagan) மேற்கோளுடன் படம் தொடங்குகிறது. கல்லூரிக் காலத்தில் தனக்கும் சூர்யா குமரவேலுக்கும் இருந்த உறவைப் பற்றிக் கணவனிடம் எப்படியாவது சொல்ல நினைக்கிறார் கெளரி. கணவன் அர்ஜுனுக்கோ, கல்யாணத்திற்கு மறுதினமே வேலை பறிப் போன மன அழுத்தத்தில் இருக்கிறார். கணவனிடம் தனிமையான சூழலில் உண்மையைச் சொல்லிவிட நினைத்து, கொடைக்கானல் போகும் வழியிலுள்ள குறிஞ்சிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எதிர்பா...
ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

சினிமா, திரை விமர்சனம்
ஆழி என்றால் கடல் எனப் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று 'தி ஓஷன்' என்பதையும் தலைப்பில் முன்னெச்சரிக்கையாகச் சேர்த்துக் கொண்டுள்ளனர். நாகர்கோவிலில் அரசியல் செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராகவும் வஸ்தாதாகவும் இருக்கிறார் மூர்த்தி. அவரது மகள் முகிலாவை ஏழையான அருள் காதலிக்கின்றான். இக்காதல் விஷயம் தெரிந்தவுடனே, அருளைப் படகில் கட்டிப் போட்டு கடலுக்குள் அழைத்துச் சென்று நையப்புடைக்கிறார் மூர்த்தி. அதிலிருந்து அருள் தப்பி மூர்த்திக்கு எதிராக ஆற்றும் எதிர்வினையே ஆழி படத்தின் முடிவாகும். ரத்தம் வழிய வழிய மூர்த்தியிடம் அடி வாங்குகிறார் அருள். ஒரு வதை முகாமில் சிக்கிய உணர்வைத் தருமளவுக்கு அடிக்கிறார், அடிக்கிறார், அருளை அடித்துக் கொண்டே இருக்கிறார் மூர்த்தி. நல்லவேளையாக மகள் மீது மூர்த்தி வைத்திருக்கும் பாசத்தையும், முகிலா - அருள் காதலையும், அருள் தன் குடும்பத்து மேல் வைத்திருக்கும் பாசத்தைய...
Fourth Floor விமர்சனம்

Fourth Floor விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலி அனு எனும் அனுபமாவைத் தேடிச் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் தீரன். ஒரு குடியிருப்பு வளாகத்தில், அவரது நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் தங்குகிறார். அங்கு குடி வந்ததில் இருந்து, மரணத்தைப் பற்றிய கனவுகளாக வந்து தீரன் தூக்கமின்றி அலைக்கழிக்கப்படுகிறார். தனது தூக்கமின்மைக்கும், தன்னைச் சுற்றி நிகழும் அமானுஷ்ய சங்கதிகளுக்கும், காணாமல் போய்விட்ட தனது காதலி அனுபமாவிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக உணர்கிறார் தீரன். தீரனின் தேடல் தொடங்கி முடியுமிடமாக அக்குடியிருப்பின் நான்காவது மாடி உள்ளது. அமானுஷ்ய புதிர் அவிழ்ந்து தீரன் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் மீதிக் கதை. படத்திற்குள் ஒரு நல்ல திகிலான குறும்படம் ரசிக்கும் படி வருகிறது. பார்க்கிங்கிற்குப் படியிறங்கும் ஆதித்யா கதிர், மொட்டை மாடியில் தனியாகப் பார்க் செய்யப்பட்டுள்ள காரிடம் வந்து சேருகிறார். இப்படி சிறு சிறு சுவாரசியங்கள் படம் ந...
தடயம் விமர்சனம் | Zee 5

தடயம் விமர்சனம் | Zee 5

OTT, Web Series, திரை விமர்சனம்
சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம். அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், தமிழக - ஆந்திர எல்லையோர ஊர் என்பதால், கொலைகாரர்கள் எல்லை தாண்டி வந்திருக்கக்கூடும் என ஆந்திராவிற்குச் சென்று விசாரிக்கின்றனர். அதே பேட்டர்னில் நடந்த 70 கொலைகளைப் பற்றித் தெரிய வருகிறது. கொலைகாரர்கள் யார், ஏன் அத்தனை கொலை செய்கிறார்கள் என்பதை விற...
Second case of சீத்தாராம் விமர்சனம்

Second case of சீத்தாராம் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
தொடர் கொலைகள் நடப்பதைத் தடுக்க முடியாமல் தடுமாறுகிறார் காவல்தூறை அதிகார் சீத்தாராம். கிடைக்கின்ற துப்புகளை இணைத்து, இருவரை அணுகிக் கைது செய்தாலும், எதிர்பாராத ஒருவரே அனைத்துக் கொலைகளுக்கும் காரணமாக உள்ளார். அவரை எப்படி சீத்தாராமன் கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் முடிவு. படத்தின் த்ரில்லிங் அம்சத்தைத் தனது இசையால் மிக அழகாகக் கொண்டு வந்துள்ளார் இசையமைப்பாளர் நவனீத் ஷாம். கொலை நடந்த ஒவ்வொரு வீட்டிலும், ஒரு சின்ன மர வீணை பொம்மை கிடைக்கிறது. அவ்விஷயத்தைத் தனது இசையால் சுவார்சியப்படுத்தியுள்ளார் நவனீத். படத்திற்கான உளநிலை அமைப்பதைக் (mood set) கச்சிதமாகத் தனது கோணங்களால் செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ஹேமந்த். நாயகன் விஜய ராகவேந்திராவுடன் இணைந்து, Seetharam Benoy Case No. 18 (2021), Case of Kondana (2024) எனும் படங்களைத் தொடர்ந்து மூன்றாம் முறையாகப் போலீஸ் கதையை எடுத்துள்ளார் இயக்குநர் தேவிபிரசா...
LSS விமர்சனம்

LSS விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
Love Share Subscribe 'லவ் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, சப்ஸ்க்ரைப் பண்ணுங்க' என்பதன் சுருக்கமாக LSS எனும் தலைப்பைச் சூட்டியுள்ளனர். படத்தின் கதைக்கும், யூ-ட்யூப்பிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. படத்தின் முதற்பாதி கல்லூரிக் காதலாகவும், இரண்டாம் பாதி காசியில் ஒரு தேடலாகவும் நீள்கிறது. பூஜா கோத்தாரி, படிப்பைத் தவிர வேறொரு சிந்தனையில்லாத சிவாவைக் காதலிக்கிறார். சிவாவை அழைத்துக் கொண்டு, தன் அம்மாவைப் பார்க்க பூஜா காசிக்குச் செல்கிறார். காசியில் நேரிடும் எதிர்பாரா நிகழ்வில் இருந்து பூஜாவும் சிவாவும் எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் கதை. பெரம்பூர் இரயில்வே ஸ்டேஷன்க்குச் செல்ல லிஃப்ட் கேட்டவருக்கு உதவிப் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டு கலகலக்க வைத்துள்ளார் சாம்ஸ். சிவாவின் பெருமை மிகு தந்தையாக படவா கோபி தோன்றியுள்ளார். அவரது மனைவியாகவும், நெடுந்தொடர் பிரியராகவும் விநோதினி வைத்தியநாதன் நடித்துள்...
சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

சீதா பயணம் விமர்சனம் | Seetha Payanam review

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சென்னையில் இருந்து மதுரைக்குக் காரில் செல்லும் சீதாவின் பயணத்தில் இணைந்து கொள்கின்றார் அபிஷேக். வழியில் தாமதமானதால், ஒரு பெரும் விபத்தில் இருந்து உயிர் பிழைக்கிறார் சீதா. தனது பயணத்தில் சந்தித்தத் தாமத்திற்குக் காரணமான மனிதர்களைப் பார்த்து நன்றி சொல்ல முடிவெடுக்கிறார் சீதா. அவரது நன்றி நவில்தல் பயணம்தான் படத்தின் கதை. அந்தப் பயணத்தில், கன்று பிறந்ததைக் கொண்டாடுவது, மாடுகளைக் கடத்துவர்களைத் தடுப்பது, பெண் குழந்தையைக் கடத்துபவர்களை அடித்துதைத்துச் சிறைக்கு அனுப்புவது, பிரியும் முடிவெடுக்கும் தம்பதியைச் சேர்ப்பது என பார்வையாளர்கள் மனதில் ஒட்டாத சம்பவங்களை எதிர்கொள்கிறாள் நாயகி. பார்வையாளகளைப் பாதிக்காவிட்டாலும், நாயகியின் அகத்தில் பெரிய மாற்றம் நேரிடுகிறது. சீதா மிகப் பெரும் கோடீஸ்வரரின் மகள். இரண்டு நிமிடத்தில் பேசித் தீர்த்து விடக் கூடிய சின்னஞ்சிறு பிரச்சனைதான் அவருக்கு. ஆனால் அவரது தந்த...
உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

உயிருள்ளவரை உஷா விமர்சனம் | Uyirullavarai Usha review

சினிமா, திரை விமர்சனம்
ஜனரஞ்சகமான காதலைச் சொல்வதற்காக, 1983 இல், T.ராஜேந்தர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இசையமைத்து, இயக்கிய படமிது. தஞ்சை சினி ஆர்ட்ஸ் சார்பில் அவரது மனைவி உஷா ராஜேந்தர் தயாரிப்பில் உருவான முதல் படமிது. கல்யாணமான பின் அவர் இயக்கிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்க விரும்பி, அவருக்காக T.ராஜேந்தர் கதை எழுதிய முதல் படமிது. ரஜினியை நடிக்க வைக்கும் சூழல் அமையாததால், அவருக்காக உருவாக்கின செயின் ஜெயபால் பாத்திரத்தில் T. ராஜேந்தரே நடித்துவிட்டார். தற்போது, இப்படம் 43 ஆண்டுகள் கழித்து மறு வெளியீடு காண்கிறது. எதிரெதிர் வீட்டில் வசிக்கும் அறிமுக நாயகனான கங்காவும், அறிமுக நாயகியான நளினியும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பில் படிக்கின்றனர். நாயகியின் கவனத்தைத் தன்பால் ஈர்ப்பதற்காகத் தொடர்ந்து கலாட்டா செய்து வருகிறான் நாயகன். கடுப்பாகும் நாயகி பொய்யான புகார் அளிக்கிறார். நாயகன் கோபத்தில், பலர் பார்க்...
Couple Friendly விமர்சனம்

Couple Friendly விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எதிர்பாராத் தருணத்தில் வீசும் குளிர் தென்றலை அனுபவித்த உணர்வைத் தருகிறது இப்படம். ஷிவாக்கும் மித்ராவுக்கும் இடையேயான நட்பார்ந்த காதலைப் பார்வையாளர்களுக்குக் கவித்துவமாகக் கடத்துவதோடு மட்டுமல்லாமல், வாழ்வின் நிலையாமையைக் குறித்தும், நாளையென ஒன்றில்லை என்பதாகக் கருதி இன்றே வாழ்வைக் கொண்டாடித் தீர்க்க வேண்டிய அவசியம் குறித்தும் படம் அழுத்தமாகப் பதிந்து அசரடிக்கிறது. தெலுங்குப் படத்தின் டப்பிங் போலிருக்கே என்ற எண்ணத்தை, ஓரிரு காட்சிகளுக்குள் மறையச் செய்து, படம் நம்மை அலேக்காக உள்ளிழுத்துக் கொள்கிறது. அந்த மாயத்தைப் போட்டி போட்டுக் கொண்டு செய்துள்ளனர் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனும், இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனும். கவிதை போல ரசித்து ரசித்து திரைச்சட்டகத்தை (frames) வைத்துள்ளார் தினேஷ். படத்தின் இயக்குநரான அஷ்வின் சந்திரசேகரும் ஒளிப்பதிவாளர் என்பதால், படம் ஒளிப்பதிவு ரீதியாக மிகவும் நே...
Sweety Naughty Crazy விமர்சனம்

Sweety Naughty Crazy விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இரட்டை அர்த்த வசனங்கள் நிரம்பிய கலகலப்பான 18+ படம். கலாச்சாரம், ஒழுக்கம் போன்றவற்றை யாரும் தங்கள் கனவிலும் படைப்பிலும் கூட மீறிவிடக்கூடாது என நினைக்கும் பூமர்ஸ்களின் ரத்தக்கொதிப்பை எகிற வைக்கும் கதைக்கருவைக் கொண்ட படம். போடுவது, ஓட்டுவது, ஏறுவது என்ற வார்த்தை விளையாட்டுகளைப் பயன்படுத்தியே கலகலக்க வைத்தாலும், குடும்பத்திற்குள்ளான தகாப்புணர்ச்சியை (incest) நகைச்சுவைக்கு உட்படுத்தியுள்ளது சிறு நெருடலை ஏற்படுத்தலாம். ஆனால், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ராஜசேகர். G, பார்வையாளர்களோடு அழகாகக் கண்ணாமூச்சி ஆடியுள்ளார். அந்நியோன்யமான தருணங்களை உருவாக்கிக் காட்சியைக் கத்தரித்து விடுகிறார். 'இருக்குன்னு நினைச்சா இருக்கும், இல்லைன்னு நினைச்சா இல்லை' என்பதாகப் பார்வையாளர்களின் கற்பனைக்குச் சாமர்த்தியமாக விட்டு விடுகிறார். தமிழ் இலக்கியத்தில், தன்னிலும் வயது முதிர்ந்த பெண்ணை விரும்பும் ஆணின்...
மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

மயிலாஞ்சி விமர்சனம் | Mylanji review

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலை ஏற்காவிட்டால், முகத்தில் அமிலம் ஊற்றும் இளைய தலைமுறையின் போக்கைக் கண்டு கவலையுறும் மனநல மருத்துவரான அர்ஜுனன், ஒரு மென்மையான, மேன்மையான காதலைத் திரையில் சொல்ல விழைந்துள்ளார். அதற்காகத் தனது அஜய் அர்ஜும் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படமே மயிலாஞ்சியாகும். மயிலாஞ்சி (அல்லது மைலாஞ்சி) என்பது மருதாணி (Henna) தாவரத்தைக் குறிக்கும் சொல்லாகும். புகைப்படக் கலைஞரான சூர்யா, அரிய வகை பறவையினத்தைப் படமெடுக்க நீல்கிரி வந்து சேருகிறார். அங்கே வசிக்கும் சாரு மீது காதல் வயப்படுகிறார். சாருவோ, தான் வேறு ஒருவரைக் காதலிப்பதாகத் தெரிவித்து, சூர்யாவிடமே காதலுக்கு உதவும்படி கேட்கிறார். அவர்களது காதல் என்னானது என்பதே படத்தின் கதை. சூர்யாவாக நடித்துள்ள கன்னிமாடம் நாயகன் ஸ்ரீராம் கார்த்திக்கும், சாருவாக க்ரிஷா குரூப்பும் நடித்துள்ளனர். ஓவியம் போல் திரைச்சட்டகங்களை (Frames) அழகுறச் செதுக்...
பூக்கி விமர்சனம் | Pookie review

பூக்கி விமர்சனம் | Pookie review

சினிமா, திரை விமர்சனம்
பூக்கி என்றால் Gen Z அகராதியில், honey, darling, babe, என்னவன், என்னவள் எனப் பொருள்படும் வகையில், ஒருவருக்கு ஒருவர் நெருக்கத்தையும் அணுக்கத்தையும் வெளிப்படுத்தும் செல்லம் கொஞ்சிக் கொள்ளும் சொல்லாம். அந்த மேஜிக் சொல்லிற்குள், Gen Z தலைமுறையினர், ஒட்டுமொத்த காதலையும் அன்பையும் எதிர்பார்ப்பையும் வைத்துள்ளனர். தனது பொருளாதார நிலையைப் பற்றி யாரேனும் பேசினால் தாழ்வு மனப்பான்மை எழுந்து முன்கோபம் கொள்ளும் கைலாஷை பிரேக்-அப் செய்கிறாள் ஆழி. பிரேக்-அப்பிற்குப் பின்னான அக்காதலர்களது மனநிலையே படத்தின் கதை. படம் தொடங்கிய முதல் ஃப்ரேமிலேயே கதையும் தொடங்கி விடுகிறது. ஒரு சிம்பிளான கதையாகத் தோன்றினாலும், மையப் பாத்திரங்களின் மன ஓட்டத்தோடு, சமூகத்தின் நிலையையும் முன்வைக்கிறது படம். உதாரணத்திற்கு எத்தனை வகையான ரிலேஷன்ஷிப்கள் உள்ளன என்பதையும், Dating App-கள் இயங்கும் விதத்தைப் பற்றியும் எப்படி சுவாரசியமாகச்...