Shadow

திரை விமர்சனம்

நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

நீ Forever விமர்சனம் | Nee ஃபாரெவர் review

சினிமா, திரை விமர்சனம்
அழகான ஆண் மட்டுமல்ல அனைவருக்குமே டேட்டிங் செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்கவேண்டுமென நினைக்கிறான் மகிழ்ச்சியற்ற அஜய். அநாதை ஆசிரமத்தில் வளரும் மதிக்கு சினிமா இயக்குநராக வேண்டுமென்ப்ச்து ஆசை. காதலிக்காமல், காதலின் அனுபவம் வாய்க்காமல் எப்படி டேட்டிங் செயலி உருவாக்க முடியும் என்று அஜயிடம் கேட்கப்படுகிறது; ஒரு காதல் கதையைப் படம் பண்ணுவதற்கான வாய்ப்பு மதியிடமும் வழங்கப்படுகிறது. இருவரும் காதல் என்றால் என்னவென்று அறிந்து கொள்ள ட்ரபிள் (Trouble) எனும் கைபேசி செயலியில் இணைகின்றனர். கழட்டி விடும் உள்நோக்கத்துடன் இருவரும் அறிமுகமாகி நல்லவிதமாகப் பழகுகின்றனர். நாயகனின் நண்பர்கள் ராக்கி, கூக்கியாக நடித்துள்ள பிரதோஷும், நோபல் ஜேம்ஸும் கொஞ்சம் கலகலப்பிற்கு உதவுகின்றனர். அஜயாக நடித்துள்ள சுதர்சன் கோவிந்த் நல்ல நாயக வரவு. நன்றாக நடனமாடுகிறார். சில காட்சிகளில் நன்றாக நடிக்கவும் செய்கிறார். ஆனால் கதாபாத்திர வ...
Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

Project Hail Mary விமர்சனம் | ப்ராஜெக்ட் ஹெயில் மேரி review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
எல்லா நம்பிக்கைகளும் முற்றிலுமாகத் தகர்ந்து விட, ஒரு கடைசி முயற்சி செய்து பார்ப்போம் என்று கையறு நிலையில் செய்யப்படுவதை, ‘ஹெயில் மேரி’ என்பார்கள். இப்பதம் அமெரிக்கக் கால்பந்து விளையாட்டில் பயன்படுத்தப்படுவதாகும். பூமியைக் காப்பாற்ற, அப்படி மேற்கொள்ளப்படும் ஒரு கடைசி முயற்சிக்கு ப்ராஜெக்ட் ஹெயில் மேரி என பெயர் வைக்கிறார்கள். சூரியனை மெல்ல மங்கச் செய்கிறது ஆஸ்ட்ரோபேஜ் எனப்படும் நுண்ணுயிரி. அந்த ஆஸ்ட்ரோபேஜ்களைத் தடுக்காவிட்டால், அடுத்த முப்பது வருடங்களில் பூமியின் வெப்பம் பத்திலிருந்து பதினைந்து டிகிரி அளவிற்குக் குறைந்து பெரும் பாதிப்புகளை விளைவிக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது. ‘டெள சீ-டை (Tau Ceti)’ எனும் நட்சத்திரம் மட்டுமே இந்நுண்ணுயிரியின் பாதிப்பில் இருந்து தப்பிப் பிழைத்துள்ளது என்பதைக் கண்டறிகின்றனர். அந்நட்சத்திரம் மட்டும் எப்படி ஆஸ்ட்ரோபேஜ்களின் தாக்குதலில் இருந்து தப்பின என்று க...
யூத் விமர்சனம் | Youth review

யூத் விமர்சனம் | Youth review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பள்ளியில், மூன்று பெண்களைக் காதலித்த பின், காதல் என்றால் என்னவென்று புரிதல் பிரவீனுக்கு ஏற்படுவதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தை அனைத்துப் பேற்றோர்களுக்கும் அர்ப்பணித்துள்ளார் இயக்குநர் கென். அறிமுக இயக்குநராகக் கென், தனது படைப்புத் திறனை மிக அழகாகவும் நேர்த்தியாகவும் பறைசாற்றியுள்ளார். ஃப்ரேம்க்கு ஃப்ரேம் கொண்டாடும் வகையில் இளமைத் துள்ளலுடன் ரசிக்க வைக்கிறது. அதற்கு உற்ற துணையாகத் தனது இசையின் மூலம் சகாயம் செய்துள்ளார் ஜி.வி.பிரகாஷ் குமார். ஒளிப்பதிவாளர் விக்கி கதாபாத்திரங்களின் சின்னச் சின்ன பாவனைகளையும் அழகாகப் படம்பிடித்துள்ளார். அதை மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படத்தொகுப்பாளர் காட்சிகளாகக் கோர்த்து அசத்தியுள்ளார். கதாபாத்திரத் தேர்வுகளிலேயே மேக்ஸிமம் ஸ்கோர் செய்துவிடுகிறார் இயக்குநர் கென் கருணாஸ். நாயகனின் பெற்றோராக நடித்துள்ள சுராஜ் வெஞ்சுரமூடு – தேவதர்ஷினி இணை படத்தின் மிகப் பெரு...
கெணத்த காணோம் விமர்சனம்

கெணத்த காணோம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தமிழில் அசோகமித்திரன் எழுதிய ‘தண்ணீர் தண்ணீர்’ நாவல் தாகத்தின் உச்சத்தை வெளிப்படுத்திய தண்ணிகரற்ற ஒரு படைப்பாகும். மேலும் தண்ணீர் தண்ணீர் என்ற பழைய திரைப்படமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆக தாகத்தை முன் வைத்த படைப்புகள் என்றாலே ஓர் உணர்ச்சிகரமான பிணைப்பு ஏற்படும். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா தண்ணீருக்கான தாகத்தை மையப்படுத்தியே இந்தத் திரைக்கதையை எழுதியுள்ளார். மூலக்கதை நடிகர் ஆறுபாலா கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள சிறு கிராமம் ஒன்றில் கோவில் பூசாரியாக இருக்கிறார் யோகிபாபு. அவர் தன் காதலியைக் கரம்பிடிக்க வேண்டும் என்ற தாகத்தில் தவிக்க, ஒருபுறம் ஊரே தண்ணீர் வேண்டித் தவிக்கிறது. இச்சூழலில் யோகிபாபுவின் வீட்டின் முன் கிணறு தோன்றினால் தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நிலை வருகிறது. யோகிபாபுவும் ஊருக்காகச் சம்மத...
கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

கொலைச்சேவல் விமர்சனம் | Kolai Seval review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கர்ப்பிணியாக இருக்கும் அனுசுயாவைக் காளி தன் குலதெய்வமான நிறை சூலியை வழிபட அழைத்துச் செல்கிறான். அப்பயணம் கொட்டுக்காளியை நினைவுறுத்துவதாக உள்ளது. படம் தொடங்கியதுமே, ஓர் அமானுஷயத்திற்குத் தயார்ப்படுத்துகிறது சாந்தனின் பின்னணி இசை. P.G.முத்தையாவின் ஒளிப்பதிவு படத்தின் பெரும்பலம். குறிப்பாக இசையுடன் இணைந்து ட்ரோன்ஸ் ஷாட் ஏதோ ஒரு சம்பவத்திற்குப் பார்வையாளர்களைத் தயார் செய்து கொண்டே உள்ளது. கார்த்திக் தாமோதரனின் ஒலி வடிவமைப்பு, மலைக்காட்டில், ஓடை சலசலப்பில் இருக்கும் உணர்வைத் துல்லியமாக ஏற்படுத்த உதவியுள்ளது. இசையும் ஒலியும் ஏற்படுத்தும் ஓர் அழுத்தத்தில் இருந்து நாயகனின் நண்பன் குமாராக நடித்துள்ள பால சரவணனே காப்பாற்றுகிறார். இதற்கே, லப்பர் பந்து போல் தனித்துவமான பாத்திரப்படைப்பாக இல்லாவிட்டாலும், 'என்னையே இந்தக் குடும்பம் வேலை வாங்குது' என ஒப்பேத்தும் வசனத்தைக் கொண்டு மட்டுமே ரசிக்க வைக்கிறார்....
வெஞ்சென்ஸ் விமர்சனம் | Vengeance review

வெஞ்சென்ஸ் விமர்சனம் | Vengeance review

சினிமா, திரை விமர்சனம்
மாவட்ட ஆட்சியராக இருந்து அரசியல் சாணக்கியராக உயரும் வேணி எனும் இளம்பெண்ணை மையமாகச் சுழலும் ஓர் அரசியல் த்ரில்லர் படம். 2042 ஆம் ஆண்டு, இனிக்கியா நாட்டில், தாய்நாடு மாநிலத்தில், வேணி மாவட்டத்தில் கதை தொடங்குகிறது. ஒரு மாறுபட்ட அனுபவத்திற்குத் தயாராக்கும் முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. 'யார்றா அந்த வேணி?' எனும் கேள்விக்குப் பதில் சொல்ல, 1985 க்கு அழைத்துச் செல்கிறார் சச்சு. காவேரி மாவட்டத்தில் வாழும் வேணி எப்படி கலெக்டரானார், ஏன் பதவி பறிப் போனது, எவ்வாறு அரசியலுக்குள் வந்தார், அதிலிருந்து ஏன் ஓரங்கட்டப்பட்டார், எப்படி மீள்கிறார் என்பதே கதை. இவற்றை, முதல் ஒளி, நிழல் அரசி, இருளின் ஒளி, அரியணையின் அரசியல், அழிவின் எழுச்சி என ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார் இயக்குநர் ராகுல் அஷோக். கதாநாயகியை மையப்படுத்திய அரசியல் படம் என்பது மிக ரேர் காம்போ. அதுவும் எப்பொழுதும் புகழ் வெளிச...
போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

போலீஸ் ஃபேமிலி விமர்சனம் | Police Family review

சினிமா, திரை விமர்சனம்
ஒருவனின் பழிவாங்கும் உணர்வு, சம்பந்தமே இல்லாமல் எத்தனையோ பேர் இறப்பதற்குக் காரணமாகிவிடுகிறது. யாரோ ஒருவன், முன்னால் ரெளடி தனாவின் மகனைக் கொன்றுவிட, காவல்துறையினர்தான் அவனைக் கொன்று விடுவதாகத் தனா தவறாக நினைத்துக் கொள்கிறான். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளையும், அவர்களது குடும்பத்தினரையும் வெஞ்சினத்துடன் தேடித் தேடிக் கொல்வதுதான் போலீஸ் ஃபேமிலியின் கதை.தனாவாகப் பருத்தி வீரன் சரவணன் நடித்துள்ளார். மகனின் மரணத்திற்குக் காரணமான அனைவரது குடும்பத்தையும் கொன்றே தீருவது என்று ஆவேசமாக உள்ளார். அப்படி சிலரைக் கொன்றதும், வலியே இல்லாமல் இறந்து விடுவார்கள் எனக் குடும்பத்தாரை மட்டும் கொல்ல ஆணையிடுகிறார். ஏட்டு சுரேஷாக மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார் காதல் சுகுமார். அவ்வளவு கனமான பாத்திரம் ஏற்படுத்த வேண்டிய தாக்கத்தைத் தருமளவிற்கு சுகுமார் அனுகூலமான நடிப்பை வழங்கவில்லை. அனிதா எனும் கதாநாயகி...
முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

முஸ்தபா முஸ்தபா விமர்சனம் | Mustafa Mustafa review

சினிமா, திரை விமர்சனம்
முப்பது வருடங்களுக்கு முன் வெளியான 'காதல் தேசம் (1999)' படத்தில், நட்பின் மேன்மையையும் இணக்கத்தையும் எடுத்தியம்பும் பாடலின் தொடக்கச் சொற்கள் 'முஸ்தபா முஸ்தபா' ஆகும். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வந்த அப்பாடல் நட்பிற்கான பாடலாக மிகவும் பிரசித்தி பெற்றது. இப்படத்தின் பிரதான கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஆழமான நட்பினைச் சொல்லும் விதமாக இத்தலைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. டிவி சேனலில் வேலை செய்யும் கார்த்திக், எப்பொழுதோ ஒரு திரைப்படத்தில் ஒருநாள் மட்டுமே நடித்த ஒரு மார்க்கமான காட்சி, ஆபாச (porn) இணையதளத்தில் வெளியாகிவிடுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் காதலியோடு திருமணம் என்ற நிலையில், நண்பன் வாசுவுடன் இணைந்து, அந்த வீடியோவை நீக்க படாதபாடுபடுகிறான் கார்த்திக். வாசுவும் கார்த்திக்கும் அந்த வீடியோவைக் கல்யாணத்திற்கு முன் நீக்கினார்களா இல்லையா என்பதுதான் கலகலப்பான படத்தின் முடிவு. ஹேக்கர் சிட்டியாகக் க...
99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

99/66 விமர்சனம் ||| தொண்ணூற்று ஒன்பது/ அறுபத்தாறு review

சினிமா, திரை விமர்சனம்
அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா இருப்பதே அதற்கெல்லாம் காரணம் என்று துர்கா தேவி அன்னையார் சொல்கிறார். அந்த ஆத்மா யார், ஏன் அங்கு இருக்கிறது என்பதே படத்தின் கதை. 9966 எனும் எண் கொண்ட லாரி ஒரு காரை இடிப்பதாகப் படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது. புத்தரின் பெயரைத் தாங்கிய அந்த லாரியில் தயாரிப்பாளரும் இயக்குநருமான மூர்த்தி கோபமாக வீற்றுள்ளார். அது நினைவா, கனவா, தீர்க்கதரிசனமா என்ற கேள்விக்கு எல்லாம் படத்தின் பின்பாதியிலேயே பதில் கிடைக்கிறது. படகில் வெள்ளைப் புடவை அணிந்த பெண், ஓர் ஆந்தை, கருப்பு நாய் ஒன்று, பச்சைக்கிளி, கறுப்புப் பூனை, துறவி போல் ஆண் ஒருவர், அச்சுறுத்தும் ஒரு சாமியாரினி ஆகி...
வடம் விமர்சனம் | Vadam review

வடம் விமர்சனம் | Vadam review

சினிமா, திரை விமர்சனம்
இரட்டையர்களாகப் பிறக்கும் இரண்டு காளைக் கன்றுகள், சிறு வயதில் பிரிந்து, திமிலுடன் வளர்ந்த பின், வடமாடு மஞ்சு விரட்டில் ஒன்று சேருவதுதான் படத்தின் கதை. வடம் என்றால் தடித்த கயிறு எனப் பொருள் கொள்ளலாம். வடமாடு மஞ்சுவிரட்டு என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் ஒரு மரபுவழி ஏறுதழுவல் விளையாட்டாகும். காளையை ஒரு நீண்ட வடத்தில் (கயிறு) கட்டி வைத்து, 9 முதல் 10 மாடுபிடி வீரர்கள் கொண்ட குழு 20-25 நிமிடங்களில் அதைப் பிடித்து அடக்க வேண்டும். இது காளையின் உரிமையாளருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையேயான போட்டியாகக் கருதப்படுகிறது. அடக்கவே முடியாத காளைகளை வளர்ப்பதைக் கெளரவமாகவும் வீரமாகவும் கருதுபவர் ரத்தினவேல். அவரால் விரட்டி விடப்பட்ட, ஒற்றைக் கண் காளைக் கன்றைத் தன் அன்பாலும் பயிற்சியாலும், யாராலும் அடக்க முடியாத காளையாகப் மாற்றி விடுகிறார் வெற்றிவ...
அனோமி விமர்சனம் | Anomie review

அனோமி விமர்சனம் | Anomie review

சினிமா, திரை விமர்சனம்
அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி ஜிப்ரான் வழக்கை முடிக்க, அது தொடர் கொலைகளில் ஒன்றென நீதிமன்றத்தில் நிறுவுகிறார் ஃபாரன்ஸிக்கில் வேலை செய்யும் ஜியானின் தமக்கை ஜாரா பிலிப். சைக்கோ கொலைக்காரனைப் பிடித்தாக வேண்டிய அழுத்தம் ஜிப்ரானுக்கு நேரிடுகிறது. தம்பியைக் கொன்றவனை ஜாராவும் மும்மரமாகத் தேடுகிறார். கொலை செய்தது யார் என்றும், எதற்காகக் கொலை செய்தனர் என்பதற்குப் பதிலுடன் படம் நிறைவுறுகிறது.காவல்துறை அதிகாரி ஜிப்ரானாக ரஹ்மான் நடித்துள்ளார். முதற்பாதியில் சற்றே அலட்சியமாக இருப்பவர், நீதிமன்றத் தலையிடலுக்குப் பின், இரண்டாம் பாதியில் துரிதமாகச் செயற்பட்டுக் குற்றவாளியை அணுகுகிறார். அழுத்தமாக ...
ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

ஓ பட்டர்பிளை! விமர்சனம் || Oh Butterfly! review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பட்டாம்பூச்சியை உருவகமாகப் பயன்படுத்தி, மானுட வாழ்க்கையின் நிலையற்றத்தன்மையைக் குறித்தும், அதை சாஸ்வதமென நம்பி நடப்பவற்றிற்குப் பொறுப்பேற்கும் மனித மனங்களின் முரணைக் குறித்தும் படம் தத்துவார்த்தமாகச் சொல்கிறது. 'பட்டாம்பூச்சிகளைப் போல் ஒருநாள் சிறகடித்துவிட்டு, என்றென்றைக்கும் அது நித்தியம் என நினைத்துக் கொள்ளும் நாம் (We are like butterflies who flutter for a day and think it is forever)' எனும் கார்ல் சாகனின் (Carl Sagan) மேற்கோளுடன் படம் தொடங்குகிறது. கல்லூரிக் காலத்தில் தனக்கும் சூர்யா குமரவேலுக்கும் இருந்த உறவைப் பற்றிக் கணவனிடம் எப்படியாவது சொல்ல நினைக்கிறார் கெளரி. கணவன் அர்ஜுனுக்கோ, கல்யாணத்திற்கு மறுதினமே வேலை பறிப் போன மன அழுத்தத்தில் இருக்கிறார். கணவனிடம் தனிமையான சூழலில் உண்மையைச் சொல்லிவிட நினைத்து, கொடைக்கானல் போகும் வழியிலுள்ள குறிஞ்சிக்கு அழைத்துச் செல்கிறார். அங்கே எதிர்பா...
ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

ஆழி விமர்சனம் | Aazhi – The Ocean review

சினிமா, திரை விமர்சனம்
ஆழி என்றால் கடல் எனப் பார்வையாளர்களுக்குத் தெரியாமல் போய்விடுமோ என்று 'தி ஓஷன்' என்பதையும் தலைப்பில் முன்னெச்சரிக்கையாகச் சேர்த்துக் கொண்டுள்ளனர். நாகர்கோவிலில் அரசியல் செல்வாக்கு உள்ள கோடீஸ்வரராகவும் வஸ்தாதாகவும் இருக்கிறார் மூர்த்தி. அவரது மகள் முகிலாவை ஏழையான அருள் காதலிக்கின்றான். இக்காதல் விஷயம் தெரிந்தவுடனே, அருளைப் படகில் கட்டிப் போட்டு கடலுக்குள் அழைத்துச் சென்று நையப்புடைக்கிறார் மூர்த்தி. அதிலிருந்து அருள் தப்பி மூர்த்திக்கு எதிராக ஆற்றும் எதிர்வினையே ஆழி படத்தின் முடிவாகும். ரத்தம் வழிய வழிய மூர்த்தியிடம் அடி வாங்குகிறார் அருள். ஒரு வதை முகாமில் சிக்கிய உணர்வைத் தருமளவுக்கு அடிக்கிறார், அடிக்கிறார், அருளை அடித்துக் கொண்டே இருக்கிறார் மூர்த்தி. நல்லவேளையாக மகள் மீது மூர்த்தி வைத்திருக்கும் பாசத்தையும், முகிலா - அருள் காதலையும், அருள் தன் குடும்பத்து மேல் வைத்திருக்கும் பாசத்தைய...
Fourth Floor விமர்சனம்

Fourth Floor விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனது காதலி அனு எனும் அனுபமாவைத் தேடிச் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் தீரன். ஒரு குடியிருப்பு வளாகத்தில், அவரது நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் தங்குகிறார். அங்கு குடி வந்ததில் இருந்து, மரணத்தைப் பற்றிய கனவுகளாக வந்து தீரன் தூக்கமின்றி அலைக்கழிக்கப்படுகிறார். தனது தூக்கமின்மைக்கும், தன்னைச் சுற்றி நிகழும் அமானுஷ்ய சங்கதிகளுக்கும், காணாமல் போய்விட்ட தனது காதலி அனுபமாவிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக உணர்கிறார் தீரன். தீரனின் தேடல் தொடங்கி முடியுமிடமாக அக்குடியிருப்பின் நான்காவது மாடி உள்ளது. அமானுஷ்ய புதிர் அவிழ்ந்து தீரன் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் மீதிக் கதை. படத்திற்குள் ஒரு நல்ல திகிலான குறும்படம் ரசிக்கும் படி வருகிறது. பார்க்கிங்கிற்குப் படியிறங்கும் ஆதித்யா கதிர், மொட்டை மாடியில் தனியாகப் பார்க் செய்யப்பட்டுள்ள காரிடம் வந்து சேருகிறார். இப்படி சிறு சிறு சுவாரசியங்கள் படம் ந...
தடயம் விமர்சனம் | Zee 5

தடயம் விமர்சனம் | Zee 5

OTT, Web Series, திரை விமர்சனம்
சமுத்திரக்கனி நடித்திருக்கும் முதல் இணையதொடராகும். ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஈச்சம்பள்ளம் எனும் தமிழக - ஆந்திர எல்லைப் பகுதிதான் தொடரின் களம். அதிகாரம் எளியவனை எப்படிக் காயப்படுத்துகிறது, காயப்பட்டவன் சமூகத்தில் என்னவாகிறான் என்பதைத் தொடர் அழுத்தமாகப் பதிந்துள்ளது. விருப்ப ஓய்வு பெறத் துடிக்கும் திறமையான காவல்துறை அதிகாரியான சமுத்திரக்கனியை, மரியாதையுடன் நடத்தி, தொடர் கொலைகளை விசாரிக்கும் வழக்கில் குழுவில் சேர்க்கிறார் ஷிவதா. கொலைகாரர்கள் இருவர் எனத் தடயத்தைக் கொண்டு கண்டுபிடிக்கிறார் சமுத்திரக்கனி. மேலும், தமிழக - ஆந்திர எல்லையோர ஊர் என்பதால், கொலைகாரர்கள் எல்லை தாண்டி வந்திருக்கக்கூடும் என ஆந்திராவிற்குச் சென்று விசாரிக்கின்றனர். அதே பேட்டர்னில் நடந்த 70 கொலைகளைப் பற்றித் தெரிய வருகிறது. கொலைகாரர்கள் யார், ஏன் அத்தனை கொலை செய்கிறார்கள் என்பதை விற...