Shadow

அரசியல்

தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

தமிழக அமைச்சர் – குமார்.. ஜெயக்குமார்!

அரசியல், சமூகம்
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகளில் யாருமே பார்த்திராத வகையில் வலம் வருபவர் அமைச்சர் ஜெயக்குமார். அவரது செயல்பாடுகள் மக்கள் மத்தியிலும் சரி, அலுவலக ரீதியாகவும் சரி எப்போதுமே அதிரடியாக இருக்கும். களத்தில் இறங்கினால் அதிரடி ஆட்ட நாயகனாக மக்களோடு மக்களாகத் தன்னை இணைத்துக் கொள்வதில் முன்னோடியாகவே இருக்கிறார். எத்தனையோ சோதனைகள், சங்கடங்கள், தோல்விகள், தேவையற்ற வீண் வதந்திகள், விமர்சனங்கள், பழிவாங்கல்கள்,போட்டி, பொறாமை என எது வந்தாலும் அவற்றைப் புன்சிரிப்போடு எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்தவர். கல்லூரிக் காலகட்டங்களில் இருந்த அதே மனநிலையோடு தான் இன்னமும் மனதை இளமையாக வைத்துக் கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரது தொடர் வெற்றிக்கும் இதுவே காரணமாக அமைகின்றது. தொகுதி மக்களின் பிரச்சனைகளைக் கேட்டறிந்து தீர்வு காண்பது மட்டுமல்ல இவரது அரசியல், அதைத் தாண்டி ஒட்டுமொத்த தமிழகத்து மக்களின் பிரச்சனை எதுவெ...
அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அமைச்சரைக் கெளரவித்த ஜீ தமிழ்

அரசியல், சமூகம்
தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீ தமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களைக் கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது. வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளைக் கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்குச் சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் களத்தில் நின்று மக்கள் பணியா...
“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

“கந்தர் சஷ்டி கவசம்: ஒரு பாதுகாப்பு அரண்” – நடிகர் ராஜ்கிரண்

அரசியல், சமூகம், சினிமா, திரைச் செய்தி
ராஜ்கிரண் என்றழைக்கபடும் J. மொஹைதீன் அப்துல் காதர், ‘கறுப்பர் கூட்டம்’ யூ-ட்யூப் சேனல் வெளியிட்ட கந்த சஷ்டி கவசம் குறித்த ஆபாசமான காணொளியைக் கண்டித்துள்ளார். “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப்பெருமானை நம்புவோர்க்கு, "கந்தர் சஷ்டி கவசம்" என்பது ஒரு பாதுகாப்பு அரண். இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன. இறைவனை நம்பாதோர்க்கு, ‘நம்பாமை’ என்பது அவர்களின் சுதந்திரம். நம்பிக்கை கொண்டோர்க்கு, ‘நம்புதல்’ என்பது அவர்களின் சுதந்திரம். இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான் மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது மிகவும் கீழ்மையானது. இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதாரச் ச...
எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

எம்.ஜி.ஆருக்கு மலையாளிகளைப் பிடிக்காது

அரசியல், கட்டுரை, சினிமா, புத்தகம்
ஈராக்கில் பணி புரியும் ஐ.நா. சபை அதிகாரியான ஆர்.கண்ணன், “MGR: A Life” எனும் புத்தத்தை எழுதியுள்ளார். அதன் வெளியீட்டு விழா, 2017 ஜூலை 8ஆம் தேதி அன்று, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. புத்தகத்தை பாராளமன்ற உறுப்பினர் திரு. சசி தரூர் வெளியிட, எம்.ஜி.ஆர். கழகத்தின் தலைவரான திரு.இராம.வீரப்பன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய சசி தரூர், “நானும் எம்.ஜி.ஆரின் ஊரான பாலக்காட்டைச் சேர்ந்தவன் தான். எனது குழந்தைப் பருவத்தின் ஹீரோ அவர். என் சகோதரர்களுடன் பல எம்.ஜி.ஆர். படங்களை ரசித்திருக்கிறேன். எம்.ஜி.ஆர். தான் இந்திய அரசியலில் சாதித்த முதல் சினிமா சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டில், தேசிய கட்சிக்கும், மாநில கட்சிக்கும் இருந்த அரசியல் போட்டியை, மாநில கட்சிகளுக்கு இடையேயான போட்டியாக மற்றியவர் எம்.ஜி.ஆர். முப்பது வருடங்கள் முடிந்த பிறகும், எங்களையும் (காங்கிரஸ்) சேர்த்து எந்தத் தேசியக் கட்சிகளாலும் த...
சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

சர்வ அலட்சியமும் சர்வாதிகாரமும்

அரசியல், கட்டுரை, சமூகம்
நாட்டுக்காக மக்களா? மக்களுக்காக நாடா? என்ற கேள்விக்கு, 'தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்' என்ற பாரதியின் வரிகளைப் பதிலாகக் கொள்ளலாம். மோடி அரசோ, அடுத்த வேளை சாப்பாட்டைப் பற்றிய பயத்தையும் பதற்றத்தையும், தனி மனிதன் பலருக்கும் உருவாக்கி வைத்துள்ளது. ‘வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity)’ என்பது இந்தியாவிலுள்ள பல்வேறு மொழி, மதம், சடங்கு, உணவு வேறுபாட்டினைக் குறிக்கும் பதம் மட்டுமன்று, மக்களின் பொருளாதார அடுக்கினையும் சேர்த்தே குறிக்கிறது. அதிகாரத்தோடு நெருங்கிப் பழகும் மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் (Crony capitalists) முதல் தினக் கூலியை (Daily wages) நம்பிப் பிழைக்கும் அன்றாடங்காச்சிகள்/கழைக்கூத்தாடிகள் வரை எண்ணற்ற அடுக்கினைக் கொண்டது. இந்த அடுக்குகளைப் பற்றிப் போதிய ஞானம் இல்லாமல், அடுக்கின் உச்சாணிக் கொம்பில் அமர்ந்து கொண்டு, 2 நாட்களில் நாட்டை வெளுக்க அரசு ஓர் அ...
இதே ஊர்தான்டா..!

இதே ஊர்தான்டா..!

அரசியல், கட்டுரை
ஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டிதான் கதையின் மைய இழை. ஆனால் அது மட்டுமே கதை அல்ல. சுவரில் வரையப்படும் படமும் அதன் மூலம் கட்சியின் பெயரும் அதிகாரமும் அங்கேயே நிலை பெற செய்ய என்னென்ன அரசியல் நடக்கிறது அதில் எளிய மக்களின் நம்பிக்கைகள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விலாவாரியாகப் பேசுகிறது மெட்ராஸ் படம். அது வெறும் சுவர் இல்ல.. அதிகாரம். காளியும் அவன் நண்பன் அன்பும் மைய கதாபாத்திரங்கள். அன்பு நடுவிலே கொலை செய்யப்படுவதால் காளியை கதாநாயகனாக கொள்ளவேண்டி இருக்கிறது. இரண்டு நாயகன்கள் போலவே இரண்டு நாயகிகளுக்கும் சமமான பாத்திரங்கள். காதல்? படத்தில் காதல் இருக்கிறது. வாழ்க்கையில் வருவது போல. இப்ப தான் அப்பா அம்மாக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று குழந்தை சாதாரணமாக சொல்லுமளவுக்கு இயல்பாக வருகிறது. ஆனால் படத்தைக் கொண்டு செல்வது காதல் அல்ல. காளி படித்த, நல்ல...
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

அரசியல், சமூகம்
சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே! நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், தொலைக்காட்ச , இணையத்தளம், பண்பலை உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் இந்த சினிமா ஊடகவியலாளர்கள் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் திரையுலக பிரமுகர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செய்திகளைக் கொடுத்து சினிமா உலகுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பத...
“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

“இது ஒருவழிப் பாதை..” – குஷ்பு சுந்தர்

அரசியல், சினிமா
16.06.2014 பெறுநர் உயர்திரு தலைவர் அவர்கள், திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா அறிவாலயம், சென்னை. ஐயா, என்னைத் தங்களின் இல்லத்தில் ஒருத்தியாகவே ஏற்றுக் கொண்ட அன்புள்ளம் கொண்ட தமிழ்மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கழக உறுப்பினராக பொது வாழ்வில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அந்த நாள் முதல் கழகத்தில் எனக்கு அளிக்கப்பட்ட பணியை நான் நூறு சதவீதம் சிரத்தையுடன் நிறைவேற்றியதை கழகத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் முதல் அடிப்படைத் தொண்டர்கள் வரை அனைவரும் அறிவார்கள். ஆனால் என் அர்ப்பணிப்பும், உழைப்பும் ஒருவழிப் பாதையாகவே தொடர்ந்து நீடிக்கும் என்ற நிலை கழகத்தில் உள்ள போது நான் தேர்ந்தெடுத்த பாதையும், பயணமும் தாங்க இயலாத மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. ஆகவே திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து அதன் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவது என்ற முடிவை கனத்த இதயத்துடன் மேற்கொள்கிறே...
நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

நியூயார்க் இந்தியத் தூதரகம் – ஓர் அவஸ்தையான அனுபவம்

அரசியல்
அப்பா இறந்துவிட்டார். உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல்.அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை. கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் மட்டும் இந்தியா கிளம்புவது என்று முடிவெடுத்து பயண ஏற்பாட்டைத் துவக்கினால், எனக்கு விசா வாங்கவேண்டும் என்பது நினைவுக்கு வர, எதுவும் தோணாமல் நான் மட்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் நியூயார்க் போக முடிவெடுத்தேன். முதல் முறையாக கணவரின் துணையில்லாமல் நியூயார்க் பயணம். இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது, அங்கே யாரைப் பா...
சீமான் செய்த துரோகம்

சீமான் செய்த துரோகம்

அரசியல், கட்டுரை
“நான் எங்கண்ணன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா அவர்களுக்கு ஒரு துரோகம் செஞ்சிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் அந்தக் குற்றவுணர்விருக்கு. அவர் பகலவன்னு என்னுடைய கதையைதான் எடுக்கச் சொல்லிக் கட்டாயபடுத்தினார். அதை எடுத்திருந்தா மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்சிருக்கும். தொடர்ச்சியா நானும் படங்கள் இயக்கியிருந்திருக்கலாம். அன்னைக்கு ‘வாழ்த்துகள்’ படமெடுத்து பெரிய பொருளிழப்பைத் தந்துட்டன். அந்தப் படத்தை வெளியிட்ட ஒருவாரத்திலதான் என் தலைவன் பிரபாகரன்கிட்டயிருந்து அவசர அழைப்பு. நான் போனேன். போன அந்த நாளிலிருந்து என் வாழ்க்கை திசை மாறிட்டது.  அப்பதான் வாழ்த்துகள் படம் ஓடிட்டிருக்கு. அது வெற்றியடையலை என அவருக்குத் தெரிஞ்சிடுச்சு. என்னைக் கூப்பிட்டுச் சொன்னார், “நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதைலாம்? நான் தலை குனிஞ்சிட்டே இருந்தன். நமக்கு தம்பி மாதிரி படமிருக்கணும். தரையில் அடிக்கணும்; திரையில் அடிக்கணும். ...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அரசியல், கட்டுரை
அனுப்புநர்:பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111.பெறுநர்:கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. +91 44 24336348.மதிப்பிற்குரிய ஐயா,பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவினு...
அற்புதத்தில் ஒருவன்

அற்புதத்தில் ஒருவன்

அரசியல், கட்டுரை
'உதகையைத் தீ உய்த்த உரவோன்..''என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்க...
ஐ.ஐ.டி. என்னும் மாயை

ஐ.ஐ.டி. என்னும் மாயை

அரசியல், கட்டுரை
ஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (!?) அடைய உதவும் ராஜபாட்டை. அதான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இதில் படித்தால் போதும் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். அறிவுக்கு  நம் அகராதியில் ஐ.ஐ.டி என்றும் பெயர் உண்டு (திரைப்படங்களில் கூட விஞ்ஞானிகள் பொல வருவார்களே!!)"மத்தாவா மாதிரி நானும் காலேஜ் படிச்சேன்.. மேரேஜ் பண்ணின்டேன்னு பேசிண்டு இருக்காம, படிச்சா ஐ.ஐ.டி ல தான் படிப்பேன்னு இப்பவே சங்கல்பம் செஞ்சுண்டு, மாமா ஆத்து டியூசனுக்கு புறப்படு. அதுக்கு முன்னாடி, பெருமாளண்ட நன்னா வேண்டிக்கோ.  27%  ரிசர்வேசன் வேணும்னு சொல்லிண்டு திரியும் அந்த நாயக்கர் ஆளுங்கெல்லாத்துக்கும்  நல்லா பாடம் கொடுண்ணு வேண்டிக்கோடா. சுப்ரீம் கோர்ட் நமக்கு எப்பவும் ஃபேவரா தான் இருக்கும். ம்ம்.. இருந்தும் என்ன செய்ய? கோபால்சாமி அய்யங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே.எம் முன்ஷி இவாளாம் Dr...
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

அரசியல், கட்டுரை
கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் 'பவர்' அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.நவம்பர் 5 ஜனாதி...
நாம் இந்துவோ முஸ்லிமோ அல்லர்! இந்தியர்கள்!!

நாம் இந்துவோ முஸ்லிமோ அல்லர்! இந்தியர்கள்!!

அரசியல், கட்டுரை
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர்  24தேதி தீர்ப்பு வரப்போகிறது தீர்ப்பு யார் பக்கம் சாதகமாக இருந்தாலும் பாதிக்கப்படும் தரப்பு கலவரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது.காஷ்மீர் விவகாரத்தில் சொதசொதப்பாக நடந்து கொள்வது போல் இந்த விஷயத்திலும் மத்திய அரக நடந்துக் கொண்டால் இந்திய மக்கள் தேவையற்ற இன்னல்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.எனவே புத்திசாலித்தனமாக நிலமையை முன்கூட்டியே உணர்ந்து தக்கப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அரசின் வேலை தும்பை விட்டுவாலைப்பிடித்தால் அதிகப்படியான இழப்பை நாடுஎதிர்கொள்ள நேரிடும் அதை நாடு தாங்காது.கலவரத்தில் ஈடுபடுவது இந்துவாக இருந்தாலும் முஸ்லிமாக இருந்தாலும் அவர்களை பேதம் பார்க்காமல் தண்டிக்க வேண்டும் இதில் ஓட்டு அரசியல் யார் பார்த்தாலும் அவர்கள் நிச்சயம் பாரதத்திருநாட்டின் பகைவர்கள் என்றே கருதப்படுவார்கள்.தனிமனி...