Shadow

கட்டுரை

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

சிதிலமடையும் மோளப்பாளையம் மலை

கட்டுரை, சமூகம்
1.மோளப்பாளையம் கிராமத்தின் இயற்கை அமைப்பு:நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் மோளப்பாளையம் கிராமம் இயற்கையாக மலைகள் கொண்ட கிராமம் ஆகும். இங்கு உள்ள மக்கள் வேளாண்மை செய்து வருகிறார்கள் .ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார்கள். மோளப்பாளையம் கிராமத்தைச் சுற்றி இருபது விவசாய கிராமங்கள் உள்ளன . இந்த கிராமங்களை மலைகள் சூழ்ந்து உள்ளன.வனவிலங்குகள், தேசிய பறவை மயில் மற்றும் பல்வேறு மூலிகை மரங்கள் இந்த மோளப்பாளையம் மலைப்பகுதிகளில் உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் இருந்து ஏழு கிலோமீட்டரில் புகழ்ப் பெற்ற கொல்லிமலை மற்றும் னைனாமலை ஆகியவை உள்ளன. மோளப்பாளையம் கிராமத்தில் உள்ள மலைகைளச் சுற்றி இரண்டு கிலோமீட்டர் தொலைவிற்குள் மூன்று பெரிய ஏரிகள் உள்ளன (பொன்பரப்பு ஏரி, கதிரானல்லூர் ஏரி, சிங்களாந்தபுரம் ஏரி). இதில் பொன்பரப்பு ஏரி நூற்று ஐம்பது ஏக்கர் பரப்பு கொண்டது. இந்தமைலகளில் இருந்து வரும் நீரோடைகளி...
“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

“விஸ்வரூபம் 200” – கமல் ஸ்பெஷல்

கட்டுரை, சினிமா, மற்றவை
விசாம் அகமது காஷ்மீரிவிஸ்வரூபம் ரூ.200 கோடி வசூல் செய்தது!!க்றிஸ்டியன் ஃப்ளெட்சர் யூ ரிமெம்பர் ஆளவந்தான்?ஷிங்கென் நராஷி //யூ ரிமெம்பர் ஆளவந்தான்?// யூ ரிமெம்பர் வாட் Quentin Tarantino said?ராகவன் DCP விஸ்வரூபம் கண்டிப்பா ஆஸ்கார் வாங்குது... இது ராகவன்'ஸ் இன்ஸ்டின்க்ட் ...
‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

‘நாடக’ திருமணங்களும் சப்பை கட்டுகளும்

கட்டுரை, சமூகம்
காதல் திருமணம் செய்ய நினைக்கிறவர்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் ஆலோசனைகள் அல்லது அறிவுரைகள் பெரும்பாலும் சாதி என்கிற ஆயிரங்காலத்து காரணத்தை நேரடியாக ச்சொல்லாமல், அதைப் பல்வேறு வகையில் மறைமுகமாக வலியுறுத்துவதை நாம் பல்வேறு இடங்களில் கண்கூடாக பார்க்க முடிகிறது. இந்த ஆலோசனைகள் எல்லாம் பெரும்பாலும் அச்சுறுத்தும் தொணியில்தான் இருக்கும்."அவங்க குடும்பப் பழக்கவழக்கம் வேற, நம்ம குடும்பப் பழக்கவழக்கம் வேற, அதெல்லாம் ஒத்து வராது.""நமக்கு ஏதாவது பிரச்சினைன்னா யாரும் சப்போர்ட்டுக்கு இருக்க மாட்டாங்க.""அவன் உன்னை ஏமாத்திருவான். சொத்துக்காக உன்னை ஏமாத்துறான்.""உறவினர்கள் நம்மைத் தனிமைப்படுத்தி விடுவார்கள். மானம் மரியாதை என்னாவது?""நீ அவனைக் கல்யாணம் பண்ணிகிட்டா, நான் செத்துருவேன்.""அவனைத் தவிர வேற யாரை வேணாலும் கல்யாணம் பண்ணு. இல்லே, கல்யாணம் பண்ணாமையே இரு."மேலோட்டமாய் இந்த...
ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

ஆப்ரேஷன் கமல் மங்கூஸ்

அரசியல், கட்டுரை
அனுப்புநர்:பாரக் ஓபாமா, ஜனாதிபதி, வெள்ளை மாளிகை, 1600 பென்சில்வேனியா ஏவ், வாஷிங்டன் டி.சி. - 20500, யுனைடேட் ஸ்டேட்ஸ். +1 202-456-1111.பெறுநர்:கமல் ஹாசன், இராஜ்கமல் இன்டர்நேஷ்னல் ஃப்லிம்ஸ், 218 டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை - 600 018. +91 44 24336348.மதிப்பிற்குரிய ஐயா,பொருள்: தாங்கள் அமெரிக்காவில் நுழைய விதித்த தடை குறித்து.எஃப்.பி.ஐ. யின் அறிக்கையின்படி தாங்கள் அமெரிக்க இறையாண்மைக்கு எதிரானவர் என்பது தெளிவாக நிரூபனமாகி உள்ளது. ஆகையால் தங்களுக்கு அமெரிக்காவில் நுழைய அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. தயாரிப்பாளார் பேரி ஆஸ்பெர்னின் அழைப்பின் பேரில் தாங்கள் ஹாலிவுட் படம் ஒன்றை இயக்கி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அறிகிறோம். அந்த ஒப்பந்தத்தை நீக்கும்படி பேரி ஆஸ்பெர்ன் அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளோம். தாங்கள் இத்தடையை மீறி அமெரிக்காவினு...
வன்கொடுமையும் வரதட்சணையும்

வன்கொடுமையும் வரதட்சணையும்

கட்டுரை, சமூகம்
வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?வன்கொடுமை சட்டம் யாராலும் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லவில்லை. அவ்வாறு நியாயமாக இதை சுட்டிக்காட்டுபவர்கள், வச்சாத்தி, தருமபுரி போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் ஒரு கண்டனமாவது தெரிவித்தார்களா? இல்லை. சரி, பரவாயில்லை. இந்த சட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும்? அ...
சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

கட்டுரை, சமூகம்
பல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம் படத்திற்கு 15நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்,த.மு.மு.க., இ.மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகள்(?) ஒன்று சேர்ந்து ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு இந்திய முஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது.இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலரை சந்தித்துமனு கொடுக்கின்றனர். உடனடியாக படத்தை மேற்கண்ட அமைப்புகளுக்கு திரையிட்டு காட்ட கமல்ஹாசன் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதை ஏற்று அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் இப்படம் வெளிவந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், இதுமுஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது என்றும் ஓலமிடுகின்றனர். இதை உடனே எதிர்பார்த்திருந்த தமிழக அரசு உடனடியாக இரவோடு இரவாக ஒரு உத்தரவை வெளியிடுகிறது. இப்படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதிக்கப்படு...
அற்புதத்தில் ஒருவன்

அற்புதத்தில் ஒருவன்

அரசியல், கட்டுரை
'உதகையைத் தீ உய்த்த உரவோன்..''என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்க...
ஐ.ஐ.டி. என்னும் மாயை

ஐ.ஐ.டி. என்னும் மாயை

அரசியல், கட்டுரை
ஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (!?) அடைய உதவும் ராஜபாட்டை. அதான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இதில் படித்தால் போதும் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். அறிவுக்கு  நம் அகராதியில் ஐ.ஐ.டி என்றும் பெயர் உண்டு (திரைப்படங்களில் கூட விஞ்ஞானிகள் பொல வருவார்களே!!)"மத்தாவா மாதிரி நானும் காலேஜ் படிச்சேன்.. மேரேஜ் பண்ணின்டேன்னு பேசிண்டு இருக்காம, படிச்சா ஐ.ஐ.டி ல தான் படிப்பேன்னு இப்பவே சங்கல்பம் செஞ்சுண்டு, மாமா ஆத்து டியூசனுக்கு புறப்படு. அதுக்கு முன்னாடி, பெருமாளண்ட நன்னா வேண்டிக்கோ.  27%  ரிசர்வேசன் வேணும்னு சொல்லிண்டு திரியும் அந்த நாயக்கர் ஆளுங்கெல்லாத்துக்கும்  நல்லா பாடம் கொடுண்ணு வேண்டிக்கோடா. சுப்ரீம் கோர்ட் நமக்கு எப்பவும் ஃபேவரா தான் இருக்கும். ம்ம்.. இருந்தும் என்ன செய்ய? கோபால்சாமி அய்யங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே.எம் முன்ஷி இவாளாம் Dr...
கண்ணியமான ஆண்களுக்காக

கண்ணியமான ஆண்களுக்காக

கட்டுரை, சமூகம்
பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது இந்த இந்திய திருநாட்டில் மாதவம் செய்து பிறந்த மங்கையருக்கு புதிதல்ல. பாலியல் தொல்லைகள் வார்த்தைகள் முதல் வல்லுறவு வரை எத்தகைய அழுத்தத்திலும் இருக்கலாம். ஒவ்வொரு முறை பாலியல் வன்முறை சம்பவம் நடைபெறும்போதும் எல்லா சம்பவங்களும் ஒரே விதமான முக்கியத்துவம் பெறுவதில்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்தின் எதிர்ப்பாக நடைபெறும் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் ஆதிவாசி பெண்களை காவல் துறை கூட்டம் கூட்டமாக வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் மற்றும் குஜராத்தில் தாயையும் மகளையும் ஒரு கிராமமே வல்லுறவுக்குட்படுத்தி கொன்ற சம்பவம் போன்றன எவ்வித கவனமும் பெறவில்லை. ஏன் என்பது மிகப்பெரிய கேள்வி. இத்தகைய சம்பவங்களும் முக்கியத்துவம் பெற வேண்டும், அவர்களுக்கு கிடைக்கும் உதவியும் நியாயமும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பாலியல் வன்முறையோ ஈவ் டீச...
மோடி மஸ்தான் இல்லை

மோடி மஸ்தான் இல்லை

கட்டுரை, சமூகம்
இம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக திரு. நரேந்திர மோடி முதல்வராகிறார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வெறும் 61 இடங்களையே பெற்று மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காந்திகளின் தொடர் பிரச்சாரம் காந்தி பிறந்த மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. மோடியை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிய மாநில காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில்  17, 146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே போல் குஜராத் எதிர்கட்சி தலைவர் ஷக்தி சின்ஹ் கோகில் தோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர். 'ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்; ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்' என வடிவேலு...
தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

கட்டுரை, சமூகம்
கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, "அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்..  நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்" என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் குற்றங்கள் நிகழாது என மக்கள் நம்புகின்றனர். புரையோடிய சமூகத்தில் குற்றங்களும் குறையப் போவதில்லை. மக்களின் வெகுவான ஆதரவோடு மரண தண்டனை அரசால் படு ஜோராக நிறைவேற்றப்படுவதும் நிற்கப் போவதில்லை.  ('சீரழியும் மாணவர்கள்' - கட்டுரையைப் படிக்கப் படத்தைச் சொடுக்கவும்.)  கசாப் கொடியவன். ராம் சிங் வக்கிரம் பிடிச்சவன்...
ஓடி விளையாடு பாப்பா!!!

ஓடி விளையாடு பாப்பா!!!

கட்டுரை, சமூகம்
நாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம். சிம்புளா சொல்லனும்னா, பயம் இல்லாதது போலவே மெயின்டெயின் பண்ணுவோம்.  வேலை நிமித்தம் ஹாஸ்டல் வாழ்க்கை. ஹாஸ்டல் தான் எங்களுக்கு வீர-தளம் (இந்த ஆடுதளம், ஓடுதளம்னு சொல்வாங்களே அது போல!) ஆனா வீட்டில் நாங்களாம் பூனைதான்.சாம்பார் சரி இல்ல, டீ சூடா இல்ல, டி.வி. தெரில இப்படி எல்லாப் பிரச்சனையும் எங்ககிட்டதான் வரும். எங்க வாய்ஸ பயன்படுத்தி பிரச்சனைய தீர்த்துவைப்போம். அப்படிதான் ஒரு சாயங்காலம் மொட்ட மாடியில்  ஒரு பஞ்சாயத்து பண்ணிட்ருந்தோம்.நாங்க வழக்கம் போல் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும் போதே எங்களுக்கு வேற பக்கமா கவனம் போச்சு. ரோடு ஓரமா சில பள்ளி மாணவர்கள் ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டு சிரிச்சிச் சிரிச்சிப் பேசிட்டுப் போனாங்க. கொஞ்சம்தூரம் போனவுடன் ஸ்கூல் பையன்கள் ஒரு இரண்டடி பின்னால நடக்க, மகா இராணிகள் முன்னால் நடக்க ஆ....
ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, மற்றவை
ஞாநி - சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!   எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.    நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். 'என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?' என...
காந்தி வழியில்..

காந்தி வழியில்..

கட்டுரை, சமூகம்
எங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கலெக்டரால் சட்டமியற்றப்பட்டது. குறைந்த பட்சம் மாவட்டத் தலைநகரில் மட்டுமாவது, தெருவோரம் காலியாக உள்ள இடங்கள், அரசுக்குச் சொந்தமாக உள்ள இடங்கள், யாவையும் மரக்கன்றுகள் நட்டு நகரத்தை பசுமையாக்கி விட வேண்டும் என்று முனைப்போடு சட்டமாகவும் இயற்றினர். அரசு அதிகாரிகள் மும்மரமாக செயல்பட, கலெக்டர் தன் கையால் முதல் கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.அரசு அதிகாரிகள் தான் எப்ப எங்க யாரு  மாற்றலாவர்கள் என தெரியாதே!! அந்த சிங் கலெக்டருக்கு மாற்றல் கிடைச்சது. சில வருடங்கள் கழித்து, சிறப்புக் கலெக்டராக எங்க மாவட்டத்திற்கே ஆய்விற்கு வந்தார். ஒரு நகரம் பசுமையானதற்கு தான் காரணமென மகிழ்ச்சியோடு வந்தவர் கண்களுக்கு சாலையோரங்களில் செடிகள் எதுவும் தென்படவில்லை. கோவத்தில் சூடு தணிவதற்குள் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முழு வீச்சில் வி...
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

அரசியல், கட்டுரை
கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் 'பவர்' அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.நவம்பர் 5 ஜனாதி...