Shadow

Tag: சிவசங்கர்

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

டெல்டாவின் உடனடி தேவை மனித சக்திதான் – நடிகர் திருமுருகன்

காணொளிகள், சமூகம்
தமிழகத்தைச் சூறையாடிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களில் அதிக உயிர் பலிகளையும், பொருளாதார சேதங்களையும் செய்துள்ளதை அடுத்து, அப்பகுதி மக்கள் மிகவும் சோகத்தில், தங்கவும் பொங்கவும் வழியின்றித் தவித்து வருகின்றனர். அறுந்து விழுந்த மின் கம்பங்கள்; அழிந்துபோன கால்நடைகள்; உடைந்துபோன ஓடுகள்; சிதிலமடைந்த குடிசைகள்; இடிந்துபோன வீடுகள்; சிதைந்துபோன செல்வங்கள் என விவசாய பூமியான டெல்டாவைச் சுரண்டியெடுத்துள்ளது கஜா புயல். சென்னையைப் போல் பெருநகரங்களில் மரபு சாரா மாதச் சம்பள வேலைகளைப் பணிபுரிபவர்கள், சென்னை வெள்ளத்திற்கு பிறகு இழந்தவற்றை கொஞ்சமேனும் மீட்டெடுத்ததைப் போல, பல வருடங்களாக வளர்த்த வாழை, தென்னை, வெளிநாடு போய் பல வருடங்கள் சம்பாதித்துச் சேர்த்த பொன் பொருட்களை முறையான மாதவருவாய் இல்லாத, எப்போதாவது சாகுபடி சமயத்தில் ஓரிரண்டு முறை பொருள் ஈட்டும் குடிமக்களால் மீட்டெடுக்க முடிவது அத்தனை சுலபம் அல்ல. ம...
நிமிர் விமர்சனம்

நிமிர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்த வம்பு தும்புகளுக்கும் செல்லாமல், அமைதியாய்த் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பவனுக்கு எதிர்பாராமல் விழும் அடியை விடப் பெருத்த அவமானம் வேறேதும் இல்லை. அப்படியான அவமானத்துக்குக் காரணமாக இருக்கக் கூடிய மூலத்தை வேரறுத்தாலொழிய நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும் அவனுக்குச் சொந்தமாகாது. நேர்ந்த அவமானத்துக்கு நிகராத்க தேர்ந்த பதிலடி கொடுத்து நிமிரும் செல்வனின் கதை 'நிமிர்'. தென்காசி வட்டாரத்தில் (தமிழ் சினிமாவையே 'வட்டார சினிமா' என்று சொல்லும் கமல்ஹாசனின் மொழி அல்ல இது), ஆத்மார்த்தமான ஒளிப்படக்கூடக் கலைஞர் நேஷ்னல் சண்முகத்தின் (மகேந்திரன்) மகன், செல்வம் (உதயநிதி) ஆத்மார்த்தமற்று புகைப்படக் கலையைக் கொண்டு வருமானம் ஈட்டுமொரு பணியைக் கடமைக்காகச் செய்து வருகிறான். ஆனால் அதே செல்வம் (உதயநிதி) பால்யத்தில் முளைத்த காதலொன்றைக் கடமை தவறாது ஆத்மார்த்தமாக செய்து வருகிறான். பணியின் நிமித்தம் செல்...
பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்!

பத்மாவதியின் காவியமும்; நெருப்பில் வெந்த திரையும்!

சினிமா
பல தடைகளைக் கண்டு எதிர்ப்புகளைச் சம்பாதித்துத் தனக்காகக் காத்திருந்த திரையை அடைந்திருக்கிறாள் பத்மாவதி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே (பத்மாவதி), ரன்வீர் சிங் (சுல்தான் அலாவுதீன் கில்ஜி), ஷாகித் கபூர் (ராவல் ரத்தன் சிங்) மற்றும் பலர் நடித்துள்ள இந்தி மற்றும் தமிழின் மொழிமாற்று வடிவமான 'பத்மாவதி' 'பத்மாவத்' எனும் பெயரில் வெளியாகியுள்ளது. 'பத்மாவத்' என்று பெயர் மாற்றினால் சிக்கல்கள் சரியாகிவிடுமா என்பதை விமர்சிக்கும் வகையில் கோலிவுட் நடிகர் சித்தார்த், தனது ட்விட்டர் பக்கத்தில் 'கண்ணாடியைத் திருப்பினால் எப்படிப்பா ஆட்டோ ஓடும்?' என்று கேட்டிருந்ததெல்லாம் ஒருபக்கம் இருக்க, 'எப்படி இருக்கிறாள் பத்மாவதி?' என்கிற ஆர்வம் மறுபக்கம் உந்தித் தள்ளுகிறதல்லவா? முதலில் கதை என்ன? எதற்காக இந்தியத் தேசம் முழுக்க இத்தனை சிக்கல்கள் இந்த பத்மாவதியால்? என்கிற கேள்விகளுக்கல்லாம் தக்க பதில்களுடன...
அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

அனிமேஷனில் தயாராகும் எம்.ஜி.ஆரின் கனவுப்படம்

சினிமா, திரைச் செய்தி
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் மற்றும் பிரபு தேவாவின் பிரபு ஸ்டூடியோஸின் கூட்டுத் தயாரிப்பில், டி.இமான் இசையில், அருள்மூர்த்தி இயக்கும் அனிமேஷன் திரைப்படம் "கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ". மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரனின் (எம்.ஜி.ஆர்.) புனைவு அனிமேஷன் கதாபாத்திரம் நடித்து வெளிவரவிருக்கும் இப்படத்தின் தலைப்பும் கதையும் எம்.ஜி.ஆருடையதேயாகும். இது எம்.ஜி.ஆரின் கனவுப் படம் என்பதை ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தின் இறுதியில் எம்.ஜி.ஆர். பதிவிட்டிருந்தார். 1972களிலேயே ஹாங்காங், ஜப்பான் உட்பட பல நாடுகளில் எடுக்கப்பட்ட பிரமாண்டமான படமான ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகமாகக் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார் எம்.ஜி.ஆர். அக்கனவை நனவாக்கும் வகையில் ஐசரி வேலனின் மகனும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் & வ...